பரசுராமப் படலம் - 1377

1377.
‘இருவரும். இரண்டு வில்லும்
ஏற்றினர்; உலகம் ஏழும்
வெருவர. திசைகள் பேர.
வெங் கனல் பொங்க. மேன்மேல்.
செரு மலைகின்ற போழ்தில்.
திரிபுரம் எரித்த தேவன்.
வரி சிலை இற்றது ஆக.
மற்றவன் முனிந்து மன்னோ.
இருவரும் - (அரி. அரன் என்னும்) இரண்டு பேரும்; இரண்டு
வில்லும் ஏற்றினர் - இரு விற்களையும் நாணேற்றி; உலகம் ஏழும்
வெருவர- ஏழுலகங்களும் அஞ்சுமாறு; திசைகள் பேர - திசைகள்
நிலைகுலைய; வெங்கனல் பொங்க - கடிய சினத்தீ பொங்கியெழ;
மேன்மேல் - மேலும் மேலும்; செருமலைகின்ற போழ்தில் - போர்
புரிகின்ற; திரிபுரம் எரித்த தேவன் - முப்புரிமெரித்த சிவபெருமானின்;
வரிசிலை இற்றது ஆக - கட்டமைந்த வில் முரிந்துபோக; மற்று.
அவன் முனிந்து - அச் சிவபிரான் மிக்க சினங்கொண்டு.
மன். ஓ - அசைநிலைகள். “முனிந்து மீட்டும் போர் தொடங்கும்
வேலை” என மேற்பாடலோடு இயையும். மற்று - வினைமாற்றுப்
பொருளில் வந்தது. 29