புகழிமலை

பாடல் 619
தனனதன தான தனனதன தான
தனனதன தான ...... தனதான
மருவுமலர் வாச முறுகுழலி னாலும்
வரிவிழியி னாலு ...... மதியாலும்
மலையினிக ரான இளமுலைக ளாலு
மயல்கள்தரு மாதர் ...... வகையாலும்
கருதுபொரு ளாலு மனைவிமக வான
கடலலையில் மூழ்கி ...... அலைவேனோ
கமலபத வாழ்வு தரமயிலின் மீது
கருணையுட னேமுன் ...... வரவேணும்
அருமறைக ளோது பிரமன்முதல் மாலும்
அமரர்முநி ராசர் ...... தொழுவோனே
அகிலதல மோது நதிமருவு சோலை
அழகுபெறு போக ...... வளநாடா
பொருதவரு சூரர் கிரியுருவ வாரி
புனல்சுவற வேலை ...... யெறிவோனே
புகலரிய தான தமிழ்முநிவ ரோது
புகழிமலை மேவு ...... பெருமாளே.