செல்வி நான் புலம்புகிறேன்

bookmark

நமது பழைய சமூக வாழ்க்கையில் கணவனின் நிழல் மனைவி. அவளுக்கு இன்று எவ்வித சுகங்களும் இல்லை. கணவனோடு இருந்தால்தான் உலக இன்பங்களை அனுபவிக்கலாம். கணவன் மறைந்தால் அவை யாவும் அவளுக்கு இல்லை.

ஆலம் பலவையிலே
அரளிப்பூ மெத்தையிலே
அருச்சனரும் தேவியுமாய்
அருகிருந்து பேசிவந்தோம்
அருச்சுனரு தப்பி விட
ஆலம் பலவை விட்டே
அரளிப்பூ மெத்தை விட்டே
அரளிப்பூ மெத்தை விட்டே
அல்லியு நா புலம்புகிறேன்
சீவம் பலவையிலே
செவந்திப்பூ மெத்தையிலே
சீமான் தேவியுமாய்
சேந்திருந்து பேசி வந்தோம்
சீமானும் தப்பிவிட
சீவம் பலவை விட்டே
செவந்திப்பூ மெத்தை விட்டே
செல்வியு நா புலம்புகிறேன்

வட்டார வழக்கு : பலவை-பலகை ; நா-நான்
உதவியவர் : சி.செல்லம்மாள்; சேகரித்தவர்: கு. சின்னப்ப பாரதி
இடம்: மாடகாசம்பட்டி, சேலம் மாவட்டம்.
-----------