திருக்குடவாயில்

bookmark

பாடல் 836
தனனா தத்தன தனனா தத்தன 
தனனா தத்தன ...... தனதான 


அயிலார் மைக்கடு விழியார் மட்டைகள் 
அயலார் நத்திடு ...... விலைமாதர் 

அணைமீ திற்றுயில் பொழுதே தெட்டிக 
ளவரே வற்செய்து ...... தமியேனும் 

மயலா கித்திரி வதுதா னற்றிட 
மலமா யைக்குண ...... மதுமாற 

மறையால் மிக்கருள் பெறவே யற்புத 
மதுமா லைப்பத ...... மருள்வாயே 

கயிலா யப்பதி யுடையா ருக்கொரு 
பொருளே கட்டளை ...... யிடுவோனே 

கடலோ டிப்புகு முதுசூர் பொட்டெழ 
கதிர் வேல் விட்டிடு ...... திறலோனே 

குயிலா லித்திடு பொழிலே சுற்றிய 
குடவா யிற்பதி ...... யுறைவோனே 

குறமா தைப்புணர் சதுரா வித்தக 
குறையா மெய்த்தவர் ...... பெருமாளே. 
பாடல் 837 
ராகம் - துர்கா 
தாளம் - அங்கதாளம் (7 1/2) 
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2 

தனன தானன தானன தானன 
தனன தானன தானன தானன 
தனன தானன தானன தானன ...... தனதான 


சுருதி யாயிய லாயியல் நீடிய 
தொகுதி யாய்வெகு வாய்வெகு பாஷைகொள் 
தொடர்பு மாயடி யாய்நடு வாய்மிகு ...... துணையாய்மேல் 

துறவு மாயற மாய்நெறி யாய்மிகு 
விரிவு மாய்விளை வாயருள் ஞானிகள் 
சுகமு மாய்முகி லாய்மழை யாயெழு ...... சுடர்வீசும் 

பருதி யாய்மதி யாய்நிறை தாரகை 
பலவு மாய்வெளி யாயொளி யாயெழு 
பகலி ராவிலை யாய்நிலை யாய்மிகு ...... பரமாகும் 

பரம மாயையி னேர்மையை யாவரு 
மறியொ ணாததை நீகுரு வாயிது 
பகரு மாறுசெய் தாய்முதல் நாளுறு ...... பயனோதான் 

கருது மாறிரு தோள்மயில் வேலிவை 
கருதொ ணாவகை யோரர சாய்வரு 
கவுணி யோர்குல வேதிய னாயுமை ...... கனபாரக் 

களப புண்முலை யூறிய பாலுணு 
மதலை யாய்மிகு பாடலின் மீறிய 
கவிஞ னாய்விளை யாடிடம் வாதிகள் ...... கழுவேறக் 

குருதி யாறெழ வீதியெ லாமலர் 
நிறைவ தாய்விட நீறிட வேசெய்து 
கொடிய மாறன்மெய் கூனிமி ராமுனை ...... குலையாவான் 

குடிபு கீரென மாமது ராபுரி 
யியலை யாரண வூரென நேர்செய்து 
குடசை மாநகர் வாழ்வுற மேவிய ...... பெருமாளே.