திருசிராப்பள்ளி

bookmark

பாடல் 547
தந்த தாத்தன தத்தத் தானன 
தந்த தாத்தன தத்தத் தானன 
தந்த தாத்தன தத்தத் தானன ...... தனதான 


அங்கை நீட்டிய ழைத்துப் பாரிய 
கொங்கை காட்டிம றைத்துச் சீரிய 
அன்பு போற்பொய்ந டித்துக் காசள ...... வுறவாடி 

அம்பு தோற்றக ணிட்டுத் தோதக 
இன்ப சாஸ்த்ரமு ரைத்துக் கோகிலம் 
அன்றில் போற்குர லிட்டுக் கூரிய ...... நகரேகை 

பங்க மாக்கிய லைத்துத் தாடனை 
கொண்டு வேட்கையெ ழுப்பிக் காமுகர் 
பண்பில் வாய்க்கம யக்கிக் கூடுத ...... லியல்பாகப் 

பண்டி ராப்பகல் கற்றுச் சூளைகள் 
தங்கள் மேற்ப்ரமை விட்டுப் பார்வதி 
பங்கர் போற்றிய பத்மத் தாள்தொழ ...... அருள்வாயே 

எங்கு மாய்க்குறை வற்றுச் சேதன 
அங் மாய்ப்பரி சுத்தத் தோர்பெறும் 
இன்ப மாய்ப்புகழ் முப்பத் தாறினின் ...... முடிவேறாய் 

இந்த்ர கோட்டிம யக்கத் தான்மிக 
மந்த்ர மூர்த்தமெ டுத்துத் தாமத 
மின்றி வாழ்த்திய சொர்க்கக் காவல ...... வயலூரா

செங்கை வேற்கொடு துட்டச் சூரனை 
வென்று தோற்பறை கொட்டக் கூளிகள் 
தின்று கூத்துந டிக்கத் தோகையில் ...... வரும்வீரா 

செம்பொ னாற்றிகழ் சித்ரக் கோபுர 
மஞ்சி ராப்பகல் மெத்தச் சூழ்தரு 
தென்சி ராப்பள்ளி வெற்பிற் றேவர்கள் ...... பெருமாளே. 
பாடல் 548 
ராகம் - கல்யாணி ; தாளம் - திஸ்ர த்ருபுடை (7) 

தந்தாதன தானன தாத்தன 
தந்தாதன தானன தாத்தன 
தந்தாதன தானன தாத்தன ...... தனதான 


அந்தோமன மேநம தாக்கையை 
நம்பாதெயி தாகித சூத்திர 
மம்போருக னாடிய பூட்டிது ...... இனிமேல்நாம் 

அஞ்சாதமை யாகிரி யாக்கையை 
பஞ்சாடிய வேலவ னார்க்கிய 
லங்காகுவம் வாஇனி தாக்கையை ...... ஒழியாமல் 

வந்தோமிது வேகதி யாட்சியு 
மிந்தாமயில் வாகனர் சீட்டிது 
வந்தாளுவம் நாமென வீக்கிய ...... சிவநீறும் 

வந்தேவெகு வாநமை யாட்கொளு 
வந்தார்மத மேதினி மேற்கொள 
மைந்தாகும ராவெனு மார்ப்புய ...... மறவாதே 

திந்தோதிமி தீதத மாத்துடி 
தந்தாதன னாதன தாத்தன 
செம்பூரிகை பேரிகை யார்த்தெழ ...... மறையோதச் 

செங்காடென வேவரு மூர்க்கரை 
சங்காரசி காமணி வேற்கொடு 
செண்டாடிம காமயில் மேற்கொளு ...... முருகோனே 

இந்தோடிதழ் நாகம காக்கடல் 
கங்காளமி னார்சடை சூட்டிய 
என்தாதைச தாசிவ கோத்திர ...... னருள்பாலா 

எண்கூடரு ளால்நெளவி நோக்கியை 
நன்பூமண மேவிசி ராப்பளி 
யென்பார்மன மேதினி நோக்கிய ...... பெருமாளே. 
பாடல் 549 
தனதன தந்தன தாத்தன 
தனதன தந்தன தாத்தன 
தனதன தந்தன தாத்தன ...... தனதான 


அரிவையர் நெஞ்சுரு காப்புணர் 
தருவிர கங்களி னாற்பெரி 
தவசம்வி ளைந்துவி டாய்த்தடர் ...... முலைமேல்வீழ்ந் 

தகிலொடு சந்தன சேற்றினில் 
முழுகியெ ழுந்தெதிர் கூப்புகை 
யடியின கம்பிறை போற்பட ...... விளையாடிப் 

பரிமளம் விஞ்சிய பூக்குழல் 
சரியம ருங்குடை போய்ச்சில 
பறவைக ளின்குர லாய்க்கயல் ...... விழிசோரப் 

பனிமுக முங்குறு வேர்ப்பெழ 
இதழமு துண்டிர வாய்ப்பகல் 
பகடியி டும்படி தூர்த்தனை ...... விடலாமோ 

சரியையு டன்க்ரியை போற்றிய 
பரமப தம்பெறு வார்க்கருள் 
தருகணன் ரங்கபு ரோச்சிதன் ...... மருகோனே 

சயிலமெ றிந்தகை வேற்கொடு 
மயிலினில் வந்தெனை யாட்கொளல் 
சகமறி யும்படி காட்டிய ...... குருநாதா 

திரிபுவ னந்தொழு பார்த்திபன் 
மருவிய மண்டப கோட்டிகள் 
தெருவில்வி ளங்குசி ராப்பளி ...... மலைமீதே 

தெரியஇ ருந்தப ராக்ரம 
உருவளர் குன்றுடை யார்க்கொரு 
திலதமெ னும்படி தோற்றிய ...... பெருமாளே. 
பாடல் 550 
தனதன தானான தானன தனதன தானான தானன 
தனதன தானான தானன ...... தந்ததான 


அழுதழு தாசார நேசமு முடையவர் போலேபொய் சூழ்வுறும் 
அசடிகள் மாலான காமுகர் ...... பொன்கொடாநாள் 

அவருடன் வாய்பேசி டாமையு முனிதலு மாறாத தோஷிகள் 
அறுதியில் காசாசை வேசைகள் ...... நஞசுதோயும் 

விழிகளி னால்மாட வீதியில் முலைகளை யோராம லாரொடும் 
விலையிடு மாமாய ரூபிகள் ...... பண்பிலாத 

விரகிகள் வேதாள மோவென முறையிடு கோமாள மூளிகள் 
வினைசெய லாலேயெ னாவியு ...... யங்கலாமோ 

வழியினில் வாழ்ஞான போதக பரமசு வாமீவ ரோதய 
வயலியில் வேலாயு தாவரை ...... யெங்குமானாய் 

மதுரையின் மீதால வாயினில் எதிரம ணாரோ ரெணாயிரர் 
மறிகழு மீதேற நீறுப ...... ரந்துலாவச் 

செழியனு மாளாக வாதுசெய் கவிமத சீகாழி மாமுனி 
சிவசிவ மாதேவ காவென ...... வந்துபாடும் 

திருவுடை யாய்தீதி லாதவர் உமையொரு பாலான மேனியர் 
சிரகிரி வாழ்வான தேவர்கள் ...... தம்பிரானே. 
பாடல் 551
தனதன தந்தத் தனதன தந்தத் 
தனதன தந்தத் ...... தனதான 


இளையவர் நெஞ்சத் தளையமெ னுஞ்சிற் 
றிடைகொடு வஞ்சிக் ...... கொடிபோல்வார் 

இணையடி கும்பிட் டணியல்குல் பம்பித் 
திதழமு துந்துய்த் ...... தணியாரக் 

களபசு கந்தப் புளகித இன்பக் 
கனதன கும்பத் ...... திநட்முழ்குங் 

கலவியை நிந்தித் திலகிய நின்பொற் 
கழல்தொழு மன்பைத் ...... தருவாயே 

தளர்வறு மன்பர்க் குளமெனு மன்றிற் 
சதுமறை சந்தத் ...... தொடுபாடத் 

தரிகிட தந்தத் திரிகிட திந்தித் 
தகுர்தியெ னுங்கொட் ...... டுடனாடித் 

தெளிவுற வந்துற் றொளிர்சிவ னன்பிற் 
சிறுவஅ லங்கற் ...... றிருமார்பா 

செழுமறை யஞ்சொற் பரிபுர சண்டத் 
திரிசிர குன்றப் ...... பெருமாளே. 
பாடல் 552 
தனதன தத்தம் தனதன தத்தம் 
தனதன தத்தம் ...... தனதான 


பகலவ னொக்குங் கனவிய ரத்னம் 
பவளவெண் முத்தந் ...... திரமாகப் 

பயிலமு லைக்குன் றுடையவர் சுற்றம் 
பரிவென வைக்கும் ...... பணவாசை 

அகமகிழ் துட்டன் பகிடிம ருட்கொண் 
டழியும வத்தன் ...... குணவீனன் 

அறிவிலி சற்றும் பொறையிலி பெற்றுண் 
டலைதலொ ழித்தென் ...... றருள்வாயே 

சகலரு மெச்சும் பரிமள பத்மந் 
தருணப தத்திண் ...... சுரலோகத் 

தலைவர்ம கட்குங் குறவர்ம கட்குந் 
தழுவஅ ணைக்குந் ...... திருமார்பா 

செகதல மெச்சும் புகழ்வய லிக்குந் 
திகுதிகெ னெப்பொங் ...... கியவோசை 

திமிலைத விற்றுந் துமிகள்மு ழக்குஞ் 
சிரகிரி யிற்கும் ...... பெருமாளே. 
பாடல் 553
தனதனன தந்த தனதனன தந்த 
தனதனன தந்த ...... தனதான 


ஒருவரொடு கண்கள் ஒருவரொடு கொங்கை 
ஒருவரொடு செங்கை ...... யுறவாடி 

ஒருவரொடு சிந்தை ஒருவரொடு நிந்தை 
ஒருவரொடி ரண்டு ...... முரையாரை 

மருவமிக அன்பு பெருகவுள தென்று 
மனநினையு மிந்த ...... மருள்தீர 

வனசமென வண்டு தனதனன வென்று 
மருவுசர ணங்க ...... ளருளாயோ 

அரவமெதிர் கண்டு நடுநடுந டுங்க 
அடலிடுப்ர சண்ட ...... மயில்வீரா 

அமரர்முத லன்பர் முநிவர்கள்வ ணங்கி 
அடிதொழவி ளங்கு ...... வயலூரா

திருவையொரு பங்கர் கமலமலர் வந்த 
திசைமுகன்ம கிழ்ந்த ...... பெருமானார் 

திகுதகுதி யென்று நடமிட முழங்கு 
த்ரிசிரகிரி வந்த ...... பெருமாளே. 
பாடல் 554 
தனன தாத்தன தனன தாத்தன 
தானா தானா தானா தானா ...... தனதான 


குமுத வாய்க்கனி யமுத வாக்கினர் 
கோலே வேலே சேலே போலே ...... அழகான 

குழைகள் தாக்கிய விழிக ளாற்களி 
கூரா வீறா தீரா மாலா ...... யவரோடே 

உமது தோட்களி லெமது வேட்கையை 
ஓரீர் பாரீர் வாரீர் சேரீர் ...... எனவேநின் 

றுடைதொ டாப்பண மிடைபொ றாத்தன 
மூடே வீழ்வே னீடே றாதே ...... யுழல்வேனோ 

தமர வாக்கிய அமரர் வாழ்த்திய 
தாதா வேமா ஞாதா வேதோ ...... கையிலேறீ 

சயில நாட்டிறை வயலி நாட்டிறை 
சாவா மூவா மேவா நீவா ...... இளையோனே 

திமிர ராக்கதர் சமர வேற்கர 
தீரா வீரா நேரா தோரா ...... உமைபாலா 

திரிசி ராப்பளி மலையின் மேற்றிகழ் 
தேவே கோவே வேளே வானோர் ...... பெருமாளே. 
பாடல் 555 
ராகம் - ஆனந்த பைரவி ( மத்யம ஸ்ருதி ); தாளம் - அங்கதாளம் (7 1/2) 
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2 

தனன தானன தத்தன தந்தன 
தனன தானன தத்தன தந்தன 
தனன தானன தத்தன தந்தன ...... தனதான 


குவளை பூசல்வி ளைத்திடு மங்கயல் 
கடுவ தாமெனு மைக்கண் மடந்தையர் 
குமுத வாயமு தத்தை நுகர்ந்திசை ...... பொருகாடை 

குயில்பு றாமயில் குக்கில் சுரும்பினம் 
வனப தாயுத மொக்கு மெனும்படி 
குரல்வி டாஇரு பொற்குட மும்புள ...... கிதமாகப் 

பவள ரேகைப டைத்தத ரங்குறி 
யுறவி யாளப டத்தை யணைந்துகை 
பரிச தாடன மெய்க்கர ணங்களின் ...... மதனூலின்

படியி லேசெய்து ருக்கிமு யங்கியெ 
அவச மாய்வட பத்ர நெடுஞ்சுழி 
படியு மோகச முத்ரம ழுந்துத ...... லொழிவேனோ 

தவள ரூபச ரச்சுதி யிந்திரை 
ரதிபு லோமசை க்ருத்திகை ரம்பையர் 
சமுக சேவித துர்க்கை பயங்கரி ...... புவநேசை 

சகல காரணி சத்தி பரம்பரி 
யிமய பார்வதி ருத்ரி நிரஞ்சனி 
சமய நாயகி நிஷ்களி குண்டலி ...... யெமதாயி 

சிவைம நோமணி சிற்சுக சுந்தரி 
கவுரி வேதவி தக்ஷணி யம்பிகை 
த்ரிபுரை யாமளை யற்பொடு தந்தருள் ...... முருகோனே 

சிகர கோபுர சித்திர மண்டப 
மகர தோரண ரத்ந அலங்க்ருத 
திரிசி ராமலை அப்பர் வணங்கிய ...... பெருமாளே. 
பாடல் 556 
ராகம் - ஸிந்து பைரவி; தாளம் - அங்கதாளம் (6) 
தகிட-1 1/2, தகதிமி-2, தகிட-1 1/2, தக-1 

தத்த தானா தனாதன தத்த தானா தனாதன 
தத்த தானா தனாதன ...... தந்ததான 


சத்தி பாணீ நமோநம முத்தி ஞானீ நமோநம 
தத்வ வாதீ நமோநம ...... விந்துநாத 

சத்து ரூபா நமோநம ரத்ந தீபா நமோநம 
தற்ப்ர தாபா நமோநம ...... என்றுபாடும் 

பத்தி பூணா மலேயுல கத்தின் மானார் சவாதகில் 
பச்சை பாடீர பூஷித ...... கொங்கைமேல்வீழ் 

பட்டி மாடான நானுனை விட்டிரா மேயு லோகித 
பத்ம சீர்பாத நீயினி ...... வந்துதாராய் 

அத்ர தேவா யுதாசுர ருக்ர சேனா பதீசுசி 
யர்க்ய சோமாசி யாகுற ...... சம்ப்ரதாயா 

அர்ச்ச னாவாக னாவய லிக்குள் வாழ்நாய காபுய 
அக்ஷ மாலா தராகுற ...... மங்கைகோவே 

சித்ர கோலா கலாவிர லஷ்மி சாதா ரதாபல 
திக்கு பாலா சிவாகம ...... தந்தரபோதா 

சிட்ட நாதா சிராமலை யப்பர் ஸ்வாமீ மகாவ்ருத 
தெர்ப்பை யாசார வேதியர் ...... தம்பிரானே. 
பாடல் 557 
ராகம் - மோஹனம்; தாளம் - திஸ்ர ஏகம் (3) 

தனதனதனத் ...... தனதான 

பகலிரவினிற் ...... றடுமாறா 
பதிகுருவெனத் ...... தெளிபோத 

ரகசியமுரைத் ...... தநுபூதி 
ரதநிலைதனைத் ...... தருவாயே 

இகபரமதற் ...... கிறையோனே 
இயலிசையின்முத் ...... தமிழோனே 

சகசிரகிப் ...... பதிவேளே 
சரவணபவப் ...... பெருமாளே. 
பாடல் 558
ராகம் - பெஹாக்; தாளம் - ஆதி 

தனனத் தனனத் தனனத் தனனத் 
தனனத் தனனத் தனனத் தனனத் 
தனனத் தனனத் தனனத் தனனத் ...... தனதான 


புவனத் தொருபொற் றொடிசிற் றுதரக் 
கருவிற் பவமுற் றுவிதிப் படியிற் 
புணர்துக் கசுகப் பயில்வுற் றுமரித் ...... திடிலாவி 

புரியட் டகமிட் டதுகட் டியிறுக் 
கடிகுத் தெனஅச் சம்விளைத் தலறப் 
புரள்வித் துவருத் திமணற் சொரிவித் ...... தனலூடே

தவனப் படவிட் டுயிர்செக் கிலரைத் 
தணிபற் களுதிர்த் தெரிசெப் புருவைத் 
தழுவப் பணிமுட் களில்கட் டியிசித் ...... திடவாய்கண் 

சலனப் படஎற் றியிறைச் சியறுத் 
தயில்வித் துமுரித் துநெரித் துளையத் 
தளையிட் டுவருத் தும்யமப் ரகரத் ...... துயர்தீராய் 

பவனத் தையொடுக் குமனக் கவலைப் 
ப்ரமையற் றைவகைப் புலனிற் கடிதிற் 
படரிச் சையொழித் ததவச் சரியைக் ...... க்ரியையோகர் 

பரிபக் குவர்நிட் டைநிவிர்த் தியினிற் 
பரிசுத் தர்விரத் தர்கருத் ததனிற் 
பரவப் படுசெய்ப் பதியிற் பரமக் ...... குருநாதா 

சிவனுத் தமனித் தவுருத் திரன்முக் 
கணனக் கன்மழுக் கரனுக் ரரணத் 
த்ரிபுரத் தையெரித் தருள்சிற் குணனிற் ...... குணணாதி 

செகவித் தனிசப் பொருள்சிற் பரனற் 
புதனொப் பிலியுற் பவபத் மதடத் 
த்ரிசிரப் புரவெற் புறைசற் குமரப் ...... பெருமாளே. 
பாடல் 559 
தனன தாத்தன தானா தானன 
தனன தாத்தன தானா தானன 
தனன தாத்தன தானா தானன ...... தந்ததான 


பொருளின் மேற்ப்ரிய காமா காரிகள் 
பரிவு போற்புணர் க்ரீடா பீடிகள்
புருஷர் கோட்டியில் நாணா மோடிகள் ...... கொங்கைமேலே 

புடைவை போட்டிடு மாயா ரூபிகள் 
மிடிய ராக்குபொ லர்மு தேவிகள் 
புலையர் மாட்டும றாதே கூடிகள் ...... நெஞ்சமாயம் 

கருதொ ணாப்பல கோடா கோடிகள் 
விரகி னாற்பலர் மேல்வீழ் வீணிகள் 
கலவி சாத்திர நூலே யோதிகள் ...... தங்களாசைக் 

கவிகள் கூப்பிடு மோயா மாரிகள் 
அவச மாக்கிடு பேய்நீ ரூணிகள் 
கருணை நோக்கமி லாமா பாவிக ...... ளின்பமாமோ 

குருக டாக்ஷக லாவே தாகம 
பரம வாக்கிய ஞானா சாரிய 
குறைவு தீர்த்தருள் ஸ்வாமி கார்முக ...... வன்பரான 

கொடிய வேட்டுவர் கோகோ கோவென 
மடிய நீட்டிய கூர்வே லாயுத 
குருகி க்ஷேத்ரபு ரேசா வாசுகி ...... அஞ்சமாறும் 

செருப ராக்ரம கேகே வாகன 
சரவ ணோற்பவ மாலா லாளித 
திரள்பு யாத்திரி யீரா றாகிய ...... கந்தவேளே 

சிகர தீர்க்கம காசீ கோபுர 
முகச டாக்கர சேணா டாக்ருத 
திரிசி ராப்பளி வாழ்வே தேவர்கள் ...... தம்பிரானே. 
பாடல் 560 
தனதன தந்த தனதன தந்த 
தனதன தந்த ...... தனதான 


பொருள்கவர் சிந்தை அரிவையர் தங்கள் 
புழுககில் சந்து ...... பனிநீர்தோய் 

புளகித கொங்கை யிளகவ டங்கள் 
புரளம ருங்கி ...... லுடைசோர 

இருள்வளர் கொண்டை சரியஇ சைந்து 
இணைதரு பங்க ...... அநுராகத் 

திரிதலொ ழிந்து மனதுக சிந்து 
னிணையடி யென்று ...... புகழ்வேனோ 

மருள்கொடு சென்று பரிவுட னன்று 
மலையில்வி ளைந்த ...... தினைகாவல் 

மயிலை மணந்த அயிலவ எங்கள் 
வயலியில் வந்த ...... முருகோனே 

தெருளுறு மன்பர் பரவ விளங்கு 
திரிசிர குன்றில் ...... முதனாளில் 

தெரிய இருந்த பெரியவர் தந்த 
சிறியவ அண்டர் ...... பெருமாளே. 
பாடல் 561 
ராகம் - பூர்வி கல்யாணி; தாளம் - அங்கதாளம் (6 1/2) 
தகதிமிதக-3, தகிட-1 1/2, தகதிமி-2 

தானத்தத் தான தானன தானத்தத் தான தானன 
தானத்தத் தான தானன ...... தந்ததான 


வாசித்துக் காணொ ணாதது பூசித்துக் கூடொ ணாதது 
வாய்விட்டுப் போசொ ணாதது ...... நெஞ்சினாலே 

மாசர்க்குத் தோணொ ணாதது நேசர்க்குப் பேரொ ணாதது 
மாயைக்குச் சூழொ ணாதது ...... விந்துநாத 

ஓசைக்குத் தூர மானது மாகத்துக் கீற தானது 
லோகத்துக் காதி யானது ...... கண்டுநாயேன் 

யோகத்தைச் சேரு மாறுமெய்ஞ் ஞானத்தைப் போதி யாயினி 
யூனத்தைப் போடி டாதும ...... யங்கலாமோ 

ஆசைப்பட் டேனல் காவல்செய் வேடிச்சிக் காக மாமய 
லாகிப்பொற் பாத மேபணி ...... கந்தவேள 

ஆலித்துச் சேல்கள் பாய்வய லூரத்திற் காள மோடட 
ராரத்தைப் பூண்ம யூரது ...... ரங்கவீரா 

நாசிக்குட் ப்ராண வாயுவை ரேசித்தெட் டாத யோகிகள் 
நாடிற்றுக் காணொ ணாதென ...... நின்றநாதா 

நாகத்துச் சாகை போயுயர் மேகத்தைச் சேர்சி ராமலை 
நாதர்க்குச் சாமி யேசுரர் ...... தம்பிரானே. 
பாடல் 562 
தனத்த தாத்தன தனதன தனதன 
தனத்த தாத்தன தனதன தனதன 
தனத்த தாத்தன தனதன தனதன ...... தனதான 


வெருட்டி யாட்கொளும் விடமிகள் புடைவையை 
நெகிழ்த்த ணாப்பிகள் படிறிகள் சடுதியில் 
விருப்ப மாக்கிகள் விரவிய திரவிய ...... மிலரானால் 

வெறுத்து நோக்கிகள் கபடிகள் நடமிடு 
பதத்தர் தூர்த்திகள் ம்ருகமத பரிமள 
விசித்ர மேற்படு முலையினு நிலையினு ...... மெவரோடும் 

மருட்டி வேட்கைசொல் மொழியினும் விழியினும் 
அவிழ்த்த பூக்கமழ் குழலினு நிழலினு 
மதிக்கொ ணாத்தள ரிடையினு நடையினு ...... மவமேயான் 

மயக்க மாய்ப்பொருள் வரும்வகை க்ருஷிபணு 
தடத்து மோக்ஷம தருளிய பலமலர் 
மணத்த வார்க்கழல் கனவிலு நனவிலு ...... மறவேனே 

இருட்டி லாச்சுர ருலகினி லிலகிய 
சகஸ்ர நேத்திர முடையவன் மிடியற 
இரக்ஷை வாய்த்தருள் முருகப னிருகர ...... குகவீரா 

இலக்ஷு மிச்சுர பசுபதி குருபர 
சமஸ்த ராச்சிய ந்ருபபுகழ் வயமியல் 
இலக்க ரேய்ப்படை முகடெழு ககபதி ...... களிகூரத் 

திருட்டு ராக்ஷதர் பொடிபட வெடிபட 
எடுத்த வேற்கொடு கடுகிய முடுகிய 
செருக்கு வேட்டுவர் திறையிட முறையிட ...... மயிலேறும் 

செருப்ப ராக்ரம நிதிசர வணபவ 
சிவத்த பாற்கர னிமகரன் வலம்வரு 
திருச்சி ராப்பளி மலைமிசை நிலைபெறு ...... பெருமாளே.