தங்க லைட்டுமில்லை

bookmark

மின் விளக்குப் போல ஒளிமிகுந்த அவளுடைய வாழ்க்கையில் இன்று இருள் கப்பிவிட்டது. காரணம் கணவன் மறைந்துவிட்டான்

தங்க வள வளைச்சு
தாவரம் தொட்டி பண்ணி
தாவர தொட்டியிலே-நான்
தங்காளும் படுத்திருந்தால்-எனக்குத்
தங்கலைட் டெரியும்
தனிக் காந்தம் நிண்ணெரியும்-இப்போ
தங்க லைட்டுமில்லை-எனக்கு
தனிக்காந்தம் பக்கமில்லை
பொன்னு வளவளச்சி
பூவாரந் தொட்டி பண்ணி
பூவாரத் தொட்டியிலே
பொண்ணா படுத்திருந்தா-எனக்குப்
பொன்னு லைட்டெரியும்
புதுக்காந்தம் நிண்ணெரியும்-இப்ப
பொன்னு லைட்டு மில்லே
புதுகாந்திம் பக்கமில்லை.

சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: அரூர்,சேலம் மாவட்டம். 
-------------