திருநாட்டுத் திருப்பதி - 1

திருவைகுந்தம் பரமபதம்
இடருடையேன் சொல்ல வெளிதோ பிரமன்
அடரும்விடை யோற்கு மரிதே - தொடரும்
கருவைகுந் தம்பிறவிக் கட்டறுத்து மீளாத்
திருவைகுந் தம்பெறுவார் சீர். (1)
திருநாட்டுத் திருப்பதி முற்றும்.
மண்ணி லரங்கமுதல் வைகுந்த நாடளவும்
எண்ணு திருப்பதிநூற் றெட்டினையும் - நண்ணுவார்
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்
பொற்பாத மென்றலைமேற் பூ.
பதின்ம ருரைத்த பதியொருநூற் றெட்டும்
துதிசெய்ய வந்தாதி சொன்னான் - அதிக
குணவாள பட்டரிரு கோகனகத் தாள்சேர்
மணவாள தாசன் வகுத்து.
நூற்றெட்டுத் திருப்பதி யந்தாதி முற்றிற்று