திருச்செந்தூர்

bookmark

பாடல் 21
தந்த தந்தன தானா தானா 
தந்த தந்தன தானா தானா 
தந்த தந்தன தானா தானா ...... தனதான 

அங்கை மென்குழ லாய்வார் போலே 
சந்தி நின்றய லோடே போவா 
ரன்பு கொண்டிட நீரோ போறீ ...... ரறியீரோ 

அன்று வந்தொரு நாள்நீர் போனீர் 
பின்பு கண்டறி யோநா மீதே 
அன்று மின்றுமொர் போதோ போகா ...... துயில்வாரா 

எங்க ளந்தரம் வேறா ரோர்வார் 
பண்டு தந்தது போதா தோமே 
லின்று தந்துற வோதா னீதே ...... னிதுபோதா 

திங்கு நின்றதென் வீடே வாரீ
ரென்றி ணங்கிகள் மாயா லீலா 
இன்ப சிங்கியில் வீணே வீழா ...... தருள்வாயே 

மங்கு லின்புறு வானாய் வானூ
டன்ற ரும்பிய காலாய் நீள்கால் 
மண்டு றும்பகை நீறா வீறா ...... எரிதீயாய் 

வந்தி ரைந்தெழு நீராய் நீர்சூழ் 
அம்ப ரம்புனை பாராய் பாரேழ் 
மண்ட லம்புகழ் நீயாய் நானாய் ...... மலரோனாய் 

உங்கள் சங்கரர் தாமாய் நாமார் 
அண்ட பந்திகள் தாமாய் வானாய் 
ஒன்றி னுங்கடை தோயா மாயோன் ...... மருகோனே 

ஒண்த டம்பொழில் நநடுர் கேர்டுர் 
செந்தி லம்பதி வாழ்வே வாழ்வோர் 
உண்ட நெஞ்சறி தேனே வானோர் ...... பெருமாளே. 
பாடல் 22 
ராகம் - ஹிந்தோளம்; தாளம் - அங்கதாளம் (7) 
(கண்ட ஜாதி ரூபகம்) 
தக-1, தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1, தக திமி-2 

தந்தன தனந்தனந் தனதனத் 
தந்தன தனந்தனந் தனதனத் 
தந்தன தனந்தனந் தனதனத் ...... தனதான 

அந்தகன் வருந்தினம் பிறகிடச் 
சந்ததமும் வந்துகண் டரிவையர்க் 
கன்புருகு சங்கதந் தவிரமுக் ...... குணமாள 

அந்திபக லென்றிரண் டையுமொழித் 
திந்திரிய சஞ்சலங் களையறுத் 
தம்புய பதங்களின் பெருமையைக் ...... கவிபாடிச் 

செந்திலை யுணர்ந்துணர்ந் துணர்வுறக் 
கந்தனை யறிந்தறிந் தறிவினிற் 
சென்றுசெரு குந்தடந் தெளிதரத் ...... தணியாத 

சிந்தையு மவிழ்ந்தழிந் துரையொழித் 
தென்செய லழிந்தழிந் தழியமெய்ச் 
சிந்தைவர என்றுநின் தெரிசனைப் ...... படுவேனோ 

கொந்தவிழ் சரண்சரண் சரணெனக் 
கும்பிடு புரந்தரன் பதிபெறக் 
குஞ்சரி குயம்புயம் பெறஅரக் ...... கருமாளக் 

குன்றிடிய அம்பொனின் திருவரைக் 
கிண்கிணி கிணின்கிணின் கிணினெனக் 
குண்டல மசைந்திளங் குழைகளிற் ...... ப்ரபைவீசத் 

தந்தன தனந்தனந் தனவெனச் 
செஞ்சிறு சதங்கைகொஞ் சிடமணித் 
தண்டைகள் கலின்கலின் கலினெனத் ...... திருவான 

சங்கரி மனங்குழைந் துருகமுத் 
தந்தர வருஞ்செழுந் தளர்நடைச் 
சந்ததி சகந்தொழுஞ் சரவணப் ...... பெருமாளே. 
பாடல் 23 
ராகம் - கல்யாணி; தாளம் - அங்கதாளம் (9) 
(கண்ட ஜாதி த்ருபுடை) 
தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2, தகதிமி-2, தகதிமி-2 

தனதனன தனதனன தந்தத் தந்தத் 
தனதனன தனதனன தந்தத் தந்தத் 
தனதனன தனதனன தந்தத் தந்தத் ...... தனதான 

அமுதுததி விடமுமிழு செங்கட் டிங்கட் 
பகவினொளிர் வெளிறெயிறு துஞ்சற் குஞ்சித் 
தலையுமுடை யவனரவ தண்டச் சண்டச் ...... சமனோலை 

அதுவருகு மளவிலுயி ரங்கிட் டிங்குப் 
பறைதிமிலை திமிர்தமிகு தம்பட் டம்பற் 
கரையவுற வினரலற உந்திச் சந்தித் ...... தெருவூடே 

எமதுபொரு ளெனுமருளை யின்றிக் குன்றிப் 
பிளவளவு தினையளவு பங்கிட் டுண்கைக் 
கிளையுமுது வசைதவிர இன்றைக் கன்றைக் ...... கெனநாடா 

திடுக்கடி தெனுமுணர்வு பொன்றிக் கொண்டிட் 
டுடுடுடுடு டுடுடுடுடு டுண்டுட் டுண்டுட் 
டெனவகலு நெறிகருதி நெஞ்சத் தஞ்சிப் ...... பகிராதோ 

குமுதபதி வகிரமுது சிந்தச் சிந்தச் 
சரணபரி புரசுருதி கொஞ்சக் கொஞ்சக் 
குடிலசடை பவுரிகொடு தொங்கப் பங்கிற் ...... கொடியாடக் 

குலதடினி அசையஇசை பொங்கப் பொங்கக் 
கழலதிர டெகுடெகுட டெங்கட் டெங்கத் 
தொகுகுகுகு தொகுகுகுகு தொங்கத் தொங்கத் ...... தொகுதீதோ 

திமிதமென முழவொலிமு ழங்கச் செங்கைத் 
தமருகம ததிர்சதியொ டன்பர்க் கின்பத் 
திறமுதவு பரதகுரு வந்திக் குஞ்சற் ...... குருநாதா 

திரளுமணி தரளமுயர் தெங்கிற் றங்கிப் 
புரளஎறி திரைமகர சங்கத் துங்கத் 
திமிரசல நிதிதழுவு செந்திற் கந்தப் ...... பெருமாளே. 
பாடல் 24 

தந்தத் தனனத் தந்தத் தனனத் 
தந்தத் தனனத் ...... தனதானா 


அம்பொத் தவிழித் தந்தக் கலகத் 
தஞ்சிக் கமலக் ...... கணையாலே 

அன்றிற் குமனற் றென்றற் குமிளைத் 
தந்திப் பொழுதிற் ...... பிறையாலே 

எம்பொற் கொடிமற் றுன்பக் கலனற் 
றின்பக் கலவித் ...... துயரானாள் 

என்பெற் றுலகிற் பெண்பெற் றவருக் 
கின்பப் புலியுற் ...... றிடலாமோ 

கொம்புக் கரிபட் டஞ்சப் பதுமக் 
கொங்கைக் குறவிக் ...... கினியோனே 

கொன்றைச் சடையற் கொன்றைத் தெரியக் 
கொஞ்சித் தமிழைப் ...... பகர்வோனே 

செம்பொற் சிகரப் பைம்பொற் கிரியைச் 
சிந்தக் கறுவிப் ...... பொரும்வேலா 

செஞ்சொற் புலவர்க் கன்புற் றதிருச் 
செந்திற் குமரப் ...... பெருமாளே. 
பாடல் 25
ராகம் - புன்னாக வராளி; தாளம் - அங்கதாளம் (24) 
தகதகிட-2 1/2, தகிடதகதிமி-3 1/2, 
தகதகிட-2 1/2, தகிடதகதிமி-3 1/2, 
தகதகிட-2 1/2, தகிடதகதிமி-3 1/2, 
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமிதக-3 

தனதனன தான தானன தனதனன தான தானன 
தனதனன தான தானன தந்தத் தந்தத் ...... தனதான 

அருணமணி மேவு பூஷித ம்ருகமத படீர லேபன 
அபிநவ விசால பூரண 
அம்பொற் கும்பத் ...... தனமோதி 

அளிகுலவு மாதர் லீலையின் முழுகியபி ஷேக மீதென 
அறவுமுற வாடி நீடிய 
அங்கைக் கொங்கைக் ...... கிதமாகி 

இருணிறைய மோதி மாலிகை சருவி யுறவான வேளையி 
லிழைகலைய மாத ரார்வழி 
யின்புற் றன்புற் ...... றழியாநீள் 

இரவுபகல் மோக னாகியெ படியில்மடி யாமல் யானுமுன் 
இணையடிகள் பாடி வாழஎ 
னெஞ்சிற் செஞ்சொற் ...... றருவாயே 

தருணமணி யாட ராவணி குடிலசடி லாதி யோதிய 
சதுர்மறையி னாதி யாகிய 
சங்கத் துங்கக் ...... குழையாளர் 

தருமுருக மேக சாயலர் தமரமக ராழி சூழ்புவி 
தனைமுழுதும் வாரி யேயமு 
துண்டிட் டண்டர்க் ...... கருள்கூரும் 

செருமுதலி மேவு மாவலி யதிமதக போல மாமலை 
தெளிவினுடன் மூல மேயென 
முந்தச் சிந்தித் ...... தருள்மாயன் 

திருமருக சூரன் மார்பொடு சிலையுருவ வேலை யேவிய 
ஜெயசரவ ணாம னோகர 
செந்திற் கந்தப் ...... பெருமாளே. 
பாடல் 26 
ராகம் - கமாஸ்; தாளம் - சதுஸ்ர ரூபகம் (6) 

தனதன தந்தாத் தந்தத் 
தனதன தந்தாத் தந்தத் 
தனதன தந்தாத் தந்தத் ...... தனதானா 

அவனிபெ றுந்தோட் டம்பொற் 
குழையட ரம்பாற் புண்பட் 
டரிவையர் தம்பாற் கொங்கைக் ...... கிடையேசென் 

றணைதரு பண்டாட் டங்கற் 
றுருகிய கொண்டாட் டம்பெற் 
றழிதரு திண்டாட் டஞ்சற் ...... றொழியாதே 

பவமற நெஞ்சாற் சிந்தித் 
திலகுக டம்பார்த் தண்டைப் 
பதயுக ளம்போற் றுங்கொற் ...... றமுநாளும் 

பதறிய அங்காப் பும்பத் 
தியுமறி வும்போய்ச் சங்கைப் 
படுதுயர் கண்பார்த் தன்புற் ...... றருளாயோ 

தவநெறி குன்றாப் பண்பிற் 
றுறவின ருந்தோற் றஞ்சத் 
தனிமல ரஞ்சார்ப் புங்கத் ...... தமராடி 

தமிழினி தென்காற் கன்றிற் 
றிரிதரு கஞ்சாக் கன்றைத் 
தழலெழ வென்றார்க் கன்றற் ...... புதமாகச் 

சிவவடி வங்காட் டுஞ்சற் 
குருபர தென்பாற் சங்கத் 
திரள்மணி சிந்தாச் சிந்துக் ...... கரைமோதும் 

தினகர திண்டேர்ச் சண்டப் 
பரியிட றுங்கோட் டிஞ்சித் 
திருவளர் செந்தூர்க் கந்தப் ...... பெருமாளே. 
பாடல் 27 
தனன தானன தந்தன தந்தன 
தனன தானன தந்தன தந்தன 
தனன தானன தந்தன தந்தன ...... தனதான 

அளக பாரம லைந்துகு லைந்திட 
வதனம் வேர்வுது லங்கிந லங்கிட 
அவச மோகம் விளைந்துத ளைந்திட ...... அணைமீதே 

அருண வாய்நகை சிந்திய சம்ப்ரம 
அடர்ந காநுதி பங்கவி தஞ்செய்து 
அதர பானம ருந்திம டுங்கிற ...... முலைமேல்வீழ்ந் 

துளமும் வேறுப டும்படி ஒன்றிடு 
மகளிர் தோதக இன்பின்மு யங்குதல் 
ஒழியு மாறுதெ ளிந்துளம் அன்பொடு ...... சிவயோகத் 

துருகு ஞானப ரம்பர தந்திர 
அறிவி னோர்கரு தங்கொள்சி லம்பணி 
உபய சீதள பங்கய மென்கழல் ...... தருவாயே 

இளகி டாவளர் சந்தன குங்கும 
களப பூரண கொங்கைந லம்புனை 
இரதி வேள்பணி தந்தையும் அந்தண ...... மறையோனும் 

இனது றாதெதிர் இந்திரன் அண்டரும் 
ஹரஹ ராசிவ சங்கர சங்கர 
எனமி காவரு நஞ்சினை யுண்டவர் ...... அருள்பாலா 

வளர்நி சாசரர் தங்கள்சி ரம்பொடி 
படவி ரோதமி டுங்குல சம்ப்ரமன் 
மகர வாரிக டைந்தநெ டும்புயல் ...... மருகோனே 

வளரும் வாழையு மஞ்சளும் இஞ்சியும் 
இடைவி டாதுநெ ருங்கிய மங்கல 
மகிமை மாநகர் செந்திலில் வந்துறை ...... பெருமாளே. 
பாடல் 28 
ராகம் - காம்போதி ; தாளம் - கண்டசாபு (2 1/2) 

தனதனன தனதனன தனதனன தனதனன 
தனதனன தனதனன ...... தனதானா 

அறிவழிய மயல்பெருக வுரையுமற விழிசுழல 
அனலவிய மலமொழுக ...... அகலாதே 

அனையுமனை யருகிலுற வெருவியழ வுறவுமழ 
அழலினிகர் மறலியெனை ...... யழையாதே 

செறியுமிரு வினைகரண மருவுபுல னொழியவுயர் 
திருவடியி லணுகவர ...... மருள்வாயே 

சிவனைநிகர் பொதியவரை முநிவனக மகிழஇரு 
செவிகுளிர இனியதமிழ் ...... பகர்வோனே 

நெறிதவறி யலரிமதி நடுவன்மக பதிமுளரி 
நிருதிநிதி பதிகரிய ...... வனமாலி 

நிலவுமறை யவனிவர்க ளலையஅர சுரிமைபுரி 
நிருதனுர மறஅயிலை ...... விடுவோனே 

மறிபரசு கரமிலகு பரமனுமை யிருவிழியு 
மகிழமடி மிசைவளரு ...... மிளையோனே 

மதலைதவ ழுததியிடை வருதரள மணிபுளின 
மறையவுயர் கரையிலுறை ...... பெருமாளே. 
பாடல் 29 
ராகம் - காபி; தாளம் - அங்கதாளம் (7 1/2) 
தகிட-1 1/2, தகதிமி-2 1/2, தகதிமி-2 1/2, தகதிமி-2 1/2 

தனத்தந் தானன தானன தானன 
தனத்தந் தானன தானன தானன 
தனத்தந் தானன தானன தானன ...... தனதான 

அனிச்சங் கார்முகம் வீசிட மாசறு 
துவட்பஞ் சானத டாகம்வி டாமட 
அனத்தின் தூவிகு லாவிய சீறடி ...... மடமானார் 

அருக்கன் போலொளி வீசிய மாமர 
கதப்பைம் பூணணி வார்முலை மேல்முகம் 
அழுத்தும் பாவியை யாவி யிடேறிட ...... நெறிபாரா 

வினைச்சண் டாளனை வீணணை நீணிதி 
தனைக்கண் டானவ மானநிர் மூடனை 
விடக்கன் பாய்நுகர் பாழனை யோர்மொழி ...... பகராதே 

விகற்பங் கூறிடு மோகவி காரனை 
அறத்தின் பாலொழு காதமு தேவியை 
விளித்துன் பாதுகை நீதர நானருள் ...... பெறுவேனோ 

முனைச்சங் கோலிடு நீலம கோததி 
அடைத்தஞ் சாதஇ ராவண னீள்பல 
முடிக்கன் றோர்கணை யேவுமி ராகவன் ...... மருகோனே 

முளைக்குஞ் சீதநி லாவொட ராவிரி 
திரைக்கங் காநதி தாதகி கூவிள 
முடிக்குஞ் சேகரர் பேரரு ளால்வரு ...... முருகோனே 

தினைச்செங் கானக வேடுவ ரானவர் 
திகைத்தந் தோவென வேகணி யாகிய 
திறற்கந் தாவளி நாயகி காமுறும் ...... எழில்வேலா 

சிறக்குந் தாமரை யோடையில் மேடையில் 
நிறக்குஞ் சூல்வளை பால்மணி வீசிய 
திருச்செந் தூர்வரு சேவக னேசுரர் ...... பெருமாளே. 
பாடல் 30 
ராகம் - மோகனம்; தாளம் - அங்கதாளம் (5 1/2) 
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2 

தனதன தனந்த தந்த தனதன தனந்த தந்த 
தனதன தனந்த தந்த ...... தனதான 

அனைவரு மருண்ட ருண்டு கடிதென வெகுண்டி யம்ப 
அமரஅடி பின்தொ டர்ந்து ...... பிணநாறும் 

அழுகுபிணி கொண்டு விண்டு புழுவுட னெலும்ப லம்பு 
மவலவுட லஞ்சு மந்து ...... தடுமாறி 

மனைதொறு மிதம்ப கர்ந்து வரவர விருந்த ருந்தி 
மனவழி திரிந்து மங்கும் ...... வசைதீர 

மறைசதுர் விதந்தெ ரிந்து வகைசிறு சதங்கை கொஞ்ச 
மலரடி வணங்க என்று ...... பெறுவேனோ 

தினைமிசை சுகங்க டிந்த புனமயி லிளங்கு ரும்பை 
திகழிரு தனம்பு ணர்ந்த ...... திருமார்பா 

ஜெகமுழுது முன்பு தும்பி முகவனொடு தந்தை முன்பு 
திகிரிவலம் வந்த செம்பொன் ...... மயில்வீரா 

இனியகனி மந்தி சிந்து மலைகிழவ செந்தில் வந்த 
இறைவகுக கந்த என்று ...... மிளையோனே 

எழுகடலு மெண்சி லம்பும் நிசிசரரும் அஞ்ச அஞ்சு 
மிமையவரை யஞ்ச லென்ற ...... பெருமாளே. 
பாடல் 31 
ராகம் - ஹூஸேனி; தாளம் - அங்கதாளம் (9) 
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமிதக-3 

தனதனன தனன தந்தத் ...... தனதான 

இயலிசையி லுசித வஞ்சிக் ...... கயர்வாகி 
இரவுபகல் மனது சிந்தித் ...... துழலாதே 

உயர்கருணை புரியு மின்பக் ...... கடல்மூழ்கி 
உனையெனது ளறியு மன்பைத் ...... தருவாயே 

மயில்தகர்க லிடைய ரந்தத் ...... தினைகாவல் 
வனசகுற மகளை வந்தித் ...... தணைவோனே 

கயிலைமலை யனைய செந்திற் ...... பதிவாழ்வே 
கரிமுகவ னிளைய கந்தப் ...... பெருமாளே. 
பாடல் 32

தனதன தனந்த தந்தன தனதன தனந்த தந்தன 
தனதன தனந்த தந்தன ...... தனதான 

இருகுழை யெறிந்த கெண்டைகள் ஒருகுமி ழடர்ந்து வந்திட 
இணைசிலைநெ ரிந்தெ ழுந்திட ...... அணைமீதே 

இருளளக பந்தி வஞ்சியி லிருகலையு டன்கு லைந்திட 
இதழமுத ருந்த சிங்கியின் ...... மனமாய 

முருகொடுக லந்த சந்தனஅளருபடு குங்கு மங்கமழ் 
முலைமுகடு கொண்டெ ழுந்தொறு ...... முருகார 

முழுமதிபு ரிந்த சிந்துர அரிவையரு டன்க லந்திடு 
முகடியுந லம்பி றந்திட ...... அருள்வாயே 

எரிவிடநி மிர்ந்த குஞ்சியி னிலவொடு மெழுந்த கங்கையு 
மிதழியொட ணிந்த சங்கரர் ...... களிகூரும் 

இமவரைத ருங்க ருங்குயில் மரகதநி றந்த ருங்கிளி 
யெனதுயிரெ னுந்த்ரி யம்பகி ...... பெருவாழ்வே 

அரைவட மலம்பு கிண்கிணி பரிபுர நெருங்கு தண்டைக 
ளணிமணிச தங்கை கொஞ்சிட ...... மயில்மேலே 

அகமகிழ்வு கொண்டு சந்ததம் வருகுமர முன்றி லின்புறம் 
அலைபொருத செந்தில் தங்கிய ...... பெருமாளே. 
பாடல் 33 

தனதன தனன தனத்தத் தாத்தன 
தனதன தனன தனத்தத் தாத்தன 
தனதன தனன தனத்தத் தாத்தன ...... தந்ததான 

இருள்விரி குழலை விரித்துத் தூற்றவு 
மிறுகிய துகிலை நெகிழ்த்துக் காட்டவு 
மிருகடை விழியு முறுக்கிப் பார்க்கவு ...... மைந்தரோடே 

இலைபிள வதனை நடித்துக் கேட்கவு 
மறுமொழி பலவு மிசைத்துச் சாற்றவு 
மிடையிடை சிறிது நகைத்துக் காட்டவு ...... மெங்கள்வீடே 

வருகென வொருசொ லுரைத்துப் பூட்டவும் 
விரிமல ரமளி யணைத்துச் சேர்க்கவும் 
வருபொரு ளளவி லுருக்கித் தேற்றவு ...... நிந்தையாலே 

வனைமனை புகுதி லடித்துப் போக்கவு 
மொருதலை மருவு புணர்ச்சித் தூர்த்தர்கள் 
வசைவிட நினது பதத்தைப் போற்றுவ ...... தெந்தநாளோ 

குருமணி வயிர மிழித்துக் கோட்டிய 
கழைமட வுருவு வெளுத்துத் தோற்றிய 
குளிறிசை யருவி கொழித்துத் தூற்றிய ...... மண்டுநநருர் 

குழிபடு கலுழி வயிற்றைத் தூர்த்தெழு 
திடர்மண லிறுகு துருத்திக் காப்பொதி 
குளிர்நிழ லருவி கலக்கிப் பூப்புனை ...... வண்டலாடா 

முருகவிழ் துணர்க ளுகுத்துக் காய்த்தினை 
விளைநடு விதணி லிருப்பைக் காட்டிய 
முகிழ்முலை யிளைய குறத்திக் காட்படு ...... செந்தில்வாழ்வே 

முளையிள மதியை யெடுத்துச் சாத்திய 
சடைமுடி யிறைவர் தமக்குச் சாத்திர 
முறையருள் முருக தவத்தைக் காப்பவர் ...... தம்பிரானே. 
பாடல் 34 
ராகம் - கீரவாணி; தாளம் - அங்கதாளம் (6 1/2) 
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1 

தனதனன தந்த தானதன 
தனதனன தந்த தானதன 
தனதனன தந்த தானதன ...... தந்ததான 

உததியறல் மொண்டு சூல்கொள்கரு 
முகிலெனஇ ருண்ட நீலமிக 
வொளிதிகழு மன்றல் ஓதிநரை ...... பஞ்சுபோலாய் 

உதிரமெழு துங்க வேலவிழி 
மிடைகடையொ துங்கு பீளைகளு 
முடைதயிர்பி திர்ந்த தோஇதென ...... வெம்புலாலாய் 

மதகரட தந்தி வாயினிடை 
சொருகுபிறை தந்த சூதுகளின் 
வடிவுதரு கும்ப மோதிவளர் ...... கொங்கைதோலாய் 

வனமழியு மங்கை மாதர்களின் 
நிலைதனையு ணர்ந்து தாளிலுறு 
வழியடிமை யன்பு கூருமது ...... சிந்தியேனோ 

இதழ்பொதிய விழ்ந்த தாமரையின் 
மணவறைபு குந்த நான்முகனும் 
எறிதிரைய லம்பு பாலுததி ...... நஞ்சராமேல் 

இருவிழிது யின்ற நாரணனும் 
உமைமருவு சந்த்ர சேகரனும் 
இமையவர்வ ணங்கு வாசவனும் ...... நின்றுதாழும் 

முதல்வசுக மைந்த பீடிகையில் 
அகிலசக அண்ட நாயகிதன் 
மகிழ்முலைசு ரந்த பாலமுத ...... முண்டவேளே 

முளைமுருகு சங்கு வீசியலை 
முடுகிமைத வழ்ந்த வாய்பெருகி 
முதலிவரு செந்தில் வாழ்வுதரு ...... தம்பிரானே. 
பாடல் 35 

தனத்தந் தானன தானன தானன 
தனத்தந் தானன தானன தானன 
தனத்தந் தானன தானன தானன ...... தனதான 


உருக்கம் பேசிய நீலியர் காசுகள் 
பறிக்குந் தோஷிகள் மோகவி காரிகள் 
உருட்டும் பார்வையர் மாபழி காரிகள் ...... மதியாதே 

உரைக்கும் வீரிகள் கோளர வாமென 
வுடற்றுந் தாதியர் காசள வேமனம் 
உறைக்குந் தூரிகள் மீதினி லாசைகள் ...... புரிவேனோ 

அருக்கன் போலொளி வீசிய மாமுடி 
யணைத்துந் தானழ காய்நல மேதர 
அருட்கண் பார்வையி னாலடி யார்தமை ...... மகிழ்வோடே 

அழைத்துஞ் சேதிகள் பேசிய காரண 
வடிப்பந் தானென வேயெனை நாடொறும் 
அதிக்கஞ் சேர்தர வேயரு ளாலுட ...... னினிதாள்வாய் 

இருக்குங் காரண மீறிய வேதமும் 
இசைக்குஞ் சாரமு மேதொழு தேவர்கள் 
இடுக்கண் தீர்கன னேயடி யார்தவ ...... முடன்மேவி 

இலக்கந் தானென வேதொழ வேமகிழ் 
விருப்பங் கூர்தரு மாதியு மாயுல 
கிறுக்குந் தாதகி சூடிய வேணிய ...... னருள்பாலா 

திருக்குந் தாபதர் வேதிய ராதியர் 
துதிக்குந் தாளுடைய நாயக னாகிய 
செகச்செஞ் சோதியு மாகிய மாதவன் ...... மருகோனே 

செழிக்குஞ் சாலியு மேகம ளாவிய 
கருப்பஞ் சோலையும் வாழையு மேதிகழ் 
திருச்செந் தூர்தனில் மேவிய தேவர்கள் ...... பெருமாளே. 
பாடல் 36
ராகம் - வலஜி / பந்துவராளி; தாளம் - ஆதி 
(எடுப்பு - 3/4 இடம்) 

தானன தானன தானன தானன 
தானன தானன ...... தனதானா 

ஏவினை நேர்விழி மாதரை மேவிய 
ஏதனை மூடனை ...... நெறிபேணா 

ஈனனை வீணனை ஏடெழு தாமுழு 
ஏழையை மோழையை ...... அகலாநீள் 

மாவினை மூடிய நோய்பிணி யாளனை 
வாய்மையி லாதனை ...... யிகழாதே 

மாமணி நூபுர சீதள தாள்தனி 
வாழ்வுற ஈவது ...... மொருநாளே 

நாவலர் பாடிய நூலிசை யால்வரு 
நாரத னார்புகல் ...... குறமாதை 

நாடியெ கானிடை கூடிய சேவக 
நாயக மாமயி ...... லுடையோனே 

தேவிம நோமணி ஆயிப ராபரை 
தேன்மொழி யாள்தரு ...... சிறியோனே 

சேணுயர் சோலையி னீழலி லேதிகழ் 
சீரலை வாய்வரு ...... பெருமாளே. 
பாடல் 37 
ராகம் - பிலஹரி; தாளம் - ஆதி - 2 களை 

தானா தந்தத் தானா தந்தத் 
தானா தந்தத் ...... தனதானா 

ஓரா தொன்றைப் பாரா தந்தத் 
தோடே வந்திட் ...... டுயிர்சோர 

ஊடா நன்றற் றார்போல் நின்றெட் 
டாமால் தந்திட் ...... டுழல்மாதர் 

கூரா வன்பிற் சோரா நின்றக் 
கோயா நின்றுட் ...... குலையாதே 

கோடார் செம்பொற் றோளா நின்சொற் 
கோடா தென்கைக் ...... கருள்தாராய் 

தோரா வென்றிப் போரா மன்றற் 
றோளா குன்றைத் ...... தொளையாடீ 

சூதா யெண்டிக் கேயா வஞ்சச் 
சூர்மா அஞ்சப் ...... பொரும்வேலா 

சீரார் கொன்றைத் தார்மார் பொன்றச் 
சேவா றெந்தைக் ...... கினியோனே 

தேனே யன்பர்க் கேயா மின்சொற் 
சேயே செந்திற் ...... பெருமாளே. 
பாடல் 38
ராகம் - மனோலயம் (மத்யமஸ்ருதி); தாளம் - சதுஸ்ர த்ருவம் - கண்ட நடை (35) 
/4/4/4 0 - நடை தக தகிட 

தத்ததன தத்தத் தனந்தந் தனந்ததன 
தத்ததன தத்தத் தனந்தந் தனந்ததன 
தத்ததன தத்தத் தனந்தந் தனந்ததன ...... தனதான 

கட்டழகு விட்டுத் தளர்ந்தங் கிருந்துமுனம் 
இட்டபொறி தப்பிப் பிணங்கொண்ட தின்சிலர்கள் 
கட்டணமெ டுத்துச் சுமந்தும் பெரும்பறைகள் ...... முறையோடே 

வெட்டவிட வெட்டக் கிடஞ்சங் கிடஞ்சமென 
மக்களொரு மிக்கத் தொடர்ந்தும் புரண்டும்வழி 
விட்டுவரு மித்தைத் தவிர்ந்துன் பதங்களுற ...... வுணர்வேனோ 

பட்டுருவி நெட்டைக் க்ரவுஞ்சம் பிளந்துகடல் 
முற்றுமலை வற்றிக் குழம்புங் குழம்பமுனை 
பட்டஅயில் தொட்டுத் திடங்கொண் டெதிர்ந்தவுணர் ...... முடிசாயத் 

தட்டழிய வெட்டிக் கவந்தம் பெருங்கழுகு 
நிர்த்தமிட ரத்தக் குளங்கண் டுமிழ்ந்துமணி 
சற்சமய வித்தைப் பலன்கண்டு செந்திலுறை ...... பெருமாளே. 
பாடல் 39 
ராகம் - காவடிச்சிந்து; தாளம் - அங்கதாளம் (5 1/2) 
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2 

தந்ததன தந்த தந்த தந்ததன தந்த தந்த 
தந்ததன தந்த தந்த ...... தனதான 

கண்டுமொழி கொம்பு கொங்கை வஞ்சியிடை யம்பு நஞ்சு 
கண்கள்குழல் கொண்டல் என்று ...... பலகாலும் 

கண்டுவளம்வ ருந்தி நொந்து மங்கையர்வ சம்பு ரிந்து 
கங்குல்பகல் என்று நின்று ...... விதியாலே 

பண்டைவினை கொண்டு ழன்று வெந்துவிழு கின்றல் கண்டு 
பங்கயப தங்கள் தந்து ...... புகழோதும் 

பண்புடைய சிந்தை யன்பர் தங்களினு டன்க லந்து 
பண்புபெற அஞ்ச லஞ்ச ...... லெனவாராய் 

வண்டுபடு கின்ற தொங்கல் கொண்டறநெ ருங்கி யிண்டு 
வம்பினைய டைந்து சந்தின் ...... மிக்முழ்கி 

வஞ்சியை முனிந்த கொங்கை மென்குறம டந்தை செங்கை 
வந்தழகு டன்க லந்த ...... மணிமார்பா 

திண்டிறல்பு னைந்த அண்டர் தங்களப யங்கள் கண்டு 
செஞ்சமர்பு னைந்து துங்க ...... மயில்மீதே 

சென்றசுரர் அஞ்சவென்று குன்றிடை மணம்பு ணர்ந்து 
செந்தில்நகர் வந்த மர்ந்த ...... பெருமாளே. 
பாடல் 40 
ராகம் - ஆனந்த பைரவி (மத்யம ஸ்ருதி); தாளம் - அங்கதாளம் (7 1/2) 
தகிட-1 1/2, தாதக-2, தகதிமி-2, தகதிமி-2 

தனன தானன தந்தன தந்தன 
தனன தானன தந்தன தந்தன 
தனன தானன தந்தன தந்தன ...... தனதான 

கமல மாதுடன் இந்திரை யுஞ்சரி 
சொலவொ ணாதம டந்தையர் சந்தன 
களப சீதள கொங்கையில் அங்கையில் ...... இருபோதேய் 

களவு நூல்தெரி வஞ்சனை அஞ்சன 
விழியின் மோகித கந்தசு கந்தரு 
கரிய ஓதியில் இந்துமு கந்தனில் ...... மருளாதே 

அமல மாகிய சிந்தைய டைந்தகல் 
தொலைவி லாதஅ றம்பொருள் இன்பமும் 
அடைய ஓதியு ணர்ந்துத ணந்தபின் ...... அருள்தானே 

அறியு மாறுபெ றும்படி அன்பினின் 
இனிய நாதசி லம்புபு லம்பிடும் 
அருண ஆடக கிண்கிணி தங்கிய ...... அடிதாராய் 

குமரி காளிப யங்கரி சங்கரி 
கவுரி நீலிப ரம்பரை அம்பிகை 
குடிலை யோகினி சண்டினி குண்டலி ...... எமதாயி 

குறைவி லாள்உமை மந்தரி அந்தரி 
வெகுவி தாகம சுந்தரி தந்தருள் 
குமர மூஷிக முந்திய ஐங்கர ...... கணராயன் 

மமவி நாயகன் நஞ்சுமிழ் கஞ்சுகி 
அணிக ஜானன விம்பனொர் அம்புலி 
மவுலி யானுறு சிந்தையு கந்தருள் ...... இளையோனே 

வளரும் வாழையு மஞ்சளும் இஞ்சியும் 
இடைவி டாது நெருங்கிய மங்கல 
மகிமை மாநகர் செந்திலில் வந்துறை ...... பெருமாளே. 
பாடல் 41 
தனத்தந்தம் தனத்தந்தம் 
தனத்தந்தம் தனத்தந்தம் 
தனத்தந்தம் தனத்தந்தம் ...... தனதானா 

கரிக்கொம்பந் தனித்தங்கங் 
குடத்தின்பந் தனத்தின்கண் 
கறுப்புந்தன் சிவப்புஞ்செம் ...... பொறிதோள்சேர் 

கணைக்கும்பண் டுழைக்கும்பங் 
களிக்கும்பண் பொழிக்குங்கண் 
கழுத்துஞ்சங் கொளிக்கும்பொன் ...... குழையாடச் 

சரக்குஞ்சம் புடைக்கும்பொன் 
றுகிற்றந்தந் தரிக்குந்தன் 
சடத்தும்பண் பிலுக்குஞ்சம் ...... பளமாதர் 

சலித்தும்பின் சிரித்துங்கொண் 
டழைத்துஞ்சண் பசப்பும் பெண் 
தனத்துன்பந் தவிப்புண்டிங் ...... குழல்வேனோ 

சுரர்ச்சங்கந் துதித்தந்தஞ் 
செழுத்தின்பங் களித்துண்பண் 
சுகத்துய்ந்தின் பலர்ச்சிந்தங் ...... கசுராரைத் 

துவைத்தும்பந் தடித்துஞ்சங் 
கொலித்துங்குன் றிடித்தும்பண் 
சுகித்துங்கண் களிப்புங்கொண் ...... டிடும்வேலா 

சிரப்பண்புங் கரப்பண்புங் 
கடப்பந்தொங் கலிற்பண்புஞ் 
சிவப்பண்புந் தவப்பண்புந் ...... தருவோனே 

தினைத்தொந்தங் குறப்பெண்பண் 
சசிப்பெண்கொங் கையிற்றுஞ்சுஞ் 
செழிக்குஞ்செந் திலிற்றங்கும் ...... பெருமாளே. 
பாடல் 42 
தனத்தந்தம் தனத்தந்தம் 
தனத்தந்தம் தனத்தந்தம் 
தனத்தந்தம் தனத்தந்தம் ...... தனதானா 


கருப்பந்தங் கிரத்தம்பொங் 
கரைப்புண்கொண் டுருக்கும்பெண் 
களைக்கண்டங் கவர்ப்பின்சென் ...... றவரோடே 

கலப்புண்டுஞ் சிலுப்புண்டுந் 
துவக்குண்டும் பிணக்குண்டுங் 
கலிப்புண்டுஞ் சலிப்புண்டுந் ...... தடுமாறிச் 

செருத்தண்டந் தரித்தண்டம் 
புகத்தண்டந் தகற்கென்றுந் 
திகைத்தந்திண் செகத்தஞ்சுங் ...... கொடுமாயும் 

தியக்கங்கண் டுயக்கொண்டென் 
பிறப்பங்கஞ் சிறைப்பங்கஞ் 
சிதைத்துன்றன் பதத்தின்பந் ...... தருவாயே 

அருக்கன்சஞ் சரிக்குந்தெண் 
டிரைக்கண்சென் றரக்கன்பண் 
பனைத்தும்பொன் றிடக்கன்றுங் ...... கதிர்வேலா 

அணிச்சங்கங் கொழிக்குந்தண் 
டலைப்பண்பெண் டிசைக்குங்கொந் 
தளிக்குஞ்செந் திலிற்றங்குங் ...... குமரேசா 

புரக்குஞ்சங் கரிக்குஞ்சங் 
கரர்க்குஞ்சங் கரர்க்கின்பம் 
புதுக்குங்கங் கையட்குந்தஞ் ...... சுதனானாய் 

புனைக்குன்றந் திளைக்குஞ்செந் 
தினைப்பைம்பொன் குறக்கொம்பின் 
புறத்தண்கொங் கையிற்றுஞ்சும் ...... பெருமாளே. 
பாடல் 43 
தனன தனதன தனதன தனதன 
தனன தனதன தனதன தனதன 
தனன தனதன தனதன தனதன ...... தனதான 


களபம் ஒழுகிய புளகித முலையினர் 
கடுவும் அமிர்தமும் விரவிய விழியினர் 
கழுவு சரிபுழு கொழுகிய குழலினர் ...... எவரோடுங் 

கலகம் இடுகயல் எறிகுழை விரகியர் 
பொருளில் இளைஞரை வழிகொடு மொழிகொடு 
தளர விடுபவர் தெருவினில் எவரையும் ...... நகையாடிப் 

பிளவு பெறிலதி லளவள வொழுகியர் 
நடையில் உடையினில் அழகொடு திரிபவர் 
பெருகு பொருள்பெறில் அமளியில் இதமொடு ...... குழைவோடே 

பிணமும் அணைபவர் வெறிதரு புனலுணும் 
அவச வனிதையர் முடுகொடும் அணைபவர் 
பெருமை யுடையவர் உறவினை விடஅருள் ...... புரிவாயே 

அளையில் உறைபுலி பெறுமக வயிறரு 
பசுவின் நிரைமுலை யமுதுண நிரைமகள் 
வசவ னொடுபுலி முலையுண மலையுடன் ...... உருகாநீள் 

அடவி தனிலுள உலவைகள் தளிர்விட 
மருள மதமொடு களிறுகள் பிடியுடன் 
அகல வெளியுயர் பறவைகள் நிலம்வர ...... விரல்சேரேழ் 

தொளைகள் விடுகழை விரல்முறை தடவிய 
இசைகள் பலபல தொனிதரு கருமுகில் 
சுருதியுடையவன் நெடியவன் மனமகிழ் ...... மருகோனே 

துணைவ குணதர சரவண பவநம 
முருக குருபர வளரறு முககுக 
துறையில் அலையெறி திருநகர் உறைதரு ...... பெருமாளே. 
பாடல் 44 
தனந்த தந்த தந்த தந்த தந்த தந்த தந்த தந்த 
தந்த தந்த தந்த தந்த ...... தனதான 


கனங்கள் கொண்ட குந்த ளங்க ளுங்கு லைந்த லைந்து விஞ்சு 
கண்க ளுஞ்சி வந்த யர்ந்து ...... களிகூரக் 

கரங்க ளுங்கு விந்து நெஞ்ச கங்க ளுங்க சிந்தி டுங்க 
றங்கு பெண்க ளும்பி றந்து ...... விலைகூறிப் 

பொனின்கு டங்க ளஞ்சு மென்த னங்க ளும்பு யங்க ளும்பொ 
ருந்தி யன்பு நண்பு பண்பு ...... முடனாகப் 

புணர்ந்து டன்பு லர்ந்து பின்க லந்த கங்கு ழைந்த வம்பு 
ரிந்து சந்த தந்தி ரிந்து ...... படுவேனோ 

அனங்க னெந்து நைந்து வெந்து குந்து சிந்த அன்று கண்தி 
றந்தி ருண்ட கண்டர் தந்த ...... அயில்வேலா 

அடர்ந்த டர்ந்தெ திர்ந்து வந்த வஞ்ச ரஞ்ச வெஞ்ச மம்பு 
ரிந்த அன்ப ரின்ப நண்ப ...... உரவோனே 

சினங்கள் கொண்டி லங்கை மன்சி ரங்கள் சித்த வெஞ்ச ரத்தெ 
ரிந்த வன்ப ரிந்த இன்ப ...... மருகோனே 

சிவந்த செஞ்ச தங்கை யுஞ்சி லம்பு தண்டை யும்பு னைந்து 
செந்தில் வந்த கந்த எங்கள் ...... பெருமாளே. 
பாடல் 45 
தந்ததன தான தந்ததன தான 
தந்ததன தான ...... தனதான 


கன்றிலுறு மானை வென்றவிழி யாலே 
கஞ்சமுகை மேவு ...... முலையநலே 

கங்குல்செறி கேச மங்குல்குலை யாமை 
கந்தமலர் சூடு ...... மதனாலே 

நன்றுபொருள் தீர வென்றுவிலை பேசி 
நம்பவிடு மாத ...... ருடனாடி 

நஞ்சுபுசி தேரை யங்கமது வாக 
நைந்துவிடு வேனை ...... யருள்பாராய் 

குன்றிமணி போல்வ செங்கண்வரி போகி 
கொண்டபடம் வீசு ...... மணிகூர்வாய் 

கொண்ட மயிலேறி அன்றசுரர் சேனை 
கொன்றகும ரேச ...... குருநாதா 

மன்றல்கமழ் பூக தெங்குதிரள் சோலை 
வண்டுபடு வாவி ...... புடைசூழ 

மந்திநட மாடு செந்தினகர் மேவு 
மைந்தஅம ரேசர் ...... பெருமாளே. 
பாடல் 46 
ராகம் - ஸஹானா / திலங்; தாளம் - ஆதி கண்டநடை (20) 

தானனா தந்தனம் தானனா தந்தனம் 
தானனா தந்தனம் ...... தனதான 


காலனார் வெங்கொடுந் தூதர்பா சங்கொடென் 
காலினார் தந்துடன் ...... கொடுபோகக் 

காதலார் மைந்தருந் தாயரா ருஞ்சுடுங் 
கானமே பின்தொடர்ந் ...... தலறாமுன் 

சூலம்வாள் தண்டுசெஞ் சேவல்கோ தண்டமுஞ் 
சூடுதோ ளுந்தடந் ...... திருமார்பும் 

தூயதாள் தண்டையுங் காணஆர் வஞ்செயுந் 
தோகைமேல் கொண்டுமுன் ...... வரவேணும் 

ஆலகா லம்பரன் பாலதா கஞ்சிடுந் 
தேவர்வா ழன்றுகந் ...... தமுதீயும் 

ஆரவா ரஞ்செயும் வேலைமேல் கண்வளர்ந் 
தாதிமா யன்றனன் ...... மருகோனே 

சாலிசேர் சங்கினம் வாவிசூழ் பங்கயஞ் 
சாரலார் செந்திலம் ...... பதிவாழ்வே 

தாவுசூ ரஞ்சிமுன் சாயவே கம்பெறுந் 
தாரைவே லுந்திடும் ...... பெருமாளே. 
பாடல் 47 
தனன தானனத் தனதன தனனாத் 
தந்தத் தந்தத் ...... தனதான 


குகர மேவுமெய்த் துறவினின் மறவாக் 
கும்பிட் டுந்தித் ...... தட்முழ்கிக் 

குமுத வாயின்முற் றமுதினை நுகராக் 
கொண்டற் கொண்டைக் ...... குழலாரோ 

டகரு தூளிகர்ப் புரதன இருகோட் 
டன்புற் றின்பக் ...... கடலூடே

அமிழு வேனைமெத் தெனவொரு கரைசேர்த் 
தம்பொற் றண்டைக் ...... கழல்தாராய் 

ககன கோளகைக் கணவிரு மளவாக் 
கங்கைத் துங்கப் ...... புனலாடும் 

கமல வாதனற் களவிட முடியாக் 
கம்பர்க் கொன்றைப் ...... புகல்வோனே 

சிகர கோபுரத் தினுமதி ளினுமேற் 
செம்பொற் கம்பத் ...... தளமீதும் 

தெருவி லேயுநித் திலமெறி யலைவாய்ச் 
செந்திற் கந்தப் ...... பெருமாளே. 
பாடல் 48 
ராகம் - குந்தல வராளி ; தாளம் - அங்கதாளம் (14 1/2) 
தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2, தகிட-1 1/2, 
தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2 

தனதன தந்த தனதன தந்த 
தனதன தந்த ...... தானாந்தனனா 


குடர்நிண மென்பு சலமல மண்டு 
குருதிந ரம்பு ...... சீயூன் பொதிதோல் 

குலவு குரம்பை முருடு சுமந்து 
குனகிம கிழ்ந்து ...... நாயேன் தளரா 

அடர்மத னம்பை யனையக ருங்க 
ணரிவையர் தங்கள் ...... தோடோ ய்ந் தயரா 

அறிவழி கின்ற குணமற வுன்றன் 
அடியிணை தந்து ...... நீயாண் டருள்வாய் 

தடவியல் செந்தில் இறையவ நண்பு 
தருகுற மங்கை ...... வாழ்வாம் புயனே 

சரவண கந்த முருகக டம்ப 
தனிமயில் கொண்டு ...... பார்சூழ்ந் தவனே 

சுடர்படர் குன்று தொளைபட அண்டர் 
தொழவொரு செங்கை ...... வேல்வாங் கியவா 

துரிதப தங்க இரதப்ர சண்ட 
சொரிகடல் நின்ற ...... சூராந் தகனே. 
பாடல் 49 
தனத்தந்தம் தனத்தந்தம் 
தனத்தந்தம் தனத்தந்தம் 
தனத்தந்தம் தனத்தந்தம் ...... தனதானா 


குழைக்குஞ்சந் தனச்செங்குங் 
குமத்தின்சந் தநற்குன்றங் 
குலுக்கும்பைங் கொடிக்கென்றிங் ...... கியலாலே 

குழைக்குங்குண் குமிழ்க்குஞ்சென் 
றுரைக்குஞ்செங் கயற்கண்கொண் 
டழைக்கும்பண் தழைக்குஞ்சிங் ...... கியராலே 

உழைக்குஞ்செங் கடத்துன்பன் 
சுகப்பண்டஞ் சுகித்துண்டுண் 
டுடற்பிண்டம் பருத்தின்றிங் ...... குழலாதே 

உதிக்குஞ்செங் கதிர்ச்சிந்தும் 
ப்ரபைக்கொன்றுஞ் சிவக்குந்தண் 
டுயர்க்குங்கிண் கிணிச்செம்பஞ் ...... சடிசேராய் 

தழைக்குங்கொன் றையைச்செம்பொன் 
சடைக்கண்டங் கியைத்தங்குந் 
தரத்தஞ்செம் புயத்தொன்றும் ...... பெருமானார் 

தனிப்பங்கின் புறத்தின்செம் 
பரத்தின்பங் கயத்தின்சஞ் 
சரிக்குஞ்சங் கரிக்கென்றும் ...... பெருவாழ்வே 

கழைக்குங்குஞ் சரக்கொம்புங் 
கலைக்கொம்புங் கதித்தென்றுங் 
கயற்கண்பண் பளிக்குந்திண் ...... புயவேளே 

கறுக்குங்கொண் டலிற்பொங்குங் 
கடற்சங்கங் கொழிக்குஞ்செந் 
திலிற்கொண்டன் பினிற்றங்கும் ...... பெருமாளே. 
பாடல் 50 
தந்ததன தந்ததன தந்ததன தந்ததன 
தந்ததன தந்ததன ...... தந்ததான 


கொங்கைகள்கு லுங்கவளை செங்கையில்வி ளங்கஇருள் 
கொண்டலைய டைந்தகுழல் ...... வண்டுபாடக் 

கொஞ்சியவ னங்குயில்கள் பஞ்சநல்வ னங்கிளிகள் 
கொஞ்சியதெ னுங்குரல்கள் ...... கெந்துபாயும் 

வெங்கயல்மி ரண்டவிழி அம்புலிய டைந்தநுதல் 
விஞ்சையர்கள் தங்கள்மயல் ...... கொண்டுமேலாய் 

வெம்பிணியு ழன்றபவ சிந்தனைநி னைந்துனது 
மின்சரண பைங்கழலொ ...... டண்டஆளாய் 

சங்கமுர சந்திமிலை துந்தமித தும்பவளை 
தந்தனத னந்தவென ...... வந்தசூரர் 

சங்கைகெட மண்டிதிகை யெங்கிலும டிந்துவிழ 
தண்கடல்கொ ளுந்தநகை ...... கொண்டவேலா 

சங்கரனு கந்தபரி வின்குருவெ னுஞ்சுருதி 
தங்களின்ம கிழ்ந்துருகு ...... மெங்கள்கோவே 

சந்திரமு கஞ்செயல்கொள் சுந்தரகு றம்பெணொடு 
சம்புபுகழ் செந்தில்மகிழ் ...... தம்பிரானே. 
பாடல் 51 
தந்தத் தனனத் தந்தத் தனனத் 
தந்தத் தனனத் ...... தனதானா 


கொங்கைப் பணையிற் செம்பொற் செறிவிற் 
கொண்டற் குழலிற் ...... கொடிதான 

கொன்றைக் கணையொப் பந்தக் கயலிற் 
கொஞ்சுக் கிளியுற் ...... றுறவான 

சங்கத் தொனியிற் சென்றிற் கடையிற் 
சந்திப் பவரைச் ...... சருவாதே 

சந்தப் படியுற் றென்றற் றலையிற் 
சந்தப் பதம்வைத் ...... தருள்வாயே 

அங்கப் படைவிட் டன்றைப் படுகைக் 
கந்திக் கடலிற் ...... கடிதோடா 

அந்தப் பொழிலிற் சந்துத் தலையுற் 
றஞ்சப் பொருதுற் ...... றொழியாதே 

செங்கைக் கதிருற் றொன்றக் கடலிற் 
சென்றுற் றவர்தற் ...... பொருளானாய் 

சிந்தைக் கனிவைத் தந்தப் பொழிலிற் 
செந்திற் குமரப் ...... பெருமாளே. 
பாடல் 52 
தனதனன தனதனன தந்தனந் தந்தனம் 
தனதனன தனதனன தந்தனந் தந்தனம் 
தனதனன தனதனன தந்தனந் தந்தனம் ...... தந்ததானா 


கொடியனைய இடைதுவள அங்கமும் பொங்கஅங் 
குமுதஅமு திதழ்பருகி யின்புறுஞ் சங்கையன் 
குலவியணை முகிலளக முஞ்சரிந் தன்பினின் ...... பண்புலாவக் 

கொடியவிரல் நகநுதியில் புண்படுஞ் சஞ்சலன் 
குனகியவ ருடனினிது சம்ப்ரமங் கொண்டுளங் 
குரலழிய அவசமுறு குங்குணன் கொங்கவிழ்ந் ...... தொன்றுபாய்மேல் 

விடமனைய விழிமகளிர் கொங்கையின் பன்புறும் 
வினையனியல் பரவுமுயிர் வெந்தழிந் தங்கமும் 
மிதமொழிய அறிவில்நெறி பண்பிலண் டுஞ்சகன் ...... செஞ்செநீடும் 

வெகுகனக வொளிகுலவும் அந்தமன் செந்திலென் 
றவிழவுள முருகிவரும் அன்பிலன் தந்திலன் 
விரவுமிரு சிறுகமல பங்கயந் தந்துகந் ...... தன்புறாதோ 

படமிலகும் அரவினுடல் அங்கமும் பங்கிடந் 
துதறுமொரு கலபிமிசை வந்தெழுந் தண்டர்தம் 
பகையசுர ரனைவருடல் சந்துசந் துங்கதஞ் ...... சிந்தும்வேலா 

படியவரும் இமையவரும் நின்றிறைஞ் செண்குணன் 
பழையஇறை யுருவமிலி அன்பர்பங் கன்பெரும் 
பருவரல்செய் புரமெரிய விண்டிடுஞ் செங்கணண் ...... கங்கைமான்வாழ் 

சடிலமிசை அழகுபுனை கொன்றையும் பண்புறுந் 
தருணமதி யினகுறைசெய் துண்டமுஞ் செங்கையொண் 
சகலபுவ னமுமொழிக தங்குறங் கங்கியும் ...... பொங்கிநீடும் 

சடமருவு விடையரவர் துங்கஅம் பங்கினின் 
றுலகுதரு கவுரியுமை கொங்கைதந் தன்புறுந் 
தமிழ்விரக உயர்பரம சங்கரன் கும்பிடுந் ...... தம்பிரானே. 
பாடல் 53 
ராகம் - கரஹரப்ரியா; தாளம் - சதுஸ்ர ரூபகம் (6) (ஏடுப்பு 3/4 இடம்) 

தந்தன தானான தானன 
தந்தன தானான தானன 
தந்தன தானான தானன ...... தனதான 


கொம்பனை யார்காது மோதிரு 
கண்களி லாமோத சீதள 
குங்கும பாடீர பூஷண ...... நகமேவு 

கொங்கையி னீராவி மேல்வளர் 
செங்கழு நீர்மாலை சூடிய 
கொண்டையி லாதார சோபையில் ...... மருளாதே 

உம்பர்கள் ஸ்வாமி நமோநம 
எம்பெரு மானே நமோநம 
ஒண்டொடி மோகா நமோநம ...... எனநாளும் 

உன்புக ழேபாடி நானினி 
அன்புட னாசார பூசைசெய் 
துய்ந்திட வீணாள்ப டாதருள் ...... புரிவாயே 

பம்பர மேபோல ஆடிய 
சங்கரி வேதாள நாயகி 
பங்கய சீபாத நூபுரி ...... கரசூலி 

பங்கமி லாநீலி மோடிப 
யங்கரி மாகாளி யோகினி 
பண்டுசு ராபான சூரனொ ...... டெதிர்போர்கண் 

டெம்புதல் வாவாழி வாழியெ 
னும்படி வீறான வேல்தர 
என்றுமு ளானேம நோகர ...... வயலூரா

இன்சொல்வி சாகாக்ரு பாகர 
செந்திலில் வாழ்வாகி யேயடி 
யென்றனை யீடேற வாழ்வருள் ...... பெருமாளே. 
பாடல் 54 
தனதன தனதன தனதன தன 
தந்தத் ...... தனதானா 


கொலைமத கரியன ம்ருகமத தனகிரி 
கும்பத் ...... தனமானார் 

குமுதஅ முதஇதழ் பருகியு ருகிமயல் 
கொண்டுற் ...... றிடுநாயேன் 

நிலையழி கவலைகள் கெடவுன தருள்விழி 
நின்றுற் ...... றிடவேதான் 

நினதிரு வடிமல ரிணைமன தினிலுற 
நின்பற் ...... றடைவேனோ 

சிலையென வடமலை யுடையவர் அருளிய 
செஞ்சொற் ...... சிறுபாலா 

திரைகட லிடைவரும் அசுரனை வதைசெய்த 
செந்திற் ...... பதிவேலா 

விலைநிகர் நுதலிப மயில்குற மகளும்வி 
ரும்பிப் ...... புணர்வோனே 

விருதணி மரகத மயில்வரு குமரவி 
டங்கப் ...... பெருமாளே. 
பாடல் 55 
தந்தனா தந்தனத் தந்தனா தந்தனத் 
தந்தனா தந்தனத் ...... தனதான 


சங்குபோல் மென்கழுத் தந்தவாய் தந்தபற் 
சந்தமோ கின்பமுத் ...... தெனவானிற் 

றங்குகார் பைங்குழற் கொங்கைநீள் தண்பொருப் 
பென்றுதாழ் வொன்றறுத் ...... துலகோரைத் 

துங்கவேள் செங்கைபொற் கொண்டல்நீ யென்றுசொற் 
கொண்டுதாய் நின்றுரைத் ...... துழலாதே 

துன்பநோய் சிந்தநற் கந்தவே ளென்றுனைத் 
தொண்டினா லொன்றுரைக் ...... கருள்வாயே 

வெங்கண்வ்யா ளங்கொதித் தெங்கும்வெ மென்றெடுத் 
துண்டுமே லண்டருக் ...... கமுதாக 

விண்டநா தன்திருக் கொண்டல்பா கன்செருக் 
குண்டுபே ரம்பலத் ...... தினிலாடி 

செங்கண்மால் பங்கயக் கண்பெறா தந்தரத் 
தின்கணா டுந்திறற் ...... கதிராழித் 

திங்கள்வா ழுஞ்சடைத் தம்பிரா னன்புறச் 
செந்தில்வாழ் செந்தமிழ்ப் ...... பெருமாளே. 
பாடல் 56 
தந்தனா தந்தனா தந்தனா தந்தனா 
தந்தனா ...... தந்ததான 


சங்கைதா னொன்றுதா னின்றியே நெஞ்சிலே 
சஞ்சலா ...... ரம்பமாயன் 

சந்தொடே குங்குமா லங்க்ருதா டம்பரா 
சம்ப்ரமா ...... நந்தமாயன் 

மங்கைமார் கொங்கைசே ரங்கமோ கங்களால் 
வம்பிலே ...... துன்புறாமே 

வண்குகா நின்செர்ரு பம்ப்ரகா சங்கொடே 
வந்துநீ ...... யன்பிலாள்வாய் 

கங்கைசூ டும்பிரான் மைந்தனே அந்தனே 
கந்தனே ...... விஞ்சையூரா 

கம்பியா திந்த்ரலோ கங்கள்கா வென்றவா 
கண்டலே ...... சன்சொல்வீரா 

செங்கைவேல் வென்றிவேல் கொண்டுசூர் பொன்றவே 
சென்றுமோ ...... தும்ப்ரதாபா 

செங்கண்மால் பங்கஜா னன்தொழா நந்தவேள் 
செந்தில்வாழ் ...... தம்பிரானே. 
பாடல் 57 
தத்ததன தானதன தத்தான 
தத்ததன தானதன தத்தான 
தத்ததன தானதன தத்தான ...... தனதான 


சத்தமிகு மேழுகட லைத்தேனை 
யுற்றமது தோடுகணை யைப்போர்கொள் 
சத்திதனை மாவின்வடு வைக்காவி ...... தனைமீறு 

தக்கமணம் வீசுகம லப்பூவை 
மிக்கவிளை வானகடு வைச்சீறு 
தத்துகளும் வாளையடு மைப்பாவு ...... விழிமாதர் 

மத்தகிரி போலுமொளிர் வித்தார 
முத்துவட மேவுமெழில் மிக்கான 
வச்சிரகி ரீடநிகர் செப்பான ...... தனமீதே 

வைத்தகொடி தானமயல் விட்டான 
பத்திசெய ஏழையடி மைக்காக 
வஜ்ரமயில் மீதிலினி யெப்போது ...... வருவாயே 

சித்ரவடி வேல்பனிரு கைக்கார 
பத்திபுரி வோர்கள்பனு வற்கார 
திக்கினுந டாவுபுர விக்கார ...... குறமாது 

சித்தஅநு ராககல விக்கார 
துட்டஅசு ரேசர்கல கக்கார 
சிட்டர்பரி பாலலளி தக்கார ...... அடியார்கள் 

முத்திபெற வேசொல்வச னக்கார 
தத்தைநிகர் தூயவநி தைக்கார 
முச்சகர்ப ராவுசர ணக்கார ...... இனிதான 

முத்தமிழை யாயும்வரி சைக்கார 
பச்சைமுகில் தாவுபுரி சைக்கார 
முத்துலவு வேலைநகர் முத்தேவர் ...... பெருமாளே. 
பாடல் 58 
தந்ததன தானதன தத்தான 
தந்ததன தானதன தத்தான 
தந்ததன தானதன தத்தான ...... தனதான 


சந்தனச வாதுநிறை கற்பூர 
குங்குமப டீரவிரை கத்தூரி 
தண்புழுக ளாவுகள பச்சீத ...... வெகுவாச 

சண்பகக லாரவகு ளத்தாம 
வம்புதுகி லாரவயி ரக்கோவை 
தங்கியக டோ ரதர வித்தார ...... பரிதான 

மந்த்ரம தானதன மிக்காசை 
கொண்டுபொருள் தேடுமதி நிட்டூர 
வஞ்சகவி சாரஇத யப்பூவை ...... யனையார்கள் 

வந்தியிடு மாயவிர கப்பார்வை 
அம்பிலுளம் வாடுமறி வற்றேனை 
வந்தடிமை யாளஇனி யெப்போது ...... நினைவாயே 

இந்த்ரபுரி காவல்முதன் மைக்கார 
சம்ப்ரமம யூரதுர கக்கார 
என்றுமக லாதஇள மைக்கார ...... குறமாதின் 

இன்பஅநு போகசர சக்கார 
வந்தஅசு ரேசர்கல கக்கார 
எங்களுமை சேயெனரு மைக்கார ...... மிகுபாவின் 

செந்தமிழ்சொல் நாலுகவி தைக்கார 
குன்றெறியும் வேலின்வலி மைக்கார 
செஞ்சொலடி யார்களெளி மைக்கார ...... எழில்மேவும் 

திங்கள்முடி நாதர்சம யக்கார 
மந்த்ரவுப தேசமகி மைக்கார 
செந்தினகர் வாழுமரு மைத்தேவர் ...... பெருமாளே. 
பாடல் 59 
ராகம் - சுருட்டி; தாளம் - மிஸ்ரசாபு (3 1/2) 
தகிட-1 1/2, தகதிமி-2 

தானத் தானன தானத் தானன 
தானத் தானன ...... தந்ததான 


சேமக் கோமள பாதத் தாமரை 
சேர்தற் கோதும ...... நந்தவேதா 

தீதத் தேயவி ரோதத் தேகுண 
சீலத் தேமிக ...... அன்புறாதே 

காமக் ரோதவு லோபப் பூதவி 
காரத் தேயழி ...... கின்றமாயா 

காயத் தேபசு பாசத் தேசிலர் 
காமுற் றேயும ...... தென்கொலோதான் 

நேமிச் சூரொடு மேருத் தூளெழ 
நீளக் காளபு ...... யங்ககால 

நீலக் ரீபக லாபத் தேர்விடு 
நீபச் சேவக ...... செந்தில்வாழ்வே 

ஓமத் தீவழு வார்கட் கூர்சிவ 
லோகத் தேதரு ...... மங்கைபாலா 

யோகத் தாறுப தேசத் தேசிக 
வூமைத் தேவர்கள் ...... தம்பிரானே. 
பாடல் 60 
தனதனன தாந்த தந்தத் 
தனதனன தாந்த தந்தத் 
தனதனன தாந்த தந்தத் ...... தனதான 


தகரநறை பூண்ட விந்தைக் 
குழலியர்கள் தேய்ந்த இன்பத் 
தளருமிடை யேந்து தங்கத் ...... தனமானார் 

தமைமனதில் வாஞ்சை பொங்கக் 
கலவியொடு சேர்ந்து மந்த்ரச் 
சமயஜெப நீங்கி யிந்தப் ...... படிநாளும் 

புகலரிய தாந்த்ரி சங்கத் 
தமிழ்பனுவ லாய்ந்து கொஞ்சிப் 
புவியதனில் வாழ்ந்து வஞ்சித் ...... துழல்மூடர் 

புநிதமிலி மாந்தர் தங்கட் 
புகழ்பகர்தல் நீங்கி நின்பொற் 
புளகமலர் பூண்டு வந்தித் ...... திடுவேனோ 

தகுடதகு தாந்த தந்தத் 
திகுடதிகு தீந்த மிந்தித் 
தகுகணக தாங்க ணங்கத் ...... தனதான 

தனனதன தாந்த னந்தத் 
தெனநடன மார்ந்த துங்கத் 
தனிமயிலை யூர்ந்த சந்தத் ...... திருமார்பா 

திசையசுரர் மாண்ட ழுந்தத் 
திறலயிலை வாங்கு செங்கைச் 
சிமையவரை யீன்ற மங்கைக் ...... கொருபாலா 

திகழ்வயிர மேந்து கொங்கைக் 
குறவனிதை காந்த சந்த்ரச் 
சிகரமுகி லோங்கு செந்திற் ...... பெருமாளே. 
பாடல் 61 
ராகம் - பீம்பளாஸ்; தாளம் - ஆதி - திஸ்ர நடை (12) 
(எடுப்பு - அதீதம்) 

தந்தா தந்தா தந்தா தந்தா 
தந்தா தந்தத் ...... தனதான 


தண்டே னுண்டே வண்டார் வஞ்சேர் 
தண்டார் மஞ்சுக் ...... குழல்மானார் 

தம்பா லன்பார் நெஞ்சே கொண்டே 
சம்பா வஞ்சொற் ...... றடிநாயேன் 

மண்டோ யந்தீ மென்கால் விண்டோ ய் 
வண்கா யம்பொய்க் ...... குடில்வேறாய் 

வன்கா னம்போ யண்டா முன்பே 
வந்தே நின்பொற் ...... கழல்தாராய் 

கொண்டா டும்பேர் கொண்டா டுஞ்சூர் 
கொன்றாய் வென்றிக் ...... குமரேசா 

கொங்கார் வண்டார் பண்பா டுஞ்சீர் 
குன்றா மன்றற் ...... கிரியோனே 

கண்டா கும்பா லுண்டா யண்டார் 
கண்டா கந்தப் ...... புயவேளே 

கந்தா மைந்தா ரந்தோள் மைந்தா 
கந்தா செந்திற் ...... பெருமாளே. 
பாடல் 62 
ராகம் - ஸிம்மேந்திர மத்யமம் / தந்யாஸி 
தாளம் - கண்டசாபு (2 1/2) 

தந்ததன தந்தனந் தந்ததன தந்தனந் 
தந்ததன தந்தனந் ...... தந்ததானா 


தண்டையணி வெண்டையங் கிண்கிணிச தங்கையுந் 
தண்கழல்சி லம்புடன் ...... கொஞ்சவேநின் 

தந்தையினை முன்பரிந் தின்பவுரி கொண்டுநன் 
சந்தொடம ணைந்துநின் ...... றன்புபோலக் 

கண்டுறக டம்புடன் சந்தமகு டங்களுங் 
கஞ்சமலர் செங்கையுஞ் ...... சிந்துவேலும் 

கண்களுமு கங்களுஞ் சந்திரநி றங்களுங் 
கண்குளிர என்றன்முன் ...... சந்தியாவோ 

புண்டரிகர் அண்டமுங் கொண்டபகி ரண்டமும் 
பொங்கியெழ வெங்களங் ...... கொண்டபோது 

பொன்கிரியெ னஞ்சிறந் தெங்கினும்வ ளர்ந்துமுன் 
புண்டரிகர் தந்தையுஞ் ...... சிந்தைகூரக் 

கொண்டநட னம்பதஞ் செந்திலிலும் என்றன்முன் 
கொஞ்சிநட னங்கொளுங் ...... கந்தவேளே 

கொங்கைகுற மங்கையின் சந்தமணம் உண்டிடுங் 
கும்பமுநி கும்பிடுந் ...... தம்பிரானே. 
பாடல் 63 
ராகம் - ஆரபி; தாளம் - ஆதி 

தந்த தனதனன தந்த தனதனன 
தந்த தனதனன ...... தனதானா 


தந்த பசிதனைய றிந்து முலையமுது 
தந்து முதுகுதட ...... வியதாயார் 

தம்பி பணிவிடைசெய் தொண்டர் பிரியமுள 
தங்கை மருகருயி ...... ரெனவேசார் 

மைந்தர் மனைவியர்க டும்பு கடனுதவு 
மந்த வரிசைமொழி ...... பகர்கோடா 

வந்து தலைநவிர விழ்ந்து தரைபுகம 
யங்க வொருமகிட ...... மிசையேறி 

அந்த கனுமெனைய டர்ந்து வருகையினி 
லஞ்ச லெனவலிய ...... மயில்மேல்நீ 

அந்த மறலியொடு கந்த மனிதனம 
தன்ப னெனமொழிய ...... வருவாயே 

சிந்தை மகிழமலை மங்கை நகிலிணைகள் 
சிந்து பயமயிலு ...... மயில்வீரா 

திங்க ளரவுநதி துன்று சடிலரருள் 
செந்தி னகரிலுறை ...... பெருமாளே. 
பாடல் 64 
ராகம் - ஆபோகி; தாளம் - சதுஸ்ர ஏகம் - மிஸ்ர நடை (14) 
(எடுப்பு - அதீதம்) 

தனத்தந்தன தனத்தந்தன 
தனத்தந்தன ...... தனதானத் 


தரிக்குங்கலை நெகிழ்க்கும்பர 
தவிக்குங்கொடி ...... மதனேவிற் 

றகைக்குந்தனி திகைக்குஞ்சிறு 
தமிழ்த்தென்றலி ...... னுடனேநின் 

றெரிக்கும்பிறை யெனப்புண்படு 
மெனப்புன்கவி ...... சிலபாடி 

இருக்குஞ்சிலர் திருச்செந்திலை 
யுரைத்துய்ந்திட ...... அறியாரே 

அரிக்குஞ்சதுர் மறைக்கும்பிர 
மனுக்குந்தெரி ...... வரிதான 

அடிச்செஞ்சடை முடிக்கொண்டிடு 
மரற்கும்புரி ...... தவபாரக் 

கிரிக்கும்பநன் முநிக்குங்க்ருபை 
வரிக்குங்குரு ...... பரவாழ்வே 

கிளைக்குந்திற லரக்கன்கிளை 
கெடக்கன்றிய ...... பெருமாளே. 
பாடல் 65 
ராகம் - பைரவி; தாளம் - திஸ்ர த்ருபுடை (7) 

தந்தந்தந் தந்தன தந்தன 
தந்தந்தந் தந்தன தந்தன 
தந்தந்தந் தந்தன தந்தன ...... தனதான 


துன்பங்கொண் டங்க மெலிந்தற 
நொந்தன்பும் பண்பு மறந்தொளி 
துஞ்சும்பெண் சஞ்சல மென்பதி ...... லணுகாதே 

இன்பந்தந் தும்பர் தொழும்பத 
கஞ்சந்தந் தஞ்ச மெனும்படி 
யென்றென்றுந் தொண்டு செயும்படி ...... யருள்வாயே 

நின்பங்கொன் றுங்குற மின்சர 
ணங்கண்டுந் தஞ்ச மெனும்படி 
நின்றன்பின் றன்படி கும்பிடு ...... மிளையோனே 

பைம்பொன்சிந் தின்றுறை தங்கிய 
குன்றெங்குஞ் சங்கு வலம்புரி 
பம்புந்தென் செந்திலில் வந்தருள் ...... பெருமாளே. 
பாடல் 66

தனத்த தத்தத் தனத்தனா 
தனத்த தத்தத் தனத்தனா 
தனத்த தத்தத் தனத்தனா ...... தந்ததானா தனனா 


தெருப்பு றத்துத் துவக்கியாய் 
முலைக்கு வட்டைக் குலுக்கியாய் 
சிரித்து ருக்கித் தருக்கியே ...... பண்டைகூள மெனவாழ் 

சிறுக்கி ரட்சைக் கிதக்கியாய் 
மனத்தை வைத்துக் கனத்தபேர் 
தியக்க முற்றுத் தவிக்கவே ...... கண்டுபேசி யுடனே 

இருப்ப கத்துத் தளத்துமேல் 
விளக்கெ டுத்துப் படுத்துமே 
லிருத்தி வைத்துப் பசப்பியே ...... கொண்டுகாசு தணியா 

திதுக்க துக்குக் கடப்படா 
மெனக்கை கக்கக் கழற்றியே 
இளைக்க விட்டுத் துரத்துவார் ...... தங்கள்சேர்வை தவிராய் 

பொருப்பை யொக்கப் பணைத்ததோ 
ரிரட்டி பத்துப் புயத்தினால் 
பொறுத்த பத்துச் சிரத்தினால் ...... மண்டுகோப முடனே 

பொரப்பொ ருப்பிற் கதித்தபோ 
ரரக்கர் பட்டுப் பதைக்கவே 
புடைத்து முட்டத் துணித்தமா ...... லன்புகூரு மருகா 

வரப்பை யெட்டி குதித்துமே 
லிடத்தில் வட்டத் தளத்திலே 
மதர்த்த முத்தைக் குவட்டியே ...... நின்றுசேலி னினம்வாழ் 

வயற்பு றத்துப் புவிக்குள்நீள் 
திருத்த ணிக்குட் சிறப்பில்வாழ் 
வயத்த நித்தத் துவத்தனே ...... செந்தில்மேவு குகனே. 
பாடல் 67 

தனதன தந்தாத் தந்தத் 
தனதன தந்தாத் தந்தத் 
தனதன தந்தாத் தந்தத் ...... தனதான 


தொடரிய மன்போற் றுங்கப் 
படையைவ ளைந்தோட் டுந்துட் 
டரையிள குந்தோட் கொங்கைக் ...... கிடுமாயத் 

துகில்விழ வுஞ்சேர்த் தங்கத் 
துளைவிர குஞ்சூழ்த் தண்டித் 
துயர்விளை யுஞ்சூட் டின்பத் ...... தொடுபாயற் 

கிடைகொடு சென்றீட் டும்பொற் 
பணியரை மென்றேற் றங்கற் 
றனையென இன்றோட் டென்றற் ...... கிடுமாதர்க் 

கினிமையி லொன்றாய்ச் சென்றுட் 
படுமன முன்றாட் கன்புற் 
றியலிசை கொண்டேத் தென்றுட் ...... டருவாயே 

நெடிதுத வங்கூர்க் குஞ்சற் 
புருடரும் நைந்தேக் கம்பெற் 
றயர்வுற நின்றார்த் தங்கட் ...... கணையேவும் 

நிகரில்ம தன்தேர்க் குன்றற் 
றெரியில்வி ழுந்தேர்ப் பொன்றச் 
சிறிதுநி னைந்தாட் டங்கற் ...... றிடுவார்முன் 

திடமுறு அன்பாற் சிந்தைக் 
கறிவிட முஞ்சேர்த் தும்பர்க் 
கிடர்களை யும்போர்ச் செங்கைத் ...... திறல்வேலா 

தினவரி வண்டார்த் தின்புற் 
றிசைகொடு வந்தேத் திஞ்சித் 
திருவளர் செந்தூர்க் கந்தப் ...... பெருமாளே. 
பாடல் 68 
ராகம் - தோடி/அடாணா 
தாளம் - அங்தாளம் (7 1/2) (ஆதி தாளத்திலும் பாடுவதுண்டு) 

தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதா-2, 
தகிடதக-2 1/2 

தந்த தனன தனனா தனனதன 
தந்த தனன தனனா தனனதன 
தந்த தனன தனனா தனனதன ...... தனதான 


தொந்தி சரிய மயிரே வெளிறநிரை 
தந்த மசைய முதுகே வளையஇதழ் 
தொங்க வொருகை தடிமேல் வரமகளிர் ...... நகையாடி 

தொண்டு கிழவ னிவனா ரெனஇருமல் 
கிண்கி ணெனமு னுரையே குழறவிழி 
துஞ்சு குருடு படவே செவிடுபடு ...... செவியாகி 

வந்த பிணியு மதிலே மிடையுமொரு 
பண்டி தனுமெ யுறுவே தனையுமிள 
மைந்த ருடைமை கடனே தெனமுடுக ...... துயர்மேவி 

மங்கை யழுது விழவே யமபடர்கள் 
நின்று சருவ மலமே யொழுகவுயிர் 
மங்கு பொழுது கடிதே மயிலின்மிசை ...... வரவேணும் 

எந்தை வருக ரகுநா யகவருக 
மைந்த வருக மகனே யினிவருக 
என்கண் வருக எனதா ருயிர்வருக ...... அபிராம 

இங்கு வருக அரசே வருகமுலை 
யுண்க வருக மலர்சூ டிடவருக 
என்று பரிவி னொடுகோ சலைபுகல ...... வருமாயன் 

சிந்தை மகிழு மருகா குறவரிள 
வஞ்சி மருவு மழகா அமரர்சிறை 
சிந்த அசுரர் கிளைவே ரொடுமடிய ...... அடுதீரா 

திங்க ளரவு நதிசூ டியபரமர் 
தந்த குமர அலையே கரைபொருத 
செந்தி னகரி லினிதே மருவிவளர் ...... பெருமாளே. 
பாடல் 69 
ராகம் - ஜோன்புரி; தாளம் - ஆதி (எடுப்பு 3/4 இடம்) 

தானன தானன தானன தந்தத் 
தானன தானன தானன தந்தத் 
தானன தானன தானன தந்தத் ...... தனதான 


தோலொடு மூடிய கூரையை நம்பிப் 
பாவையர் தோதக லீலைநி ரம்பிச் 
சூழ்பொருள் தேடிட வோடிவ ருந்திப் ...... புதிதான 

தூதொடு நான்மணி மாலைப்ர பந்தக் 
கோவையு லாமடல் கூறிய ழுந்தித் 
தோமுறு காளையர் வாசல்தொ றும்புக் ...... கலமாருங் 

காலனை வீணனை நீதிகெ டும்பொய்க் 
கோளனை மானமி லாவழி நெஞ்சக் 
காதக லோபவ்ரு தாவனை நிந்தைப் ...... புலையேனைக் 

காரண காரிய லோகப்ர பஞ்சச் 
சோகமெ லாமற வாழ்வுற நம்பிற் 
காசறு வாரிமெய்ஞ் ஞான தவஞ்சற் ...... றருளாதோ 

பாலன மீதும னான்முக செம்பொற் 
பாலனை மோதப ராதன பண்டப் 
பாரிய மாருதி தோள்மிசை கொண்டுற் ...... றமராடிப் 

பாவியி ராவண னார்தலை சிந்திச் 
சீரிய வீடணர் வாழ்வுற மன்றற் 
பாவையர் தோள்புணர் மாதுலர் சிந்தைக் ...... கினியோனே 

சீலமு லாவிய நாரதர் வந்துற் 
றீதவள் வாழ்புன மாமென முந்தித் 
தேமொழி பாளித கோமள இன்பக் ...... கிரிதோய்வாய் 

சேலொடு வாளைவ ரால்கள் கிளம்பித் 
தாறுகொள் பூகம ளாவிய இன்பச் 
சீரலை வாய்நகர் மேவிய கந்தப் ...... பெருமாளே. 
பாடல் 70 
ராகம் - கோதார கெளளை; தாளம் - ஆதி - திஸ்ர நடை (12) 

தான தந்த தான தான 
தான தந்த தான தான 
தான தந்த தான தான ...... தனதான 


நாலு மைந்து வாசல் கீறு தூறு டம்பு கால்கை யாகி 
நாரி யென்பி லாகு மாக ...... மதனூடே

நாத மொன்ற ஆதி வாயில் நாட கங்க ளான ஆடி 
நாட றிந்தி டாம லேக ...... வளராமுன் 

நூல நந்த கோடி தேடி மால்மி குந்து பாரு ளோரை 
நூறு செஞ்சொல் கூறி மாறி ...... விளைதீமை 

நோய்க லந்த வாழ்வு றாமல் நீக லந்து ளாகு ஞான 
நூல டங்க வோத வாழ்வு ...... தருவாயே 

காலன் வந்து பால னாவி காய வென்று பாசம் வீசு 
காலம் வந்து வோல மோல ...... மெனுமாதி 

காம னைந்து பாண மோடு வேமி னென்று காணு மோனர் 
காள கண்ட ரோடு வேத ...... மொழிவோனே 

ஆல மொன்று வேலை யாகி யானை யஞ்சல் தீரு மூல 
ஆழி யங்கை ஆயன் மாயன் ...... மருகோனே 

ஆர ணங்கள் தாளை நாட வார ணங்கை மேவு மாதி 
யான செந்தில் வாழ்வ தான ...... பெருமாளே. 
பாடல் 71 
ராகம் - தந்யாஸி ; தாளம் - ஸங்கீர்ணசாபு (4 1/2) 
தகதிமி-2, தகிட-1 1/2, தக-1 ; (எடுப்பு - அதீதம்) 

தனத்தத் தந்தனந் தனத்தத் தந்தனம் 
தனத்தத் தந்தனம் ...... தனதான 


நிதிக்குப் பிங்கலன் பதத்துக் கிந்திரன் 
நிறத்திற் கந்தனென் ...... றினைவொரை 

நிலத்திற் றன்பெரும் பசிக்குத் தஞ்சமென் 
றரற்றித் துன்பநெஞ் ...... சினில்நாளும் 

புதுச்சொற் சங்கமொன் றிசைத்துச் சங்கடம் 
புகட்டிக் கொண்டுடம் ......பழிமாயும் 

புலத்திற் சஞ்சலங் குலைத்திட் டுன்பதம் 
புணர்க்கைக் கன்புதந் ...... தருள்வாயே 

மதித்துத் திண்புரஞ் சிரித்துக் கொன்றிடும் 
மறத்திற் றந்தைமன் ...... றினிலாடி 

மழுக்கைக் கொண்டசங் கரர்க்குச் சென்றுவண் 
டமிழ்ச்சொற் சந்தமொன் ...... றருள்வோனே 

குதித்துக் குன்றிடந் தலைத்துச் செம்பொனுங் 
கொழித்துக் கொண்டசெந் ...... திலின்வாழ்வே 

குறப்பொற் கொம்பைமுன் புனத்திற் செங்கரங் 
குவித்துக் கும்பிடும் ...... பெருமாளே. 
பாடல் 72 
ராகம் - பாகேஸ்ரீ; தாளம் - மிஸ்ரசாபு (விலோமம்) (3 1/2) 
தகதிமி-2, தகிட-1 1/2 

தனனாத் தனன தனனாத் தனன 
தனனாத் தனன ...... தனதான 


நிலையாப் பொருளை யுடலாக் கருதி 
நெடுநாட் பொழுது ...... மவமேபோய் 

நிறைபோய்ச் செவிடு குருடாய்ப் பிணிகள் 
நிறைவாய்ப் பொறிகள் ...... தடுமாறி 

மலநீர்ச் சயன மிசையாப் பெருகி 
மடுவேற் குரிய ...... நெறியாக 

மறைபோற் றரிய வொளியாய்ப் பரவு 
மலர்தாட் கமல ...... மருள்வாயே 

கொலைகாட் டவுணர் கெடமாச் சலதி 
குளமாய்ச் சுவற ...... முதுசூதம் 

குறிபோய்ப் பிளவு படமேற் கதுவு 
கொதிவேற் படையை ...... விடுவோனே 

அலைவாய்க் கரையின் மகிழ்சீர்க் குமர 
அழியாப் புநித ...... வடிவாகும் 

அரனார்க் கதித பொருள்காட் டதிப 
அடியார்க் கெளிய ...... பெருமாளே. 
பாடல் 73 
தனத்தந் தானன தத்தன தத்தன 
தனத்தந் தானன தத்தன தத்தன 
தனத்தந் தானன தத்தன தத்தன ...... தனதான 


நிறுக்குஞ் சூதன மெய்த்தன முண்டைகள் 
கருப்பஞ் சாறொட ரைத்துள வுண்டைகள் 
நிழற்கண் காணவு ணக்கிம ணம்பல ...... தடவாமேல் 

நெருக்கும் பாயலில் வெற்றிலை யின்புறம் 
ஒளித்தன் பாகஅ ளித்தபி னிங்கெனை 
நினைக்கின் றீரிலை மெச்சலி தஞ்சொலி ...... யெனவோதி 

உறக்கண் டாசைவ லைக்குள ழுந்திட 
விடுக்கும் பாவிகள் பொட்டிகள் சிந்தனை 
யுருக்குந் தூவைகள் செட்டைகு ணந்தனி ...... லுழலாமே 

உலப்பின் றாறெனு மக்கர முங்கமழ் 
கடப்பந் தாருமு கப்ரபை யுந்தினம் 
உளத்தின் பார்வையி டத்தினி னைந்திட ...... அருள்வாயே 

கறுக்குந் தூயமி டற்றன ருஞ்சிலை 
யெடுக்குந் தோளனி றத்தம ரெண்கரி 
கடக்குந் தானவ னைக்கொல ரும்புயன் ...... மருகோனே 

கனத்தஞ் சாபுரி சிக்கல்வ லஞ்சுழி 
திருச்செங் கோடு இடைக்கழி தண்டலை 
களர்ச்செங் காடு குறுக்கை புறம்பயம் ...... அமர்வோனே 

சிறுக்கண் கூர்மத அத்தி சயிந்தவ 
நடக்குந் தேரனி கப்படை கொண்டமர் 
செலுத்தும் பாதகன் அக்ரமன் வஞ்சனை ...... யுருவானோன் 

செருக்குஞ் சூரக லத்தை யிடந்துயிர் 
குடிக்குங் கூரிய சத்திய மர்ந்தருள் 
திருச்செந் தூர்நக ரிக்குள்வி ளங்கிய ...... பெருமாளே. 
பாடல் 74 
தந்தனா தந்தனத் தந்தனா தந்தனத் 
தந்தனா தந்தனத் ...... தனதான 


பங்கமே வும்பிறப் பந்தகா ரந்தனிற் 
பந்தபா சந்தனிற் ...... றடுமாறிப் 

பஞ்சபா ணம்படப் புண்படா வஞ்சகப் 
பண்பிலா டம்பரப் ...... பொதுமாதர் 

தங்களா லிங்கனக் கொங்கையா கம்படச் 
சங்கைமால் கொண்டிளைத் ...... தயராதே 

தண்டைசூழ் கிண்கிணிப் புண்டாண கந்தனை 
தந்துநீ யன்புவைத் ...... தருள்வாயே 

அங்கைவேல் கொண்டரக் கன்ப்ரதா பங்கெடுத் 
தண்டவே தண்டமுட் ...... படவேதான் 

அஞ்சவே திண்டிறற் கொண்டலா கண்டலற் 
கண்டலோ கங்கொடுத் ...... தருள்வோனே 

திங்களார் கொன்றைமத் தந்துழாய் துன்றுபொற் 
செஞ்சடா பஞ்சரத் ...... துறுதோகை 

சிந்தையே தென்றிசைத் தென்றல்வீ சும்பொழிற் 
செந்தில்வாழ் செந்தமிழ்ப் ...... பெருமாளே. 
பாடல் 75 
ராகம் - ஸிம்மேந்திர மத்யமம்; தாளம் - அங்கதாளம் (7 1/2) 
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2 

தந்த தானன தனதன தனதன 
தந்த தானன தனதன தனதன 
தந்த தானன தனதன தனதன ...... தனதான 


பஞ்ச பாதக முறுபிறை யெயிறெரி 
குஞ்சி கூர்விட மதர்விழி பிலவக 
பங்க வாண்முக முடுகிய நெடுகிய ...... திரிசூலம் 

பந்த பாசமு மருவிய கரதல 
மிஞ்சி நீடிய கருமுகி லுருவொடு 
பண்பி லாதொரு பகடது முதுகினில் ...... யமராஜன் 

அஞ்ச வேவரு மவதர மதிலொரு 
தஞ்ச மாகிய வழிவழி யருள்பெறும் 
அன்பி னாலுன தடிபுக ழடிமையெ ...... னெதிரேநீ 

அண்ட கோளகை வெடிபட இடிபட 
எண்டி சாமுக மடமட நடமிடும் 
அந்த மோகர மயிலினி லியலுடன் ...... வரவேணும் 

மஞ்சு போல்வள ரளகமு மிளகிய 
ரஞ்சி தாம்ருத வசனமு நிலவென 
வந்த தூயவெண் முறுவலு மிருகுழை ...... யளவோடும் 

மன்றல் வாரிச நயனமு மழகிய 
குன்ற வாணர்த மடமகள் தடமுலை 
மந்த ராசல மிசைதுயி லழகிய ...... மணவாளா 

செஞ்சொல் மாதிசை வடதிசை குடதிசை 
விஞ்சு கீழ்திசை சகலமு மிகல்செய்து 
திங்கள் வேணியர் பலதளி தொழுதுயர் ...... மகமேரு 

செண்டு மோதின ரரசரு ளதிபதி 
தொண்ட ராதியும் வழிவழி நெறிபெறு 
செந்தில் மாநக ரினிதுறை யமரர்கள் ...... பெருமாளே. 
பாடல் 76 
ராகம் - பந்துவராளி ; தாளம் - அங்கதாளம் (7 1/2) 
(எடுப்பு 1/2 அக்ஷரம் தள்ளி) 
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமி-2 

தனதனன தான தான தந்தன 
தனதனன தான தான தந்தன 
தனதனன தான தான தந்தன ...... தந்ததான 


படர்புவியின் மீது மீறி வஞ்சர்கள் 
வியனினுரை பானு வாய்வி யந்துரை 
பழுதில்பெரு சீல நூல்க ளுந்தெரி ...... சங்கபாடல் 

பனுவல்கதை காவ்ய மாமெ ணெண்கலை 
திருவளுவ தேவர் வாய்மை யென்கிற 
பழமொழியை யோதி யேயு ணர்ந்துபல் ...... சந்தமாலை 

மடல்பரணி கோவை யார்க லம்பக 
முதலுளது கோடி கோள்ப்ர பந்தமும் 
வகை வகையி லாசு சேர்பெ ருங்கவி ...... சண்டவாயு 

மதுரகவி ராஜ னானென் வெண்குடை 
விருதுகொடி தாள மேள தண்டிகை 
வரிசையொடு லாவு மால கந்தைத ...... விர்ந்திடாதோ 

அடல்பொருது பூச லேவி ளைந்திட 
எதிர்பொரவொ ணாம லேக சங்கர 
அரஹர சிவாம ஹாதெ வென்றுனி ...... அன்றுசேவித் 

தவனிவெகு கால மாய்வ ணங்கியு 
ளுருகிவெகு பாச கோச சம்ப்ரம 
அதிபெல கடோ ர மாச லந்தர ...... னொந்துவீழ 

உடல்தடியு மாழி தாவெ னம்புய 
மலர்கள்தச நூறு தாளி டும்பக 
லொருமலரி லாது கோவ ணிந்திடு ...... செங்கண்மாலுக் 

குதவியம கேசர் பால இந்திரன் 
மகளைமண மேவி வீறு செந்திலி 
லுரியஅடி யேனை யாள வந்தருள் ...... தம்பிரானே. 
பாடல் 77 
தனன தனதனந் தத்தத் தத்தத் 
தனன தனதனந் தத்தத் தத்தத் 
தனன தனதனந் தத்தத் தத்தத் ...... தனதான 


பதும இருசரண் கும்பிட் டின்பக் 
கலவி நலமிகுந் துங்கக் கொங்கைப் 
பகடு புளகிதந் துன்றக் கன்றிக் ...... கயல்போலும் 

பரிய கரியகண் செம்பொற் கம்பிக் 
குழைகள் பொரமருண் டின்சொற் கொஞ்சிப் 
பதற விதமுறுங் கந்துக் கொந்துக் ...... குழல்சாயப் 

புதுமை நுதிநகம் பங்கத் தங்கத் 
தினிது வரையவெண் சந்தத் திந்துப் 
புருவ வெயர்வுடன் பொங்கக் கங்கைச் ...... சடைதாரி 

பொடிசெய் தருள்மதன் தந்த்ரப் பந்திக் 
கறிவை யிழவிடும் பண்புத் துன்பப் 
பொருளின் மகளிர்தம் மன்புப் பண்பைத் ...... தவிரேனோ 

திதிதி ததததந் திந்திந் தந்தட் 
டிடிடி டடடடண் டிண்டிட் டண்டத் 
தெனன தனதனந் தெந்தத் தந்தத் ...... தெனனானா 

திகுர்தி தகிர்ததிந் திந்தித் திந்தித் 
திரிரி தரரவென் றென்றொப் பின்றித் 
திமிலை பறையறைந் தெண்டிக் கண்டச் ...... சுவர்சோரச் 

சதியில் வருபெருஞ் சங்கத் தொங்கற் 
புயவ சுரர்வெகுண் டஞ்சிக் குஞ்சித் 
தலைகொ டடிபணிந் தெங்கட் குன்கட் ...... க்ருபைதாவென் 

சமர குமரகஞ் சஞ்சுற் றுஞ்செய்ப் 
பதியில் முருகமுன் பொங்கித் தங்கிச் 
சலதி யலைபொருஞ் செந்திற் கந்தப் ...... பெருமாளே. 
பாடல் 78 
ராகம் - தேவகாந்தாரி ; தாளம் - சதுஸ்ர அட (12) 
(எடுப்பு 1/2 இடம்) 

தனதன தனதன தந்தத் தந்தத் ...... தனதானா 


பரிமள களபசு கந்தச் சந்தத் ...... தனமானார் 
படையம படையென அந்திக் குங்கட் ...... கடையாலே 

வரியளி நிரைமுரல் கொங்குக் கங்குற் ...... குழலாலே 
மறுகிடு மருளனை யின்புற் றன்புற் ...... றருள்வாயே 

அரிதிரு மருகக டம்பத் தொங்கற் ...... றிருமார்பா 
அலைகுமு குமுவென வெம்பக் கண்டித் ...... தெறிவேலா 

திரிபுர தகனரும் வந்திக் குஞ்சற் ...... குருநாதா 
ஜெயஜெய ஹரஹர செந்திற் கந்தப் ...... பெருமாளே. 
பாடல் 79 
தனத்தந்தத் தனத்தந்தத் 
தனத்தந்தத் தனத்தந்தத் 
தனத்தந்தத் தனத்தந்தத் ...... தனதான 


பருத்தந்தத் தினைத்தந்திட் 
டிருக்குங்கச் சடர்த்துந்திப் 
பருக்கும்பொற் ப்ரபைக்குன்றத் ...... தனமானார் 

பரிக்குந்துற் சரக்கொன்றத் 
திளைத்தங்குற் பலப்பண்பைப் 
பரக்குஞ்சக் கரத்தின்சத் ...... தியைநேரும் 

துரைச்செங்கட் கடைக்கொன்றிப் 
பெருத்தன்புற் றிளைத்தங்குத் 
துணிக்கும்புத் தியைச்சங்கித் ...... தறியேனைத் 

துணைச்செம்பொற் பதத்தின்புற் 
றெனக்கென்றப் பொருட்டங்கத் 
தொடுக்குஞ்சொற் றமிழ்த்தந்திப் ...... படியாள்வாய் 

தருத்தங்கப் பொலத்தண்டத் 
தினைக்கொண்டச் சுரர்க்கஞ்சத் 
தடத்துன்பத் தினைத்தந்திட் ...... டெதிர்சூரன் 

சமர்க்கெஞ்சிப் படித்துஞ்சக் 
கதிர்த்துங்கத் தயிற்கொண்டத் 
தலத்தும்பர்ப் பதிக்கன்புற் ...... றருள்வோனே 

திருக்கஞ்சத் தனைக்கண்டித் 
துறக்கங்குட் டிவிட்டுஞ்சற் 
சிவக்கன்றப் பொருட்கொஞ்சிப் ...... பகர்வோனே 

செயத்துங்கக் கொடைத்துங்கத் 
திருத்தங்கித் தரிக்கும்பொற் 
றிருச்செந்திற் பதிக்கந்தப் ...... பெருமாளே. 
பாடல் 80 
தான தானனந் தானனந் தானதன 
தான தானனந் தானனந் தானதன 
தான தானனந் தானனந் தானதன ...... தந்ததானா 


பாத நூபுரம் பாடகஞ் சீர்கொள்நடை 
யோதி மோகுலம் போலசம் போகமொடு 
பாடி பாளிதங் காருகம் பாவையிடை ...... வஞ்சிபோலப் 

பாகு பால்குடம் போலிரண் டானகுவ 
டாட நீள்வடஞ் சேரலங் காரகுழல் 
பாவ மேகபொன் சாபமிந் தேபொருவ ...... ரந்தமீதே 

மாதர் கோகிலம் போல்கரும் பானமொழி 
தோகை வாகர்கண் டாரைகொண் டாடிதகை 
வாரும் வீடெயென் றோதிதம் பாயல்மிசை ...... யன்புளார்போல் 

வாச பாசகஞ் சூதுபந் தாடஇழி 
வேர்வை பாயசிந் தாகுகொஞ் சாரவிழி 
வாகு தோள்கரஞ் சேர்வைதந் தாடுமவர் ...... சந்தமாமோ 

தீத தோதகந் தீததிந் தோதிதிமி 
டூடு டூடுடுண் டூடுடுண் டூடுடுடு 
டீகு டீகுகம் போலவொண் பேரிமுர ...... சங்கள்வீறச் 

சேடன் மேருவுஞ் சூரனுந் தாருகனும் 
வீழ ஏழ்தடந் தூளிகொண் டாடமரர் 
சேசெ சேசெயென் றாடநின் றாடிவிடு ...... மங்கிவேலா 

தாதை காதிலங் கோதுசிங் காரமுக 
மாறும் வாகுவுங் கூரசந் தானசுக 
தாரி மார்பலங் காரியென் பாவைவளி ...... யெங்கள்மாதைத் 

தாரு பாளிதஞ் சோரசிந் தாமணிக 
ளாட வேபுணர்ந் தாடிவங் காரமொடு 
தாழை வானுயர்ந் தாடுசெந் தூரிலுறை ...... தம்பிரானே. 
பாடல் 81 
ராகம் - ரஞ்சனி; தாளம் - ஆதி - திஸ்ர நடை (12) 

தனனத் தந்தத் தனனத் தந்தத் 
தனனத் தந்தத் ...... தனதான 


புகரப் புங்கப் பகரக் குன்றிற் 
புயலிற் றங்கிப் ...... பொலிவோனும் 

பொருவிற் றஞ்சச் சுருதிச் சங்கப் 
பொருளைப் பண்பிற் ...... புகல்வோனும் 

திகிரிச் செங்கட் செவியிற் றுஞ்சத் 
திகிரிச் செங்கைத் ...... திருமாலும் 

திரியப் பொங்கித் திரையற் றுண்டுட் 
டெளிதற் கொன்றைத் ...... தரவேணும் 

தகரத் தந்தச் சிகரத் தொன்றித் 
தடநற் கஞ்சத் ...... துறைவோனே 

தருணக் கொங்கைக் குறவிக் கின்பத் 
தையளித் தன்புற் ...... றருள்வோனே 

பகரப் பைம்பொற் சிகரக் குன்றைப் 
படியிற் சிந்தத் ...... தொடும்வேலா 

பவளத் துங்கப் புரிசைச் செந்திற் 
பதியிற் கந்தப் ...... பெருமாளே. 
பாடல் 82 
தானன தான தந்த தானன தான தந்த 
தானன தான தந்த தானன தான தந்த 
தானன தான தந்த தானன தான தந்த ...... தனதான 


பூரண வார கும்ப சீதப டீர கொங்கை 
மாதர் விகார வஞ்ச லீலையி லேயு ழன்று 
போதவ மேயி ழந்து போனது மான மென்ப ...... தறியாத 

பூரிய னாகி நெஞ்சு காவல்ப டாத பஞ்ச 
பாதக னாய றஞ்செ யாதடி யோடி றந்து 
போனவர் வாழ்வு கண்டு மாசையி லேய ழுந்து ...... மயல்தீரக் 

காரண காரி யங்க ளானதெ லாமொ ழிந்து 
யானெனு மேதை விண்டு பாவக மாயி ருந்து 
காலுட லுடி யங்கி நாசியின் மீதி ரண்டு ...... விழிபாயக் 

காயமு நாவு நெஞ்சு மோர்வழி யாக அன்பு 
காயம்வி டாம லுன்ற னீடிய தாள்நி னைந்து 
காணுதல் கூர்த வஞ்செய் யோகிக ளாய்வி ளங்க ...... அருள்வாயே 

ஆரண சார மந்த்ர வேதமெ லாம்வி ளங்க 
ஆதிரை யானை நின்று தாழ்வனெ னாவ ணங்கு 
மாதர வால்வி ளங்கு பூரண ஞான மிஞ்சு ...... முரவோனே 

ஆர்கலி யூடெ ழுந்து மாவடி வாகி நின்ற 
சூரனை மாள வென்று வானுல காளு மண்ட 
ரானவர் கூர ரந்தை தீரமு னாள்ம கிழ்ந்த ...... முருகேசா 

வாரண மூல மென்ற போதினி லாழி கொண்டு 
வாவியின் மாடி டங்கர் பாழ்பட வேயெ றிந்த 
மாமுகில் போலி ருண்ட மேனிய னாமு குந்தன் ...... மருகோனே 

வாலுக மீது வண்ட லோடிய காலில் வந்து 
சூல்நிறை வான சங்கு மாமணி யீன வுந்து 
வாரிதி நீர்ப ரந்த சீரலை வாயு கந்த ...... பெருமாளே. 
பாடல் 83
தனத்தத்தந் தனத்தத்தந் 
தனத்தத்தந் தனத்தத்தந் 
தனத்தத்தந் தனத்தத்தந் ...... தனதான 


பெருக்கச்சஞ் சலித்துக்கந் 
தலுற்றுப்புந் தியற்றுப்பின் 
பிழைப்பற்றுங் குறைப்புற்றும் ...... பொதுமாதர் 

ப்ரியப்பட்டங் கழைத்துத்தங் 
கலைக்குட்டங் கிடப்பட்சம் 
பிணித்துத்தந் தனத்தைத்தந் ...... தணையாதே 

புரக்கைக்குன் பதத்தைத்தந் 
தெனக்குத்தொண் டுறப்பற்றும் 
புலத்துக்கண் செழிக்கச்செந் ...... தமிழ்பாடும் 

புலப்பட்டங் கொடுத்தற்கும் 
கருத்திற்கண் படக்கிட்டும் 
புகழ்ச்சிக்குங் க்ருபைச்சித்தம் ...... புரிவாயே 

தருக்கிக்கண் களிக்கத்தெண் 
டனிட்டுத்தண் புனத்திற்செங் 
குறத்திக்கன் புறச்சித்தந் ...... தளர்வோனே 

சலிப்புற்றங் குரத்திற்சம் 
ப்ரமித்துக்கொண் டலைத்துத்தன் 
சமர்த்திற்சங் கரிக்கத்தண் ...... டியசூரன் 

சிரத்தைச்சென் றறுத்துப்பந் 
தடித்துத்திண் குவட்டைக்கண் 
டிடித்துச்செந் திலிற்புக்கங் ...... குறைவோனே 

சிறக்கற்கஞ் செழுத்தத்தந் 
திருச்சிற்றம் பலத்தத்தன் 
செவிக்குப்பண் புறச்செப்பும் ...... பெருமாளே. 
பாடல் 84 
ராகம் - ஹம்ஸாநந்தி; தாளம் - ஆதி - திஸ்ர நடை (12) 

தந்த தனன தந்த தனன 
தந்த தனன ...... தனதான 


மங்கை சிறுவர் தங்கள் கிளைஞர் 
வந்து கதற ...... வுடல்தீயின் 

மண்டி யெரிய விண்டு புனலில் 
வஞ்ச மொழிய ...... விழஆவி 

வெங்கண் மறலி தன்கை மருவ 
வெம்பி யிடறு ...... மொருபாச 

விஞ்சை விளைவு மன்று னடிமை 
வென்றி யடிகள் ...... தொழவாராய் 

சிங்க முழுவை தங்கு மடவி 
சென்று மறமி ...... னுடன்வாழ்வாய் 

சிந்தை மகிழ அன்பர் புகழு 
செந்தி லுறையு ...... முருகோனே 

எங்கு மிலகு திங்கள் கமல 
மென்று புகலு ...... முகமாதர் 

இன்பம் விளைய அன்பி னணையு 
மென்று மிளைய ...... பெருமாளே. 
பாடல் 85 
தந்த தந்தன தந்தன தந்தன 
தந்த தந்தன தந்தன தந்தன 
தந்த தந்தன தந்தன தந்தன ...... தந்ததான 


மஞ்செ னுங்குழ லும்பிறை யம்புரு 
வங்க ளென்சிலை யுங்கணை யங்கயல் 
வண்டு புண்டரி கங்களை யும்பழி ......சிந்துபார்வை 

மண்ட லஞ்சுழ லுஞ்செவி யங்குழை 
தங்க வண்டர ளம்பதி யும்பலு 
மண்ட லந்திக ழுங்கமு கஞ்சிறு ...... கண்டமாதர் 

கஞ்சு கங்குர லுங்கழை யம்புய 
கொங்கை செங்கிரி யும்பவ ளம்பொறி 
கந்த சந்தன மும்பொலி யுந்துகில் ...... வஞ்சிசேருங் 

கஞ்ச மண்டுளி னின்றிர சம்புகு 
கண்ப டர்ந்திட ரம்பையெ னுந்தொடை 
கண்கை யஞ்சர ணஞ்செயல் வஞ்சரை ...... நம்புவேனோ 

சஞ்ச சஞ்சக ணஞ்சக டுண்டுடு 
டுண்டு டிண்டிமி டண்டம டுண்டுடு 
தந்த னந்தன திந்திமி சங்குகள் ...... பொங்குதாரை 

சம்பு வின்கும ரன்புல வன்பொரு 
கந்த னென்றிடு துந்தமி யுந்துவ 
சங்க ளங்கொளி ருங்குடை யுந்திசை ...... விஞ்சவேகண் 

டஞ்ச வஞ்சசு ரன்திர ளுங்குவ 
டன்ற டங்கலும் வெந்துபொ ரிந்திட 
அண்ட ரிந்திர னுஞ்சர ணம்புக ...... வென்றவேளே 

அம்பு யந்தண ரம்பைகு றிஞ்சியின் 
மங்கை யங்குடில் மங்கையொ டன்புடன் 
அண்ட ருந்தொழு செந்திலி லின்புறு ...... தம்பிரானே. 
பாடல் 86 
ராகம் - பேகடா; தாளம் - மிஸ்ரசாபு (3 1/2) 
தகிட-1 1/2, தகதிமி-2 

தனத்தந்தந் தனத்தந்தந் 
தனத்தந்தந் தனத்தந்தந் 
தனத்தந்தந் தனத்தந்தந் ...... தனதானா 


மனத்தின்பங் கெனத்தங்கைம் 
புலத்தென்றன் குணத்தஞ்சிந் 
த்ரியத்தம்பந் தனைச்சிந்தும் ...... படிகாலன் 

மலர்ச்செங்கண் கனற்பொங்குந் 
திறத்தின்தண் டெடுத்தண்டங் 
கிழித்தின்றிங் குறத்தங்கும் ...... பலவோரும் 

எனக்கென்றிங் குனக்கேன்றங் 
கினத்தின்கண் கணக்கென்றென் 
றிளைத்தன்புங் கெடுத்தங்கங் ...... கழிவாமுன் 

இசைக்குஞ்செந் தமிழ்க்கொண்டங் 
கிரக்கும்புன் றொழிற்பங்கங் 
கெடத்துன்பங் கழித்தின்பந் ...... தருவாயே 

கனைக்குந்தண் கடற்சங்கங் 
கரத்தின்கண் தரித்தெங்குங் 
கலக்கஞ்சிந் திடக்கண்துஞ் ...... சிடுமாலும் 

கதித்தொண்பங் கயத்தன்பண் 
பனைத்துங்குன் றிடச்சந்தங் 
களிக்குஞ்சம் புவுக்குஞ்செம் ...... பொருளீவாய் 

தினைக்குன்றந் தனிற்றங்குஞ் 
சிறுப்பெண்குங் குமக்கும்பந் 
திருச்செம்பொன் புயத்தென்றும் ...... புனைவோனே 

செழிக்குங்குண் டகழ்ச்சங்கங் 
கொழிக்குஞ்சந் தனத்தின்பைம் 
பொழிற்றண்செந் திலிற்றங்கும் ...... பெருமாளே. 
பாடல் 87 
தனதனன தந்த தனதனன தந்த 
தனதனன தந்த ...... தனதானா 


மனைகனக மைந்தர் தமதழகு பெண்டிர் 
வலிமைகுல நின்ற ...... நிலையூர்பேர் 

வளரிளமை தஞ்ச முனைபுனைவ ளங்கள் 
வரிசைதம ரென்று ...... வருமாயக் 

கனவுநிலை யின்ப மதனையென தென்று 
கருதிவிழி யின்ப ...... மடவார்தம் 

கலவிமயல் கொண்டு பலவுடல்பு ணர்ந்து 
கருவில்விழு கின்ற ...... தியல்போதான் 

நினையுநின தன்பர் பழவினைக ளைந்து 
நெடுவரைபி ளந்த ...... கதிர்வேலா 

நிலமுதல் விளங்கு நலமருவு செந்தில் 
நிலைபெறஇ ருந்த ...... முருகோனே 

புனைமலர்பு னைந்த புனமறம டந்தை 
புளகஇரு கொங்கை ...... புணர்மார்பா 

பொருதுடனெ திர்ந்த நிருதர்மகு டங்கள் 
பொடிபடந டந்த ...... பெருமாளே. 
பாடல் 88 
தான தானன தந்தன தந்தன 
தான தானன தந்தன தந்தன 
தான தானன தந்தன தந்தன ...... தனதானா 


மாய வாடைதி மிர்ந்திடு கொங்கையில் 
மூடு சீலைதி றந்தம ழுங்கிகள் 
வாசல் தொறுந டந்துசி ணுங்கிகள் ...... பழையோர்மேல் 

வால நேசநி னைந்தழு வம்பிகள் 
ஆசை நோய்கொள்ம ருந்திடு சண்டிகள் 
வாற பேர்பொருள் கண்டுவி ரும்பிக ...... ளெவரேனும் 

நேய மேகவி கொண்டுசொல் மிண்டிகள் 
காசி லாதவர் தங்களை யன்பற 
நீதி போலநெ கிழ்ந்தப றம்பிக ...... ளவர்தாய்மார் 

நீலி நாடக மும்பயில் மண்டைகள் 
பாளை யூறுக ளுண்டிடு தொண்டிகள் 
நீச ரோடுமி ணங்குக டம்பிக ...... ளுறவாமோ 

பாயு மாமத தந்திமு கம்பெறு 
மாதி பாரத மென்ற பெருங்கதை 
பார மேருவி லன்று வரைந்தவ ...... னிளையோனே 

பாவை யாள்குற மங்கை செழுந்தன 
பார மீதில ணைந்து முயங்கிய 
பாக மாகிய சந்தன குங்கும ...... மணிமார்பா 

சீய மாயுரு வங்கொடு வந்தசு 
ரேசன் மார்பையி டந்து பசுங்குடர் 
சேர வாரிய ணிந்த நெடும்புயன் ...... மருகோனே 

தேனு லாவுக டம்ப மணிந்தகி 
ரீட சேகர சங்கரர் தந்தருள்
தேவ நாயக செந்திலு கந்தருள் ...... பெருமாளே. 
பாடல் 89 
தாந்தாத்தந் தான தந்தன 
தாந்தாத்தந் தான தந்தன 
தாந்தாத்தந் தான தந்தன ...... தனதான 


மான்போற்கண் பார்வை பெற்றிடு 
மூஞ்சாற்பண் பாடு மக்களை 
வாய்ந்தாற்பொன் கோடு செப்பெனு ...... முலைமாதர் 

வாங்காத்திண் டாடு சித்திர 
நீங்காச்சங் கேத முக்கிய 
வாஞ்சாற்செஞ் சாறு மெய்த்திடு ...... மொழியாலே 

ஏன்காற்பங் காக நற்புறு 
பூங்காற்கொங் காரு மெத்தையில் 
ஏய்ந்தாற்பொன் சாரு பொற்பண ...... முதல்நீதா 

ஈந்தாற்கன் றோர மிப்பென 
ஆன்பாற்றென் போல செப்பிடும் 
ஈண்டாச்சம் போக மட்டிக ...... ளுறவாமோ 

கான்பாற்சந் தாடு பொற்கிரி 
தூம்பாற்பைந் தோளி கட்கடை 
காண்பாற்றுஞ் சாமல் நத்திடும் ...... அசுரேசன் 

காம்பேய்ப்பந் தாட விக்ரம 
வான்றோய்க்கெம் பீர விற்கணை 
காண்டேர்க்கொண் டேவு மச்சுதன் ...... மருகோனே 

தீம்பாற்கும் பாகு சர்க்கரை 
காம்பாற்செந் தேற லொத்துரை 
தீர்ந்தார்க்கங் காளி பெற்றருள் ...... புதல்வோனே 

தீண்பார்க்குன் போத முற்றுற 
மாண்டார்க்கொண் டோ து முக்கிய 
தேன்போற்செந் தூரில் மொய்த்தருள் ...... பெருமாளே. 
பாடல் 90 
தனனாதன தனனந் தாத்த 
தனனாதன தனனந் தாத்த 
தனனாதன தனனந் தாத்த ...... தனதான 


முகிலாமெனு மளகங் காட்டி 
மதிபோலுயர் நுதலுங் காட்டி 
முகிழாகிய நகையுங் காட்டி ...... அமுதூறு 

மொழியாகிய மதுரங் காட்டி 
விழியாகிய கொடியுங் காட்டி 
முகமாகிய கமலங் காட்டி ...... மலைபோலே 

வகையாமிள முலையுங் காட்டி 
யிடையாகிய கொடியுங் காட்டி 
வளமானகை வளையுங் காட்டி ...... யிதமான 

மணிசேர்கடி தடமுங் காட்டி 
மிகவேதொழி லதிகங் காட்டு 
மடமாதர்கள் மயலின் சேற்றி ...... லுழல்வேனே 

நகையால்மத னுருவந் தீத்த 
சிவனாரருள் சுதனென் றார்க்கு 
நலநேயரு ளமர்செந் தூர்க்கு ...... ளுறைவோனே 

நவமாமணி வடமும் பூத்த 
தனமாதெனு மிபமின் சேர்க்கை 
நழுவாவகை பிரியங் காட்டு ...... முருகோனே 

அகமேவிய நிருதன் போர்க்கு 
வரவேசமர் புரியுந் தோற்ற 
மறியாமலு மபயங் காட்டி ...... முறைகூறி 

அயிராவத முதுகின் தோற்றி 
யடையாமென இனிதன் பேத்து 
மமரேசனை முழுதுங் காத்த ...... பெருமாளே. 
பாடல் 91 
ராகம் - செஞ்சுருட்டி; தாளம் - அங்கதாளம் (7 1/2) 
தகிட-1 1/2, தகதகிட-2 1/2, தகதிமி-2, தகிட-1 1/2) 

தந்ததன தான தானத் தான 
தந்ததன தான தானத் தான 
தந்ததன தான தானத் தான ...... தனதானா 


முந்துதமிழ் மாலை கோடிக் கோடி 
சந்தமொடு நீடு பாடிப் பாடி 
முஞ்சர்மனை வாசல் தேடித் தேடி ...... யுழலாதே 

முந்தைவினை யேவ ராமற் போக 
மங்கையர்கள் காதல் தூரத் தேக 
முந்தடிமை யேனை யாளத் தானு ...... முனைமீதே 

திந்திதிமி தோதி தீதித் தீதி 
தந்ததன தான தானத் தான 
செஞ்செணகு சேகு தாளத் தோடு ...... நடமாடுஞ் 

செஞ்சிறிய கால்வி சாலத் தோகை 
துங்கஅநு கூல பார்வைத் தீர 
செம்பொன்மயில் மீதி லேயெப் போது ...... வருவாயே 

அந்தண்மறை வேள்வி காவற் கார 
செந்தமிழ்சொல் பாவின் மாலைக் கார 
அண்டருப கார சேவற் கார ...... முடிமேலே 

அஞ்சலிசெய் வோர்கள் நேயக் கார 
குன்றுருவ ஏவும் வேலைக் கார 
அந்தம்வெகு வான ரூபக் கார ...... எழிலான 

சிந்துரமின் மேவு போகக் கார 
விந்தைகுற மாது வேளைக் கார 
செஞ்சொலடி யார்கள் வாரக் கார ...... எதிரான 

செஞ்சமரை மாயு மாயக் கார 
துங்கரண சூர சூறைக் கார 
செந்தினகர் வாழு மாண்மைக் கார ...... பெருமாளே. 
பாடல் 92 
தனன தந்த தந்த தனன தந்த தந்த 
தனன தந்த தந்த ...... தனதான 


முலைமு கந்தி மிர்ந்த கலவை யுந்து லங்கு 
முறுவ லுஞ்சி வந்த ...... கனிவாயும் 

முருக விழ்ந்து திர்ந்த மலர்க ளுஞ்ச ரிந்த 
முகிலு மின்ப சிங்கி ...... விழிவேலும் 

சிலைமு கங்க லந்த திலத முங்கு ளிர்ந்த 
திருமு கந்த தும்பு ...... குறுவேர்வும் 

தெரிய வந்து நின்ற மகளிர் பின்சு ழன்று 
செயல ழிந்து ழன்று ...... திரிவேனோ 

மலைமு கஞ்சு மந்த புலவர் செஞ்சொல் கொண்டு 
வழிதி றந்த செங்கை ...... வடிவேலா 

வளர்பு னம்ப யின்ற குறம டந்தை கொங்கை 
மணிவ டம்பு தைந்த ...... புயவேளே 

அலைமு கந்த வழ்ந்து சினைமு திர்ந்த சங்க 
மலறி வந்து கஞ்ச ...... மலர்மீதே 

அளிக லந்தி ரங்க இசையு டன்து யின்ற 
அரிய செந்தில் வந்த ...... பெருமாளே. 
பாடல் 93 
ராகம் - மாயா மாளவ கெளளை; தாளம் - ஆதி - 2 களை 

தாத்தத் தத்தன தாத்தத் தத்தன 
தாத்தத் தத்தன ...... தனதான 


மூப்புற் றுச்செவி கேட்பற் றுப்பெரு 
மூச்சுற் றுச்செயல் ...... தடுமாறி 

முர்க்கச் சொற்குரல் காட்டிக் கக்கிட 
மூக்குக் குட்சளி ...... யிளையோடும் 

கோப்புக் கட்டியி னாப்பிச் செற்றிடு 
கூட்டிற் புக்குயி ...... ரலையாமுன் 

கூற்றத் தத்துவ நீக்கிப் பொற்கழல் 
கூட்டிச் சற்றருள் ...... புரிவாயே 

காப்புப் பொற்கிரி கோட்டிப் பற்றலர் 
காப்பைக் கட்டவர் ...... குருநாதா 

காட்டுக் குட்குற வாட்டிக் குப்பல 
காப்புக் குத்திர ...... மொழிவோனே 

வாய்ப்புற் றத்தமிழ் மார்க்கத் திட்பொருள் 
வாய்க்குச் சித்திர ...... முருகோனே 

வார்த்தைச் சிற்பர தீர்த்தச் சுற்றலை 
வாய்க்குட் பொற்பமர் ...... பெருமாளே. 
பாடல் 94 
ராகம் - சங்கரானந்தப்ரியா; தாளம் - அங்கதாளம் (9) 
தகிட-1 1/2, தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2 

தானதன தான தானந்த தானந்த 
தானதன தான தானந்த தானந்த 
தானதன தான தானந்த தானந்த ...... தனதான 


மூளும்வினை சேர மேல்கொண்டி டாஐந்து 
பூதவெகு வாய மாயங்கள் தானெஞ்சில் 
முடிநெறி நீதி யேதுஞ்செ யாவஞ்சி ...... யதிபார 

மோகநினை வான போகஞ்செய் வேனண்டர் 
தேடஅரி தாய ஞேயங்க ளாய்நின்ற 
முலபர யோக மேல்கொண் டிடாநின்ற ...... துளதாகி 

நாளுமதி வேக கால்கொண்டு தீமண்ட 
வாசியன லூடு போயொன்றி வானின்க 
ணாமமதி மீதி லூறுங்க லாஇன்ப ...... அமுதூறல் 

நாடியதன் மீது போய்நின்ற அநந்த 
மேலைவெளி யேறி நீயின்றி நானின்றி 
நாடியினும் வேறு தானின்றி வாழ்கின்ற ...... தொருநாளே 

காளவிட மூணி மாதங்கி வேதஞ்சொல் 
பேதைநெடு நீலி பாதங்க ளால்வந்த 
காலன்விழ மோது சாமுண்டி பாரம்பொ ...... டனல்வாயு 

காதிமுதிர் வான மேதங்கி வாழ்வஞ்சி 
ஆடல்விடை யேறி பாகங்கு லாமங்கை 
காளிநட மாடி நாளன்பர் தாம்வந்து ...... தொழுமாது 

வாளமுழு தாளு மோர்தண்டு ழாய்தங்கு 
சோதிமணி மார்ப மாலின்பி னாளின்சொல் 
வாழுமுமை மாத ராள்மைந்த னேயெந்தை ...... யிளையோனே 

மாசிலடி யார்கள் வாழ்கின்ற வூர்சென்று 
தேடிவிளை யாடி யேயங்ங னேநின்று 
வாழுமயில் வீர னேசெந்தில் வாழ்கின்ற ...... பெருமாளே. 
பாடல் 95 
ராகம் - பூர்விகல்யாணி; தாளம் - திஸ்ர த்ருபுடை (7) 

தந்தந்தந் தந்தன தானன 
தந்தந்தந் தந்தன தானன 
தந்தந்தந் தந்தன தானன ...... தனதான 


வஞ்சங்கொண் டுந்திட ராவண 
னும்பந்தென் திண்பரி தேர்கரி 
மஞ்சின்பண் புஞ்சரி யாமென ...... வெகுசேனை 

வந்தம்பும் பொங்கிய தாகஎ 
திர்ந்துந்தன் சம்பிர தாயமும் 
வம்புந்தும் பும்பல பேசியு ...... மெதிரேகை 

மிஞ்சென்றுஞ் சண்டைசெய் போதுகு 
ரங்குந்துஞ் சுங்கனல் போலவே 
குண்டுங்குன் றுங்கர டார்மர ...... மதும்வீசி 

மிண்டுந்துங் கங்களி னாலெத 
கர்ந்தங்கங் கங்கர மார்பொடு 
மின்சந்துஞ் சிந்தநி சாசரர் ...... வகைசேர 

வுஞ்சண்டன் தென்றிசை நாடிவி 
ழுந்தங்குஞ் சென்றெம தூதர்க 
ளுந்துந்துந் தென்றிட வேதசை ...... நிண்முளை 

உண்டுங்கண் டுஞ்சில கூளிகள் 
டிண்டிண்டென் றுங்குதி போடவு 
யர்ந்தம்புங் கொண்டுவெல் மாதவன் ...... மருகோனே 

தஞ்சந்தஞ் சஞ்சிறி யேன்மதி 
கொஞ்சங்கொஞ் சந்துரை யேயருள் 
தந்தென்றின் பந்தரு வீடது ...... தருவாயே 

சங்கங்கஞ் சங்கயல் சூழ்தட 
மெங்கெங்கும் பொங்கம காபுநி 
தந்தங்குஞ் செந்திலில் வாழ்வுயர் ...... பெருமாளே. 
பாடல் 96 
ராகம் - மனோலயம்; தாளம் - ஆதி - 2 களை 

தந்தத் தனதன தந்தத் தனதன 
தந்தத் தனதன ...... தனதான 


வஞ்சத் துடனொரு நெஞ்சிற் பலநினை 
வஞ்சிக் கொடியிடை ...... மடவாரும் 

வந்திப் புதல்வரும் அந்திக் கிளைஞரு 
மண்டிக் கதறிடு ...... வகைகூர 

அஞ்சக் கலைபடு பஞ்சிப் புழுவுடல் 
அங்கிக் கிரையென ...... வுடன்மேவ 

அண்டிப் பயமுற வென்றிச் சமன்வரும் 
அன்றைக் கடியிணை ...... தரவேணும் 

கஞ்சப் பிரமனை அஞ்சத் துயர்செய்து 
கன்றச் சிறையிடு ...... மயில்வீரா 

கண்டொத் தனமொழி அண்டத் திருமயில் 
கண்டத் தழகிய ...... திருமார்பா 

செஞ்சொற் புலவர்கள் சங்கத் தமிழ்தெரி 
செந்திற் பதிநக ...... ருறைவோனே 

செம்பொற் குலவட குன்றைக் கடலிடை 
சிந்தப் பொரவல ...... பெருமாளே. 
பாடல் 97 
ராகம் - சிந்து பைரவி; தாளம் - ஆதி - திஸ்ர நடை (12) 

தந்த தந்த தந்த தந்த 
தந்த தந்த தந்த தந்த 
தந்த தந்த தந்த தந்த ...... தனதான 


வந்து வந்து முன்த வழ்ந்து 
வெஞ்சு கந்த யங்க நின்று 
மொஞ்சி மொஞ்சி யென்ற ழுங்கு ...... ழந்தையோடு 

மண்ட லங்கு லுங்க அண்டர் 
விண்ட லம்பி ளந்தெ ழுந்த 
செம்பொன் மண்ட பங்க ளும்ப ...... யின்றவீடு 

கொந்த ளைந்த குந்த ளந்த 
ழைந்து குங்கு மந்த யங்கு 
கொங்கை வஞ்சி தஞ்ச மென்று ...... மங்குகாலம் 

கொங்க டம்பு கொங்கு பொங்கு 
பைங்க டம்பு தண்டை கொஞ்சு 
செஞ்ச தங்கை தங்கு பங்க ...... யங்கள்தாராய் 

சந்த டர்ந்தெ ழுந்த ரும்பு 
மந்த ரஞ்செ ழுங்க ரும்பு 
கந்த ரம்பை செண்ப தங்கொள் ...... செந்தில்வாழ்வே 

தண்க டங்க டந்து சென்று 
பண்க டங்க டர்ந்த இன்சொல் 
திண்பு னம்பு குந்து கண்டி ...... றைஞ்சுகோவே 

அந்த கன்க லங்க வந்த 
கந்த ரங்க லந்த சிந்து 
ரஞ்சி றந்து வந்த லம்பு ...... ரிந்தமார்பா 

அம்பு னம்பு குந்த நண்பர் 
சம்பு நன்பு ரந்த ரன்த 
ரம்ப லும்பர் கும்பர் நம்பு ...... தம்பிரானே. 
பாடல் 98 
ராகம் - காம்போதி / ஸஹானா; தாளம் - சதுஸ்ர ஜம்பை (7) 

தனனா தனந்த ...... தனதான 


வரியார் கருங்கண் ...... மடமாதர் 

மகவா சைதொந்த ...... மதுவாகி 

இருபோ துநைந்து ...... மெலியாதே 

இருதா ளினன்பு ...... தருவாயே 

பரிபா லனஞ்செய் ...... தருள்வோனே 

பரமே சுரன்ற ...... னருள்பாலா 

அரிகே சவன்றன் ...... மருகோனே 

அலைவா யமர்ந்த ...... பெருமாளே. 
பாடல் 99 
தனதான தந்த தனதான தந்த 
தனதான தந்த ...... தனதான 


விதிபோலு முந்த விழியாலு மிந்து 
நுதலாலு மொன்றி ...... யிளைஞோர்தம் 

விரிவான சிந்தை யுருவாகி நொந்து 
விறல்வேறு சிந்தை ...... வினையாலே 

இதமாகி யின்ப மதுபோத வுண்டு 
இனிதாளு மென்று ...... மொழிமாதர் 

இருளாய துன்ப மருள்மாயை வந்து 
எனையீர்வ தென்றும் ...... ஒழியாதோ 

மதிசூடி யண்டர் பதிவாழ மண்டி 
வருமால முண்டு ...... விடையேறி 

மறவாத சிந்தை யடியார்கள் பங்கில் 
வருதேவ சம்பு ...... தருபாலா 

அதிமாய மொன்றி வருசூரர் பொன்ற 
அயில்வேல்கொ டன்று ...... பொரும்வீரா 

அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து 
அலைவாயு கந்த ...... பெருமாளே. 
பாடல் 100 
ராகம் - யமுனா கல்யாணி; தாளம் - மிஸ்ரசாபு (3 1/2) 
தகதிமி-2, தகிட-1 1/2 

தந்தன தான தந்தன தான 
தந்தன தான ...... தனதான 


விந்ததி னூறி வந்தது காயம்
வெந்தது கோடி ...... யினிமேலோ 

விண்டுவி டாம லுன்பத மேவு 
விஞ்சையர் போல ...... அடியேனும் 

வந்துவி நாச முன்கலி தீர 
வண்சிவ ஞான ...... வடிவாகி 

வன்பத மேறி யென்களை யாற 
வந்தருள் பாத ...... மலர்தாராய் 

எந்தனு ளேக செஞ்சுட ராகி 
யென்கணி லாடு ...... தழல்வேணி 

எந்தையர் தேடு மன்பர்ச காய 
ரெங்கள் சுவாமி ...... யருள்பாலா 

சுந்தர ஞான மென்குற மாது 
தன்றிரு மார்பி ...... லணைவோனே 

சுந்தர மான செந்திலில் மேவு 
கந்தசு ரேசர் ...... பெருமாளே. 
பாடல் 101
ராகம் - மாண்ட்; தாளம் - ஆதி 

தனதான தந்த தனதான தந்த 
தனதான தந்த ...... தனதான 


விறல்மார னைந்து மலர்வாளி சிந்த 
மிகவானி லிந்து ...... வெயில்காய 

மிதவாடை வந்து தழல்போல வொன்ற 
வினைமாதர் தந்தம் ...... வசைகூற 

குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட 
கொடிதான துன்ப ...... மயல்தீர 

குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து 
குறைதீர வந்து ...... குறுகாயோ 

மறிமா னுகந்த இறையோன் மகிழ்ந்து 
வழிபாடு தந்த ...... மதியாளா 

மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச 
வடிவே லெறிந்த ...... அதிதீரா 

அறிவா லறிந்து னிருதா ளிறைஞ்சு 
மடியா ரிடைஞ்சல் ...... களைவோனே 

அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து 
அலைவா யுகந்த ...... பெருமாளே. 
பாடல் 102 
தந்தா தந்தா தந்தா தந்தா 
தந்தா தந்தத் ...... தனதான 


வெங்கா ளம்பா ணஞ்சேல் கண்பால் 
மென்பா கஞ்சொற் ...... குயில்மாலை 

மென்கே சந்தா னென்றே கொண்டார் 
மென்றோ ளொன்றப் ...... பொருள்தேடி 

வங்கா ளஞ்சோ னஞ்சீ னம்போய் 
வன்பே துன்பப் ...... படலாமோ 

மைந்தா ருந்தோள் மைந்தா அந்தா 
வந்தே யிந்தப் ...... பொழுதாள்வாய் 

கொங்கார் பைந்தே னுண்டே வண்டார் 
குன்றாள் கொங்கைக் ...... கினியோனே 

குன்றோ டுஞ்சூ ழம்பே ழுஞ்சூ 
ரும்போய் மங்கப் ...... பொருகோபா 

கங்கா ளஞ்சேர் மொய்ம்பா ரன்பார் 
கன்றே வும்பர்க் ...... கொருநாதா 

கம்பூர் சிந்தார் தென்பால் வந்தாய் 
கந்தா செந்திற் ...... பெருமாளே. 
பாடல் 103 
தந்த தானன தானன 
தந்த தானன தானன 
தந்த தானன தானன ...... தனதான 


வெஞ்ச ரோருக மோகடு நஞ்ச மோகய லோநெடு 
வின்ப சாகர மோவடு ...... வகிரோமுன் 

வெந்து போன புராதன சம்ப ராரி புராரியை 
வென்ற சாயக மோகரு ...... விளையோகண் 

தஞ்ச மோயம தூதுவர் நெஞ்ச மோவெனு மாமத 
சங்க மாதர் பயோதர ...... மதில்மூழ்கு 

சங்கை யோர்விரு கூதள கந்த மாலிகை தோய்தரு 
தண்டை சேர்கழ லீவது ...... மொருநாளே 

பஞ்ச பாதக தாருக தண்ட னீறெழ வானவர் 
பண்டு போலம ராவதி ...... குடியேறப் 

பங்க யாசனர் கேசவ ரஞ்ச லேயென மால்வரை 
பங்க நீறெழ வேல்விடு ...... மிளையோனே 

செஞ்ச டாடவி மீமிசை கங்கை மாதவி தாதகி 
திங்கள் சூடிய நாயகர் ...... பெருவாழ்வே 

செண்ப காடவி நீடிய துங்க மாமதிள் சுழ்தரு 
செந்தில் மாநகர் மேவிய ...... பெருமாளே. 
பாடல் 1334 
வேறொரு பழைய நூலிலிருந்த இதே பாடலின் சற்று மாறுபட்ட அமைப்பு.

தந்ததன தான தந்ததன தான
தந்ததன தான ...... தனதான
கன்றிவரு நீல குங்குமப டீர
கஞ்சமலர் மேவு ...... முலைகாட்டி
கங்குல்செறி கேச நின்றுகுலை யாமை
கண்கள்கடை காட்டி ...... விலைகாட்டி
நன்றுபொரு டீது வென்றுவிலை பேசி
நம்பிவிடு மாத ...... ருடனாட்ட
நஞ்சுபுரி தேரை யங்கமது வாக
நைந்துவிடு மெற்கொன் ...... றருள்வாயே
குன்றிமணி போலச் செங்கண்வரி நாகங்
கொண்டபடம் வீசு ...... மணிகூர்வாய்
கொண்டமயி லேறிக் குன்றிடிய மோதிச்
சென்றவடி வேலைக் ...... கொடுபோர்செய்
மன்றல்கமழ் பூகந் தெங்குதிரள் சோலை
வண்டுபடு வாவி ...... புடைசூழ
மந்திநட மாடுஞ் செந்தில்நகர் மேவும்
அந்தசுர காலப் ...... பெருமாளே.