தெய்வமே காப்பு

bookmark

வாருமையா கந்தா 
வரங் கொடுமே வேலவரே 
தீருமையா இவன் பிணியை 
திருச்செந்தூர் வேலவரே

பச்சை நிறம் வள்ளி 
பவள நிறம் தெய்வானை 
சோதி நிறம் வேலவரு 
சொன்ன வரம் தந்தாரே!

புங்கக் கட்டை வெட்டி-திரபதைக்கு 
புளியந் தணல் உண்டு பண்ணி; 
பூவே றங்கும் நேரமெல்லாம் திரெளபதை 
பொன்னிற மாய் வந்தாளே.
---------