திருவருணை (திருவண்ணாமலை)

bookmark

பாடல் 368
தனன தனதன தனதன தனதன 
தனன தனதன தனதன தனதன 
தனன தனதன தனதன தனதன ...... தனதான 


அருவ மிடையென வருபவர் துவரிதழ் 
அமுது பருகியு முருகியு ம்ருகமத 
அளக மலையவு மணிதுகி லகலவு ...... மதிபார 

அசல முலைபுள கிதமெழ அமளியில் 
அமளி படஅந வரதமு மவசமொ 
டணையு மழகிய கலவியு மலமல ...... முலகோரைத் 

தருவை நிகரிடு புலமையு மலமல 
முருவு மிளமையு மலமலம் விபரித 
சமய கலைகளு மலமல மலமரும் ...... வினைவாழ்வுஞ் 

சலில லிபியன சனனமு மலமல 
மினியு னடியரொ டொருவழி படஇரு 
தமர பரிபுர சரணமு மவுனமு ...... மருள்வாயே 

உருவு கரியதொர் கணைகொடு பணிபதி 
யிருகு தையுமுடி தமனிய தநுவுட 
னுருளை யிருசுடர் வலவனு மயனென ...... மறைபூணும் 

உறுதி படுசுர ரதமிசை யடியிட 
நெறுநெ றெனமுறி தலுநிலை பெறுதவம் 
உடைய வொருவரு மிருவரு மருள்பெற ...... வொருகோடி 

தெருவு நகரியு நிசிசரர் முடியொடு 
சடச டெனவெடி படுவன புகைவன 
திகுதி கெனஎரி வனஅனல் நகைகொடு ......முனிவார்தஞ் 

சிறுவ வனசரர் சிறுமியொ டுருகிய 
பெரும அருணையி லெழுநிலை திகழ்வன 
சிகரி மிசையொரு கலபியி லுலவிய ...... பெருமாளே. 
பாடல் 369 
ராகம் - ஹம்ஸா நந்தி; தாளம் - அங்கதாளம் (7 1/2) 
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2 

தனன தனதன தனதன தனதன 
தனன தனதன தனதன தனதன 
தனன தனதன தனதன தனதன ...... தனதான 


கருணை சிறிதுமில் பறிதலை நிசிசரர் 
பிசித அசனம றவரிவர் முதலிய 
கலக விபரித வெகுபர சமயிகள் ...... பலர்கூடிக் 

கலக லெனநெறி கெடமுறை முறைமுறை 
கதறி வதறிய குதறிய கலைகொடு 
கருத அரியதை விழிபுனல் வரமொழி ...... குழறாவன் 

புருகி யுனதருள் பரவுகை வரில்விர 
கொழியி லுலகியல் பிணைவிடி லுரைசெய 
லுணர்வு கெடிலுயிர் புணரிரு வினையள ...... றதுபோக 

உதறி லெனதெனு மலமறி லறிவினி 
லெளிது பெறலென மறைபறை யறைவதொ 
ருதய மரணமில் பொருளினை யருளுவ ...... தொருநாளே 

தருண சததள பரிமள பரிபுர 
சரணி தமனிய தநுதரி திரிபுர 
தகனி கவுரிப வதிபக வதிபயி ...... ரவிசூலி 

சடில தரியநு பவையுமை திரிபுரை 
சகல புவனமு முதவிய பதிவ்ருதை 
சமய முதல்வித னயபகி ரதிசுத ...... சதகோடி 

அருண ரவியினு மழகிய ப்ரபைவிடு 
கருணை வருணித தனுபர குருபர 
அருணை நகருறை சரவண குரவணி ...... புயவேளே 

அடவி சரர்குல மரகத வனிதையு 
மமரர் குமரியு மனவர தமுமரு 
கழகு பெறநிலை பெறவர மருளிய ...... பெருமாளே. 
பாடல் 370 
தனன தனதன தனதன தனதன 
தனன தனதன தனதன தனதன 
தனன தனதன தனதன தனதன ...... தனதான 


துகிலு ம்ருகமத பரிமள அளகமு 
நெகிழ இருதன கிரியசை தரஇடை 
துவள மனிதரு மமரரு முநிவரு ...... முடனோடித் 

தொடர வனமணி மகரமி லகுகுழை 
யடரு வனவிட மிளிர்வன ரதிபதி 
சுருதி மொழிவன கயல்விழி புரள்தர ...... நடுவாக 

வகிரு மதிபுரை தநுநுதல் பனிவர 
வனச பதயுக பரிபுர மொலிபட 
மறுகு தொறுமுல வியினிய கலவியை ...... விலைகூறும் 

வரைவி லரிவையர் தருசுக சலதியி 
லலையு மெனதுயி ரநுதின நெறிதரு 
மவுன சிவசுக சலதியில் முழுகுவ ...... தொருநாளே 

முகிலு மதியமும் ரவியெழு புரவியு 
நெடிய குலைமிட றிடறமு துககன 
முகடு கிழிபட வளர்வன கமுகின ...... மிசைவாளை 

முடுகு கயலுகள் வயல்களு முருகவிழ் 
தடமு முளரிய அகழியு மதிள்களு 
முழுது முடையதொ ரருணையி லுறைதரு ...... மிளையோனே 

அகிலு மருதமு முகுளித வகுளமு 
மமுத கதலியும் அருணமும் வருடையு 
மபரி மிதமத கரிகளு மரிகளு ...... முடனேகொண் 

டருவி யிழிதரு மருவரை தனிலொரு 
சவர வனிதையை முநிதரு புனிதையை 
அவச முடன்மல ரடிதொழு துருகிய ...... பெருமாளே. 
பாடல் 371 
தனன தனதன தனதன தனதன 
தனன தனதன தனதன தனதன 
தனன தனதன தனதன தனதன ...... தனதான 


மகர மெறிகடல் விழியினு மொழியினு 
மதுப முரல்குழல் வகையினு நகையினும் 
வளமை யினுமுக நிலவினு மிலவினு ...... நிற்முசும் 

மதுர இதழினு மிடையினு நடையினு 
மகளிர் முகுளித முலையினு நிலையினும் 
வனச பரிபுர மலரினு முலரினு ...... மவர்நாமம் 

பகரு கினுமவர் பணிவிடை திரிகினு 
முருகி நெறிமுறை தவறினு மவரொடு 
பகடி யிடுகினு மமளியி லவர்தரு ...... மநுராகப் 

பரவை படியினும் வசமழி யினுமுத 
லருணை நகர்மிசை கருணையொ டருளிய 
பரம வொருவச னமுமிரு சரணமு ...... மறவேனே 

ககன சுரபதி வழிபட எழுகிரி 
கடக கிரியொடு மிதிபட வடகுல 
கனக கனகுவ டடியொடு முறிபட ...... முதுசூதங் 

கதறு சுழிகட லிடைகிழி படமிகு 
கலக நிசிசரர் பொடிபட நடவிய 
கலப மதகத துரகத ந்ருபகிரி ...... மயில்வாழ்வே 

தகன கரதல சிவசுத கணபதி 
சகச சரவண பரிமள சததள 
சயன வனசரர் கதிபெற முனிபெறு ...... புனமானின் 

தரள முகபட நெறிபட நிமிர்வன 
தருண புளகித ம்ருகமத தனகிரி 
தழுவ மயல்கொடு தனிமட லெழுதிய ...... பெருமாளே. 
பாடல் 372 
தனன தனதன தனதன தனதன 
தனன தனதன தனதன தனதன 
தனன தனதன தனதன தனதன ...... தனதான 


முகிலை யிகல்பொரு முழுவிருள் குழலென 
முதிய மதியது முகமென நுதலிணை 
முரணர் வரிசிலை முடுகிடு கணைவிழி ...... யென்முவா 

முளரி தனின்முகு ளிதமலர் முலையென 
முறுவல் தனையிரு குழைதனை மொழிதனை 
மொழிய வரியதொர் தெரிவையர் வினையென ...... மொழிகூறிப் 

பகலு மிரவினு மிகமன மருள்கொடு 
பதியி லவர்வடி வுளதழ கெனவொரு 
பழுது மறஅவர் பரிவுற இதமது ...... பகராதே 

பகைகொ டெதிர்பொரு மசுரர்கள் துகைபட 
விகட முடனடை பயில்மயில் மிசைவரு 
பவனி தனையநு தினநினை யென அருள் ...... பகர்வாயே 

புகல வரியது பொருளிது எனவொரு 
புதுமை யிடஅரி யதுமுத லெனுமொரு 
பொதுவை யிதுவென தவமுடை முநிவர்கள் ...... புடைசூழப் 

புரமு மெரியெழ நகையது புரிபவர் 
புனலும் வளர்மதி புனைசடை யினரவர் 
புடவி வழிபட புதை பொருள் விரகொடு ...... புகல்வோனே 

அகில கலைகளு மறநெறி முறைமையு 
மகில மொழிதரு புலவரு முலகினி 
லறிஞர் தவமுயல் பவர்களு மியலிசை ...... யதனாலே 

அறுவர் முலையுணு மறுமுக னிவனென 
அரிய நடமிடு மடியவ ரடிதொழ 
அருணை நகர்தனி லழகுடன் மருவிய ...... பெருமாளே. 
பாடல் 373 
தனன தனதன தனதன தனதன 
தனன தனதன தனதன தனதன 
தனன தனதன தனதன தனதன ...... தனதான 


முருகு செறிகுழல் சொருகிய விரகிகள் 
முலைக ளளவிடு முகபட பகடிகள் 
முதலு முயிர்களு மளவிடு களவியர் ...... முழுநீல 

முழுகு புழுககில் குழைவடி வழகியர் 
முதிர வளர்கனி யதுகவ ரிதழியர் 
முனைகொ ளயிலென விழியெறி கடைசிய ...... ரநுராகம் 

மருவி யமளியி னலமிடு கலவியர் 
மனது திரவிய மளவள வளவியர் 
வசன மொருநொடி நிலைமையில் கபடியர் ...... வழியேநான் 

மருளு மறிவின னடிமுடி யறிகிலன் 
அருணை நகர்மிசை கருணையொ டருளிய 
மவுன வசனமு மிருபெரு சரணமு ...... மறவேனே 

கருதி யிருபது கரமுடி யொருபது 
கனக மவுலிகொள் புரிசைசெய் பழையது 
கடிய வியனகர் புகவரு கனபதி ...... கனல்மூழ்கக் 

கவச அநுமனொ டெழுபது கவிவிழ 
அணையி லலையெறி யெதிரமர் பொருதிடு 
களரி தனிலொரு கணைவிடு மடலரி ...... மருகோனே 

சருவு மவுணர்கள் தளமொடு பெருவலி 
யகல நிலைபெறு சயிலமு மிடிசெய்து 
தரும னவர்பதி குடிவிடு பதனிசை ...... மயில்வீரா 

தருண மணியவை பலபல செருகிய 
தலையள் துகிலிடை யழகிய குறமகள் 
தனது தனமது பரிவொடு தழுவிய ...... பெருமாளே. 
பாடல் 374 
தனன தனதன தனதன தனதன 
தனன தனதன தனதன தனதன 
தனன தனதன தனதன தனதன ...... தனதான 


விடமு மமுதமு மிளிர்வன இணைவிழி 
வனச மலதழல் முழுகிய சரமென 
விரைசெய் ம்ருகமத அளகமு முகிலல ...... வொருஞான 

விழியின் வழிகெட இருள்வதொ ரிருளென 
மொழியு மமுதல வுயிர்கவர் வலையென 
விழையு மிளநகை தளவல களவென ...... வியனாபித் 

தடமு மடுவல படுகுழி யெனஇடை 
துடியு மலமத னுருவென வனமுலை 
சயில மலகொலை யமனென முலைமிசை ...... புரள்கோவை 

தரள மணியல யமன்விடு கயிறென 
மகளிர் மகளிரு மலபல வினைகொடு 
சமையு முருவென வுணர்வொடு புணர்வது ...... மொருநாளே 

அடவி வனிதையர் தனதிரு பரிபுர 
சரண மலரடி மலர்கொடு வழிபட 
அசல மிசைவிளை புனமதி லினிதுறை ...... தனிமானும் 

அமர ரரிவையு மிருபுடை யினும்வர 
முகர முகபட கவளத வளகர 
அசல மிசைவரு மபிநவ கலவியும் ...... விளையாடுங் 

கடக புளகித புயகிரி சமுகவி 
கடக கசரத துரகத நிசிசரர் 
கடக பயிரவ கயிரவ மலர்களும் ...... எரிதீயுங் 

கருக வொளிவிடு தனுபர கவுதம 
புநித முநிதொழ அருணையி லறம்வளர் 
கருணை யுமைதரு சரவண சுரபதி ...... பெருமாளே. 
பாடல் 375 
தனன தனதன தனன தனதன 
தனன தனதன தனன தனதன 
தனன தனதன தனன தனதன ...... தனதான 


கமரி மலர்குழல் சரிய புளகித 
கனக தனகிரி யசைய பொருவிழி 
கணைக ளெனநுதல் புரள துகிலதை ...... நெகிழ்மாதர் 

கரிய மணிபுர ளரிய கதிரொளி 
பரவ இணைகுழை யசைய நகைகதிர் 
கனக வளைகல நடைகள் பழகிகள் ...... மயில்போலத் 

திமிரு மதபுழு கொழுக தெருவினி 
லலைய விலைமுலை தெரிய மயல்கொடு 
திலத மணிமுக அழகு சுழலிக ...... ளித்ழுறல் 

திரையி லமதென கழைகள் பலசுளை 
யெனவு மவர்மயல் தழுவு மசடனை 
திருகு புலைகொலை கலிகள் சிதறிட ...... அருள்தாராய் 

குமர குருபர குமர குருபர 
குமர குருபர குமர குருபர 
குமர குருபர குமர குருபர ...... எனதாளங் 

குரைசெய் முரசமொ டரிய விருதொலி 
டமட டமடம டமட டமவென 
குமுற திமிலைச லரிகி னரிமுத ...... லிவைபாட 

அமரர் முநிவரு மயனு மனைவரு 
மதுகை மலர்கொடு தொழுது பதமுற 
அசுரர் பரிகரி யிரத முடைபட ...... விடும்வேலா 

அகில புவனமொ டடைய வொளிபெற 
அழகு சரண்மயில் புறம தருளியொ 
ரருண கிரிகுற மகளை மருவிய ...... பெருமாளே. 
பாடல் 376 
ராகம் - சிவரஞ்சனி ; தாளம் - ஆதி (எடுப்பு - 1/2 இடம்) 

தனதனத் தானனத் தனதனத் தானனத் 
தனதனத் தானனத் ...... தனதான 


கயல்விழித் தேனெனைச் செயலழித் தாயெனக் 
கணவகெட் டேனெனப் ...... பெறுமாது 

கருதுபுத் ராஎனப் புதல்வரப் பாஎனக் 
கதறிடப் பாடையிற் ...... றலைமீதே 

பயில்குலத் தாரழப் பழையநட் பாரழப் 
பறைகள்கொட் டாவரச் ...... சமனாரும் 

பரியகைப் பாசம்விட் டெறியுமப் போதெனைப் 
பரிகரித் தாவியைத் ...... தரவேணும் 

அயிலறச் சேவல்கைக் கினிதரத் தோகையுற் 
றருணையிற் கோபுரத் ...... துறைவோனே 

அமரரத் தாசிறுக் குமரிமுத் தாசிவத் 
தரியசொற் பாவலர்க் ...... கெளியோனே 

புயலிளைப் பாறுபொற் சயிலமொய்ச் சாரலிற் 
புனமறப் பாவையைப் ...... புணர்வோனே 

பொடிபடப் பூதரத் தொடுகடற் சூரனைப் 
பொருமுழுச் சேவகப் ...... பெருமாளே. 
பாடல் 377 
தனதனத் தானனத் தனதனத் தானனத் 
தனதனத் தானனத் ...... தனதான 


கறுவுமிக் காவியைக் கலகுமக் காலனொத் 
திலகுகட் சேல்களிப் ...... புடனாடக் 

கருதிமுற் பாடுகட் டளையுடற் பேசியுட் 
களவினிற் காசினுக் ...... குறவாலுற் 

றுறுமலர்ப் பாயலிற் றுயர்விளைத் தூடலுற் 
றுயர் பொருட் கோதியுட் ...... படுமாதர் 

ஒறுவினைக் கேயுளத் தறிவுகெட் டேனுயிர்ப் 
புணையிணைத் தாள்தனைத் ...... தொழுவேனோ 

மறையெடுத் தோதிவச் சிரமெடுத் தானுமைச் 
செறிதிருக் கோலமுற் ...... றணைவானும் 

மறைகள்புக் காரெனக் குவடுநெட் டாழிவற் 
றிடஅடற் சூரனைப் ...... பொரும்வேலா 

அறிவுடைத் தாருமற் றுடனுனைப் பாடலுற் 
றருணையிற் கோபுரத் ...... துறைவோனே 

அடவியிற் றோகைபொற் றடமுலைக் காசையுற் 
றயருமச் சேவகப் ...... பெருமாளே. 
பாடல் 378 
ராகம் - ஸாரமதி ; தாளம் - கண்டசாபு 

தனதனத் தானனத் தனதனத் தானனத் 
தனதனத் தானனத் ...... தனதான 


பரியகைப் பாசம்விட் டெறியுமக் காலனுட் 
பயனுயிர்ப் போயகப் ...... படமோகப் 

படியிலுற் றாரெனப் பலர்கள்பற் றாவடற் 
படரெரிக் கூடுவிட் ...... டலைநீரிற் 

பிரியுமிப் பாதகப் பிறவியுற் றேமிகப் 
பிணிகளுக் கேயிளைத் ...... துழல்நாயேன் 

பிழைபொறுத் தாயெனப் பழுதறுத் தாளெனப் 
பிரியமுற் றோதிடப் ...... பெறுவேனோ 

கரியமெய்க் கோலமுற் றரியினற் றாமரைக் 
கமைவபற் றாசையக் ...... கழலோர்முன் 

கலைவகுத் தோதிவெற் பதுதொளைத் தோனியற் 
கடவுள்செச் சேவல்கைக் ...... கொடியோனென் 

றரியநற் பாடலைத் தெரியுமுற் றோற்கிளைக் 
கருணையிற் கோபுரத் ...... துறைவோனே 

அடவியிற் றோகைபொற் றடமுலைக் காசையுற் 
றயருமச் சேவகப் ...... பெருமாளே. 
பாடல் 379 
தனதனன தான தத்த தனதனன தான தத்த 
தனதனன தான தத்த ...... தனதான 


தருணமணி வானி லத்தி லருணமணி யால விட்ட 
தழலமளி மீதெ றிக்கு ...... நிலவாலே 

தலைமைதவி ராம னத்தி னிலைமையறி யாதெ திர்த்த 
தறுகண்மத வேள்தொ டுத்த ...... கணையாலே 

வருணமட மாதர் கற்ற வசையின்மிகை பேச முற்று 
மருவுமென தாவி சற்று ...... மழியாதே 

மகுடமணி வாரி சைக்கும் விகடமது லாவு சித்ர 
மயிலின்மிசை யேறி நித்தம் ...... வரவேணும் 

கருணையக லாவி ழிச்சி களபமழி யாமு லைச்சி 
கலவிதொலை யாம றத்தி ...... மணவாளா 

கடுவுடைய ராநி ரைத்த சடிலமுடி மீது வைத்த 
கடியமல ராத ரித்த ...... கழல்வீரா 

அருணமணி யால மைத்த கிரணமணி சூழும் வெற்றி 
அருணைநகர் கோபு ரத்தி ...... லுறைவோனே 

அசுரர்குலம் வேர றுத்து வடவனலை மீதெ ழுப்பி 
அமரர்சிறை மீள விட்ட ...... பெருமாளே.
பாடல் 380 
தனதனன தான தத்த தனதனன தான தத்த
தனதனன தான தத்த ...... தனதான


முழுகிவட வாமு கத்தி னெழுகனலி லேபி றக்கு
முழுமதிநி லாவி னுக்கும் ...... வசையாலும்

மொழியுமட மாத ருக்கு மினியதனி வேயி சைக்கு
முதியமத ராஜ னுக்கு ...... மழியாதே

புழுகுதிகழ் நீப மத்தி லழகியகு ராநி ரைத்த
புதுமையினி லாறி ரட்டி ...... புயமீதே

புணரும்வகை தானி னைத்த துணரும்வகை நீல சித்ர
பொருமயிலி லேறி நித்தம் ...... வரவேணும்

எழுமகர வாவி சுற்று பொழிலருணை மாந கர்க்கு
ளெழுதரிய கோபு ரத்தி ...... லுறைவோனே

இடைதுவள வேடு வச்சி படமசைய வேக னத்த
இளமுலைவி டாத சித்ர ...... மணிமார்பா

செழுமகுட நாக மொய்த்த ஒழுகுபுனல் வேணி வைத்த
சிவனைமுத லோது வித்த ...... குருநாதா

திசைமுகன்மு ராரி மற்று மரியபல தேவ ருற்ற
சிறையடைய மீள விட்ட ...... பெருமாளே.
பாடல் 381 
தனதனன தான தத்த தனதனன தான தத்த 
தனதனன தான தத்த ...... தனதான


வடவையன லூடு புக்கு முழுகியெழு மாம திக்கு
மதுரமொழி யாழி சைக்கு ...... மிருநாலு

வரைதிசைவி டாது சுற்றி யலறுதிரை வாரி திக்கு 
மடியருவ வேள்க ணைக்கு ...... மறவாடி

நெடுகனக மேரு வொத்த புளகமுலை மாத ருக்கு
நிறையுமிகு காத லுற்ற ...... மயல்தீர

நினைவினொடு பீலி வெற்றி மரகத லாப சித்ர
நிலவுமயி லேறி யுற்று ...... வரவேணும்

மடலவிழு மாலை சுற்று புயமிருப தோடு பத்து
மவுலியற வாளி தொட்ட ...... அரிராமன்

மருகபல வான வர்க்கு மரியசிவ னார்ப டிக்க
மவுனமறை யோது வித்த ...... குருநாதா 

இடையரிவு லாவு முக்ர அருணகிரி மாந கர்க்கு 
ளினியகுண கோபு ரத்தி ...... லுறைவோனே

எழுபுவிய ளாவு வெற்பு முடலிநெடு நாக மெட்டு 
மிடையுருவ வேலை விட்ட ...... பெருமாளே.
பாடல் 382 
தானதன தானத் தானதன தானத் 
தானதன தானத் ...... தந்ததான 


ஆலவிழி நீலத் தாலதர பானத் 
தாலளக பாரக் ...... கொண்டலாலே 

ஆரநகை யால்விற் போர்நுதலி னால்வித் 
தாரநடை யால்நற் ...... கொங்கையாலே 

சாலமய லாகிக் காலதிரி சூலத் 
தாலிறுகு பாசத் ...... துன்ப்முழ்கித் 

தாழ்விலுயிர் வீழ்பட் டூழ்வினைவி டாமற் 
சாவதன்மு னேவற் ...... கொண்டிடாயோ 

சோலைதரு கானிற் கோலமற மானைத் 
தோளிலுற வாகக் ...... கொண்டவாழ்வே 

சோதிமுரு காநித் தாபழய ஞானச் 
சோணகிரி வீதிக் ...... கந்தவேளே 

பாலகக லாபக் கோமளம யூரப் 
பாகவுமை பாகத் ...... தன்குமாரா 

பாதமலர் மீதிற் போதமலர் தூவிப் 
பாடுமவர் தோழத் ...... தம்பிரானே. 
பாடல் 383 
தானதன தானத் தானதன தானத் 
தானதன தானத் ...... தந்ததான 


பேதகவி ரோதத் தோதகவி நோதப் 
பேதையர்கு லாவைக் ...... கண்டுமாலின் 

பேதைமையு றாமற் றேதமக லாமற் 
பேதவுடல் பேணித் ...... தென்படாதே 

சாதகவி காரச் சாதலவை போகத் 
தாழ்விலுயி ராகச் ...... சிந்தையாலுன் 

தாரைவடி வேலைச் சேவல்தனை யேனற் 
சாரல்மற மானைச் ...... சிந்தியேனோ 

போதகம யூரப் போதகக டாமற் 
போதருணை வீதிக் ...... கந்தவேளே 

போதகக லாபக் கோதைமுது வானிற் 
போனசிறை மீளச் ...... சென்றவேலா 

பாதகப தாதிச் சூரன்முதல் வீழப் 
பாருலகு வாழக் ...... கண்டகோவே 

பாதமலர் மீதிற் போதமலர் தூவிப் 
பாடுமவர் தோழத் ...... தம்பிரானே. 
பாடல் 384 
ராகம் - செஞ்சுருட்டி ; தாளம் - அங்தாளம் (7 1/2) 
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2 
(எடுப்பு - 1/2 அக்ஷரம் தள்ளி) 

தனன தானன தானன தானன 
தனன தானன தானன தானன 
தனன தானன தானன தானன ...... தனதான 


அமுத மூறுசோ லாகிய தோகையர் 
பொருளு ளாரையெ னாணையு னாணையெ 
னருகு வீடிது தானதில் வாருமெ ...... னுரைகூறும் 

அசடு மாதர்கு வாதுசொல் கேடிகள் 
தெருவின் மீதுகு லாவியு லாவிகள் 
அவர்கள் மாயைப டாமல்கெ டாமல்நி ...... னருள்தாராய் 

குமரி காளிவ ராகிம கேசுரி 
கவுரி மோடிசு ராரிநி ராபரி 
கொடிய சூலிசு டாரணி யாமளி ...... மகமாயி 

குறளு ரூபமு ராரிச கோதரி 
யுலக தாரிஉதாரிப ராபரி 
குருப ராரிவி காரிந மோகரி ...... அபிராமி 

சமர நீலிபு ராரித னாயகி 
மலைகு மாரிக பாலிந னாரணி 
சலில மாரிசி வாயம னோகரி ...... பரையோகி 

சவுரி வீரிமு நீர்விட போஜனி 
திகிரி மேவுகை யாளிசெ யாளொரு 
சகல வேதமு மாயின தாயுமை ...... யருள்பாலா 

திமித மாடுசு ராரிநி சாசரர் 
முடிக டோ றுக டாவியி டேயொரு 
சிலப சாசுகு ணாலிநி ணாமுண ...... விடும்வேலா 

திருவு லாவுசொ ணேசர ணாமலை 
முகிலு லாவுவி மானந வோநிலை 
சிகர மீதுகு லாவியு லாவிய ...... பெருமாளே. 
பாடல் 385 
தனன தானன தானன தானன 
தனன தானன தானன தானன 
தனன தானன தானன தானன ...... தனதான 


உருகு மாமெழு காகவு மேமயல் 
பெருகு மாசையு ளாகிய பேர்வரி 
லுரிய மேடையில் வார்குழல் நீவிய ...... வொளிமானார் 

உடைகொள் மேகலை யால்முலை மூடியும் 
நெகிழ நாடிய தோதக மாடியு 
முவமை மாமயில் போல்நிற மேனிய ...... ருரையாடுங் 

கரவ தாமன மாதர்கள் நீள்வலை 
கலக வாரியில் வீழடி யேநெறி 
கருதொ ணாவதி பாதக னேசம ...... தறியாத 

கசட மூடனை யாளவு மேயருள் 
கருணை வாரிதி யேயிரு நாயகி 
கணவ னேயுன தாளிணை மாமலர் ...... தருவாயே 

சுருதி மாமொழி வேதியன் வானவர் 
பரவு கேசனை யாயுத பாணிநல் 
துளப மாலையை மார்பணி மாயவன் ...... மருகோனே 

தொலைவி லாவசு ரேசர்க ளானவர் 
துகள தாகவு மேயெதி ராடிடு 
சுடரின் வேலவ னேயுல கேழ்வலம் ...... வருவோனே 

அருணர் கோடியி னாரொளி வீசிய 
தருண வாண்முக மேனிய னேயர 
னணையு நாயகி பாலக னேநிறை ...... கலையோனே 

அணிபொன் மேருயர் கோபுர மாமதி 
ளதிரு மாரண வாரண வீதியு 
ளருணை மாநகர் மேவியு லாவிய ...... பெருமாளே. 
பாடல் 386 
தனதன தனன தனந்த தானன 
தனதன தனன தனந்த தானன 
தனதன தனன தனந்த தானன ...... தனதான 


கரியுரி அரவ மணிந்த மேனியர் 
கலைமதி சலமு நிறைந்த வேணியர் 
கனல்மழு வுழையு மமர்ந்த பாணியர் ...... கஞ்சமாதின் 

கனமுலை பருகி வளர்ந்த காமனை 
முனிபவர் கயிலை யமர்ந்த காரணர் 
கதிர்விரி மணிபொ னிறைந்த தோளினர் ...... கண்டகாள 

விரிவென வுனது ளுகந்த வேலென 
மிகவிரு குழையு டர்ந்து வேளினை 
யனையவ ருயிரை விழுங்கி மேலும்வெ ...... குண்டுநாடும் 

வினைவிழி மகளிர் தனங்கள் மார்புற 
விதமிகு கலவி பொருந்தி மேனியு 
மெழில்கெட நினைவு மழிந்து மாய்வதொ ...... ழிந்திடாதோ 

எரிசொரி விழியு மிரண்டு வாளெயி 
றிருபிறை சயில மிரண்டு தோள்முகி 
லெனவரு மசுரர் சிரங்கள் மேருஇ ...... டிந்துவீழ்வ 

தெனவிழ முதுகு பிளந்து காளிக 
ளிடுபலி யெனவு நடந்து தாள்தொழ 
எதிர்பொரு துதிர முகந்த வேகமு ...... கைந்தவேலா 

அரிகரி யுழுவை யடர்ந்த வாண்மலை 
அருணையி லறவு முயர்ந்த கோபுர 
மதினுறை குமர அநந்த வேதமொ ...... ழிந்துவாழும் 

அறுமுக வடிவை யொழிந்து வேடர்கள் 
அடவியி லரிவை குயங்கள் தோய்புய 
அரியர பிரம புரந்த ராதியர் ...... தம்பிரானே. 
பாடல் 387 
தனதன தனதன தந்த தானன 
தனதன தனதன தந்த தானன 
தனதன தனதன தந்த தானன ...... தநததான 


கனைகடல் வயிறுகு ழம்பி வாய்விட 
வடதம னியகிரி கம்ப மாய்நட 
கணபண விபரித கந்த காளபு ...... யங்கராஜன் 

கயிறென அமரர நந்த கோடியு 
முறைமுறை யமுதுக டைந்த நாளொரு 
கதியற வுலகைவி ழுங்கு மேகவொ ...... ழுங்குபோல 

வினைமத கரிகளு மெண்டி சாமுக 
கிரிகளு முறுகிட அண்ட கோளகை 
வெடிபட எவரையும் விஞ்சி வேலிடு ...... நஞ்சுபோல 

விடுகுழை யளவும ளந்து காமுக 
ருயிர்பலி கவர்வுறு பஞ்ச பாதக 
விழிவலை மகளிரொ டன்பு கூர்வதொ ...... ழிந்திடாதோ 

முனைபெற வளையஅ ணைந்த மோகர 
நிசிசரர் கடகமு றிந்து தூளெழ 
முகிலென வுருவமி ருண்ட தாருக ...... னஞ்சமீன 

முழுகிய திமிரத ரங்க சாகர 
முறையிட இமையவர் தங்க ளூர்புக 
முதுகிரி யுருவமு னிந்த சேவக ...... செம்பொன்மேரு 

அனையன கனவித சண்ட கோபுர 
அருணையி லுறையும ருந்து ணாமுலை 
அபிநவ வனிதைத ருங்கு மாரநெ ...... ருங்குமால்கொண் 

டடவியில் வடிவுக ரந்து போயொரு 
குறமகள் பிறகுதி ரிந்த காமுக 
அரியர பிரமபு ரந்த ராதியர் ...... தம்பிரானே. 
பாடல் 388 
ராகம் - குந்தலவராளி; தாளம் - மிஸ்ர சாபு 
தகதிமி-2, தகிட-1 1/2 

தனதன தனனம் தனதன தனனம் 
தனதன தனனம் ...... தனதான 


இரவியு மதியுந் தெரிவுற எழுமம் 
புவிதனி லினமொன் ...... றிடுமாதும் 

எழில்புதல் வருநின் றழுதுள முருகும் 
மிடர்கொடு நடலம் ...... பலகூறக் 

கருகிய வுருவங் கொடுகனல் விழிகொண் 
டுயிரினை நமனுங் ...... கருதாமுன் 

கலைகொடு பலதுன் பமுமக லிடநின் 
கழலிணை கருதும் ...... படிபாராய் 

திருமரு வியதிண் புயனயன் விரியெண் 
டிசைகிடு கிடவந் ...... திடுசூரன் 

திணிபுய மதுசிந் திடஅலை கடலஞ் 
சிடவலி யொடுகன் ...... றிடும்வேலா 

அருமறை யவரந் தரமுறை பவரன் 
புடையவ ருயஅன் ...... றறமேவும் 

அரிவையு மொருபங் கிடமுடை யவர்தங் 
கருணையி லுறையும் ...... பெருமாளே. 
பாடல் 389 
ராகம் - முகாரி; தாளம் - மிஸ்ர சாபு (3 1/2) 
தகதிமி-2, தகிட-1 1/2 

தனதன தனனம் தனதன தனனம் 
தனதன தனனம் ...... தனதான 


விரகொடு வளைசங் கடமது தருவெம் 
பிணிகொடு விழிவெங் ...... கனல்போல 

வெறிகொடு சமனின் றுயிர்கொளு நெறியின் 
றெனவிதி வழிவந் ...... திடுபோதிற் 

கரவட மதுபொங் கிடுமன மொடுமங் 
கையருற வினர்கண் ...... புனல்பாயுங் 

கலகமும் வருமுன் குலவினை களையுங் 
கழல்தொழு மியல்தந் ...... தருள்வாயே 

பரவிடு மவர்சிந் தையர்விட முமிழும் 
படவர வணைகண் ...... டுயில்மாலம் 

பழமறை மொழிபங் கயனிமை யவர்தம் 
பயமற விடமுண் ...... டெருதேறி 

அரவொடு மதியம் பொதிசடை மிசைகங் 
கையுமுற அனலங் ...... கையில்மேவ 

அரிவையு மொருபங் கிடமுடை யவர்தங் 
கருணையில் மருவும் ...... பெருமாளே. 
பாடல் 390 
தனதன தனன தனதன தனன 
தனதன தனதன ...... தந்ததான 


இடமடு சுறவை முடுகிய மகர 
மெறிகட லிடையெழு ...... திங்களாலே 

இருவினை மகளிர் மருவிய தெருவி 
லெரியென வருசிறு ...... தென்றலாலே 

தடநடு வுடைய கடிபடு கொடிய 
சரம்விடு தறுகண ...... நங்கனாலே 

சரிவளை கழல மயல்கொளு மரிவை 
தனிமல ரணையின ...... லங்கலாமோ 

வடகுல சயில நெடுவுட லசுரர் 
மணிமுடி சிதறஎ ...... றிந்தவேலா 

மறமக ளமுத புளகித களப 
வளரிள முலையைம ...... ணந்தமார்பா 

அடலணி விகட மரகத மயிலி 
லழகுட னருணையி ...... னின்றகோவே 

அருமறை விததி முறைமுறை பகரு 
மரியர பிரமர்கள் ...... தம்பிரானே. 
பாடல் 391 
தனதன தனனா தனதன தனனா 
தனதன தனனா ...... தனதான 


கெஜநடை மடவார் வசமதி லுருகா 
கிலெசம துறுபாழ் ...... வினையாலே 

கெதிபெற நினையா துதிதனை யறியா 
கெடுசுக மதிலாழ் ...... மதியாலே 

தசையது மருவீ வசையுட லுடனே 
தரணியில் மிகவே ...... யுலைவேனோ 

சததள மலர்வார் புணைநின கழலார் 
தருநிழல் புகவே ...... தருவாயே 

திசைமுக வனைநீள் சிறையுற விடுவாய் 
திருநெடு கருமால் ...... மருகோனே 

திரிபுர தகனா ரிடமதில் மகிழ்வார் 
திரிபுரை யருள்சீர் ...... முருகோனே 

நிசிசர ருறைமா கிரியிரு பிளவா 
நிறையயில் முடுகா ...... விடுவோனே 

நிலமிசை புகழார் தலமெனு மருணா 
நெடுமதில் வடசார் ...... பெருமாளே. 
பாடல் 392 
தனத்தா தனத்தத் தனத்தா தனத்தத் 
தனத்தா தனத்தத் ...... தனதான 


அருக்கார் நலத்தைத் திரிப்பார் மனத்துக் 
கடுத்தாசை பற்றித் ...... தளராதே 

அடற்கா லனுக்குக் கடைக்கால் மிதித்திட் 
டறப்பே தகப்பட் ...... டழியாதே 

கருக்காரர் நட்பைப் பெருக்கா சரித்துக் 
கலிச்சா கரத்திற் ...... பிறவாதே 

கருத்தா லெனக்குத் திருத்தா ளளித்துக் 
கலைப்போ தகத்தைப் ...... புகல்வாயே 

ஒருக்கால் நினைத்திட் டிருக்கால் மிகுத்திட் 
டுரைப்பார்கள் சித்தத் ...... துறைவோனே 

உரத்தோ ளிடத்திற் குறத்தேனை வைத்திட் 
டொளித்தோடும் வெற்றிக் ...... குமரேசா 

செருக்கா தருக்கிச் சுரச்சூர் நெருக்கச் 
செருச்சூர் மரிக்கப் ...... பொரும்வேலா 

திறப்பூ தலத்திற் றிரட்சோண வெற்பிற் 
றிருக்கோ புரத்திற் ...... பெருமாளே. 
பாடல் 393 
தனனா தனனத் தனனா தனனத் 
தனனதா தனனத் ...... தனதான 


அருமா மதனைப் பிரியா தசரக் 
கயலார் நயனக் ...... கொடியார்தம் 

அழகார் புளகப் புழுகார் சயிலத் 
தணையா வலிகெட் ...... டுடல்தாழ 

இருமா நடைபுக் குரைபோ யுணர்வற் 
றிளையா வுளமுக் ...... குயிர்சோர 

எரிவாய் நரகிற் புகுதா தபடிக் 
கிருபா தமெனக் ...... கருள்வாயே 

ஒருமால் வரையைச் சிறுதூள் படவிட் 
டுரமோ டெறிபொற் ...... கதிர்வேலா 

உறைமா னடவிக் குறமா மகளுக் 
குருகா றிருபொற் ...... புயவீரா 

திருமால் கமலப் பிரமா விழியிற் 
றெரியா வரனுக் ...... கரியோனே 

செழுநீர் வயல்சுற் றருணா புரியிற் 
றிருவீ தியினிற் ...... பெருமாளே. 
பாடல் 394 
தனதனா தானனத் தனதனா தானனத் 
தனதனா தானனத் ...... தனதான 


அழுதுமா வாவெனத் தொழுத்மு டூடுநெக் 
கவசமா யாதரக் ...... கடலூடுற்

றமைவில்கோ லாகலச் சமயமா பாதகர்க் 
கறியொணா மோனமுத் ...... திரைநாடிப் 

பிழைபடா ஞானமெய்ப் பொருள்பெறா தேவினைப் 
பெரியஆ தேசபுற் ...... புதமாய 

பிறவிவா ராகரச் சுழியிலே போய்விழப் 
பெறுவதோ நானினிப் ...... புகல்வாயே 

பழையபா கீரதிப் படுகைமேல் வாழ்வெனப் 
படியுமா றாயினத் ...... தனசாரம் 

பருகுமா றானனச் சிறுவசோ ணாசலப் 
பரமமா யூரவித் ...... தகவேளே 

பொழுதுசூழ் போதுவெற் பிடிபடா பார்முதற் 
பொடிபடா வோடமுத் ...... தெறிமீனப் 

புணரிகோ கோவெனச் சுருதிகோ கோவெனப் 
பொருதவே லாயுதப் ...... பெருமாளே. 
பாடல் 395 
தானதனத் தானதனத் தானதனத் தானதனத் 
தானதனத் தானதனத் ...... தனதானா 


ஆனைவரிக் கோடிளநிர்ப் பாரமுலைச் சாரசைபட் 
டாடைமறைத் தாடுமலர்க் ...... குழலார்கள் 

ஆரவடத் தோடலையப் பேசிநகைத் தாசைபொருட் 
டாரையுமெத் தாகமயக் ...... கிடுமோகர் 

சோனைமழைப் பாரவிழித் தோகைமயிற் சாதியர்கைத் 
தூதுவிடுத் தேபொருளைப் ...... பறிமாதர் 

தோதகமுற் றேழ்நரகிற் சேருமழற் காயனையுட் 
சோதியொளிப் பாதமளித் ...... தருள்வாயே 

தானதனத் தீதிமிலைப் பேரிகைகொட் டாசமலைச் 
சாயகடற் சூரைவதைத் ...... திடுவோனே 

தாளவியற் சோதிநிறக் காலினெழக் கோலியெடுத் 
தாபரம்வைத் தாடுபவர்க் ...... கொருசேயே 

தேனிரசக் கோவையிதழ்ப் பூவைகுறப் பாவைதனத் 
தேயுருகிச் சேருமணிக் ...... கதிர்வேலா 

சீரருணைக் கோபுரமுற் றானபுனத் தோகையுமெய்த் 
தேவமகட் கோர்கருணைப் ...... பெருமாளே. 
பாடல் 396 
தனனத் தனதானன தனனத் தனதானன 
தனனத் தனதானன ...... தனதான 


இடருக் கிடராகிய கொடுமைக் கணைமேல்வரு 
மிறுதிச் சிறுகால்வரு ...... மதனாலே 

இயலைத் தருகானக முயலைத் தருமேனியி 
லெரியைத் தருமாமதி ...... நிலவாலே 

தொடரக் கொடுவாதையி லடையக் கரைமேலலை 
தொலையத் தனிவீசிய ...... கடலாலே 

துணையற் றணிபூமல ரணையிற் றனியேனுயிர் 
துவளத் தகுமோதுயர் ...... தொலையாதோ 

வடபொற் குலமேருவின் முடுகிப் பொருசூரனை 
மடியச் சுடஏவிய ...... வடிவேலா 

மறவக் குலமாமொரு குறமெய்த் திருமாமகள் 
மகிழப் புனமேவிய ...... மயில்வீரா 

அடரப் படர்கேதகை மடலிற் றழைசேர்வய 
லருணைத் திருவீதியி ...... லுறைவோனே 

அவனித் திருமாதொடு சிவனுக் கிமையாவிழி 
அமரர்க் கரசாகிய ...... பெருமாளே. 
பாடல் 397 
ராகம் - ஸரஸ்வதி; தாளம் - மிஸ்ரஜம்பை (10) 

தனதாதன தானன தத்தம் ...... தனதான 


இமராஜனி லாவதெ றிக்குங் ...... கனலாலே 
இளவாடையு மூருமொ றுக்கும் ...... படியாலே 

சமராகிய மாரனெ டுக்குங் ...... கணையாலே 
தனிமானுயிர் சோரும தற்கொன் ...... றருள்வாயே 

குமராமுரு காசடி லத்தன் ...... குருநாதா 
குறமாமக ளாசைத ணிக்குந் ...... திருமார்பா 

அமராவதி வாழ்வம ரர்க்கன் ...... றருள்வோனே 
அருணாபுரி வீதியி னிற்கும் ...... பெருமாளே. 
பாடல் 398 
தனன தனதனன தனதான தத்த தனனா தனந்த 
தனன தனதனன தனதான தத்த தனனா தனந்த 
தனன தனதனன தனதான தத்த தனனா தனந்த 
.... தனதனத் தனதான 


இரத சுரதமுலை களுமார்பு குத்த நுதல்வேர் வரும்ப 
அமுத நிலையில்விர லுகிரேகை தைக்க மணிபோல் விளங்க 
இசலி யிசலியுப ரிதலீலை யுற்று இடைநூல் நுடங்க 
..... வுளமகிழ்ச் சியினோடே 

இருவ ருடலுமொரு வுருவாய் நயக்க முகமே லழுந்த 
அளக மவிழவளை களுமேக லிக்க நயனார விந்த 
லகரி பெருகஅத ரமுமே யருத்தி முறையே யருந்த 
..... உரையெழப் பரிவாலே 

புருவ நிமிரஇரு கணவாள் நிமைக்க வுபசார மிஞ்ச 
அவச கவசமள வியலே தரிக்க அதிலே யநந்த 
புதுமை விளையஅது பரமா பரிக்க இணைதோளு மொன்றி 
.... அதிசுகக் கலையாலே 

புளக முதிரவிர கமென்வாரி தத்த வரைநாண் மழுங்க 
மனமு மனமுமுரு கியெயா தரிக்க வுயிர்போ லுகந்து 
பொருள தளவுமரு வுறுமாய வித்தை விலைமாதர் சிங்கி 
..... விடஅருட் புரிவாயே 

பரவு மகரமுக ரமுமேவ லுற்ற சகரால் விளைந்த 
தமர திமிரபிர பலமோக ரத்ந சலராசி கொண்ட 
படியை முழுதுமொரு நொடியே மதித்து வலமாக வந்து 
..... சிவனிடத் தமர்சேயே 

பழநி மிசையிலிசை யிசையே ரகத்தில் திருவா வினன்கு 
டியினில் பிரமபுர மதில்வாழ் திருத்த ணிகையூடு மண்டர் 
பதிய முதியகதி யதுநா யெனுக்கு முறவாகி நின்று 
..... கவிதையைப் புனைவோனே 

அரியு மயனுமம ரருமாய சிட்ட பரிபால னன்ப 
ரடையு மிடரைமுடு கியெநூற துட்ட கொலைகார ரென்ற 
அசுரர் படையையடை யவும்வே ரறுத்த அபிராம செந்தி 
..... லுரகவெற் புடையோனே 

அருண கிரணகரு ணையபூர ணச்ச ரணமே லெழுந்த 
இரண கரணமுர ணுறுசூர னுட்க மயிலேறு கந்த 
அருணை யிறையவர்பெ ரியகோபு ரத்தில் வடபா லமர்ந்த 
..... ஆறுமுகப் பெருமாளே. 
பாடல் 399 
ராகம் - ஸாமா; தாளம் - கண்டசாபு (2 1/2) (எடுப்பு 1/2 தள்ளி) 

தனதனனத் தனதான தனதனனத் ...... தனதான 


இரவுபகற் பலகாலும் இயலிசைமுத் ...... தமிழ்கூறித் 
திரமதனைத் தெளிவாகத் திருவருளைத் ...... தருவாயே 

பரகருணைப் பெருவாழ்வே பரசிவதத் ...... துவஞானா 
அரனருள்சற் புதல்வோனே அருணகிரிப் ...... பெருமாளே. 
பாடல் 400 
ராகம் - ஸாவேரி; தாளம் - மிஸ்ரசாபு (3 1/2) 
தகிட தகதிமி-3 1/2 

தனன தனனா தனன தனனா 
தனன தனனா ...... தனதான 


இருவர் மயலோ அமளி விதமோ 
எனென செயலோ ...... அணுகாத 

இருடி அயன்மா லமர ரடியா 
ரிசையு மொலிதா ...... னிவைகேளா 

தொருவ னடியே னலறு மொழிதா 
னொருவர் பரிவாய் ...... மொழிவாரோ 

உனது பததூள் புவன கிரிதா 
னுனது கிருபா ...... கரமேதோ 

பரம குருவா யணுவி லசைவாய் 
பவன முதலா ...... கியபூதப் 

படையு முடையாய் சகல வடிவாய் 
பழைய வடிவா ...... கியவேலா 

அரியு மயனோ டபய மெனவே 
அயிலை யிருள்மேல் ...... விடுவோனே 

அடிமை கொடுநோய் பொடிகள் படவே 
அருண கிரிவாழ் ...... பெருமாளே. 
பாடல் 401 
ராகம் - பூர்விகல்யாணி; தாளம் - மிஸ்ரசாபு (3 1/2) 
தகதிமி-2, தகிட-1 1/2 

தனதன தந்த தனதன தந்த 
தனதன தந்த ...... தனதான 


இருவினை யஞ்ச மலவகை மங்க 
இருள்பிணி மங்க ...... மயிலேறி 

இனவரு ளன்பு மொழியக டம்பு 
வினதக முங்கொ ...... டளிபாடக் 

கரிமுக னெம்பி முருகனெ னண்டர் 
களிமலர் சிந்த ...... அடியேன்முன் 

கருணைபொ ழிந்து முகமும லர்ந்து 
கடுகிந டங்கொ ...... டருள்வாயே 

திரிபுர மங்க மதனுடல் மங்க 
திகழ்நகை கொண்ட ...... விடையேறிச் 

சிவம்வெளி யங்க ணருள்குடி கொண்டு 
திகழந டஞ்செய் ...... தெமையீண 

அரசியி டங்கொள் மழுவுடை யெந்தை 
அமலன்ம கிழ்ந்த ...... குருநாதா 

அருணைவி லங்கல் மகிழ்குர மங்கை 
அமளிந லங்கொள் ...... பெருமாளே. 
பாடல் 402
தனதன தாந்த தந்த தனதன தாந்த தந்த 
தனதன தாந்த தந்த ...... தனதான 


இருவினை யூண்ப சும்பை கருவிளை கூன்கு டம்பை 
யிடரடை பாழ்ம்பொ தும்ப ...... கிதவாரி 

இடைதிரி சோங்கு கந்த மதுவது தேங்கு கும்ப 
மிரவிடை தூங்கு கின்ற ...... பிணநோவுக் 

குருவியல் பாண்ட மஞ்சு மருவிய கூண்டு நெஞ்சொ 
டுயிர்குடி போங்கு ரம்பை ...... யழியாதென் 

றுலகுட னேன்று கொண்ட கருமபி ராந்தொ ழிந்து 
னுபயப தாம்பு யங்க ...... ளடைவேனோ 

அருணையி லோங்கு துங்க சிகரக ராம்பு யங்க 
ளமரர் குழாங்கு விந்து ...... தொழவாழும் 

அடியவர் பாங்க பண்டு புகலகி லாண்ட முண்ட 
அபிநவ சார்ங்க கண்டன் ...... மருகோனே 

கருணைம்ரு கேந்த்ர அன்ப ருடனுர கேந்த்ரர் கண்ட 
கடவுள்ந டேந்த்ரர் மைந்த ...... வரைசாடுங் 

கலபக கேந்த்ர தந்த்ர அரசநி சேந்த்ர கந்த 
கரகுலி சேந்த்ரர் தங்கள் ...... பெருமாளே. 
பாடல் 403
தனதனன தனதனன தான தத்த தந்த 
தனதனன தனதனன தான தத்த தந்த 
தனதனன தனதனன தான தத்த தந்த ...... தனதான 


இருளளக மவிழமதி போத முத்த ரும்ப 
இலகுகயல் புரளஇரு பார பொற்ற னங்கள் 
இளகஇடை துவளவளை பூச லிட்டி ரங்க ...... எவராலும் 

எழுதரிய கலைநெகிழ ஆசை மெத்த வுந்தி 
யினியசுழி மடுவினிடை மூழ்கி நட்பொ டந்த 
இதழமுது பருகியுயிர் தேக மொத்தி ருந்து ...... முனிவாறி 

மருகுகமழ் மலரமளி மீதி னிற்பு குந்து 
முகவனச மலர்குவிய மோக முற்ற ழிந்து 
மொழிபதற வசமழிய ஆசை யிற்க விழ்ந்து ...... விடுபோதும் 

முழுதுணர வுடையமுது மாத வத்து யர்ந்த 
பழுதில்மறை பயிலுவஎ னாத ரித்து நின்று 
முநிவர்சுரர் தொழுதுருகு பாத பத்ம மென்று ...... மறவேனே 

ஒருசிறுவன் மணமதுசெய் போதி லெய்த்து வந்து 
கிழவடிவு கொடுமுடுகி வாச லிற்பு குந்து 
உலகறிய இவனடிமை யாமெ னக்கொ ணர்ந்து ...... சபையூடே 

ஒருபழைய சருகுமடி ஆவ ணத்தை யன்று 
உரமொடவ னதுவலிய வேகி ழிக்க நின்று 
உதறிமுறை யிடுபழைய வேத வித்தர் தந்த ...... சிறியோனே 

அரியவுடு பதிகடவி யாட கச்சி லம்பொ 
டழகுவட மணிமுடிவி யாள மிட்ட ழுந்த 
அமரரொடு பலர்முடுகி ஆழி யைக்க டைந்து ...... அமுதாக 

அருளுமரி திருமருக வார ணத்தை யன்று 
அறிவினுட னொருகொடியி லேத ரித்து கந்த 
அருணகிரி நகரிலெழு கோபு ரத்த மர்ந்த ...... பெருமாளே. 
பாடல் 404 
தனன தனதன தனன தனதன 
தனன தனதன ...... தனதான 


இறுகு மணிமுலை மருவு தரளமு 
மெரியு முமிழ்மதி ...... நிலவாலே 

இரவி யெனதுயிர் கவர வருகுழ 
லிசையி லுறுகட ...... லலையாலே 

தறுகண் ரதிபதி மதனன் விடுகொடு 
சரமி லெளியெனு ...... மழியாதே 

தருண மணிபொழி லருணை நகருறை 
சயில மிசையினில் ...... வரவேணும் 

முறுகு திரிபுர மறுகு கனலெழ 
முறுவ லுடையவர் ...... குருநாதா 

முடிய கொடுமுடி யசுரர் பொடிபட 
முடுகு மரகத ...... மயில்வீரா 

குறவர் மடமக ளமுத கனதன 
குவடு படுமொரு ...... திருமார்பா 

கொடிய சுடரிலை தனையு மெழுகடல் 
குறுக விடவல ...... பெருமாளே. 
பாடல் 405 
தனதனன தத்த தனதனன தத்த 
தனதனன தத்த ...... தனதான 


உலையிலன லொத்தா வுடலினனல் பற்றி 
யுடுபதியை முட்டி ...... யமுதூற 

லுருகிவர விட்ட பரமசுக முற்று 
வுனதடியை நத்தி ...... நினையாமற் 

சிலைநுதலி லிட்ட திலதமவிர் பொட்டு 
திகழ்முகவர் முத்து ...... நகையாலே 

சிலுகுவலை யிட்ட மயல்கவலை பட்டுத் 
திருடனென வெட்கி ...... யலைவேனோ 

கலைகனக வட்ட திமிலைபறை கொட்ட 
கனகமயில் விட்ட ...... கதிர்வேலா 

கருதலரின் முட்டி கருகிவரு துட்ட 
கதவமண ருற்ற ...... குலகாலா 

அலைகடலு டுத்த தலமதனில் வெற்றி 
அருணைவளர் வெற்பி ...... லுறைவோனே 

அசுரர்களை வெட்டி யமரர்சிறை விட்டு 
அரசுநிலை யிட்ட ...... பெருமாளே. 
பாடல் 406 
ராகம் - ஆரபி ; தாளம் - அங்கதாளம் (10) 
தகதிமிதக-3, தகிடதகதிமி-3 1/2, தகிடதகதிமி-3 1/2 

தனதனன தனந்த தானன ...... தந்ததான 


கடல்பரவு தரங்க மீதெழு ...... திங்களாலே 
கருதிமிக மலந்தை மார்சொல்வ ...... தந்தியாலே 

வடவனலை முனிந்து வீசிய ...... தென்றலாலே 
வயலருணையில் வஞ்சி போதந ...... லங்கலாமோ 

இடமுமையை மணந்த நாதரி ...... றைஞ்சும்வீரா 
எழுகிரிகள் பிளந்து வீழஎ ...... றிந்தவேலா 

அடலசுரர் கலங்கி யோடமு ...... னிந்தகோவே 
அரிபிரம புரந்த ராதியர் ...... தம்பிரானே. 
பாடல் 407 
தனதனனத் தனதனனத் தனதனனத் தனதனனத் 
தனதனனத் தனதனனத் ...... தனதான 


கமலமுகப் பிறைநுதல்பொற் சிலையெனவச் சிரகணைநற் 
கயலெனபொற் சுழலும்விழிக் ...... குழல்கார்போல் 

கதிர்தரளொப் பியதசனக் கமுகுகளப் புயகழைபொற் 
கரகமலத் துகிர்விரலிற் ...... கிளிசேருங் 

குமரிதனத் திதமலைக் கிசலியிணைக் கலசமெனக் 
குவிமுலைசற் றசையமணிக் ...... கலனாடக் 

கொடியிடைபட் டுடைநடைபொற் சரணமயிற் கெமனமெனக் 
குனகிபொருட் பறிபவருக் ...... குறவாமோ 

திமிலையுடுக் குடன்முரசுப் பறைதிமிதித் திமிதிமெனட் 
டிமிடிமிடிட் டிகுர்திமிதித் ...... தொலிதாளம் 

செககணசெக் கணகதறத் திடுதிடெனக் கொடுமுடியெட் 
டிகைசிலைபட் டுவரிபடச் ...... சிலைகோடித் 

துமிலவுடற் றசுரர்முடிப் பொடிபடரத் தமுள்பெருகத் 
தொகுதசைதொட் டலகையுணத் ...... தொடும்வேலா 

துவனிதினைப் புனமருவிக் குறமகளைக் களவுமயற் 
சுகமொடணைத் தருணகிரிப் ...... பெருமாளே. 
பாடல் 408 
தனன தத்தத் தத்த தத்தத் தனதன 
தனன தத்தத் தத்த தத்தத் தனதன 
தனன தத்தத் தத்த தத்தத் தனதன ...... தனதான 


கமல மொட்டைக் கட்ட ழித்துக் குமிழியை 
நிலகு லைத்துப் பொற்கு டத்தைத் தமனிய 
கலச வர்க்கத் தைத்த கர்த்துக் குலையற ...... இளநீரைக் 

கறுவி வட்டைப் பிற்று ரத்திப் பொருதப 
சயம்வி ளைத்துச் செப்ப டித்துக் குலவிய 
கரிம ருப்பைப் புக்கொ டித்துத் திறல்மத ...... னபிஷேகம் 

அமலர் நெற்றிக் கட்ட ழற்குட் பொடிசெய்து 
அதிக சக்ரப் புட்ப றக்கக் கொடுமையி 
னடல்ப டைத்தச் சப்ப டுத்திச் சபதமொ ...... டிருதாளம் 

அறைதல் கற்பித் துப்பொ ருப்பைப் பரவிய 
சிறக றுப்பித் துக்க திர்த்துப் புடைபடு 
மபிந வச்சித் ரத்த னத்துத் திருடிக ...... ளுறவாமோ 

தமர மிக்குத் திக்க திர்க்கப் பலபறை 
தொகுதொ குக்குத் தொத்தொ குக்குத் தொகுதொகு 
தரிகி டத்தத் தத்த ரிக்கத் தரிகிட ...... எனவோதிச் 

சவடு றப்பக் கப்ப ழொத்திப் புகையெழ 
விழிக ளுட்செக் கச்சி வத்துக் குறளிகள் 
தசைகள் பட்சித் துக்க ளித்துக் கழுதொடு ...... கழுகாட 

அமலை யுற்றுக் கொக்க ரித்துப் படுகள 
அசுர ரத்தத் திற்கு ளித்துத் திமியென 
அடிந டித்திட் டிட்டி டித்துப் பொருதிடு ...... மயிலோனே 

அழகு மிக்கச் சித்ர பச்சைப் புரவியி 
னுலவு மெய்ப்ரத் யக்ஷ நற்சற் குருபர 
அருணை யிற்சித் தித்தெ னக்குத் தெளிவருள் ...... பெருமாளே. 
பாடல் 409 
ராகம் - மத்யமாவதி ; தாளம் - கண்டசாபு (2 1/2) 

தனதனத் தனதனத் தனதனத் தனதனத் 
தனதனத் தனதனத் ...... தனதான 


கரிமுகக் கடகளிற் றதிககற் பகமதக் 
கஜமுகத் தவுணனைக் ...... கடியானை 

கடலையெட் பயறுநற் கதலியிற் கனிபலக் 
கனிவயிற் றினிலடக் ...... கியவேழம் 

அரிமுகத் தினனெதிர்த் திடுகளத் தினின்மிகுத் 
தமர்புரிக் கணபதிக் ...... கிளையோனே 

அயிலெடுத் தசுரர்வெற் பலைவுறப் பொருதுவெற் 
றியைமிகுத் தறுமுகக் ...... குமரேசா 

நரிமிகுக் கிளைகளைப் பரியெனக் கடிவளக் 
கையில்பிடித் தெதிர்நடத் ...... திடுமீசன் 

நடனமிப் படியிடத் தினுமிசைத் தரையினிற் 
கரியுரித் தணிபவற் ...... கொருசேயே 

துரிபெறச் சரிபொழிற் கனவயற் கழகுளத் 
துரியமெய்த் தரளமொய்த் ...... திடவீறிச் 

சுரர்துதித் திடமிகுத் தியல்தழைத் தருணையிற் 
சுடரயிற் சரவணப் ...... பெருமாளே. 
பாடல் 410
தனன தந்தனம் தனதன தனதன 
தனன தந்தனம் தனதன தனதன 
தனன தந்தனம் தனதன தனதன ...... தனதான 


கருநி றஞ்சிறந் தகல்வன புகல்வன 
மதன தந்திரங் கடியன கொடியன 
கனக குண்டலம் பொருவன வருவன ...... பரிதாவும் 

கடலு டன்படர்ந் தடர்வன தொடர்வன 
விளையு நஞ்சளைந் தொளிர்வன பிளிர்வன 
கணையை நின்றுநின் றெதிர்வன முதிர்வன ...... இளையோர்முன் 

செருவை முண்டகஞ் சிறுவன வுறுவன 
களவு வஞ்சகஞ் சுழல்வன வுழல்வன 
தெனன தெந்தனந் தெனதென தெனதென ...... எனநாதம் 

தெரிசு ரும்பைவென் றிடுவன அடுவன 
மருள்செய் கண்கள்கொண் டணைவர்த முயிரது 
திருகு கின்றமங் கையர்வச மழிதலை ...... யொழிவேனோ 

மருவு தண்டைகிண் கிணிபரி புரமிவை 
கலக லன்கலின் கலினென இருசரண் 
மலர்கள் நொந்துநொந் தடியிட வடிவமு ...... மிகவேறாய் 

வலிய சிங்கமுங் கரடியு முழுவையு 
முறைசெ ழும்புனந் தினைவிளை யிதண்மிசை 
மறவர் தங்கள்பெண் கொடிதனை யொருதிரு ...... வுளநாடி 

அருகு சென்றடைந் தவள்சிறு பதயுக 
சதத ளம்பணிந் ததிவித கலவியு 
ளறம ருண்டுநெஞ் சவளுடன் மகிழ்வுட ...... னணைவோனே 

அமரர் சங்கமுங் குடிபுக நொடியினில் 
நிருதர் சங்கமும் பொடிபட அமர்செய்து 
அருணை வந்துதென் திசைதனி லுறைதரு ...... பெருமாளே. 
பாடல் 411
ராகம் - மோஹனம்; தாளம் - அங்கதாளம் (16) 
தகதகிடதகிட-4, தகதகிடதகிட-4, தகதகிட-2 1/2 
தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2 

தானான தான தானான தான 
தானான தான ...... தந்ததான 


காணாத தூர நீணாத வாரி 
காதார வாரம ...... தன்பினாலே 

காலாளும் வேளும் ஆலால நாதர் 
காலால் நிலாவுமு ...... னிந்துபூமேல் 

நாணான தோகை நூலாடை சோர 
நாடோ ர்க ளேசஅ ...... ழிந்துதானே 

நானாப வாத மேலாக ஆக 
நாடோ றும் வாடிம ...... யங்கலாமோ 

சோணாச லேச பூணார நீடு 
தோளாறு மாறும்வி ...... ளங்குநாதா 

தோலாத வீர வேலால டாத 
சூராளன் மாளவெ ...... குண்டகோவே 

சேணாடர் லோகம் வாழ்மாதி யானை 
தீராத காதல்சி ...... றந்தமார்பா 

தேவாதி கூடு மூவாதி மூவர் 
தேவாதி தேவர்கள் ...... தம்பிரானே. 
பாடல் 412 
தானா தத்தன தானா தத்தன 
தந்தன தந்தன தான தந்தன 
தானா தத்தன தானா தத்தன 
தந்தன தந்தன தான தந்தன 
தானா தத்தன தானா தத்தன 
தந்தன தந்தன தான தந்தன ...... தந்ததான 


காரா டக்குழ லாலா லக்கணை 
கண்கள் சுழன்றிட வேமு கங்களி 
னாலா பச்சிலை யாலே மெற்புசி 
மஞ்சள் கலந்தணி வாளி கொந்தள 
காதா டக்கலன் மேலா டக்குடி 
யின்ப ரசங்குட மார்ப ளிங்கொளி ...... கொங்கைமாதர் 

காசா சைச்செய லாலே சொக்கிடு 
விஞ்சையர் கொஞ்சிடு வாரி ளங்குயில் 
போலே நற்றெரு வூடா டித்துயல் 
தொங்கல் நெகிழ்ந்திடை யேது வண்டிட 
கால்தா விச்சதி யோடே சித்திர 
மென்ப நடம்புரி வாரு டன்செயல் ...... மிஞ்சலாகிச் 

சீரா டிச்சில நாள்போய் மெய்த்திரை 
வந்து கலந்துயி ரோட வங்கமொ 
டூடா டிப்பல நோயோ டுத்தடி 
கொண்டு குரங்கென வேந டந்துசொல் 
சீயோ டிக்கிடை பாயோ டுக்கிய 
டங்கி யழிந்துயி ரோடு ளைஞ்சொளி ...... யுங்கண்மாறிச் 

சேரா மற்பொறி கேளா மற்செவி 
துன்பமொ டின்பமு மேம றந்துபின் 
ஊரார் சுற்றமு மாதோர் மக்களு 
மண்டியு மண்டையு டேகு விந்திது 
சீசீ சிச்சிசி போகா நற்சனி 
யன்கட வென்றிட வேகி டந்துடல் ...... மங்குவேனோ 

மாரோன் முப்புர நிறா யுற்றிட 
அங்கி யுமிழ்ந்திடு வோரி பம்புலி 
தோல்சீ யத்தொடெ யேகா சர்ச்சடை 
கங்கை யிளம்பிறை யார ணிந்தவர் 
மாடே றிக்கட லாலா லத்தையு 
முண்டவ ரெந்தைசி வாநு பங்குறை ...... யென்றன்மாதா 

மாலோ னுக்கிளை யாள்மா பத்தினி 
யம்பிகை சங்கரி மோக சுந்தரி 
வேதா மக்கலை ரூபாள் முக்கணி 
ரம்பிய கொங்கையி னாள்ப யந்தருள் 
மாஞா னக்கும ராதோ கைப்பரி 
யின்பத வண்குரு வேயெ னஞ்சுரர் ...... தொண்டுபாடச் 

சூரார் மக்கிட மாமே ருக்கிட 
அங்கட லெண்கிரி யோடி பங்கொடு 
தீபே ழற்றிட பாதா ளத்துறை 
நஞ்சர வின்பண மாயி ரங்கெட 
சூழ்வா ளக்கிரி தூளா கிப்பொடி 
விண்கணி றைந்திட வேந டம்புரி ...... கின்றவேலா 

சோர்வே தத்தலை மேலா டிச்சுக 
பங்கய செங்கர மோட கம்பெற 
வாகா னக்குற மாதோ டற்புத 
மங்குல ணங்குட னேம கிழ்ந்துநல் 
தூணோ டிச்சுட ராகா சத்தைய 
ணைந்துவி ளங்கரு ணாச லந்திகழ் ...... தம்பிரானே. 
பாடல் 413 
தானதன தந்ததன தானதன தந்ததன 
தானதன தந்ததன ...... தந்த தனதான 


காருமரு வும்பெருகு சோலைமரு வுங்கொடிய 
காகளம டங்கவுமு ...... ழங்கு மதனாலே 

காலடர வம்பமளி மேலடர வந்துபொரு 
காமன்விடு விஞ்சுகணை ...... அஞ்சு மலராலே 

ஊருமுல கும்பழைய பேருகம்வி ளைந்ததென 
ஓரிரவு வந்தெனது ...... சிந்தை யழியாதே 

ஊடியிரு கொங்கைமிசை கூடிவரி வண்டினமு 
லாவியக டம்பமலர் ...... தந்த ருளுவாயே 

ஆருமர வும்பிறையு நீருமணி யுஞ்சடைய 
ராதிபர வும்படிநி ...... னைந்த குருநாதா 

ஆறுமுக முங்குரவு மேறுமயி லுங்குறவி 
யாளுமுர முந்திருவும் ...... அன்பு முடையோனே 

மேருமலை யும்பெரிய சூருமலை யுங்கரிய 
வேலையலை யும்பகையும் ...... அஞ்ச விடும்வேலா 

மேதினியி றைஞ்சுமரு ணாபுரிவி ளங்குதிரு 
வீதியிலெ ழுந்தருளி ...... நின்ற பெருமாளே. 
பாடல் 414
ராகம் - திலங் ; தாளம் - அங்கதாளம் (8) 

தகதிமி-2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமிதக-3 

தான தனான தத்த ...... தனதான 


கீத விநோத மெச்சு ...... குரலாலே 
கீறு மையார் முடித்த ...... குழலாலே 

நீதி யிலாத ழித்து ...... முழலாதே 
நீமயி லேறி யுற்று ...... வரவேணும் 

சூதமர் சூர ருட்க ...... பொருசூரா 
சோண கிரீயி லுற்ற ...... குமரேசா 

ஆதியர் காதொ ருச்சொ ...... லருள்வோனே 
ஆனை முகார்க னிட்ட ...... பெருமாளே. 
பாடல் 415
தனதனன தனதனன தானத் தாத்தன 
தனதனன தனதனன தானத் தாத்தன 
தனதனன தனதனன தானத் தாத்தன ...... தனதான 


குரவநறு மளககுழல் கோதிக் காட்டியெ 
குலவுமிரு கயல்கள்விழி மோதித் தாக்கியெ 
குமுதமல ரொளிபவள வாயைக் காட்டியெ ...... குழையாத 

குணமுறுக இனிதுபயில் கூறிக் காட்டியெ 
குலையஇரு கலைநெகிழ வீசிக் காட்டியெ 
குடவியிடு மரிவையர்க ளாசைப் பாட்டிலெ ...... கொடியேன்யான் 

பொருளிளமை கலைமனமு மேகப் போக்கிய 
புலையனிவ னெனவுலக மேசப் போக்கென 
பொறிவழியி லறிவழிய பூதச் சேட்டைகள் ...... பெருகாதே 

புதுமலர்கள் மருவுமிரு பாதத் தாற்றியெ 
பொதுவகையி லருணைநிலை நீள்கர்த்தாவென 
புகழடிமை தனையுனது பார்வைக் காத்திட ...... நினையாதோ 

அரவமுட னறுகுமதி யார்மத் தாக்கமு 
மணியுமொரு சடைமவுலி நாதர்க் கேற்கவெ 
அறிவரிய வொருபொருளை போதத் தேற்றிய ...... அறிவோனே 

அழகுசெறி குழலியர்கள் வானத் தாட்டியர் 
தருமமது சரவணையில் வாவித் தேக்கியெ 
அறுசிறுவ ரொருவுடல மாகித் தோற்றிய ...... இளையோனே 

சுரருலவ அசுரர்கள் மாளத் தூட்பட 
துயவுமுட லயிலைவிடு மாவுக் ராக்ரம 
சுவறியெழு கடலுமுறை யாகக் கூப்பிட ...... முனிவோனே 

துடிமுழவு மறவரிட சேவற் காட்டினில் 
துணைமலரி னணுகிதினை காவற் காத்தனை 
சுரியகுழல் குறமகளை வேளைக் காத்தணை ...... பெருமாளே. 
பாடல் 416 
தனதன தானான தானன தனதன தானான தானன 
தனதன தானான தானன ...... தனதான 


குழவியு மாய்மோக மோகித குமரனு மாய்வீடு காதலி 
குலவனு மாய்நாடு காடொடு ...... தடுமாறிக் 

குனிகொடு கூனீடு மாகிடு கிழவனு மாயாவி போய்விட 
விறகுட னேதூளி யாவது ...... மறியாதாய்ப் 

பழயச டாதார மெனிகழ் கழியுடல் காணாநி ராதர 
பரிவிலி வானாலை நாடொறு ...... மடைமாறிப் 

பலபல வாம்யோக சாதக வுடல்கொடு மாயாத போதக 
பதியழி யாவீடு போயினி ...... யடைவேனோ 

எழுகடல் தநமுள மேருவு மிடிபட வேதாவும் வேதமு 
மிரவியும் வாய்பாறி யோடிட ...... முதுசேடன் 

இருளறு பாதாள லோகமு மிமையமு நீறாக வாள்கிரி 
யிருபிள வாய்வீழ மாதிர ...... மலைசாய 

அழகிய மாபாக சாதன னமரரு மூர்பூத மாறுசெய் 
அவுணர்த மாசேனை தூளெழ ...... விளையாடி 

அமரினை மேவாத சூரரை அமர்செயும் வேலாயு தாவுயர் 
அருணையில் வாழ்வாக மேவிய ...... பெருமாளே. 
பாடல் 417 
தானதன தானதத்த தானதன தானதத்த 
தானதன தானதத்த ...... தனதான 


கேதகைய பூமுடித்த மாதர்தம யாலிலுற்று 
கேவலம தானஅற்ப ...... நினைவாலே 

கேள்வியதி லாதிருக்கு மூழ்வினையி னால்மிகுத்த 
கேடுறுக வேநினைக்கும் ...... வினையாலே 

வேதனையி லேமிகுத்த பாதகனு மாயவத்தில் 
மேதினியெ லாமுழற்று ...... மடியேனை 

வீடுதவி யாளவெற்றி வேல்கரம தேயெடுத்து 
வீறுமயில் மீதிலுற்று ...... வருவாயே 

நீதிநெறி யேயழித்த தாருகனை வேரறுத்து 
நீடுபுகழ் தேவரிற்கள் ...... குடியேற 

நீடருளி னால்விடுத்த பாலகும ராசெழித்த 
நீலநிற மால்தனக்கு ...... மருகோனே 

சோதியன லாவுதித்த சோணகிரி மாமலைக்குள் 
சோபைவட கோபுரத்தி ...... லுறைவோனே 

சோனைமழை போலெதிர்த்த தானவர்கள் மாளவெற்றி 
தோளின்மிசை வாளெடுத்த ...... பெருமாளே. 
பாடல் 418 
தானான தனதான ...... தனதான 


கோடான மடவார்கள் ...... முலைமீதே 

கூர்வேலை யிணையான ...... விழியூடே 

ஊடாடி யவரோடு ...... முழலாதே 

ஊராக திகழ்பாத ...... மருள்வாயே 

நீடாழி சுழல்தேசம் ...... வலமாக 

நீடோ டி மயில்மீது ...... வருவோனே 

சூடான தொருசோதி ...... மலைமேவு 

சோணாடு புகழ்தேவர் ...... பெருமாளே. 
பாடல் 419 
தானதன தத்த தத்த தானதன தத்த தத்த 
தானதன தத்த தத்த ...... தனதான 


கோடுசெறி மத்த கத்தை வீசுபலை தத்த வொத்தி 
கூறுசெய்த ழித்து ரித்து ...... நடைமாணார் 

கோளுலவு முப்பு ரத்தை வாளெரிகொ ளுத்தி விட்ட 
கோபநுத லத்த ரத்தர் ...... குருநாதா 

நீடுகன கத்த லத்தை யூடுருவி மற்ற வெற்பு 
நீறெழமி தித்த நித்த ...... மனதாலே 

நீபமலர் பத்தி மெத்த வோதுமவர் சித்த மெத்த 
நீலமயில் தத்த விட்டு ...... வரவேணும் 

ஆடலணி பொற்சி லைக்கை வேடுவர்பு னக்கு றத்தி 
ஆரமது மெத்து சித்ர ...... முலைமீதே 

ஆதரவு பற்றி மெத்த மாமணிநி றைத்த வெற்றி 
ஆறிருதி ருப்பு யத்தில் ...... அணைவீரா 

தேடிமையொர் புத்தி மெத்தி நீடுறநி னைத்த பத்தி 
சீருறவு ளத்தெ ரித்த ...... சிவவேளே 

தேறருணை யிற்ற ரித்த சேண்முகடி டத்த டர்த்த 
தேவர்சிறை வெட்டி விட்ட ...... பெருமாளே. 
பாடல் 420
தனதன தத்தத் தனந்த தந்தன 
தனதன தத்தத் தனந்த தந்தன 
தனதன தத்தத் தனந்த தந்தன ...... தனதான 


சிலைநுதல் வைத்துச் சிறந்த குங்கும 
தலதமு மிட்டுக் குளிர்ந்த பங்கய 
திருமுக வட்டத் தமர்ந்த மென்குமிழ் ...... தனிலேறிச் 

செழுமணி ரத்நத் திலங்கு பைங்குழை 
தனைமுனி வுற்றுச் சிவந்து நஞ்சணி 
செயலினை யொத்துத் தயங்கு வஞ்சக ...... விழிசீறிப் 

புலவிமி குத்திட் டிருந்த வஞ்சியர் 
பதமல ருக்குட் பணிந்த ணிந்தணி 
புரிவளை கைக்குட் கலின்க லென்றிட ...... அநுராகம் 

புகழ்நல மெத்தப் புரிந்து கொங்கையி 
லுருகிய ணைத்துப் பெரும்ப்ரி யங்கொடு 
புணரினும் நிற்பொற் பதங்கள் நெஞ்சினுள் ...... மறவேனோ 

கலைமதி வைத்துப் புனைந்து செஞ்சடை 
மலைமகள் பக்கத் தமர்ந்தி ருந்திட 
கணகண கட்கட் கணின்க ணென்றிட ...... நடமாடுங் 

கருணைய னுற்றத் த்ரியம்ப கன்தரு 
முருகபு னத்திற் றிரிந்த மென்கொடி 
கனதன வெற்பிற் கலந்த ணைந்தருள் ...... புயவீரா 

அலைகடல் புக்குப் பொரும்பெ ரும்படை 
யவுணரை வெட்டிக் களைந்து வென்றுயர் 
அமரர்தொ ழப்பொற் சதங்கை கொஞ்சிட ...... வருவோனே 

அடியவ ரச்சத் தழுங்கி டுந்துயர் 
தனையொழி வித்துப் ப்ரியங்கள் தந்திடும் 
அருணகி ரிக்குட் சிறந்த மர்ந்தருள் ...... பெருமாளே. 
பாடல் 421 
ராகம் - ஆபோகி; தாளம் - ஆதி 

தனனா தனனா தனனா தனனா 
தனனா தனனா ...... தனதான 


சிவமா துடனே அநுபோ கமதாய் 
சிவஞா னமுதே ...... பசியாறித் 

திகழ்வோ டிருவோ ரொ ரு பமதாய் 
திகைலோ கமெலா ...... மநுபோகி 

இவனே யெனமா லயனோ டமரோ 
ரிளையோ னெனவே ...... மறையோத 

இறையோ னிடமாய் விளையா டுகவே 
யியல்வே லுடன்மா ...... அருள்வாயே 

தவலோ கமெலா முறையோ வெனவே 
தழல்வேல் கொடுபோ ...... யசுராரைத் 

தலைதூள் படஏழ் கடல்தூள் படமா 
தவம்வாழ் வுறவே ...... விடுவோனே 

கவர்பூ வடிவாள் குறமா துடன்மால் 
கடனா மெனவே ...... அணைமார்பா 

கடையேன் மிடிதூள் படநோய் விடவே 
கனல்மால் வரைசேர் ...... பெருமாளே. 
பாடல் 422 
தனதனன தனதனன தந்தனந் தந்தனம் 
தனதனன தனதனன தந்தனந் தந்தனம் 
தனதனன தனதனன தந்தனந் தந்தனம் ...... தந்ததான 


சினமுடுவல் நரிகழுகு டன்பருந் தின்கணங் 
கொடிகெருடன் அலகைபுழு வுண்டுகண் டின்புறுஞ் 
செடமளறு மலசலமொ டென்புதுன் றுங்கலந் ...... துன்பமேவு 

செனனவலை மரணவலை ரண்டுமுன் பின்தொடர்ந் 
தணுகுமுட லநெகவடி விங்கடைந் தம்பரஞ் 
சிறுமணலை யளவிடினு மங்குயர்ந் திங்குலந் ...... தொன்றுநாயேன் 

கனகபுவி நிழல்மருவி யன்புறுந் தொண்டர்பங் 
குறுகஇனி யருள்கிருபை வந்துதந் தென்றுமுன் 
கடனெனது உடலுயிரு முன்பரந் தொண்டுகொண் ...... டன்பரோடே 

கலவிநல மருவிவடி வஞ்சிறந் துன்பதம் 
புணர்கரண மயில்புறமொ டின்புகொண் டண்டருங் 
கனகமலர் பொழியஉன தன்புகந் தின்றுமுன் ...... சிந்தியாதோ 

தனனதன தனனதன தந்தனந் தந்தனந் 
தகுகுகுகு குகுகுகுகு டங்குடங் குந்தடந் 
தவில்முரசு பறைதிமிலை டிங்குடிங் குந்தடர்ந் ...... தண்டர்பேரி 

தடுடுடுடு டுடுடுடுடு டுண்டுடுண் டுண்டுடுண் 
டிமிடிமிட டகுர்திகுகு சங்குவெண் கொம்புதிண் 
கடையுகமொ டொலியகட லஞ்சவஞ் சன்குலஞ் ...... சிந்திமாளச் 

சினமுடுகி அயிலருளி யும்பரந் தம்பரந் 
திகையுரகர் புவியுளது மந்தரம் பங்கயன் 
செகமுழுது மகிழஅரி அம்புயன் தொண்டுகொண் ...... டஞ்சல்பாடத் 

திருமுறுவ லருளியென தெந்தையின் பங்குறுங் 
கவுரிமன முருகவொரு கங்கைகண் டன்புறுந் 
திருவருண கிரிமருவு சங்கரன் கும்பிடுந் ...... தம்பிரானே. 
பாடல் 423 
தத்த தத்ததன தத்த தத்ததன 
தத்த தத்ததன தத்த தத்ததன 
தத்த தத்ததன தத்த தத்ததன ...... தந்ததான 


சுக்கி லச்சுரொணி தத்தி லுற்றநளி 
னத்தி லப்புவென ரத்த முற்றிசுக 
சுக்கி லக்குளிகை யொத்து கெர்ப்பகுகை ...... வந்துகோலத் 

தொப்பை யிட்டவயி றிற்பெ ருத்துமிக 
வட்ட மிட்டுடல வெப்ப முற்றுமதி 
சொற்ற பத்தின் மறியக்ஷ ரத்தினுடை ...... விஞ்சையாலே 

கக்க நற்புவியி லுற்ற ரற்றிமுலை 
யைக்கொ டுக்கவமுர் தைப்பு சித்துவளர் 
கைக்க சத்தியொடு ழைத்து தத்துநடை ...... அந்தமேவிக் 

கற்று வெற்றறிவு பெற்று தொக்கைமயி 
லொத்த மக்கள்மய லிற்கு ளித்துநெறி 
கட்டி யிப்படிபி றப்பி லுற்றுடல ...... மங்குவேனோ 

தெற்க ரக்கர்பவி ஷைக்கு லைத்துவிட 
ணற்கு நத்தரச ளித்து முத்திகொடு 
சித்தி ரத்திருவு ரத்த சக்கிரிதன் ...... மருகோனே 

செக்க ரத்தின்மலை முப்பு ரத்திலெரி 
யிட்ட சத்திசிவ னுற்று நத்தமிகு 
சித்த னைத்தையும்வி ழித்த சத்தியுமை ...... தந்தபாலா 

தர்க்க மிட்டசுர ரைக்கெ லித்துமலை 
யுக்கெ ழுக்கடல்கொ ளுத்தி அட்ட திசை 
தட்ட முட்டையடை யக்கொ டிப்புகையின் ...... மண்டும்வேலா 

தத்தை வித்ருமநி றத்தி முத்தணிகு 
றத்தி கற்பகவ னத்தி சித்தமவை 
தக்கு நத்தஅரு ணைக்கி ரிக்குள்மகிழ் ...... தம்பிரானே. 
பாடல் 424 
தந்தத் தந்தத் தனதன தானன 
தந்தத் தந்தத் தனதன தானன 
தந்தத் தந்தத் தனதன தானன ...... தனதான 


செஞ்சொற் பண்பெற் றிடுகுட மாமுலை 
கும்பத் தந்திக் குவடென வாலிய 
தெந்தப் பந்தித் தரளம தாமென ...... விடராவி 

சிந்திக் கந்தித் திடுகளை யாமுன 
தங்கத் தம்பொற் பெதுவென வோதுவ 
திண்டுப் புந்தித் திடுகனி தானுமு ...... னிதழாமோ 

மஞ்சொக் குங்கொத் தளகமெ னாமிடை 
கஞ்சத் தின்புற் றிடுதிரு வேயிள 
வஞ்சிக் கொம்பொப் பெனுமயி லேயென ...... முறையேய 

வந்தித் திந்தப் படிமட வாரொடு 
கொஞ்சிக் கெஞ்சித் தினமவர் தாடொழு 
மந்தப் புந்திக் கசடனெ நாளுன ...... தடிசேர்வேன் 

நஞ்சைக் கண்டத் திடுபவ ராரொடு 
திங்கட் பிஞ்சக் கரவணி வேணியர் 
நம்பர்ச் செம்பொற் பெயரசு ரேசனை ...... யுகிராலே 

நந்தக் கொந்திச் சொரிகுடல் சோர்வர 
நந்திக் கம்பத் தெழுநர கேசரி 
நஞ்சக் குண்டைக் கொருவழி யேதென ...... மிகநாடி 

வெஞ்சச் சிம்புட் சொருபம தானவர் 
பங்கிற் பெண்கற் புடையபெ ணாயகி 
விந்தைச் செங்கைப் பொலிசுத வேடுவர் ...... புனமீதே 

வெண்டித் தங்கித் திரிகிழ வாவதி 
துங்கத் துங்கக் கிரியரு ணாபுரி 
வெங்கட் சிங்கத் தடிமயி லேறிய ...... பெருமாளே. 
பாடல் 425 
ராகம் - தேஷ்; தாளம் - ஆதி (எடுப்பு - 1/2 இடம்) 

தனதன தனனாத் தனதன தனனத் 
தனதன தனனாத் தனதன தனனத் 
தனதன தனனாத் தனதன தனனத் ...... தனதான 


செயசெய அருணாத் திரிசிவ யநமச் 
செயசெய அருணாத் திரிமசி வயநச் 
செயசெய அருணாத் திரிநம சிவயத் ...... தி முலா 

செயசெய அருணாத் திரியந மசிவச் 
செயசெய அருணாத் திரிவய நமசிச் 
செயசெய அருணாத் திரிசிவ யநமஸ்த் ...... தெனமாறி 

செயசெய அருணாத் திரிதனின் விழிவைத் 
தரகர சரணாத் திரியென உருகிச் 
செயசெய குருபாக் கியமென மருவிச் ...... சுடர்தாளைச் 

சிவசிவ சரணாத் திரிசெய செயனச் 
சரண்மிசை தொழுதேத் தியசுவை பெருகத் 
திருவடி சிவவாக் கியகட லமுதைக் ...... குடியேனோ 

செயசெய சரணாத் திரியென முநிவர்க் 
கணமிது வினைகாத் திடுமென மருவச் 
செடமுடி மலைபோற் றவுணர்க ளவியச் ...... சுடும்வேலா 

திருமுடி யடிபார்த் திடுமென இருவர்க் 
கடிதலை தெரியாப் படிநிண அருணச் 
சிவசுடர் சிகிநாட் டவனிரு செவியிற் ...... புகல்வோனே 

செயசெய சரணாத் திரியெனு மடியெற் 
கிருவினை பொடியாக் கியசுடர் வெளியிற் 
றிருநட மிதுபார்த் திடுமென மகிழ்பொற் ...... குருநாதா 

திகழ்கிளி மொழிபாற் சுவையித ழமுதக் 
குறமகள் முலைமேற் புதுமண மருவிச் 
சிவகிரி அருணாத் திரிதல மகிழ்பொற் ...... பெருமாளே. 
பாடல் 426 
ராகம் - ஆனந்த பைரவி ; தாளம் - அங்கதாளம் (9) 
தகதிமி-2, தகதகிட-2 1/2 
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2 

தனன தனந்தனந் தான தத்த தந்த 
தனன தனந்தனந் தான தத்த தந்த 
தனன தனந்தனந் தான தத்த தந்த 
..... தனதனத் தனதான 


தமர குரங்களுங் காரி ருட்பி ழம்பு 
மெழுகிய அங்கமும் பார்வை யிற்கொ ளுந்து 
தழலுமிழ் கண்களுங் காள மொத்த கொம்பு 
...... முளகதக் கடமாமேல் 

தனிவரு மந்தகன் பாசம் விட்டெ றிந்து 
அடவரு மென்றுசிந் தாகு லத்தி ருந்து 
தமரழ மைந்தருஞ் சோக முற்றி ரங்க 
.... மரணபக் குவமாநாள் 

கமல முகங்களுங் கோம ளத்தி லங்கு 
நகையு நெடுங்கணுங் காதி னிற்று லங்கு 
கனக குதம்பையுந் தோடும் வஜ்ர அங்க 
..... தமுமடற் சுடர்வேலுங் 

கடிதுல கெங்கணுந் தாடி யிட்டு வந்த 
மயிலுமி லங்கலங் கார பொற்ச தங்கை 
கழலொலி தண்டையங் காலு மொக்க வந்து 
...... வரமெனக் கருள்கூர்வாய் 

இமகிரி வந்தபொன் பாவை பச்சை வஞ்சி 
அகில தலம்பெறும் பூவை சத்தி யம்பை 
யிளமுலை யின்செழும் பால்கு டுத்தி லங்கு 
...... மியல்நிமிர்த் திடுவோனே 

இறைவ ரிறைஞ்சநின் றாக மப்ர சங்க 
முரைசெய் திடும்ப்ரசண் டாவி சித்து நின்ற 
ரணமுக துங்கவெஞ் சூரு டற்பி ளந்த 
...... அயிலுடைக் கதிர்வேலா 

அமண ரடங்கலுங் கூட லிற்றி ரண்டு 
கழுவி லுதைந்துதைந் தேற விட்டு நின்ற 
அபிநவ துங்ககங் காந திக்கு மைந்த 
..... அடியவர்க் கெளியோனே 

அமரர் வணங்குகந் தாகு றத்தி கொங்கை 
தனில்முழு குங்கடம் பாமி குத்த செஞ்சொ 
லருணை நெடுந்தடங் கோபு ரத்த மர்ந்த 
..... அறுமுகப் பெருமாளே. 
பாடல் 427 
தனனாதன தனனாதன தாந்தன தாந்தனதந் 
தனனாதன தனனாதன தாந்தன தாந்தனதந் 
தனனாதன தனனாதன தாந்தன தாந்தனதந் ...... தனதான 


தமிழோதிய குயிலோமயி லாண்டலை யாம்புறவங் 
கிளிகாடையி னணிலேரளி யாங்குரல் வாய்ந்ததிசெந் 
தகுமாமிட றொலியாரித ழாஞ்சுளை தேன்கனியின் ...... சுவைசேருந் 

தனபாரமு மலையாமென வோங்கிட மாம்பொறிசிந் 
திடவேல்விழி நுதலோசிலை வான்பிறை மாந்துளிரின் 
சரிரார்குழ லிருளாநகை யோங்கிய வான்கதிரின் ...... சுடர்பாயக் 

குமிழ்நாசியின் முகமோமதி யாங்குளிர் சேங்கமலஞ் 
சரிதோடிணை செவியாடுச லாங்கள பூங்கமுகங் 
கொடிநூலிடை யுடையாரன மாம்ப்ரியர் மாண்புரிமின் ...... கொடிமாதர் 

குணமோடம ளியினாடினு மோங்கிய பூங்கமலஞ் 
சரணுபுர குரலோசையு மேந்திடு மாண்டலையின் 
கொடியோடெழு தரிதாம்வடி வோங்கிய பாங்கையுமன் ...... தகையேனே 

திமிதோதிமி திமிதோதிமி தாங்கண தீங்கணதொந் 
தகுதோதகு தகுதோதகு டாங்குட தீங்கடதொந் 
திகுடோ டிமி டிமிடோ டிமி டாங்குட டிந்தகமென் ...... றியல்பேரி 

திநச்முடுக கடலேழ்பொடி யாம்படி யோங்கியவெங் 
கரிதேர்பரி யசுரார்கள மாண்டிட நீண்டரவின் 
சிரமீள்பட குவடோ துகள் வான்பெற வாங்கியவண் ...... கதிர்வேலா 

கமழ்மாவிதழ் சடையாரடி யேன்துயர் தீர்ந்திடவெண் 
தழல்மாபொடி யருள்வோரடல் மான்துடி தாங்கியவண் 
கரர்மாடரு ளுமையாளெமை யீன்றவ ளீன்றருள்மென் ...... குரவோனே 

கடையேனிரு வினைநோய்மல மாண்டிட தீண்டியவொண் 
சுகமோகினி வளிநாயகி பாங்கனெ னாம்பகர்மின் 
கலைநூலுடை முருகாவழ லோங்கிய வோங்கலின்வண் ...... பெருமாளே. 
பாடல் 428 
தனன தனத்தத் தனந்த தனன தனத்தத் தனந்த 
தனன தனத்தத் தனந்த ...... தனதான 


தலையை மழித்துச் சிவந்த துணியை யரைக்குப் புனைந்து 
சடையை வளர்த்துப் புரிந்து ...... புலியாடை 

சதிரொடு வப்பப் புனைந்து விரகொடு கற்கப் புகுந்து 
தவமொரு சத்தத் தறிந்து ...... திருநீறு 

கலையை மிகுத்திட் டணிந்து கரண வலைக்குட் புகுந்து 
கதறு நிலைக்கைக் கமர்ந்த ...... எழிலோடே 

கனக மியற்றித் திரிந்து துவளு மெனைச்சற் றறிந்து 
கவலை யொழித்தற் கிரங்கி ...... யருள்வாயே 

அலைகட லிற்கொக் கரிந்து மருவரை யைப்பொட் டெறிந்து 
மமரு லகத்திற் புகுந்து ...... முயரானை 

அருளொடு கைப்பற்றி வந்து மருண கிரிப்புக் கிருந்து 
மறிவு ளபத்தர்க் கிரங்கு ...... மிளையோனே 

மலையை வளைத்துப் பறந்து மருவு புரத்தைச் சிவந்து 
வறிது நகைத்திட் டிருந்த ...... சிவனார்தம் 

மதலை புனத்திற் புகுந்து நரவடி வுற்றுத் திரிந்து 
மறம யிலைச்சுற் றிவந்த ...... பெருமாளே. 
பாடல் 429 
தனத்த தானன தத்தன தத்தன 
தனத்த தானன தத்தன தத்தன 
தனத்த தானன தத்தன தத்தன ...... தனதான 


திருட்டு வாணிப விக்ரம துட்டிகள் 
மதத்த ரூபிகள் துர்ச்சன பொட்டிகள் 
செகத்து நீலிகள் கெட்டப ரத்தைகள் ...... மிகநாணார் 

சிலைக்கு நேர்புரு வப்பெரு நெற்றிக 
ளெடுப்பு மார்பிக ளெச்சிலு தட்டிகள் 
சிரித்து மாநுடர் சித்தமு ருக்கிகள் ...... விழியாலே 

வெருட்டி மேல்விழு பப்பர மட்டைகள் 
மிகுத்த பாவிகள் வட்டமு கத்தினை 
மினுக்கி யோலைகள் பித்தளை யிற்பணி ...... மிகநீறால் 

விளக்கி யேகுழை யிட்டபு ரட்டிகள் 
தமக்கு மால்கொடு நிற்கும ருட்டனை 
விடுத்து நானொரு மித்திரு பொற்கழல் ...... பணிவேனே 

தரித்த தோகண தக்கண செக்கண 
குகுக்கு கூகுகு குக்குகு குக்குகு 
தகுத்த தீதிகு தக்குகு திக்குகு ...... எனதாளந் 

தடக்கை தாளமு மிட்டியல் மத்தள 
மிடக்கை தாளமு மொக்கந டித்தொளி 
தரித்த கூளிகள் தத்திமி தித்தென ...... கணபூதம் 

அருக்க னாரொளி யிற்ப்ரபை யுற்றிடு 
மிரந்த மாமுடி யைக்கொடு கக்கழ 
லடக்கை யாடிநி ணத்தையெ டுத்துண ...... அறவேதான் 

அரக்கர் சேனைகள் பட்டுவி ழச்செறி 
திருக்கை வேல்தனை விட்டரு ளிப்பொரும் 
அருட்கு காவரு ணைப்பதி யுற்றருள் ...... பெருமாளே. 
பாடல் 430 
தானன தான தத்த தானன தான தத்த 
தானன தான தத்த ...... தனதான 


தேதென வாச முற்ற கீதவி நோத மெச்சு 
தேனளி சூழ மொய்த்த ...... மலராலே 

சீறும ராவெ யிற்றி லூறிய காளம் விட்ட 
சீதநி லாவெ றிக்கு ...... மனலாலே 

போதனை நீதி யற்ற வேதனை வாளி தொட்ட 
போர்மத ராஜ னுக்கு ...... மழியாதே 

போகமெ லாநி றைத்து மோகவி டாய்மி குத்த 
பூவையை நீய ணைக்க ...... வரவேணும் 

மாதினை வேணி வைத்த நாதனு மோது பச்சை 
மாயனு மாத ரிக்கு ...... மயில்வீரா 

வானவர் சேனை முற்றும் வாழம ராப திக்குள் 
வாரண மான தத்தை ...... மணவாளா 

மேதினி யோர்த ழைக்க வேயரு ணாச லத்து 
வீதியின் மேவி நிற்கு ...... முருகோனே 

மேருவை நீறெ ழுப்பி நான்முக னார்ப தத்தில் 
வேலடை யாள மிட்ட ...... பெருமாளே. 
பாடல் 431 
தான தத்த தந்த தான தத்த தந்த 
தான தத்த தந்த ...... தனதான 


தோத கப்பெ ரும்ப யோத ரத்தி யங்கு 
தோகை யர்க்கு நெஞ்ச ...... மழியாதே 

சூலை வெப்ப டர்ந்த வாத பித்த மென்று 
சூழ்பி ணிக்க ணங்க ...... ளணுகாதே 

பாத கச்ச மன்தன் மேதி யிற்பு குந்து 
பாசம் விட்டெ றிந்து ...... பிடியாதே 

பாவ லற்கி ரங்கி நாவ லர்க்கி சைந்த 
பாடல் மிக்க செஞ்சொல் ...... தரவேணும் 

வேத மிக்க விந்து நாத மெய்க்க டம்ப 
வீர பத்ர கந்த ...... முருகோனே 

மேரு வைப்பி ளந்து சூர னைக்க டிந்து 
வேலை யிற்றொ ளைந்த ...... கதிர்வேலா 

கோதை பொற்கு றிஞ்சி மாது கச்ச ணிந்த 
கோம ளக்கு ரும்பை ...... புணர்வோனே 

கோல முற்றி லங்கு சோண வெற்பு யர்ந்த 
கோபு ரத்த மர்ந்த ...... பெருமாளே. 
பாடல் 432 
தான தனதன தத்தம் ...... தனதான 


பாண மலரது தைக்கும் ...... படியாலே 

பாவி யிளமதி கக்குங் ...... கனலாலே 

நாண மழிய வுரைக்குங் ...... குயிலாலே 

நானு மயலி லிளைக்குந் ...... தரமோதான் 

சேணி லரிவை யணைக்குந் ...... திருமார்பா 

தேவர் மகுட மணக்குங் ...... கழல்வீரா 

காண அருணையில் நிற்குங் ...... கதிர்வேலா 

காலன் முதுகை விரிக்கும் ...... பெருமாளே. 
பாடல் 433 

தானா தானா தானா தானா 
தானா தானத் ...... தனதான 


பாலாய் நூலாய் தேனாய் நீளாய் 
பாகாய் வாய்சொற் ...... கொடியார்தாம் 

பாடா வாடா வேடா வாலே 
பாடா யீடற் ...... றிடைபீறுந் 

தோலா லேகா லாலே யூனா 
லேசூழ் பாசக் ...... குடில்மாசு 

தோயா மாயா வோயா நோயால் 
சோர்வாய் மாளக் ...... கடவேனோ 

ஞாலா மேலா வேதா போதா 
நாதா சோதிக் ...... கிரியோனே 

ஞானா சாரா வானாள் கோனே 
நானா வேதப் ...... பொருளோனே 

வேலா பாலா சீலா காரா 
வேளே வேடக் ...... கொடிகோவே 

வீரா தாரா ஆறா தாரா 
வீரா வீரப் ...... பெருமாளே. 
பாடல் 434
தனதன தனந்த தான தனதன தனந்த தான 
தனதன தனந்த தான ...... தனதான 


பூணர்முலை மடந்தை மாதர் வலையினி லுழன்ற நேக 
பொறியுட லிறந்து போன ...... தளவேதுன் 

புகழ்மறை யறிந்து கூறு மினியென தகம்பொ னாவி 
பொருளென நினைந்து நாயெ ...... னிடர்தீர 

மணமுணர் மடந்தை மாரொ டொளிர்திரு முகங்க ளாறு 
மணிகிரி யிடங்கொள் பாநு ...... வெயிலாசை 

வரிபர வநந்த கோடி முநிவர்கள் புகழ்ந்து போத 
மயில்மிசை மகிழ்ந்து நாடி ...... வரவேணும் 

பணைமுலை யரம்பை மார்கள் குயில்கிளி யினங்கள் போல 
பரிவுகொ டுகந்து வேத ...... மதுகூறப் 

பறைமுர சநந்த பேரி முறைமுறை ததும்ப நீசர் 
படைகட லிறந்து போக ...... விடும்வேலா 

அணிசுக நரம்பு வீணை குயில்புற வினங்கள் போல 
அமளியில் களங்க ளோசை ...... வளர்மாது 

அரிமகள் மணங்கொ டேகி யெனதிட ரெரிந்து போக 
அருணையின் விலங்கல் மேவு ...... பெருமாளே. 
பாடல் 435 
ராகம் - ஸிந்து பைரவி ; தாளம் - அங்கதாளம் (5 1/2) 
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2 

தனன தான தானான தனன தான தானான 
தனன தான தானான ...... தனதான 


புலைய னான மாவீனன் வினையி லேகு மாபாதன் 
பொறையி லாத கோபீகன் ...... முமுடன் 

புகழி லாத தாமீகன் அறிவி லாத காபோதி 
பொறிக ளோடி போய்வீழு ...... மதிசூதன் 

நிலையி லாத கோமாளி கொடையி லாத ஊதாரி 
நெறியி லாத வேமாளி ...... குலபாதன் 

நினது தாளை நாடோ று மனதி லாசை வீடாமல் 
நினையு மாறு நீமேவி ...... யருள்வாயே 

சிலையில் வாளி தானேவி யெதிரி ராவ ணார்தோள்கள் 
சிதையு மாறு போராடி ...... யொருசீதை 

சிறையி லாம லேகூடி புவனி மீதி லேவீறு 
திறமி யான மாமாயன் ...... மருகோனே 

அலைய மேரு மாசூரர் பொடிய தாக வேலேவி 
அமர தாடி யேதோகை ...... மயிலேறி 

அதிக தேவ ரேசூழ உலக மீதி லேகூறும் 
அருணை மீதி லேமேவு ...... பெருமாளே. 
பாடல் 436
தானனத் தத்ததனத் தானனத் தத்ததனத் 
தானனத் தத்ததனத் ...... தத்த தனதான 


போககற் பக்கடவுட் பூருகத் தைப்புயலைப் 
பாரியைப் பொற்குவையுச் ...... சிப்பொ ழுதிலீயும் 

போதுடைப் புத்திரரைப் போலவொப் பிட்டுலகத் 
தோரைமெச் சிப்பிரியப் ...... பட்டு மிடிபோகத் 

த்யாகமெத் தத்தருதற் காசுநற் சித்திரவித் 
தாரமுட் பட்டதிருட் ...... டுக்க விகள்பாடித் 

தேடியிட் டப்படுபொற் பாவையர்க் கிட்டவர்கட் 
சேல்வலைப் பட்டடிமைப் ...... பட்டு விடலாமோ 

ஆகமப் பத்தருமற் றாரணச் சுத்தருமுற் 
றாதரிக் கைக்கருணைத் ...... துப்பு மதில்சூழும் 

ஆடகச் சித்ரமணிக் கோபுரத் துத்தரதிக் 
காகவெற் றிக்கலபக் ...... கற்கி யமர்வோனே 

தோகையைப் பெற்றஇடப் பாகரொற் றைப்பகழித் 
தூணிமுட் டச்சுவறத் ...... திக்கி லெழுபாரச் 

சோதிவெற் பெட்டுமுதிர்த் தூளிதப் பட்டமிழச் 
சூரனைப் பட்டுருவத் ...... தொட்ட பெருமாளே. 
பாடல் 437 
தான தனத்தத் தனத்த தத்தன 
தான தனத்தத் தனத்த தத்தன 
தான தனத்தத் தனத்த தத்தன ...... தனதான 


மானை விடத்தைத் தடத்தி னிற்கயல் 
மீனை நிரப்பிக் குனித்து விட்டணை 
வாளி யைவட்டச் சமுத்தி ரத்தினை ...... வடிவேலை 

வாளை வனத்துற் பலத்தி னைச்செல 
மீனை விழிக்கொப் பெனப்பி டித்தவர் 
மாய வலைப்பட் டிலைத்து டக்குழல் ...... மணநாறும் 

ஊன விடத்தைச் சடக்கெ னக்கொழு 
வூறு முபத்தக் கருத்த டத்தினை 
யூது பிணத்தைக் குணத்ர யத்தொடு ...... தடுமாறும் 

ஊசலை நித்தத் த்வமற்ற செத்தையு 
பாதியை யொப்பித் துனிப்ப வத்தற 
வோகை செலுத்திப் ப்ரமிக்கு மிப்ரமை ...... தெளியாதோ 

சானகி கற்புத் தனைச்சு டத்தன 
சோக வனத்திற் சிறைப்ப டுத்திய 
தானை யரக்கற் குலத்த ரத்தனை ...... வருமாளச் 

சாலை மரத்துப் புறத்தொ ளித்தடல் 
வாலி யுரத்திற் சரத்தை விட்டொரு 
தாரை தனைச்சுக் ரிவற்க ளித்தவன் ...... மருகோனே 

சோனை மிகுத்துத் திரட்பு னத்தினி 
லானை மதத்துக் கிடக்கு மற்புத 
சோண கிரிச்சுத் தர்பெற்ற கொற்றவ ...... மணிநீபத் 

தோள்கொடு சக்ரப் பொருப்பி னைப்பொடி 
யாகநெ ருக்கிச் செருக்க ளத்தெதிர் 
சூரனை வெட்டித் துணித்த டக்கிய ...... பெருமாளே. 
பாடல் 438 
தனத்த தத்தன தானா தனதன 
தனத்த தத்தன தானா தனதன 
தனத்த தத்தன தானா தனதன ...... தந்ததான 


முகத்து லக்கிக ளாசா ரவினிகள் 
விலைச்சி றுக்கிகள் நேரா வசடிகள் 
முழுச்ச மர்த்திகள் காமா விரகிகள் ...... முந்துசூது 

மொழிப்ப ரத்தைகள் காசா சையில்முலை 
பலர்க்கும் விற்பவர் நானா வநுபவ 
முயற்று பொட்டிகள் மோகா வலமுறு ...... கின்ற்முடர் 

செகத்தி லெத்திகள் சார்வாய் மயகிகள் 
திருட்டு மட்டைகள் மாயா சொருபிகள் 
சிரித்து ருக்கிகள் ஆகா வெனநகை ...... சிந்தைமாயத் 

திரட்பொ றிச்சிகள் மாபா விகளப 
கடத்த சட்டைகள் மூதே விகளொடு 
திளைத்த லற்றிரு சீர்பா தமுமினி ...... யென்றுசேர்வேன் 

தொகுத்தொ குத்தொகு தோதோ தொகுதொகு 
செகுச்செ குச்செகு சேசே செககண 
தொகுத்தொ குத்தொகு தோதோ தொகுதொகு ...... தொந்ததீதோ 

துடுட்டு டுட்டுடு டூடூ டுடுடுடு 
திகுத்தி குத்திகு தீதோ எனவொரு 
துவக்க நிர்த்தன மாடா வுறைபவர் ...... தொணடர்பேணும் 

அகத்தி யப்பனு மால்வே தனும்அறம் 
வளர்த்த கற்பக மாஞா லியுமகி 
ழவுற்ற நித்தபி ரானே அருணையில் ...... நின்றகோவே 

அமர்க்க ளத்தொரு சூரே சனைவிழ 
முறித்து ழக்கிய வானோர் குடிபுக 
அமர்த்தி விட்டசு வாமீ அடியவர் ...... தம்பிரானே. 
பாடல் 439 
தான தத்ததன தான தத்ததன 
தான தத்ததன தான தத்ததன 
தான தத்ததன தான தத்ததன ...... தனதான 


மேக மொத்தகுழ லார்சி லைப்புருவ 
வாளி யொத்தவிழி யார்மு கக்கமல 
மீது பொட்டிடழ கார்க ளத்திலணி ...... வடமாட 

மேரு வொத்தமுலை யார்ப ளப்பளென 
மார்பு துத்திபுய வார்வ ளைக்கடகம் 
வீறி டத்துவளு நூலொ டொத்தஇடை ...... யுடைமாதர் 

தோகை பக்ஷிநடை யார்ப தத்திலிடு 
நூபு ரக்குரல்கள் பாட கத்துகில்கள் 
சோர நற்றெருவு டேந டித்துமுலை ...... விலைகூறிச் 

சூத கச்சரச மோடெ யெத்திவரு 
வோரை நத்திவிழி யால்ம ருட்டுமயல் 
தூள்ம ருத்திடுயி ரேப றிப்பவர்க ...... ளுறவாமோ 

சேக ணச்செகண தோதி மித்திகுட 
டாடு டுட்டமட டீகு தத்தொகுர்தி 
தீத கத்திமித தோவு டுக்கைமணி ...... முரசோதை 

தேச முட்கவர ஆயி ரச்சிரமு 
மூளி பட்டுமக மேரு வுக்கவுணர் 
தீவு கெட்டுமுறை யோவெ னக்கதற ...... விடும்வேலா 

ஆதி மத்திபல கார ணத்தியெனை 
யீண சத்திஅரி ஆச னத்திசிவ 
னாக முற்றசிவ காமி பத்தினியின் ...... முருகோனே 

ஆர ணற்குமறை தேடி யிட்டதிரு 
மால்ம கட்சிறுமி மோக சித்ரவளி 
ஆசை பற்றிஅரு ணாச லத்தின்மகிழ் ...... பெருமாளே. 
பாடல் 440 
தனதன தந்ததத்த தனதன தந்ததத்த 
தனதன தந்ததத்த ...... தனதான 


மொழிய நிறங்கறுத்து மகரவி னங்கலக்கி 
முடியவ ளைந்தரற்று ...... கடலாலும் 

முதிரவி டம்பரப்பி வடவைமு கந்தழற்குள் 
முழுகியெ ழுந்திருக்கு ...... நிலவாலும் 

மழையள கந்தரித்த கொடியிடை வஞ்சியுற்ற 
மயல்தணி யும்படிக்கு ...... நினைவாயே 

மரகத துங்கவெற்றி விகடந டங்கொள்சித்ர 
மயிலினில் வந்துமுத்தி ...... தரவேணும் 

அழகிய மென்குறத்தி புளகித சந்தனத்தி 
னமுதத னம்படைத்த ...... திருமார்பா 

அமரர்பு ரந்தனக்கு மழகிய செந்திலுக்கு 
மருணைவ ளம்பதிக்கு ...... மிறையோனே 

எழுபுவ னம்பிழைக்க அசுரர்சி ரந்தெறிக்க 
எழுசயி லந்தொளைத்த ...... சுடர்வேலா 

இரவிக ளந்தரத்தர் அரியர பங்கயத்த 
ரிவர்கள்ப யந்தவிர்த்த ...... பெருமாளே. 
பாடல் 441 
ராகம் - கெளரி மனோஹரி ; தாளம் - கண்டசாபு (2 1/2) 

தனதான தத்ததன தனதான தத்ததன 
தனதான தத்ததன ...... தனதான 


வலிவாத பித்தமொடு களமாலை விப்புருதி 
வறல்சூலை குட்டமொடு ...... குளிர்தாகம் 

மலிநீரி ழிச்சல்பெரு வயிறீளை கக்குகளை 
வருநீர டைப்பினுடன் ...... வெகுகோடி 

சிலைநோய டைத்தவுடல் புவிமீதெ டுத்துழல்கை 
தெளியாவெ னக்குமினி ...... முடியாதே 

சிவமார்தி ருப்புகழை எனுநாவி னிற்புகழ 
சிவஞான சித்திதனை ...... யருள்வாயே 

தொலையாத பத்தியுள திருமால்க ளிக்கவொரு 
சுடர்வீசு சக்ரமதை ...... யருள்ஞான 

துவர்வேணி யப்பன்மிகு சிவகாமி கர்த்தன்மிகு 
சுகவாரி சித்தனருள் ...... முருகோனே 

அலைசூரன் வெற்புமரி முகனானை வத்திரனொ 
டசுராரி றக்கவிடு ...... மழல்வேலா 

அமுதாச னத்திகுற மடவாள்க ரிப்பெணொடும் 
அருணா சலத்திலுறை ...... பெருமாளே. 
பாடல் 442
தனதன தானாதன தனதன தானாதன 
தனதன தானாதன ...... தனதான 


விடுமத வேள்வாளியின் விசைபெறு மாலாகல 
விழிகொடு வாபோவென ...... வுரையாடும் 

விரகுட னூறாயிர மனமுடை மாபாவிகள் 
ம்ருகமத கோலாகல ...... முலைதோய 

அடையவு மாசாபர வசமுறு கோமாளியை 
அவனியு மாகாசமும் ...... வசைபேசும் 

அசடஅ நாசாரனை அவலனை ஆபாசனை 
அடியவ ரோடாள்வது ...... மொருநாளே 

வடகுல கோபாலர்த மொருபதி னாறாயிரம் 
வனிதையர் தோள்தோய்தரு ...... மபிராம 

மரகத நாராயணன் மருமக சோணாசல 
மகிபச தாகாலமு ...... மிளையோனே 

உடுபதி சாயாபதி சுரபதி மாயாதுற 
உலகுய வாரார்கலி ...... வறிதாக 

உயரிய மாநாகமு நிருதரு நீறாய்விழ 
ஒருதனி வேலேவிய ...... பெருமாளே. 
பாடல் 443 
ராகம் - ஆஹிரி ...; தாளம் - அங்கதாளம் (14 1/2) 
தகிடதகதிமி-3 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2 
தக-1, தகிடதகதிமி-3 1/2, தகிடதகதிமி-3 1/2 

தனன தானன தனன தானனா 
தனன தானனம் ...... தனதான 


விதிய தாகவெ பருவ மாதரார் 
விரகி லேமனந் ...... தடுமாறி 

விவர மானதொ ரறிவு மாறியே 
வினையி லேஅலைந் ...... திமுடன் 

முதிய மாதமி ழிசைய தாகவே 
மொழிசெய் தேநினைந் ...... திடுமாறு 

முறைமை யாகநி னடிகள் மேவவே 
முனிவு தீரவந் ...... தருள்வாயே 

சதிய தாகிய அசுரர் மாமுடீ 
தரணி மீதுகுஞ் ...... சமராடிச் 

சகல லோகமும் வலம தாகியே 
தழைய வேவருங் ...... குமரேசா 

அதிக வானவர் கவரி வீசவே 
அரிய கோபுரந் ...... தனில்மேவி 

அருணை மீதிலே மயிலி லேறியே 
அழக தாய்வரும் ...... பெருமாளே. 
பாடல் 444 
தந்தத் தனதன தந்தத் தனதன 
தந்தத் தனதன தந்தத் தனதன 
தனத்த தனதன தனத்த தனதன 
தனத்த தனதன தனத்த தனதன 
--------- 3 முறை ----------- ...... தனதான 


விந்துப் புளகித இன்புற் றுருகிட 
சிந்திக் கருவினி லுண்பச் சிறுதுளி 
விரித்த கமலமெல் தரித்து ளொருசுழி 
யிரத்த குளிகையொ டுதித்து வளர்மதி 

விண்டுற் றருள்பதி கண்டுற் றருள்கொடு 
மிண்டிச் செயலினி ரம்பித் துருவொடு 
மெழுக்கி லுருவென வலித்து எழுமதி 
கழித்து வயிர்குட முகுப்ப வொருபதில் 

விஞ்சைச் செயல்கொடு கஞ்சச் சலவழி 
வந்துப் புவிமிசை பண்டைச் செயல்கொடு 
விழுப்பொ டுடல்தலை அழுக்கு மலமொடு 
கவிழ்த்து விழுதழு துகுப்ப அனைவரு ...... மருள்கூர 

மென்பற் றுருகிமு கந்திட் டனைமுலை 
யுண்டித் தரகொடு வுண்கிச் சொலிவளர் 
வளத்தொ டளைமல சலத்தொ டுழைகிடை 
துடித்து தவழ்நடை வளர்த்தி யெனதகு 

வெண்டைப் பரிபுர தண்டைச் சரவட 
முங்கட் டியல்முடி பண்பித் தியல்கொடு 
விதித்த முறைபடி படித்து மயல்கொள 
தெருக்க ளினில்வரு வியப்ப இளமுலை 

விந்தைக் கயல்விழி கொண்டற் குழல்மதி 
துண்டக் கரவளை கொஞ்சக் குயில்மொழி 
விடுப்ப துதைகலை நெகிழ்த்தி மயிலென 
நடித்த வர்கள்மயல் பிடித்தி டவர்வரு ...... வழியேபோய்ச் 

சத்தித் துறவொடு பஞ்சிட் டணைமிசை 
கொஞ்சிப் பலபல விஞ்சைச் சரசமொ 
டணைத்து மலரிதழ் கடித்து இருகர 
மடர்த்த குவிமுலை யழுத்தி யுரமிடர் 

சங்குத் தொனியொடு பொங்கக் குழல்மலர் 
சிந்தக் கொடியிடை தங்கிச் சுழலிட 
சரத்தொ டிகள்வெயி லெறிப்ப மதிநுதல் 
வியர்ப்ப பரிபுர மொலிப்ப எழுமத 

சம்பத் திதுசெய லின்பத் திருள்கொடு 
வம்பிற் பொருள்கள்வ ழங்கிற் றிதுபினை 
சலித்து வெகுதுய ரிளைப்பொ டுடல்பிணி 
பிடித்தி டனைவரும் நகைப்ப கருமயிர் ...... நரைமேவித் 

தன்கைத் தடிகொடு குந்திக் கவியென 
உந்திக் கசனம றந்திட் டுளமிக 
சலித்து வுடல்சல மிகுத்து மதிசெவி 
விழிப்பு மறைபட கிடத்தி மனையவள் 

சம்பத் துறைமுறை யண்டைக் கொளுகையில் 
சண்டக் கருநம னண்டிக் கொளுகயி 
றெடுத்து விசைகொடு பிடித்து வுயிர்தனை 
பதைப்ப தனிவழி யடித்து கொடுசெல 

சந்தித் தவரவர் பங்குக் கழுதுஇ 
ரங்கப் பிணமெடு மென்றிட் டறைபறை 
தடிப்ப சுடலையி லிறக்கி விறகொடு 
கொளுத்தி யொருபிடி பொடிக்கு மிலையெனு ...... முடலாமோ 

திந்தித் திமிதிமி திந்தித் திமிதிமி 
திந்தித் திமிதிமி திந்தித் திமிதிமி 
திமித்தி திமிதிமி திமித்தி திமிதிமி 
திமித்தி திமிதிமி திமித்தி திமிதிமி 

என்பத் துடிகள்த வுண்டைக் கிடுபிடி 
பம்பைச் சலிகைகள் சங்கப் பறைவளை 
திகுர்த்த திகுதிகு டுடுட்டு டுடுடுடு 
டிடிக்கு நிகரென வுடுக்கை முரசொடு 

செம்பொற் குடமுழ வுந்தப் புடன்மணி 
பொங்கச் சுரர்மலர் சிந்தப் பதமிசை 
செழித்த மறைசிலர் துதிப்ப முநிவர்கள் 
களித்து வகைமனி முழக்க அசுரர்கள் ...... களமீதே 

சிந்திக் குருதிக ளண்டச் சுவரகம் 
ரம்பக் கிரியொடு பொங்கிப் பெருகியெ 
சிவப்ப அதில்கரி மதர்த்த புரவிகள் 
சிரத்தொ டிரதமு மிதப்ப நிணமொடு 

செம்புட் கழுகுக ளுண்பத் தலைகள்த 
தும்பக் கருடன டங்கொட் டிடகொடி 
மறைப்ப நரிகண மிகுப்ப குறளிகள் 
நடிக்க இருள்மலை கொளுத்தி யலைகடல் 

செம்பொற் பவளமு டங்கிக் கமர்விட 
வெந்திட் டிகமலை விண்டுத் துகள்பட 
சிமக்கு முரகனு முழக்கி விடபட 
மடைத்த சதமுடி நடுக்கி யலைபட ...... விடும்வேலா 

தொந்தத் தொகுகுட என்பக் கழலொலி 
பொங்கப் பரிபுர செம்பொற் பதமணி 
சுழற்றி நடமிடு நிருத்த ரயன்முடி 
கரத்த ரரிகரி யுரித்த கடவுள்மெய் 

தொண்டர்க் கருள்பவர் வெந்தத் துகளணி 
கங்கைப் பணிமதி கொன்றைச் சடையினர் 
தொடுத்த மதனுரு பொடித்த விழியினர் 
மிகுத்த புரமதை யெரித்த நகையினர் 

தும்பைத் தொடையினர் கண்டக் கறையினர் 
தொந்திக் கடவுளை தந்திட் டவரிட 
சுகத்தி மழுவுழை கரத்தி மரகத 
நிறத்தி முயலக பதத்தி அருளிய ...... முருகோனே 

துண்டச் சசிநுதல் சம்பைக் கொடியிடை 
ரம்பைக் கரசியெ னும்பற் றருமகள் 
சுகிப்ப மணவறை களிக்க அணையறு 
முகத்தொ டுறமயல் செழித்த திருபுய 

செம்பொற் கரகம லம்பத் திருதல 
மம்பொற் சசியெழ சந்தப் பலபடை 
செறித்த கதிர்முடி கடப்ப மலர்தொடை 
சிறப்பொ டொருகுடில் மருத்து வனமகள் 

தொந்தப் புணர்செயல் கண்டுற் றடியெனி 
டைஞ்சற் பொடிபட முன்புற் றருளயில் 
தொடுத்து மிளநகை பரப்பி மயில்மிசை 
நடித்து அழல்கிரி பதிக்குள் மருவிய ...... பெருமாளே. 
பாடல் 445 
தானதன தானதன தானதன தானதன 
தானதன தானதன ...... தனதான 


வீறுபுழு கானபனி நீர்கள்மல தோயல்விடு 
மேருகிரி யானகொடு ...... தனபார 

மீதுபுர ளாபரண சோதிவித மானநகை 
மேகமனு காடுகட ...... லிருள்மேவி 

நாறுமலர் வாசமயிர் நூலிடைய தேதுவள 
நாணமழி வார்களுட ...... னுறவாடி 

நாடியது வேகதியெ னாசுழலு மோடனைநின் 
ஞானசிவ மானபத ...... மருள்வாயே 

கூறுமடி யார்கள்வினை நீறுபட வேஅரிய 
கோலமயி லானபத ...... மருள்வோனே 

கூடஅர னோடுநட மாடரிய காளியருள் 
கூருசிவ காமியுமை ...... யருள்பாலா 

ஆறுமுக மானநதி பாலகுற மாதுதன 
மாரவிளை யாடிமண ...... மருள்வோனே 

ஆதிரகு ராமஜய மாலின்மரு காபெரிய 
ஆதியரு ணாபுரியில் ...... பெருமாளே. 
பாடல் 1328 
மங்களம் - `ஏறுமயில் ஏறி` 
 
ஏறுமயி லேறிவிளை யாடுமுக மொன்ற
ஈசருடன் ஞானமொழி பேசுமுக மொன்றே
கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுக மொன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே
மாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றே
வள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே
ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும்
ஆதியரு ணாசல மமர்ந்த பெருமாளே.