தேவேந்திரன் தங்கை

bookmark

அவளுக்குத் தேன் மேல் ஆசை உண்டாகிறது. உடனே தன் அண்ணனுக்குச் செய்தி அனுப்புகிறாள். அண்ணன் தங்கையிடம் மிகவும் அருமையாக நடந்து கொள்பவன் உடனே அவள் கேட்டதை அனுப்பி வைக்கிறான். அதுபோல அவள் கேட்கும் ஒவ்வொரு பொருளையும் உடனே அனுப்பி வைக்கிறான். அத்தகைய சாமான்களைப் பற்றிப் பிறர் அவளிடம் விசாரிக்கும் பொழுது தன் அண்ணன் அனுப்பியது என்று பெருமையோடு சொல்லிக் கொள்வதோடல்லாமல் அண்ணனையும் தேவேந்திரன், கர்ணன் என்று வருணித்துச் சிறப்பிக்கிறாள். அந்த அண்ணனை அவள் பிரிந்து விட்டாள். “நான் கேட்டவற்றை உடனே அனுப்பிய அண்ணன் பிரிந்து விட்டாரே ! இனி நம்மை யார் கவனிப்பார்கள்? யார்தான் கேட்டவற்றை அன்போடு அனுப்பி வைப்பார்கள்?” என்றெண்ணி துக்கம் மேலிட புலம்புகிறாள்.

தேனு மேல ஆசை வச்சி
சீட்டேழுதி நான் போட்டா
சீட் டெ படிச்சி பாத்து
தே னெ வெட்டி கீளெறக்கி
திருப்பதிக்குப் பாரஞ் செஞ்சி
தெருவிலே அனுப்பி வைச்சா
தெருவிலே கண்ட ஜனம்
தேனு வண்டி யாரு திண்ணா
தேவேந்திரன் தங்கைக்கிண்ணார்.
காய் மேல ஆசை வச்சி
கடுதாசி எழுதிப் போட்டா
கடுதாசி படிச்சி பாத்து
காயா வெட்டி கீளெறக்கி
கப்பலில் பாரஞ் செஞ்சி
கடலிலே ஓட்டிவிட்டா
கப்பலிலே இருக்கு(ம்) ஜனம்
காயிபாரம் யாரு திண்ணர்-இந்த
கர்ண னொட தங்கைக் கிண்ணார்

வட்டார வழக்கு: காயிபாரம்-காய்(வண்டி)
குறிப்பு: கர்ணன், தேவேந்திரன் கொடைவள்ளல்களாவார். ஆதலால் அத்தகைய கொடை வள்ளல்களோடு தன் அண்ணனையும் ஒப்பிடுகிறாள்.

சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: அரூர், தருமபுரி மாவட்டம்.
-----------