திருப்பந்தணை நல்லூர்

பாடல் 850
தனதந்தன தனதந்தன தனதந்தன தான
தனதந்தன தனதந்தன தனதந்தன தான
தனதந்தன தனதந்தன தனதந்தன தானத் ...... தனதான
இதசந்தன புழுகுஞ்சில மணமுந்தக வீசி
யணையுந்தன கிரிகொண்டிணை யழகும்பொறி சோர
இருளுங்குழல் மழையென்பந வரசங்கொளு மோகக் ...... குயில்பொலே
இடையுங்கொடி மதனன்தளை யிடுகுந்தள பார
இலையுஞ்சுழி தொடைரம்பையு மமுதந்தட மான
இயலங்கடி தடமும்பொழி மதவிஞ்சைகள் பேசித் ...... தெருமீதே
பதபங்கய மணையும்பரி புரமங்கொலி வீச
நடைகொண்டிடு மயிலென்பன கலையுஞ்சுழ லாட
பரிசும்பல மொழியுஞ்சில கிளிகொஞ்சுகை போலப் ...... பரிவாகிப்
பணமுண்டென தவலம்படு நினைவுண்டிடை சோர
இதுகண்டவர் மயல்கொண்டிட மனமுஞ்செயல் மாற
பகலுஞ்சில இரவுந்துயில் சிலவஞ்சகர் மாயைத் ...... துயர்தீராய்
திதிதிந்திமி தனதந்தன டுடுடுண்டுடு பேரி
டகுடங்குகு டிகுடிங்குகு படகந்துடி வீணை
செகணஞ்செக வெனவும்பறை திசையெங்கினு மோதக் ...... கொடுசூரர்
சிரமுங்கர வுடலும்பரி யிரதங்கரி யாளி
நிணமுங் குடல் தசையுங்கட லெனசெம்புன லோட
சிலசெம்புள்கள் கழுகுஞ் சிறு நரியுங்கொடி யாடப் ...... பொரும்வேலா
மதவெங்கய முரிகொண்டவர் மழுவுங்கலை பாணி
யிடமன்பொடு வளருஞ்சிவை புகழ்சுந்தரி யாதி
வளருந்தழ லொளிர்சம்பவி பரைவிண்டிள தோகைத் ...... தருசேயே
வதனஞ்சசி யமுதம்பொழி முலைநன்குற மாதொ
டிசையுஞ்சுரர் தருமங்கையொ டிதயங்களி கூர
வருபந்தணை நகர்வந்துறை விமலன்குரு நாதப் ...... பெருமாளே.
பாடல் 851
ராகம் - ஹிந்தோளம்
தாளம் - மிஸ்ரசாபு (3 1/2)
தகதிமி-2, தகிட-1 1/2
தனதன தந்த தனதன தந்த
தனதன தந்த ...... தனதான
இருவினை யஞ்ச வருவினை கெஞ்ச
இருள்பிணி துஞ்ச ...... மலமாய
எனதிடர் மங்க வுனதருள் பொங்க
இசைகொடு துங்க ...... புகழ்கூறித்
திருமுக சந்த்ர முருகக டம்ப
சிவசுத கந்த ...... குகவேல
சிவசிவ என்று தெளிவுறு நெஞ்சு
திகழந டஞ்செய் ...... கழல்தாராய்
மருதொடு கஞ்ச னுயிர்பலி கொண்டு
மகிழரி விண்டு ...... மருகோனே
வதைபுரி கின்ற நிசிசரர் குன்ற
வலம்வரு செம்பொன் ...... மயில்வீரா
அருகுறு மங்கை யொடுவிடை யுந்து
மமலனு கந்த ...... முருகோனே
அருள்செறி பந்த ணையிலிரு மங்கை
அமளிந லங்கொள் ...... பெருமாளே.
பாடல் 852
தனன தந்தன தானன தானன
தனன தந்தன தானன தானன
தனன தந்தன தானன தானன ...... தனதான
எகினி னம்பழி நாடக மாடிகள்
மயிலெ னுஞ்செய லாரகி நேரல்குல்
இசையி டுங்குர லார்கட னாளிகள் ...... வெகுமோகம்
எனவி ழுந்திடு வார்முலை மேல்துகில்
அலைய வுந்திரி வாரெவ ராயினும்
இளகு கண்சுழல் வார்விலை வேசியர் ...... வலைவீசும்
அதிக வஞ்சக பாவனை யால்மயல்
கொடுவி ழுந்திட ராகமு நோய்பிணி
யதிக முங்கொடு நாயடி யேனினி ...... யுழலாமல்
அமுத மந்திர ஞானொப தேசமும்
அருளி யன்புற வேமுரு காவென
அருள்பு குந்திட வேகழ லார்கழல் ...... அருள்வாயே
ககன விஞ்சையர் கோவென வேகுவ
டவுணர் சிந்திட வேகடல் தீவுகள்
கமற வெந்தழல் வேல்விடு சேவக ...... முருகோனே
கரிநெ டும்புலி தோலுடை யாரெனை
யடிமை கொண்டசு வாமிச தாசிவ
கடவு ளெந்தையர் பாகம்வி டாவுமை ...... யருள்பாலா
செகமு மண்டமு மோருரு வாய்நிறை
நெடிய அம்புயல் மேனிய னாரரி
தீருவு றைந்துள மார்பக னார்திரு ...... மருகோனே
தினைவ னந்தனில் வாழ்வளி நாயகி
வளர்த னம்புதை மார்பழ காமிகு
திலக பந்தணை மாநகர் மேவிய ...... பெருமாளே.
பாடல் 853
தந்தன தனத்த தந்தன தனத்த
தந்தன தனத்த ...... தனதான
கும்பமு நிகர்த்த கொங்கையை வளர்த்த
கொஞ்சுகிளி யொத்த ...... மொழிமானார்
குங்கும பணிக்குள் வண்புழுகு விட்ட
கொந்தளகம் வைத்த ...... மடவார்பால்
வம்புகள் விளைத்து நண்புகள் கொடுத்து
மங்கிநர கத்தில் ...... மெலியாமல்
வண்கயிலை சுற்றி வந்திடு பதத்தை
வந்தனைசெய் புத்தி ...... தருவாயே
பம்புநதி யுற்ற பங்கொருச மர்த்தி
பண்டுள தவத்தி ...... லருள்சேயே
பைம்புய லுடுத்த தண்டலை மிகுத்த
பந்தணை நகர்க்கு ...... ளுறைவோனே
சம்புநிழ லுக்குள் வந்தவ தரித்த
சங்கரர்த மக்கு ...... மிறையோனே
சங்கணி கரத்த ரும்பர்பய முற்ற
சஞ்சல மறுத்த ...... பெருமாளே.
பாடல் 854
தந்ததன தந்ததன தனதனத்
தந்ததன தந்ததன தனதனத்
தந்ததன தந்ததன தனதனத் ...... தனதான
கெண்டைகள்பொ ருங்கண்மங் கையர்மலர்க்
கொண்டைகள்கு லுங்கநின் றருகினிற்
கெஞ்சுபலு டன்குழைந் தமளியிற் ...... கொடுபோய்வண்
கெந்தபொடி யும்புனைந் துறவணைத்
தின்பவச னந்தருந் தொழிலடுக்
கின்றமய லின்படுந் துயரறப் ...... ப்ரபைவீசுந்
தண்டைகள் கலின்கலின் கலினெனக்
கிண்கிணி கிணின்கிணின் கிணினெனத்
தண்கொலு சுடன்சிலம் பசையவுட் ...... பரிவாகிச்
சந்ததமும் வந்திரும் பரிமளப்
பங்கய பதங்களென் கொடுவினைச்
சஞ்சல மலங்கெடும் படியருட் ...... புரிவாயே
தொண்டர்கள் சரண்சரண் சரணெனக்
கொம்புகள் குகுங்குகுங் குகுமெனத்
துந்துமி திமிந்திமிந் திமினெனக் ...... குறுமோசை
சுந்தரி மணஞ்செயுஞ் சவுரியக்
கந்தகுற வஞ்சிதங் கருவனத்
துங்கமலை யும்புரந் தமரருக் ...... கிடர்கூரும்
பண்டர்கள்பு யங்களும் பொடிபடக்
கண்டவப்ர சண்டகுஞ் சரியெழிற்
பைந்தருவ னம்புரந் தகழெயிற் ...... புடைசூழும்
பந்திவரு மந்திசெண் பகமகிற்
சந்துசெறி கொன்றைதுன் றியவனப்
பந்தணையில் வந்திடுஞ் சரவணப் ...... பெருமாளே.
பாடல் 855
தான தந்ததன தான தந்ததன
தான தந்ததன தான தந்ததன
தான தந்ததன தான தந்ததன ...... தந்ததான
தேனி ருந்தஇத ழார்ப ளிங்குநகை
யார்கு ளிர்ந்தமொழி யார்ச ரங்கள்விழி
சீர்சி றந்தமுக வாரி ளம்பிறைய ...... தென்புரூவர்
தேன மர்ந்தகுழ லார்க ளங்கமுகி
னார்பு யங்கழையி னார்த னங்குவடு
சேர்சி வந்தவடி வார்து வண்டஇடை ...... புண்டா£கம்
சூனி யங்கொள்செய லார ரம்பைதொடை
யார்ச ரண்கமல நேரி ளம்பருவ
தோகை சந்தமணி வாரு டன்கலவி ...... யின்ப்முடே
சோக முண்டுவிளை யாடி னுங்கமல
பாத மும்புயமி ராறு மிந்துளபல்
தோட லங்கலணி மார்ப மும்பரிவு ...... ளங்கொள்வேனே
ஓந மந்தசிவ ரூபி யஞ்சுமுக
நீலி கண்டிகலி யாணி விந்துவொளி
யோசை தங்குமபி ராமி யம்பிகைப ...... யந்தவேளே
ஓல மொன்றவுணர் சேனை மங்கையர்கள்
சேறு டன்குருதி யோட எண்டிசையும்
ஓது கெந்தருவர் பாட நின்றுநட ...... னங்கொள்வேலா
ஏனல் மங்கைசுசி ஞான ரம்பையென
தாயி சந்த்ரமுக பாவை வஞ்சிகுற
மானொ டும்பர்தரு மான ணைந்தழகி ...... லங்குமார்பா
ஏர்க ரந்தையறு கோடு கொன்றைமதி
யாற ணிந்தசடை யார்வி ளங்குமெழில்
ஈறில் பந்தணைந லூர மர்ந்துவளர் ...... தம்பிரானே.
பாடல் 856
தனனந் தத்தன தனந்த தானன
தனனந் தத்தன தனந்த தானன
தனனந் தத்தன தனந்த தானன ...... தனதான
மதியஞ் சத்திரு நிறைந்த மாமுக
மயிலஞ் சக்கிளி யினங்க ளாமென
மதுரஞ் செப்பிய மடந்தை மேனகை ...... ரதிபோல
மருவும் பொற்குட மெழுந்த மாமுலை
வளர்வஞ் சிக்கொடி நடந்த வாறென
வருதுங் கக்கட லணங்கு போல்பவர் ...... தெருவூடே
நிதமிந் தப்படி யிருந்து வாறவர்
பொருள்தங் கப்பணி கலந்து போய்வர
நெறிதந் திட்டவர் வசங்க ளாமென ...... வுழலாதே
நிதிபொங் கப்பல தவங்க ளாலுனை
மொழியும் புத்திகள் தெரிந்து நானுனை
நிகர்சந் தத்தமிழ் சொரிந்து பாடவு ...... மருள்தாராய்
நதிமிஞ் சச்சடை விரிந்த நாயக
னுமையன் பிற்செயு மிகுந்த பூசனை
நலமென் றுட்குளிர் சிவன்ப ராபர ...... னருள்பாலா
நவகங் கைக்கிணை பகர்ந்த மாமணி
நதிபங் கிற்குலவு கந்து காபுரி
நகர்பொங் கித்த¨ழைய வந்து வாழ்வுறு ...... முருகோனே
கெதிதங் கத்தகு கணங்கள் வானவர்
அரிகஞ் சத்தவர் முகுந்தர் நாவலர்
கிளைபொங்கக் க்ருபை புரிந்து வாழ்கென ...... அருள்நாதா
கெருவம் பற்றிகல் விளைந்த சூரொடு
தளமஞ் சப்பொரு தெழுந்து தீயுகள்
கிரவுஞ் சக்கிரி வகிர்ந்த வேலுள ...... பெருமாளே.