தெய்வமே காப்பு

வாருமையா கந்தா
வரங் கொடுமே வேலவரே
தீருமையா இவன் பிணியை
திருச்செந்தூர் வேலவரே
பச்சை நிறம் வள்ளி
பவள நிறம் தெய்வானை
சோதி நிறம் வேலவரு
சொன்ன வரம் தந்தாரே!
புங்கக் கட்டை வெட்டி-திரபதைக்கு
புளியந் தணல் உண்டு பண்ணி;
பூவே றங்கும் நேரமெல்லாம் திரெளபதை
பொன்னிற மாய் வந்தாளே.
---------