சீட்டெழுதி விட்டாளாம்

bookmark

சின்னாத் தங் கரையோரம்-எஞ்சின்னையா நீ 
சிறு மணலுக் கொழிக் கையிலே-உன் 
சின்ன அத்தைக் கண்டாளாம்-உனக்குச் 
சீட்டெழுதி விட்டாளாம்! 
பெரி யாத்தங் கரையோரம்-எஞ் சுப்பையா நீ 
பெரு மணலுக் கொழிக் கையிலே-உன் 
பெரிய அத்தைக் கண்டாளாம்- உனக்குப் 
பேரெழுதி விட்டாளாம்! 
பனை பிடிங்கிப் பல் விளக்கி-நீ 
பயிர் போல நாமமிட்டால்
நாமத்தின் அழகுகண்டு 
நச்சுவாளாம் அத்தை மகன்.

குறிப்பு: பல் விளக்கும் குச்சி பனைமரம்-உயர்வு நவிற்சி.

உதவியவர்: புலவர் இராம ராசன்
இடம்: வேலூர், சேலம் மாவட்டம். 
சேகரித்தவர்: கு. சின்னப்ப பாரதி
-----------