திருக்கூடலையாற்றூர்

bookmark

பாடல் 756
தாத்ததனத் தாந்ததன தானதன தானதன 
தாத்ததனத் தாந்ததன தானதன தானதன 
தாத்ததனத் தாந்ததன தானதன தானதன ...... தந்ததான 


வாட்டியெனைச் சூழ்ந்தவினை யாசையமு வாசையனல் 
மூட்டியுலைக் காய்ந்தமழு வாமெனவி காசமொடு 
மாட்டியெனைப் பாய்ந்துகட வோடடமொ டாடிவிடு ...... விஞ்சையாலே 

வாய்த்தமலர்ச் சாந்துபுழு கானபனி நீர்களொடு 
காற்றுவரத் தாங்குவன மார்பிலணி யாரமொடு 
வாய்க்குமெனப் பூண்டழக தாகபவி சோடுமகிழ் ...... வன்புகூரத் 

தீட்டுவிழிக் காந்திமட வார்களுட னாடிவலை 
பூட்டிவிடப் போந்துபிணி யோடுவலி வாதமென 
சேர்த்துவிடப் பேர்ந்துவினை மூடியடி யேனுமுன ...... தன்பிலாமல் 

தேட்டமுறத் தேர்ந்துமமிர் தாமெனவெ யேகிநம 
னோட்டிவிடக் காய்ந்துவரி வேதனடை யாளமருள் 
சீட்டுவரக் காண்டுநலி காலனணு காநினரு ...... ளன்புதாராய் 

வேட்டுவரைக் காய்ந்துகுற மாதையுற வாடியிருள் 
நாட்டவரைச் சேந்தகதிர் வேல்கொடம ராடிசிறை 
மீட்டமரர்க் காண்டவனை வாழ்கநிலை யாகவைகும் ...... விஞ்சையோனே 

வேற்றுருவிற் போந்துமது ராபுரியி லாடிவைகை 
யாற்றின்மணற் றாங்குமழு வாளியென தாதைபுர 
மேட்டையெரித் தாண்டசிவ லோகன்விடை யேறியிட ...... முங்கொளாயி 

கோட்டுமுலைத் தாங்குமிழை யானஇடை கோடிமதி 
தோற்றமெனப் போந்தஅழ கானசிவ காமிவிறல் 
கூற்றுவனைக் காய்ந்தஅபி ராமிமன தாரஅருள் ...... கந்தவேளே 

கூட்டுநதித் தேங்கியவெ ளாறுதர ளாறுதிகழ் 
நாட்டிலுறைச் சேந்தமயி லாவளிதெய் வானையொடெ 
கூற்றுவிழத் தாண்டியென தாகமதில் வாழ்குமர ...... தம்பிரானே.