பூசை முடிவு

அண்ணாவி ஏ கறுப்பா
அடியேன் சிறு குழந்தை
பூசை முடித்தேனிப்போ
போய்ச் சேரும் புண்ணியனே
மன்று முடித்தேனிப்போ
மன்னவரே போய்ச் சேரும்
உள்ளூருத் தேவதைகள்
உங்கள் எல்லை போய்ச் சேரும்
பக்கத்துத் தேவதைகள்
பதி தனக்குப் போய்ச் சேரும்
அண்ணாவி என் குருவே,
அடியேன் மனதிலெண்ணி
பூசை முடித்து விட்டேன்
புண்ணியரே உமதடிமை