பயனறிதல்

bookmark

அன்று மாலை மூன்று பிள்ளைகளும் சந்தி ஜபங்களை முடித்துக்கொண்டு, பிதாவிடம் வந்து நமஸ்காரம் செய்து விட்டுக் "கதை" கேட்க வந்திருக்கிறோம் என்றார்கள். 

விவேக சாஸ்திரி தம் பிள்ளைகளை அன்புடன் உட்காரச் சொல்லி "குழந்தைகளே! நமது குலதேவதையாகிய காசி-விசாலாக்ஷியை ஸ்மரித்துக் கொள்ளுங்கள்" என்றார். 

அப்படியே மூவரும் கண்ணை மூடிக் கொண்டு சிறிது நேரம் தியானம் செய்து முடித்தார்கள். பிறகு பிதா கதை சொல்லத் தொடங்கினார்:

"கேளீர், மக்களே! ஒரு காரியம் தொடங்கும்போது அதன் பயன் இன்னதென்று நிச்சயமாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அந்தப் பயன் நமக்கு வேண்டியதுதானா என்பதையும் ஆராய்ந்து செய்யவேண்டும். பயன்படாத காரியத்திலே உழைப்பவன் சங்கீதம் படிக்க போன கழுதை போலே தொல்லைப்படுவான்? என்றார்.

"அதெப்படி?" என்று பிள்ளைகள் கேட்டார்கள்.

காலநிலைமையால், அந்த வித்தைகள் வயிற்றுப் பிழைப்புக்குப் பயன்படவில்லை. பிறரிடம் பிச்சை கேட்க ஸம்மதமில்லாத மானமுள்ள குடும்பத்தா ராதலால், அரை வயிற்றுக்கு ஆஹாரம் செய்து கொண்டு கஷ்ட்த்தில் இருந்தார்கள்.

இப்படி இருக்கையில், ஒரு நாள் விவேக சாஸ்திரி தமது கையில் தாதுவைப் பார்த்து இன்னும் ஒரு வருஷத்திக்கு மேலே தம்மால் ஜீவிக்க முடியா தென்று தெரிந்தவராகி, தம்முடைய மக்களை அழைத்து பின்வருமாறு சொல்ல்லானார்:

“வாரீர், மக்களே, நான் சொல்லப்போவதை ஸாவதானமாக்க் கேளுங்கள்.

என்னுடைய ஜீவன் இவ் வுலகத்திலே இன்னும் ஒரு வருஷத்துக்கு மேலே நில்லாது. நான் உங்களுக்கு அதிகச் செல்வம் வைத்து விட்டுப்போக வழியில்லாமற் போய்விட்ட்து. விதிவசமாக ஏற்பட்ட மதிமயக்கத்தால், உங்களுக்கு லௌகிக லாபங்கள் உண்டாக்கக்கூடிய வித்தைகள் கற்றுக் கொடுக்கத் தவறிவிட்டேன். உங்களுக்கோ குடும்ப பாரம் ஏற்கனவே மிகுதியாய் விட்ட்து. இன்னும் காலம் போகப் போக இதனிலும் அதிகப்படக் கூடும். நீங்கள் எப்படி இந்தச் சுமையைப் பொறுக்கப் போகிறீர்க ளென்பதை நினைக்கும்போது எனக்குக் கவலை யுண்டாகிறது.

எனிலும், லௌகிக தந்திரங்களை நீங்கள் தெரிந்து கொள்ளும் பொருட்டுச் சில கதைகள் சொல்லிவிட்டு போகிறேன். தின்ந்தோறும் விளக்கு வைத்தவுடனே என்னிடம் சிறிது நேரம் கதை கேட்க வாருங்கள். எனது காலத்துக்குப் பிறகு உங்களுக்கு இந்தக் கதைகள் பயன்படும்” என்றார். 1. முதற் பகுதி
பயனறிதல்

அன்று மாலை மூன்று பிள்ளைகளும் சந்தி ஜபங்களை முடித்துக்கொண்டு, பிதாவிடம் வந்து நமஸ்காரம் செய்து விட்டுக் "கதை" கேட்க வந்திருக்கிறோம் என்றார்கள். 

விவேக சாஸ்திரி தம் பிள்ளைகளை அன்புடன் உட்காரச் சொல்லி "குழந்தைகளே! நமது குலதேவதையாகிய காசி-விசாலாக்ஷியை ஸ்மரித்துக் கொள்ளுங்கள்" என்றார். 

அப்படியே மூவரும் கண்ணை மூடிக் கொண்டு சிறிது நேரம் தியானம் செய்து முடித்தார்கள். பிறகு பிதா கதை சொல்லத் தொடங்கினார்:

"கேளீர், மக்களே! ஒரு காரியம் தொடங்கும்போது அதன் பயன் இன்னதென்று நிச்சயமாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அந்தப் பயன் நமக்கு வேண்டியதுதானா என்பதையும் ஆராய்ந்து செய்யவேண்டும். பயன்படாத காரியத்திலே உழைப்பவன் சங்கீதம் படிக்க போன கழுதை போலே தொல்லைப்படுவான்? என்றார்.

"அதெப்படி?" என்று பிள்ளைகள் கேட்டார்கள்.

காலநிலைமையால், அந்த வித்தைகள் வயிற்றுப் பிழைப்புக்குப் பயன்படவில்லை. பிறரிடம் பிச்சை கேட்க ஸம்மதமில்லாத மானமுள்ள குடும்பத்தா ராதலால், அரை வயிற்றுக்கு ஆஹாரம் செய்து கொண்டு கஷ்ட்த்தில் இருந்தார்கள்.

இப்படி இருக்கையில், ஒரு நாள் விவேக சாஸ்திரி தமது கையில் தாதுவைப் பார்த்து இன்னும் ஒரு வருஷத்திக்கு மேலே தம்மால் ஜீவிக்க முடியா தென்று தெரிந்தவராகி, தம்முடைய மக்களை அழைத்து பின்வருமாறு சொல்ல்லானார்:

“வாரீர், மக்களே, நான் சொல்லப்போவதை ஸாவதானமாக்க் கேளுங்கள்.

என்னுடைய ஜீவன் இவ் வுலகத்திலே இன்னும் ஒரு வருஷத்துக்கு மேலே நில்லாது. நான் உங்களுக்கு அதிகச் செல்வம் வைத்து விட்டுப்போக வழியில்லாமற் போய்விட்ட்து. விதிவசமாக ஏற்பட்ட மதிமயக்கத்தால், உங்களுக்கு லௌகிக லாபங்கள் உண்டாக்கக்கூடிய வித்தைகள் கற்றுக் கொடுக்கத் தவறிவிட்டேன். உங்களுக்கோ குடும்ப பாரம் ஏற்கனவே மிகுதியாய் விட்ட்து. இன்னும் காலம் போகப் போக இதனிலும் அதிகப்படக் கூடும். நீங்கள் எப்படி இந்தச் சுமையைப் பொறுக்கப் போகிறீர்க ளென்பதை நினைக்கும்போது எனக்குக் கவலை யுண்டாகிறது.

எனிலும், லௌகிக தந்திரங்களை நீங்கள் தெரிந்து கொள்ளும் பொருட்டுச் சில கதைகள் சொல்லிவிட்டு போகிறேன். தின்ந்தோறும் விளக்கு வைத்தவுடனே என்னிடம் சிறிது நேரம் கதை கேட்க வாருங்கள். எனது காலத்துக்குப் பிறகு உங்களுக்கு இந்தக் கதைகள் பயன்படும்” என்றார்.