தீர்த்தமலை

bookmark

பாடல் 617

ராகம் - சங்கரானந்தப்ரியா; தாளம் - மிஸ்ரசாபு (3 1/2) 
தகிட-1 1/2, தகதிமி-2 

தாத்த தனதன தாத்த தனதன 
தாத்த தனதன தாத்த தனதன 
தாத்த தனதன தாத்த தனதன ...... தனதான 


பாட்டி லுருகிலை கேட்டு முருகிலை 
கூற்று வருவழி பார்த்து முருகிலை 
பாட்டை யநுதின மேற்று மறிகிலை ...... தினமானம் 

யாப்ப ணியனருள் வீட்டை விழைகிலை 
நாக்கி னுனிகொடு ஏத்த அறிகிலை 
பாழ்த்த பிறவியி லேற்ற மனதுநல் ...... வழிபோக 

மாட்ட மெனுகிறை கூட்டை விடுகிலை 
யேட்டின் விதிவழி யோட்ட மறிகிலை 
பார்த்து மினியொரு வார்த்தை அறைகுவ ...... னிதுகேளாய் 

வாக்கு முனதுள நோக்கு மருளுவ 
னேத்த புகழடி யார்க்கு மெளியனை 
வாழ்த்த இருவினை நீக்கு முருகனை ...... மருவாயோ 

ஆட்டி வடவரை வாட்டி யரவொடு 
பூட்டி திரிபுர மூட்டி மறலியி 
னாட்ட மறசர ணீட்டி மதனுடல் ...... திருநீறாய் 

ஆக்கி மகமதை வீட்டி யொருவனை 
யாட்டின் முகமதை நாட்டி மறைமக 
ளார்க்கும் வடுவுற வாட்டு முமையவ ...... னருள்பாலா 

சீட்டை யெழுதிவை யாற்றி லெதிருற 
ஓட்டி யழல்பசை காட்டி சமணரை 
சீற்ற மொடுகழு வேற்ற அருளிய ...... குருநாதா 

தீர்த்த எனதக மேட்டை யுடனினை 
ஏத்த அருளுட னோக்கி அருளுதி 
தீர்த்த மலைநகர் காத்த சசிமகள் ...... பெருமாளே.