நெஞ்சுக்குள்ள ஆத்தரனே

bookmark

தன் துன்பத்தைத் தான்தான் அனுபவிக்க வேண்டும் என்று அவள் எண்ணி தன் மனத்திற்குள்ளேயே அழுது கொள்ளுகிறாள். அவள் துன்பத்தை அவள் அனுபவித்து வழக்கமாவிட்டது. மற்றவர் கேட்டு அவர்களும் மனதிற்கு வருத்தப்பட வேண்டாம். அவள் வருத்தம் தான் என்ன? குழந்தைச் செல்வத்தை அடையாதவள் என்ற ஓர் எண்ணமே போதுமே ! அத்தோடு இனி குழந்தைப் பேறு அடையாளம் என்ற நம்பிக்கைக்கு இடமில்லாமல் கணவனையும் இழந்தவளாகவும் ஆகி விடுகிறாள். துக்கத்திற்குக் கேட்க வேண்டுமா?

நெருஞ்சிப் பூ பூக்கும்
நெஞ்சுக்குள்ளே காய் காய்க்கும்-என்
நெஞ்சை விட்டு சொன்னாலே-உங்க
நெறங்கொலைஞ்சி போகு மின்னு-என்
நெஞ்சுக்குள்ளே ஆத்தரனே
மாதளங்கா பூ பூக்கும்
மனசுக்குள்ளே காய் காய்க்கும்-என்
மனசை விட்டு சொன்னாலே-உங்க
மனங்கலைஞ்சி போகு மின்னு-என்
மனசிக்குள்ளே ஆத்தரனே

வட்டார வழக்கு: ஆத்தரனே-ஆற்றுகிறேனே.
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: சக்கிலிப்பட்டி, தருமபுரி மாவட்டம்.
------------