பூமாலை

bookmark

அவளுக்குத் திருமணம் நடந்து விட்டது. ஆனால் அவள் விபரம் தெரிந்த பெண்ணாகிய பொழுதல்ல, ஐந்து வயதில்; திருமணத்தையும் ஒரு விளையாட்டு என்று கருதும் பருவத்தில் நடந்து விட்டது. நல்ல கணவனாக இருந்தானென்றால் கவலை இல்லை. ஆனால் அவனோ அவளை மோசம் செய்து விட்டுப் போய் விட்டான். தன்னை ஏன் அவ்வளவு இளவயதிலேயே திருமணம் என்ற பந்தத்தில் சிக்க வைத்து பின் அவனையும் இழந்து துன்பத்தில் ஆழ்த்த வேண்டும்? தந்தையே மகளுக்கு கஷ்டத்தை கொடுக்கலாமா?

கொளத்தருகே வாள் நட்டு
கொலவாள தூலெடுத்து
கொஞ்சத்திலே கோத்த மாலை
குணமில்லா பூ மாலை
ஆத்தருகே வாள நட்டு
அடிவாள நூலெடுத்து
அஞ்சிலே கோத்த மாலே
அழகில்லா பூ மாலை

சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: அரூர், தருமபுரி மாவட்டம்.
-------------