தேயிலைத் தோட்டம் புழுதி புரளுதய்யா !

bookmark

ஓர் இளம் பெண் புதிதாக தேயிலைத் தோட்டத்தில் வேலைக்கு வந்து சேருகிறாள். அதற்கு முன் அவள் நதியோரம் கிராமத்தில் நன்செய் நிலத்தில் பாடுபட்டவள். அவளுக்கு பழைய வேலைக்கும் புதிய வேலைக்கும் இருக்கிற வேறுபாடு தெளிவாகத் தெரிகிறது. முள்ளடர்ந்த காட்டில், குளிர்காற்று வீச உடல் புழுதியால் மறைய வேலை செய்ய வேண்டியிருக்கிறதே என்று தனியாக நின்று வருந்துகிறாள்.

மூணாறு சாலையிலே
முள்ளடர்ந்த காட்டுக்குள்ளே
பொன்னான மேனியெல்லாம்
புழுதி பெறளுதய்யா

சேகரித்தவர்: S.M.கார்க்கி
இடம்: சிவகிரி.
--------