நாளைப் பயணமடி

bookmark

காதலரிருவர் அன்பு மிகுதியால் ஒருவருக்கொருவர் உரையாடிக் கொள்கிறார்கள். கடைசியில் அவன் நாளைப் பயணம் என்கிறான். அவள் நானும் வருகிறேன் என்கிறாள். ஆனால் நடககுமா?

பெண்: ஆல மரமுறங்க
அடி மரத்துக் கொப்புறங்க 
பாதையிலே நானிருக்க-நீங்க 
பக்க வழி போகலாமா?
ஆண்: வாழையடி உன்கூந்தல்
வைரமடி பல்காவி
ஏழையடி நானுனக்கு 
இரங்கலையோ உன்மனசு?

பெண்:சந்திரரே சூரியரே
தலைக்கு மேலே வாரவரே
இந்திரர்க்கு இளையவரே-நான் 
என்ன சொல்லிக் கூப்பிடட்டும்

ஆண்: அத்தை மகளே-நீ
அருவங் கொடி வாயழகி 
கோவம் பழத்தழகி-என்னை 
கொழுந்தனிண்ணு கூப்பிடடி 
மேற்கே சூலமடி 
மே மலையும் கோணலடி 
நாளைப் பயணமடி

பெண்: நானும் வாரேன் கூடப் போவோம்

சேகரித்தவர்: S.M. கார்க்கி 
இடம்: சிவகிரி.
------------