நடுவில் வர அஞ்சரனே

அவள் கணவனுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தாள். கணவன் திடீரென்று இறந்து போனான். அவளுடன் சேர்ந்த மற்றைய பெண்கள் தங்கள் கணவனுடன் சந்தோஷமாக வாழ்வதைக் காண்கிறாள். அவரவர்கள் சொந்த வீட்டில் சுப காரியங்களை அவர்கள் முன்னின்று நடத்துகின்றன. அதே போல் அவளும் நாலு பேர் முன்னிலையில் வரமுடியுமா? நல்ல காரியங்களில் பங்கெடுத்துக் கொள்ள முடியுமா? விதவை இவற்றிற்கெல்லாம் விலக்கப்பட்டவள் தானே ! தன்னை மல்லிகைப் பூவாகவும், ஆனால் தான் உபயோகமில்லாமல் வாடும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறிக் குறைப்பட்டு அழும் மனைவியின் ஒப்பாரி.
ஊமத்தம் பூ வெல்லாம்
உள்ளிருந்து பேசுது
ஒரு சேர் மல்லியப்பூ-நான்
உள்ள வர அஞ்சரனே
நார்த்தம் பூ வெல்லாம்
நடுவிலிருந்து பேசுது-நான்
நாலு சேர் மல்லியப்பூ
நடுவில் வர அஞ்சரனே
வட்டார வழக்கு: அஞ்சரனே-அஞ்சுகிறேனே.
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: அரூர், தருமபுரி மாவட்டம்.
-----------