நல்லதே நடக்கும்

நல்லதே நடக்கும்

bookmark

ஒரு ஜென் துறவி மற்றும் அவரது சீடர்கள் அனைவரும் ஒன்று கூடி பேசிக்கொண்டிருக்கையில் அவர்களுக்குள் ஒரு வாக்குவாதம் எழுந்தது. அது என்னவென்றால், திருடனாக இருப்பவனுக்கு எப்போதும் கெட்டது தான் நடக்கும் என்று ஒரு பக்கமும், இன்னொரு பக்கம் இல்லை, நல்லதும் நடக்கும் என்றும் வாதாடிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களது குரலைக் கேட்டு வந்த ஜென் துறவி, என்ன வாக்குவாதம் என்று கேட்டார். உடனே அவர்களுக்குள் நடந்த அந்த வாக்குவாதத்தைப் பற்றிக் கூறினர். 

 உடனே ஜென் துறவி அவர்களுக்கு உண்மையை ஒரு கதை மூலமாகப் புரிய வைக்க எண்ணிக் கதையைச் சொல்ல ஆரம்பித்தார். அதாவது ஜான்கி என்பவன் ஒரு சாமுராயின் மகன். அவன் ஏதன் என்ற இடத்திற்கு பயணித்தார். அங்கு ஒரு உயர் அதிகாரியிடம் பணியாளாக சேர்ந்து, அவரின் மனைவியை காதலித்து, மேலும் தற்காப்பிற்காக, அந்த அதிகாரியின் பெருந்தொகையை எடுத்துக் கொண்டு, அவருடைய மனைவியுடன் ஓடிவிட்டான். பின்னர், இருவரும் நன்கு சந்தோஷமாக வாழ்வதற்கு திருடர்களாக மாறினர். ஆனால் அந்த பெண், ஜான்கியின் நடவடிக்கைகளை கண்டு வெறுப்படைந்தாள். அதனால் அவள் அவனை விட்டு சென்று விட்டாள். 

 ஆகவே மனமுடைந்த அவன் ஒரு மாகாணத்தில் பிச்சைக்காரனாக மாறி பிச்சை எடுத்துக்கொண்டிருந்தான். மேலும் அவனது கடந்த காலத்தில் செய்த பாவத்திற்கு பரிகாரமாக, ஜான்கிக்கு தனது வாழ்நாளில் சில நல்ல காரியங்களை சாதிக்க எண்ணினான். அப்போது ஒரு குன்றின் மீது ஓர் ஆபத்தான சாலை இருப்பதால், பல பேர் மரணம் மற்றும் காயம் அடைகின்றனர் என்பதை அறிந்த அவன், அங்கு அந்த மலை வழியாக ஒரு சுரங்கம் வெட்ட எண்ணி, பகல் நேரங்களில் பிச்சை எடுப்பதும், இரவு வேளையில் சுரங்கம் தோண்டுவதையும் வேலையாகச் செய்து வந்தான். 

 முப்பது ஆண்டுகள் ஆயிற்று, சுரங்கப்பாதை 2. 290 அடி நீளம், 30 அடி உயரம் மற்றும் 30 அடி அகலம் ஆனது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவன் ஏற்கனவே ஒரு அதிகாரியின் கீழ் பணியாளாக வேலை செய்தவரின் மகன் அவருடைய மகன் ஒரு திறமை மிக்க வாள் வீரன். அவன் ஜான்கியை கண்டுபிடித்து பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ஜான்கியைத் தேடி அலைந்து கொண்டிருந்தான். அந்த சமயம் பார்த்து அந்த ஜான்கியும் அவன் கண்ணில் தென்பட, ஆத்திரமடைந்த அவன் நான் உன்னை என் கைகளால் கொல்ல வேண்டும் என்று கூறினான். அதற்கு ஜான்கி நீ என்னை தாராளமாக கொள்ளலாம், ஆனால் எனக்கு ஒரு ஆசை உள்ளது, அது என்னவெனில் இந்த சுரங்கத்தை முடித்ததும் நீ என்னை கொல் என்று கூறினான். எனவே அந்த உயர் அதிகாரியின் மகனும் அந்த நாளுக்காக காத்திருந்தான். 

 பல மாதங்கள் கடந்தது. ஜான்கி மட்டும் தோண்டி கொண்டிருந்தான். அந்த வாள்வீரன் சும்மாவே இருந்ததால் மிகவும் சோர்வடைந்தான். அதனால் அவனும் ஜான்கிக்கு உதவியாக சுரங்கம் தோண்ட ஆரம்பித்தான். ஓர் ஆண்டு காலம் ஆனதும், அந்த மகன் ஜான்கியின் வலிமையையும், தன்னம்பிக்கையையும் கண்டு வியந்தான். கடைசியாக சுரங்கப்பாதை முடிந்தது. மக்களும் பாதுக்காப்பாக அந்த சுரங்கத்தில் பயணித்தனர். இப்போது என் தலையை துண்டி, என் வேலை முடிந்தது என்று ஜான்கி கூறினான். எப்படி நான் என் சொந்த ஆசிரியர் தலையை துண்டிக்க முடியும்?என்று கண்களில் இருந்து கண்ணீர் மல்க கேட்டான் என்று ஜென் குரு சொன்னார். பிறகு இறுதியில் ஜென் குரு சீடர்களிடம் திருடனாக இருந்து, திருந்தியப் பிறகு நல்லதை நினைத்தால், அவனுக்கு நல்லதே நடக்கும் என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று விட்டார்.