திருவிடைமருதூர்

bookmark

பாடல் 858
தனதனன தனதனன தனதனன தனதனன 
தான தானனா தான தானனா 
-------- 3 முறை -------- ...... தனதன தனதான 


அறுகுநுனி பனியனைய சிறியதுளி பெரியதொரு 
ஆக மாகியோர் பால ரூபமாய் 

அருமதலை குதலைமொழி தனிலுருகி யவருடைய 
ஆயி தாதையார் மாய மோகமாய் 

அருமையினி லருமையிட மொளுமொளென வுடல்வளர 
ஆளு மேளமாய் வால ரூபமாய் ...... அவரொரு பெரியோராய் 

அழகுபெறு நடையடைய கிறுதுபடு மொழிபழகி 
ஆவி யாயவோர் தேவி மாருமாய் 

விழுசுவரை யரிவவையர்கள் படுகுழியை நிலைமையென 
வீடு வாசலாய் மாட கூடமாய் 

அணுவளவு தவிடுமிக பிதிரவிட மனமிறுகி 
ஆசை யாளராய் ஊசி வாசியாய் ...... அவியுறு சுடர்போலே 

வெறுமிடிய னொருதவசி யமுதுபடை யெனுமளவில் 
மேலை வீடுகேள் கீழை வீடுகேள் 

திடுதிடென நுழைவதன்முன் எதிர்முடுகி யவர்களொடு 
சீறி ஞாளிபோல் ஏறி வீழ்வதாய் 

விரகினொடு வருபொருள்கள் சுவறியிட மொழியுமொரு 
வீணி யார்சொலே மேல தாயிடா ...... விதிதனை நினையாதே 

மினுகுமினு கெனுமுடல மறமுறுகி நெகிழ்வுறவும் 
வீணர் சேவையே பூணு பாவியாய் 

மறுமையுள தெனும வரை விடும்விழலை யதனின்வரு 
வார்கள் போகுவார் காணு மோஎனா 

விடுதுறவு பெரியவரை மறையவரை வெடுவெடென 
மேள மேசொலா யாளி வாயராய் ...... மிடையுற வருநாளில் 

வறுமைகளு முடுகிவர வுறுபொருளு நழுவசில 
வாத மூதுகா மாலை சோகைநோய் 

பெருவயிறு வயிறுவலி படுவன்வர இருவிழிகள் 
பீளை சாறிடா ஈளை மேலிடா 

வழவழென உமிழுமது கொழகொழென ஒழுகிவிழ 
வாடி யூனெலாம் நாடி பேதமாய் ...... மனையவள் மனம்வேறாய் 

மறுகமனை யுறுமவர்கள் நணுகுநணு கெனுமளவில் 
மாதர் சீயெனா வாலர் சீயெனா 

கனவுதனி லிரதமொடு குதிரைவர நெடியசுடு 
காடு வாவெனா வீடு போவெனா 

வலதழிய விரகழிய வுரைகுழறி விழிசொருகி 
வாயு மேலிடா ஆவி போகுநாள் ...... மனதர்கள் பலபேச 

இறுதியதொ டறுதியென உறவின்முறை கதறியழ 
ஏழை மாதராள் மோதி மேல்விழா 

எனதுடைமை யெனதடிமை யெனுமறிவு சிறிதுமற 
ஈமொ லேலெனா வாயை ஆவெனா 

இடுகுபறை சிறுபறைகள் திமிலையொடு தவிலறைய 
ஈம தேசமே பேய்கள் சூழ்வதாய் ...... எரிதனி லிடும்வாழ்வே 

இணையடிகள் பரவுமுன தடியவர்கள் பெறுவதுவும் 
ஏசி டார்களோ பாச நாசனே 

இருவினைமு மலமுமற இறவியொடு பிறவியற 
ஏக போகமாய் நீயு நானுமாய் 

இறுகும்வகை பரமசுக மதனையரு ளிடைமருதில் 
ஏக நாயகா லோக நாயகா ...... இமையவர் பெருமாளே. 
பாடல் 859 
தனன தனதனன தான தானதன 
தனன தனதனன தான தானதன 
தனன தனதனன தான தானதன ...... தந்ததான 


இலகு குழைகிழிய வூடு போயுலவி 
யடர வருமதன னூல ளாவியெதி 
ரிளைஞ ருயிர்கவர ஆசை நேர்வலைபொ ...... திந்தநீலம் 

இனிமை கரைபுரள வாகு லாவுசரி 
நெறிவு கலகலென வாசம் வீசுகுழ 
லிருளின் முகநிலவு கூர மாணுடைய ...... கன்றுபோக 

மலையு மிதழ்பருகி வேடை தீரவுட 
லிறுக இறுகியநு ராக போகமிக 
வளரு மிளகுதன பார மீதினில்மு ...... யங்குவேனை 

மதுர கவியடைவு பாடி வீடறிவு 
முதிர அரியதமி ழோசை யாகவொளி 
வசன முடையவழி பாடு சேருமருள் ...... தந்திடாதோ 

கலக அசுரர்கிளை மாள மேருகிரி 
தவிடு படவுதிர வோல வாரியலை 
கதற வரியரவம் வாய்வி டாபசித ...... ணிந்தபோகக் 

கலப மயிலின்மிசை யேறி வேதநெறி 
பரவு மமரர்குடி யேற நாளும்விளை 
கடிய கொடியவினை வீழ வேலைவிட ...... வந்தவாழ்வே 

அலகை யுடனடம தாடு தாதைசெவி 
நிறைய மவுனவுரை யாடு நீபஎழில் 
அடவி தனிலுறையும் வேடர் பேதையைம ...... ணந்தகோவே 

அமணர் கழுவில்விளை யாட வாதுபடை 
கருது குமரகுரு நாத நீதியுள 
தருளு மிடைமருதில் மேவு மாமுனிவர் ...... தம்பிரானே. 
பாடல் 860 
தனதனன தனதனன தந்தனந் தந்தனந் 
தனதனன தனதனன தந்தனந் தந்தனந் 
தனதனன தனதனன தந்தனந் தந்தனந் ...... தந்ததான 


படியையள விடுநெடிய கொண்டலுஞ் சண்டனும் 
தமரசது மறையமரர் சங்கமுஞ் சம்புவும் 
பரவரிய நிருபன்விர கன்சுடுஞ் சம்பனன் ...... செம்பொன்மேனிப் 

பரமனெழில் புனையுமர வங்களுங் கங்கையுந் 
திருவளரு முளரியொடு திங்களுங் கொன்றையும் 
பரியகுமி ழறுகுகன தும்பையுஞ் செம்பையுந் ...... துன்றுமூலச் 

சடைமுடியி லணியுநல சங்கரன் கும்பிடுங் 
குமரனறு முகவன்மது ரந்தருஞ் செஞ்சொலன் 
சரவணையில் வருமுதலி கொந்தகன் கந்தனென் ...... றுய்ந்துபாடி 

தணியவொலி புகலும்வித மொன்றிலுஞ் சென்றிலன் 
பகிரவொரு தினையளவு பண்புகொண் டண்டிலன் 
தவநெறியி லொழுகிவழி பண்படுங் கங்கணஞ் ...... சிந்தியாதோ 

கடுகுபொடி தவிடுபட மந்திரந் தந்திரம் 
பயிலவரு நிருதருட லம்பிளந் தம்பரங் 
கதறிவெகு குருதிநதி பொங்கிடுஞ் சம்ப்ரமங் ...... கண்டுசேரக் 

கழுகுநரி கொடிகருட னங்கெழுந் தெங்குநின் 
றலகைபல திமிலைகொடு தந்தனந் தந்தனங் 
கருதியிசை பொசியுநசை கண்டுகண் டின்புறுந் ...... துங்கவேலா 

அடல்புனையு மிடைமருதில் வந்திணங் குங்குணம் 
பெரியகுரு பரமகுமர சிந்துரஞ் சென்றடங் 
கடவிதனி லுறைகுமரி சந்திலங் குந்தனந் ...... தங்குமார்பா 

அருணமணி வெயிலிலகு தண்டையம் பங்கயங் 
கருணைபொழி வனகழலி லந்தமுந் தம்பமென் 
றழகுபெற நெறிவருடி யண்டருந் தொண்டுறுந் ...... தம்பிரானே. 
பாடல் 861 
தனதனதன தான தானன தனதனதன தான தானன 
தனதனதன தான தானன ...... தந்ததான 


புழுகொடுபனி நீர்ச வாதுட னிருகரமிகு மார்பி லேபன 
புளகிதஅபி ராம பூஷித ...... கொங்கையானை 

பொதுவினில்விலை கூறு மாதர்கள் மணியணிகுழை மீது தாவடி 
பொருவனகணை போல்வி லோசன ...... வந்தியாலே 

மெழுகெனவுரு காவ னார்தம திதயகலக மோடு மோகன 
வெகுவிதபரி தாப வாதனை ...... கொண்டுநாயேன் 

மிடைபடுமல மாயை யால்மிக கலவிய அறி வேக சாமிநின் 
விதரணசிவ ஞான போதகம் ...... வந்துதாராய் 

எழுகிரிநிலை யோட வாரிதி மொகுமொகுவென வீச மேதினி 
யிடர்கெடஅசு ரேசர் சேனைமு ...... றிந்துபோக 

இமையவர்சிறை மீள நாய்நரி கழுகுகள்கக ராசன் மேலிட 
ரணமுககண பூத சேனைகள் ...... நின்றுலாவச் 

செழுமதகரி நீல கோமள அபிநவமயி லேறு சேவக 
செயசெயமுரு காகு காவளர் ...... கந்தவேளே 

திரைபொருகரை மோது காவிரி வருபுனல்வயல் வாவி சூழ்தரு 
திருவிடைமரு தூரில் மேவிய ...... தம்பிரானே.