நாளைப் பயணமடி

காதலரிருவர் அன்பு மிகுதியால் ஒருவருக்கொருவர் உரையாடிக் கொள்கிறார்கள். கடைசியில் அவன் நாளைப் பயணம் என்கிறான். அவள் நானும் வருகிறேன் என்கிறாள். ஆனால் நடககுமா?
பெண்: ஆல மரமுறங்க
அடி மரத்துக் கொப்புறங்க
பாதையிலே நானிருக்க-நீங்க
பக்க வழி போகலாமா?
ஆண்: வாழையடி உன்கூந்தல்
வைரமடி பல்காவி
ஏழையடி நானுனக்கு
இரங்கலையோ உன்மனசு?
பெண்:சந்திரரே சூரியரே
தலைக்கு மேலே வாரவரே
இந்திரர்க்கு இளையவரே-நான்
என்ன சொல்லிக் கூப்பிடட்டும்
ஆண்: அத்தை மகளே-நீ
அருவங் கொடி வாயழகி
கோவம் பழத்தழகி-என்னை
கொழுந்தனிண்ணு கூப்பிடடி
மேற்கே சூலமடி
மே மலையும் கோணலடி
நாளைப் பயணமடி
பெண்: நானும் வாரேன் கூடப் போவோம்
சேகரித்தவர்: S.M. கார்க்கி
இடம்: சிவகிரி.
------------