பரசுராமப் படலம் - 1377

bookmark

1377.    

‘இருவரும். இரண்டு வில்லும்
   ஏற்றினர்; உலகம் ஏழும்
வெருவர. திசைகள் பேர.
   வெங் கனல் பொங்க. மேன்மேல்.
செரு மலைகின்ற போழ்தில்.
   திரிபுரம் எரித்த தேவன்.
வரி சிலை இற்றது ஆக.
   மற்றவன் முனிந்து மன்னோ.
 
இருவரும்     - (அரி.  அரன் என்னும்) இரண்டு பேரும்; இரண்டு
வில்லும் ஏற்றினர்  -  இரு  விற்களையும் நாணேற்றி; உலகம் ஏழும்
வெருவர-  ஏழுலகங்களும்  அஞ்சுமாறு;  திசைகள்  பேர - திசைகள்
நிலைகுலைய;  வெங்கனல்  பொங்க  -  கடிய  சினத்தீ பொங்கியெழ;
மேன்மேல் -  மேலும்  மேலும்; செருமலைகின்ற போழ்தில் - போர்
புரிகின்ற; திரிபுரம் எரித்த தேவன் - முப்புரிமெரித்த சிவபெருமானின்;
வரிசிலை  இற்றது  ஆக  - கட்டமைந்த  வில்  முரிந்துபோக; மற்று.
அவன் முனிந்து - அச் சிவபிரான் மிக்க சினங்கொண்டு.

மன்.     ஓ - அசைநிலைகள். “முனிந்து மீட்டும் போர் தொடங்கும்
வேலை”  என   மேற்பாடலோடு  இயையும்.  மற்று  -  வினைமாற்றுப்
பொருளில் வந்தது.                                          29