பிறந்த வீடு

bookmark

பல்லு விளக்கி-நான்
பிறந்த இடம் போனாலும்
படியேறிப் போனாலும்-எனக்குப்
பல்லிலிடும் பச்சத் தண்ணி-ஐயா
பழனி மலைத் தீர்த்தமென்பார்
நாவை விளக்கி நான்
நடுத் தெருவே போனாலும்
நாவிலிடும் பச்சத் தண்ணி-எனக்கு
நாகமலைத் தீர்த்தமென்பார்
புள்ளை இடுக்கி-நான்
புறந்த எடம் போனாலும்
புள்ளைக்குச் சீருண்டும்
மத்தொரு நாள் தங்கலுண்டும்
பிள்ளைக்குச் சீருமல்ல
பின்னொரு நாள் தங்கலில்ல
மக்களை இடுக்கி நான்
மத்தொரு நாள் போனாலும்
மக்களுக்குச் சீருண்டும்
மத்தொரு நாள் தங்கலுண்டும்
மக்களுக்குச் சீரில்ல
மத்தொரு நாள் தங்கலில்ல

இவளுக்குப் பிள்ளையில்லை, பிள்ளையிருந்து கணவன் இறந்த பின் பிறந்த வீடு போனால் ஒருநாள் தங்கச் சொல்லி பிள்ளைக்கு ஏதாவது சீர் கொடுப்பார்கள். என்னை யார் அழைத்து வீட்டிலிருக்கச் சொல்லுவார்கள் என்று ஏங்குகிறாள். தண்ணீர் கேட்டால் கூட ஒரு கரண்டி நீர் கொடுத்து `இது அபூர்வமான கோயில் தீர்த்தம்` என்று சொல்லுவார்கள். அதற்கு