பொதியமலை

பாடல் 630
தத்த தத்த தான தான தத்த தத்த தான தான
தத்த தத்த தான தான ...... தனதான
மைக்க ணிக்கன் வாளி போல வுட்க ளத்தை மாறி நாடி
மட்டு முற்ற கோதை போத ...... முடிசூடி
மத்த கத்தி னீடு கோடு வைத்த தொத்தின் மார்பி னூடு
வட்ட மிட்ட வாரு லாவு ...... முலைமீதே
இக்கு வைக்கு மாடை வீழ வெட்கி யக்க மான பேரை
யெத்தி முத்த மாடும் வாயி ...... னிசைபேசி
எட்டு துட்ட மாதர் பாய லிச்சை யுற்றெ னாக மாவி
யெய்த்து நித்த மான வீன ...... முறலாமோ
துர்க்கை பக்க சூல காளி செக்கை புக்க தாள வோசை
தொக்க திக்க தோத தீத ...... வெனவோதச்
சுற்றி வெற்றி யோடு தாள்கள் சுத்த நிர்த்த மாடு மாதி
சொற்கு நிற்கு மாறு தார ...... மொழிவோனே
திக்கு மிக்க வானி னூடு புக்க விக்க மூடு சூரர்
திக்க முட்டி யாடு தீர ...... வடிவேலா
செச்சை பிச்சி மாலை மார்ப விச்சை கொச்சை மாதி னோடு
செப்பு வெற்பில் சேய தான ...... பெருமாளே.
பாடல் 631
தனத்த தானன தனத்த தானன
தனத்த தானன தனத்த தானன
தனத்த தானன தனத்த தானன ...... தந்ததான
வெடித்த வார்குழல் விரித்து மேல்விழி
விழித்து மேகலை பதித்து வார்தொடு
மிகுத்த மாமுலை யசைத்து நூலின்ம ...... ருங்கினாடை
மினுக்கி யோலைகள் பிலுக்கி யேவளை
துலக்கி யேவிள நகைத்து கீழ்விழி
மிரட்டி யாரையு மழைத்து மால்கொடு ...... தந்தவாய்நீர்
குடித்து நாயென முடக்கு மேல்பிணி
யடுத்த பாதிகள் படுத்த தாய்தமர்
குலத்தர் யாவரு நகைக்க வேயுடல் ...... மங்குவேனைக்
குறித்து நீயரு கழைத்து மாதவர்
கணத்தின் மேவென அளித்து வேல்மயில்
கொடுத்து வேதமு மொருத்த னாமென ...... சிந்தைகூராய்
உடுட்டு டூடுடு டுடுட்டொ டோ வென
திகுத்த தீதிகு திகுர்த்த தாவென
உடுக்கை பேரிகை தவிற்கு ழாமுமி ...... ரங்குபோரில்
உலுத்த நீசர்கள் பதைப்ப மாகரி
துடிப்ப நீள்கட லெரித்து சூர்மலை
யுடைத்து நீதிகள் பரப்பி யேயவ ...... ரும்பராரை
அடைத்த மாசிறை விடுத்து வானுல
களிக்கு மாயிர திருக்க ணானர
சளித்து நாளுமெ னுளத்தி லேமகி ...... ழுங்குமாரா
அளித்த தாதையு மிகுத்த மாமனும்
அனைத்து ளோர்களு மதிக்க வேமகிழ்
அகத்ய மாமுநி பொருப்பின் மேவிய ...... தம்பிரானே.