புதிய பாடல்கள்

bookmark

பாடல் 1323

தனதன தான தனதன தான 
தனதன தான ...... தனதான 

கருவெனு மாயை உருவினில் மூழ்கி 
வயதள வாக ...... நிலமீதில் 
கலைதெரிவாணர் கலைபல நூல்கள் 
வெகுவித மாக ...... கவிபாடித் 
தெருவழி போகி பொருளெனு மாசை 
திரவியம் நாடி ...... நெடிதோடிச் 
சிலைநுதல் மாதர் மயலினில் மூழ்கி 
சிறுவித மாக ...... திரிவேனோ 
அருளநு போக குருபர னேஉன் 
அடியவர் வாழ ...... அருள்வோனே 
அரனிரு காதில் அருள்பர ஞாந 
அடைவினை ஓதி ...... அருள்பாலா 
வெருவிடு சூரர் குலஅடி வேரை 
விழவிடு சாசு ...... வதிபாலா 
மிடலுட லாளர் அடரசுர் மாள 
விடுமயில் வேல ...... பெருமாளே. 

பாடல் 1324

தந்த தனந்த தனத்த தானன 
தந்த தனந்த தனத்த தானன 
தந்த தனந்த தனத்த தானன ...... தனதானா 

தங்க மிகுந்த முலைக்க டாமலை 
பொங்க விரும்பிய முத்து மாலைகள் 
தங்க அணிந்து முறுக்கும் வேசியர் ...... மொழியாலே 
சஞ்ச லமிஞ்சி மயக்கி யேஒரு 
மஞ்ச மிருந்து சுகிக்க வேவளர் 
சந்து சுகந்த முடித்து நூலிடை ...... கிடையாடக் 
கொங்கை குலுங்க வளைத்து வாயத 
ரங்க ளருந்தி ருசிக்க வேமத 
குங்கு மமிஞ்சு கழுத்தி லேகுயி ...... லெனஓசை 
கொண்ட வரிந்த விதத்தி னாடர 
சங்கி லிகொண்டு பிணித்து மாமயில் 
கொஞ்சி மகிழ்ந்த வறட்டு வீணியர் ...... உறவாமோ 
திங்கள் அரும்பு சலத்தி லேவிடம் 
வந்த துகண்டு பயப்ப டாதவர் 
சிந்தை நடுங்கி இருக்க வேமயில் ...... மிசையேறிச் 
சிங்க முகன்தலை வெட்டி மாமுகன் 
அங்க மறுந்து கிடக்க வேவரு 
சிம்பு ளெனும்படி விட்ட வேலுள ...... குருநாதா 
மங்கை மடந்தை கதிக்கு நாயகி 
சங்கரிசுந்தரிஅத்தி யானனை 
மைந்த னெனும்படி பெற்ற ஈசுரி...... தருபாலா 
மந்திர தந்திர முத்த யோகியர் 
அஞ்சலி செங்கை முடிக்க வேஅருள் 
வந்து தரும்படி நித்த மாடிய ...... பெருமாளே.