சீரழிந்தேன்

bookmark

அவள் சிறுவயது முதல் செல்வமாகவும் அருமை யுடனும் வளர்க்கப்பட்டவள். ஆனால் வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் மாறி மாறி வருவதுதானே ! தற்கால சமூக நியதியும் அவளது வாழ்க்கையும் மாறிவிடுகிறது. தனக்கு வாழைமரத்தையும் தென்னைமரத்தையும் உவமையாகக் கூறுகிறாள்.

வடக்கே நெலாக் காய-ஒரு
வாழ மரம் பூச் சொரிய
வாழ கருக் கழிஞ்சே(ன்)-நான்
வா மயிலா சீரழிஞ்சேன் 
தெற்கே நிலாக்காய-ஒரு
தென்னமரம் பூச்சொரிய
தென்ன கருக்கழிஞ்சேன்-நான்
தே மயிலா சீரழிஞ்சேன்

சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: அரூர், தருமபுரி மாவட்டம்.
------------