திருப்பெருந்துறை

bookmark

பாடல் 843

தனத்த தந்தன தானன தந்தத் 
தனத்த தந்தன தானன தந்தத் 
தனத்த தந்தன தானன தந்தத் ...... தனதான 


இரத்த முஞ்சியு மூளையெ லும்புட் 
டசைப்ப சுங்குடல் நாடிபு னைந்திட் 
டிருக்கு மண்சல வீடுபு குந்திட் ...... டதில்மேவி 

இதத்து டன்புகல் சூதுமி குந்திட் 
டகைத்தி டும்பொரு ளாசையெ னும்புட் 
டெருட்ட வுந்தெளி யாதுப றந்திட் ...... டிடமாயா 

பிரத்தம் வந்தடு வாதசு ரம்பித் 
துளைப்பு டன்பல வாயுவு மிஞ்சிப் 
பெலத்தை யுஞ்சில நாளுளொ டுங்கித் ...... தடிமேலாய்ப் 

பிடித்தி டும்பல நாள்கொடு மந்திக் 
குலத்தெ னும்படி கூனிய டங்கிப் 
பிசக்கு வந்திடு போதுபி னஞ்சிச் ...... சடமாமோ 

தரித்த னந்தன தானன தந்தத் 
திமித்தி மிந்திமி தீதக் திந்தத் 
தடுட்டு டுண்டுடு டூடுடி மிண்டிட் ...... டியல்தாளம் 

தனத்த குந்தகு தானன தந்தக் 
கொதித்து வந்திடு சூருடல் சிந்தச் 
சலத்து டன்கிரி தூள்படெ றிந்திட் ...... டிடும்வேலா 

சிரத்து டன்கர மேடுபொ ழிந்திட் 
டிரைத்து வந்தம ரோர்கள் படிந்துச் 
சிரத்தி னுங்கமழ் மாலைம ணம்பொற் ...... சரணோனே 

செகத்தி னின்குரு வாகிய தந்தைக் 
களித்தி டுங்குரு ஞானப்ர சங்கத் 
திருப்பெ ருந்துறை மேவிய கந்தப் ...... பெருமாளே. 
பாடல் 844 
தனத்தனந் தனதன தனத்தனந் தனதன 
தனத்தனந் தனதன ...... தனதான 


வரித்தகுங் குமமணி முலைக்குரும் பையர்மன 
மகிழ்ச்சிகொண் டிடஅதி ...... விதமான 

வளைக்கரங் களினொடு வளைத்திதம் படவுடன் 
மயக்கவந் ததிலறி ...... வழியாத 

கருத்தழிந் திடஇரு கயற்கணும் புரள்தர 
களிப்புடன் களிதரு ...... மடமாதர் 

கருப்பெருங் கடலது கடக்கவுன் திருவடி 
களைத்தருந் திருவுள ...... மினியாமோ 

பொருப்பகம் பொடிபட அரக்கர்தம் பதியொடு 
புகைப்பரந் தெரியெழ ...... விடும்வேலா 

புகழ்ப்பெருங் கடவுளர் களித்திடும் படிபுவி 
பொறுத்தமந் தரகிரி ...... கடலூடே 

திரித்தகொண் டலுமொரு மறுப்பெறுஞ் சதுமுக 
திருட்டியெண் கணன்முத ...... லடிபேணத் 

திருக்குருந் தடியமர் குருத்வசங் கரரொடு 
திருப்பெருந் துறையுறை ...... பெருமாளே. 
பாடல் 845 
தனன தந்தனந் தனதன தனதன 
தனன தந்தனந் தனதன தனதன 
தனன தந்தனந் தனதன தனதன ...... தனதான 


முகர வண்டெழுங் கருமுகி லலையவு 
முதிய நஞ்சுமிழ்ந் தயில்விழி குவியவு 
முகிள சந்திரன் பொருநுதல் வெயரவு ...... மமுதூறும் 

முருகு தங்குசெந் துகிரிதழ் தெரியவு 
மருவு சங்கநின் றொலிகொடு பதறவு 
முழுது மன்புதந் தமளியி னுதவிய ...... அநுராகச் 

சிகர கும்பகுங் குமபுள கிததன 
மிருபு யம்புதைந் திடநடு விடைவெளி 
தெரிய லின்றியொன் றிடவுயி ருயிருட ...... னுறமேவித் 

திமிர கங்குலின் புதவிடு மவசர 
நினைவு நெஞ்சினின் றறவவர் முகமது 
தெரிச னஞ்செயும் பரிவற இனியருள் ...... புரிவாயே 

மகர நின்றதெண் டிரைபொரு கனைகடல் 
மறுகி யஞ்சிவந் தடிதொழு திடவொரு 
வடிகொள் செஞ்சரந் தொடுபவ னிருபது ...... புயவீரன் 

மடிய வங்குசென் றவனொரு பதுமுடி 
முடிய முன்புமண் டமர்பொரு தமர்நிழல் 
மதிலி லங்கையும் பொடிபட அருளரி ...... மருகோனே 

நிகரி லண்டமெண் டிசைகளு மகிழ்வுற 
விரகு கொண்டுநின் றழகுறு மயில்மிசை 
நினைவி னுந்தியம் புவிதனை வலம்வரு ...... மிளையோனே 

நிலவ ரும்புதண் டரளமு மிளிரொளிர் 
பவள மும்பொரும் பழனமு மழகுற 
நிழல்கு ருந்தமுஞ் செறிதுறை வளர்வுறு ...... பெருமாளே.