பாவங்கள் நீங்க, நோய்கள் அகல பெருமாள் ஸ்லோகம்

நீர்மை கெட வைதாரும் நின்னொடு எதிர்த்தாரும்
சீர்மைபெற நின் அடிக்கீழ்ச் சேர்க்கையினால் - நேர்மை இலா
வெவ்வுளத்தினேன் செய்மிகையைப் பொறுத்து
அருளி எவ்வுள் அத்தனே! நீ இரங்கு.
-பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் பாசுரம்.
பொதுப்பொருள்:
திரு எவ்வுள்ளூர் (திருவள்ளூர்) என்னும் திவ்ய தேசத்தில் எழுந்தருளி இருக்கும் என் தலைவனே! உந்தன் முன் அவதாரங்களில் உன்னை முறையில்லாமல் அறியாமையால் வசை பாடியவர்களும், உன்னை எதிர்த்துப்போரிட்டவர்களும் கூட சிறந்த முக்தியை அடையுமாறு உன் திருவடியில் சேர்ந்து அருள் பெற்றிருக்கிறார்கள். ஆகவே, நேர்மையற்ற கொடிய மனம் கொண்ட அடியேன்
செய்த பிழைகளையும் பொறுத்தருளி, என்பால் இரங்குவாயாக.
இத்துதியை மஹாளய அமாவாசை அன்று ஆரம்பித்து ஒவ்வொரு அமாவாசை அன்றும் துதித்து வர பாவங்கள் நீங்கும்.