சேர்ந்த கிளி

நெடு நாட்கழித்து காதலர்கள் மகிழ்ச்சியோடு உரையாடுகிறார்கள்.
ஆண்:
செட்டி கடை வெட்டி வேரு
சிவகாசிப் பன்னீரு
கட்டி மருக் கொழுந்தே
கம்மாயில கூடினமே
பெண்:
கூடினதில் குற்றமில்லை
குலத்துக் கொரு ஈனமில்லை
ஊராரு சொல்லையிலே
ஊடுருவிப் பாயுதையா
ஆண்:
நந்தட்டம் பாதை வழி
நான் போவேன் ஒத்தவழி
மின்னிட்டான் பூச்சி போல
முன்னே வந்தா லாகாதோ
பெண்:
கல்லுரலு மேலி ருந்தது
கனிவாய நீ திறந்தா
செம்பங் கிளி வாய் திறந்தா
சேர்ந்த கிளி வந்திருமே
சேகரித்தவர்: S.S. போத்தையா
இடம்: விளாத்திகுளம் பகுதி, திருநெல்வேலி மாவட்டம்.
---------------