பொதுப்பாடல்கள் - 10

bookmark

பாடல் 1271

தனதான தான தந்த தனதான தான தந்த 
தனதான தான தந்த ...... தனதான 

மனநூறு கோடி துன்ப நொடிமீதி லேநி னைந்து 
மதனூட லேமு யங்கி ...... யதீருப 
மடமாத ராசை கொண்டு புவிமீதி லேம யங்கி 
மதிசீரெ லாம ழிந்து ...... கொடிதான 
விநன்முடி யேதி ரிந்து புவிமீதி லேயு ழன்று 
விரகான்மெ யேத ளர்ந்து ...... விடுநாளில் 
விசையான தோகை துங்க மயிலேறி யோடி வந்து 
வெளிஞான வீடு தந்து ...... அருள்வாயே 
தினைவேடர் காவல் தங்கு மலைகாடெ லாமு ழன்று 
சிறுபேதை கால்ப ணிந்த ...... குமரேசா 
திரையாழி சேது கண்டு பொருராவ ணேசை வென்ற 
திருமால்மு ராரிதங்கை ...... யருள்பாலா 
முனிவோர்கள் தேவ ரும்பர் சிறையாக வேவ ளைந்த 
மதுசூரர் தானை தங்கள் ...... கிளையோடு 
முடிகோடி தூளெ ழுந்து கழுகோடு பாற ருந்த 
முனைவேலி னாலெ றிந்த ...... பெருமாளே. 

பாடல் 1272

தானதன தனத்ததந்த, தானதன தனத்ததந்த 
தானதன தனத்ததந்த ...... தனதான 

மாதர்மயல் தனிற்கலந்து காமபனி யெனப்புகுந்து 
மாடவிய லெனச்சுழன்று ...... கருவூறி 
மாறிபல வெனச்சுமந்து தேனுகுட மெனத்திரண்டு 
மாதமிது வெனத்தளர்ந்து ...... வெளியாகி 
வேதபுவி தனிற்கழன்று ஏனமென வெனத்தவழ்ந்து 
வீறுமணி களைப்புனைந்து ...... நடைமேலாய் 
வேணவித மெனத்திரிந்து நாறுபுழு குடற்றிமிர்ந்து 
வேசிவலை தனிற்கலந்து ...... மடிவேனோ 
ஆதிசர ணெனக்கயங்கு லாவமுத லையைக்கிடங்கி 
லாரவுடல் தனைப்பிளந்த ...... அரிநேமி 
ஆமைகய லெனச்செயங்கொள் கோலகுற ளரித்தடங்கை 
யானஅர வணைச்சயந்தன் ...... மருகோனே 
சோதியுரு வெனத்திரண்டு கோலஅரு ணையிற்கலந்த 
சோமனணி குடிற்சிலம்ப ...... னருள்பாலா 
தோகைமயி லெனச்சிறந்த ரூபிகுற மகட்கிரங்கி 
தோள்களிறு கிடப்புணர்ந்த ...... பெருமாளே. 

பாடல் 1273

தத்ததன தானனத் தத்ததன தானனத் 
தத்ததன தானனத் ...... தனதான 

முத்துமணி யாரமொய்த் திட்டஇரு கோடுமுற் 
பட்டகரிபோலுமத் ...... தனமாதர் 
முற்றுமதி யார்முகத் துற்றமுனை வேலுறப் 
பட்டுமுகில் போல்மனத் ...... திருள்மூடிச் 
சுத்தமதி போய்வினைத் துட்டனவ னாய்மனத் 
துக்கமுற வேமிகச் ...... சுழலாதே 
சொற்கள்பல நாவினிற் றொட்டுனிரு தாடொழச் 
சொற்கமல வாழ்வுசற் ...... றருள்வாயே 
கொத்துமுடி யானபத் தற்றுவிழ வேகுறிப் 
புற்றஅதி கோபனச் ...... சுதன்மாயன் 
கொற்றமரு காகுறக் கொச்சைமற மாதினுக் 
கிச்சைமொழி கூறுநற் ...... குமரேசா 
பத்தியுட னேநினைத் தெத்துமடி யார்வினைப் 
பற்றுவிடு மாமறைப் ...... பொருளானாய் 
பத்திவர ஞானசொற் கற்றவர்கள் பாடுநற் 
பக்ஷபத தேவர்மெய்ப் ...... பெருமாளே. 

பாடல் 1274

ராகம் – பாகேஸ்ரீ, தாளம் - அங்கதாளம் (5 1/2) 
தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2 

தனதன தானத் தானன தனதன தானத் தானன 
தனதன தானத் தானன ...... தனதான 

முருகம யூரச் சேவக சரவண ஏனற் பூதரி
முகுளப டீரக் கோமள ...... முலைமீதே 
முழுகிய காதற் காமுக பதிபசு பாசத் தீர்வினை 
முதியபு ராரிக் கோதிய ...... குருவேயென் 
றுருகியு மாடிப் பாடியு மிருகழல் நாடிச் சூடியு 
முணர்வினோ டூடிக் கூடியும் ...... வழிபாடுற் 
றுலகினொ ராசைப் பாடற நிலைபெறு ஞானத் தாலினி 
யுனதடி யாரைச் சேர்வது ...... மொருநாளே 
மருகனெ னாமற் சூழ்கொலை கருதிய மாமப் பாதகன் 
வரவிடு மாயப் பேய்முலை ...... பருகாமேல் 
வருமத யானைக் கோடவை திருகிவி ளாவிற் காய்கனி 
மதுகையில் வீழச் சாடிய ...... சதமாபுட் 
பொருதிரு கோரப் பாரிய மருதிடை போயப் போதொரு 
சகடுதை யாமற் போர்செய்து ...... விளையாடிப் 
பொதுவியர் சேரிக் கேவளர் புயல்மரு காவஜ் ராயுத 
புரமதில் மாபுத் தேளிர்கள் ...... பெருமாளே. 

பாடல் 1275

ராகம் - பந்து வராளி, தாளம் - ஆதி 

தானா தனதன தானா தனதன 
தானா தனதன ...... தனதான 

மூலா நிலமதின் மேலே மனதுறு 
மோகா டவிசுடர் ...... தனைநாடி 
மோனா நிலைதனை நானா வகையிலு 
மோதா நெறிமுறை ...... முதல்கூறும் 
லீலா விதமுன தாலே கதிபெற 
நேமா ரகசிய ...... வுபதேசம் 
நநடு ழிதனிலை வாடா மணியொளி 
நீதா பலமது ...... தருவாயே 
நாலா ருசியமு தாலே திருமறை 
நாலா யதுசெப ...... மணிமாலை 
நாடாய் தவரிடர் கேடா வரிகரி
நாரா யணர்திரு ...... மருகோனே 
சூலா திபர்சிவ ஞானார் யமனுதை 
காலார் தரவரு ...... குருநாதா 
தோதீ திகுதிகு தீதீ செகசெக 
சோதீ நடமிடு ...... பெருமாளே. 

பாடல் 1276

தனதனந் தனந்த தனதனந் தனந்த 
தனதனந் தனந்த ...... தனதான 

வரிபரந் திரண்டு நயனமுஞ் சிவந்து 
வதனமண் டலங்கள் ...... குறுவேர்வாய் 
மணிசிலம் பலம்ப அளகமுங் குலைந்து 
வசமழிந் திழிந்து ...... மயல்கூர 
இருதனங் குலுங்க இடைதுவண் டனுங்க 
இனியதொண் டையுண்டு ...... மடவார்தோள் 
இதமுடன் புணர்ந்து மதிமயங் கினும்பொ 
னிலகுநின் பதங்கள் ...... மறவேனே 
விரிபரந் தியங்கு முததியுங் கலங்க 
விடமினும் பிறந்த ...... தெனவானோர் 
வெருவிநெஞ் சமஞ்சி யுரனொடுந் தயங்கி 
விரைபதம் பணிந்து ...... முறையோவென் 
றுரைமறந் துணங்க அயில்தொடும் ப்ரசண்ட 
உயர்தலங் குலுங்க ...... வருதோகை 
ஒருபெருஞ் சிகண்டி மயிலமர்ந் திலங்கி 
உலகமும் புரந்த ...... பெருமாளே. 

பாடல் 1277

தனதன தான தான, தனதன தான தான 
தனதன தான தான ...... தனதான 

வரிவிழி பூச லாட இருகுழை யூச லாட 
வளர்முலை தானு மாட ...... வளையாட 
மணிவட மாலை யாட முருகவி ழோதி யாட 
மதுரமு தூறி வீழ ...... அநுராகம் 
இருவரு மேக போக மொருவர்த மாக மாக 
இதமொடு கூடி மாயை ...... படுபோதும் 
இருகர மாறு மாறு மறுமுக நீப மார்பு 
மிருகழல் தானு நானு ...... மறவேனே 
திருநட மாடு காளி பயிரவி மோடி சூலி 
திரிபுர நீற தாக ...... அனல்மோதுஞ் 
சிவைகயி லாச வாசி மலைமகள் நாரிபாரி
திருமுலை யாயி தாயி ...... யருள்பாலா 
குருபர நாத னாகி யரனொரு காதி லோது 
குணநிதி யாசை நேச ...... முருகோனே 
குறமக ளார பார முகிழ்முலை மீது தாது 
குலவிய மாலை மேவு ...... பெருமாளே. 

பாடல் 1278

ராகம் - ஆனந்த பைரவி, தாளம் - சதுஸ்ர மட்யம் - கண்டநடை (25) 

தனதனன தனதனன தனதனன தனதனன 
தத்தத் தனந்தனம் தத்தத் தனந்தனம் ...... தந்ததான 

விழையுமனி தரையுமுநி வரையுமவ ருயிர் துணிய 
வெட்டிப் பிளந்துளம் பிட்டுப் பறிந்திடுஞ் ...... செங்கண்வேலும் 
விரையளக முகிலுமிள நகையும்ருக மதகனவி 
சித்ரத் தனங்களுந் தித்தித்த தொண்டையும் ...... புண்டாணகச் 
சுழிமடுவு மிடையுமழ கியமகளிர் தருகலவி 
சுட்டித் திரிந்திஙன் தட்டுப் படுங்கொடும் ...... பங்கவாழ்வுந் 
தொலைவில்பிற வியுமகல வொருமவுன பரமசுக 
சுத்தப் பெரும்பதஞ் சித்திக்க அன்புடன் ...... சிந்தியாதோ 
எழுதரிய அறுமுகமு மணிநுதலும் வயிரமிடை 
யிட்டுச் சமைந்தசெஞ் சுட்டிக் கலன்களுந் ...... துங்கநீள்பன் 
னிருகருணை விழிமலரு மிலகுபதி னிருகுழையும் 
ரத்நக் குதம்பையும் பத்மக் கரங்களுஞ் ...... செம்பொனூலும் 
மொழிபுகழு முடைமணியு மரைவடமு மடியிணையு 
முத்தச் சதங்கையுஞ் சித்ரச் சிகண்டியுஞ் ...... செங்கைவேலும் 
முழுதுமழ கியகுமர கிரிகுமரியுடனுருகு 
முக்கட் சிவன்பெருஞ் சற்புத்ர வும்பர்தந் ...... தம்பிரானே. 

பாடல் 1279

தானதன தாத்த தானதன தாத்த 
தானதன தாத்த ...... தனதான 

வீணையிசை கோட்டி யாலமிட றூட்டு
வீரமுனை யீட்டி ...... விழியார்தம் 
வேதனையில் நாட்ட மாகியிடர் பாட்டில் 
வீழுமயல் தீட்டி ...... யுழலாதே 
ஆணியுள வீட்டை மேவியுள மாட்டை 
யாவலுட னீட்டி ...... யழியாதே 
ஆவியுறை கூட்டில் ஞானமறை யூட்டி 
யானநிலை காட்டி ...... யருள்வாயே 
கேணியுற வேட்ட ஞானநெறி வேட்டர் 
கேள்சுறுதி நாட்டி ...... லுறைவோனே 
கீதவிசை கூட்டி வேதமொழி சூட்டு 
கீரரியல் கேட்ட ...... க்ருபைவேளே 
சேணினுயர் காட்டில் வாழுமற வாட்டி 
சீதவிரு கோட்டி ...... லணைவோனே 
சீறவுணர் நாட்டி லாரவழல் மூட்டி 
தேவர்சிறை மீட்ட ...... பெருமாளே. 

பாடல் 1280

தானனா தத்ததன தானனா தத்ததன 
தானனா தத்ததன ...... தனதான 

வேலைவா ளைக்கொடிய ஆலகா லத்தைமதன் 
வீசுபா ணத்தைநிக ...... ரெனலாகும் 
வேதைசா தித்தவிழி மாதரா பத்தில்விளை 
யாடிமோ கித்திரியும் ...... வெருப 
கோலகா லத்தைவிட லாகிமா றக்குணவி 
காரமோ டத்தெளிய ...... அரிதான 
கூறொணா தற்பரம ஞான்ரு பத்தின்வழி 
கூடலா கப்பெருமை ...... தருவாயே 
வாலிமார் பைத்துணிய ஏழ்மரா இற்றுவிழ 
வாளிபோ டக்கருது ...... மநுராமன் 
வானுலோ கத்திலம ரேசனோ லிக்கவளை 
யூதிமோ கித்துவிழ ...... அருள்கூரும் 
நீலமே னிக்குமரு காவுதா ரத்துவரு 
நீசர்வாழ் வைக்களையு ...... மிளையோனே 
நேசமா கக்குறவர் தோகைமா னைப்புணரு 
நீபதோ ளொப்பரிய ...... பெருமாளே. 

பாடல் 1281

ராகம் – அஸாவேரி, தாளம் - ஆதி 
(எடுப்பு - 3/4 இடம்) 

தத்ததன தானத் ...... தனதான 

இத்தரணி மீதிற் ...... பிறவாதே 
எத்தரொடு கூடிக் ...... கலவாதே 
முத்தமிழை யோதித் ...... தளராதே 
முத்தியடி யேனுக் ...... கருள்வாயே 
தத்துவமெய்ஞ் ஞானக் ...... குருநாதா 
சத்தசொரு பாபுத் ...... தமுதோனே 
நித்தியக்ரு தாநற் ...... பெருவாழ்வே 
நிர்த்தஜெக ஜோதிப் ...... பெருமாளே. 

பாடல் 1282

ராகம் - பூர்வி கல்யாணி, தாளம் - மிஸ்ர ஜம்பை (10) 

தந்தந்த தனத்தன தாத்தன ...... தனதான 

என்பந்த வினைத்தொடர் போக்கிவி ...... சையமாகி 
இன்பந்தனை யுற்றும காப்ரிய ...... மதுவாகி 
அன்புந்திய பொற்கிணி பாற்கட ...... லமுதான 
அந்தந்தனி லிச்சைகொ ளாற்பத ...... மருள்வாயே 
முன்புந்தி நினைத்துரு வாற்சிறு ...... வடிவாகி 
முன்திந்தி யெனப்பர தாத்துட ...... னடமாடித் 
தம்பந்த மறத்தவ நோற்பவர் ...... குறைதீரச் 
சம்பந்த னெனத்தமிழ் தேக்கிய ...... பெருமாளே. 

பாடல் 1283

ராகம் – நடபைரவி, தாளம் - திஸ்ர ஏகம் (3) 

தனத்தத் தானத் ...... தனதான 

கருப்பற் றூறிப் ...... பிறவாதே 
கனக்கப் பாடுற் ...... றுழலாதே 
திருப்பொற் பாதத் ...... தநுபூதி 
சிறக்கப் பாலித் ...... தருள்வாயே 
பரப்பற் றாருக் ...... குரியோனே 
பரத்தப் பாலுக் ...... கணியோனே 
திருக்கைச் சேவற் ...... கொடியோனே 
செகத்திற் சோதிப் ...... பெருமாளே. 

பாடல் 1284

ராகம் – ஆரபி, தாளம் - சங்கீர்ண த்ருபுடை /9 0 0 
(எடுப்பு - 1 அக்ஷரம் தள்ளி) 

தனத்த தத்தத் தனத்த தத்தத் தனத்த ...... தனதான 

கருப்பை யிற்சுக் கிலத் துலைத்துற் பவித்து ...... மறுகாதே 
கபட்ட சட்டர்க் கிதத்த சித்ரத் தமிழ்க்க ...... ளுரையாதே 
விருப்ப முற்றுத் துதித்தெ னைப்பற் றெனக்க ...... ருதுநீயே 
வெளிப்ப டப்பற் றிடப்ப டுத்தத் தருக்கி ...... மகிழ்வோனே 
பருப்ப தத்தைத் தொளைத்த சத்திப் படைச்ச ...... மரவேளே 
பணிக்கு லத்தைக் கவர்ப்ப தத்துக் களித்த ...... மயிலோனே 
செருப்பு றத்துச் சினத்தை முற்றப் பரப்பு ...... மிசையோனே 
தினைப்பு னத்துக் குறத்தி யைக்கைப் பிடித்த ...... பெருமாளே. 

பாடல் 1285

ராகம் – வாசஸ்பதி, தாளம் - அங்கதாளம் (7 1/2) 
தகிடதக-2 1/2, தகதிமி-2, தகதிமிதக-3 

தனதனன தானத் ...... தனதான 

கொடியமத வேள்கைக் ...... கணையாலே 
குரைகணெடு நீலக் ...... கடலாலே 
நெடியபுகழ் சோலைக் ...... குயிலாலே 
நிலைமைகெடு மானைத் ...... தழுவாயே 
கடியரவு பூணர்க் ...... கினியோனே 
கலைகள்தெரிமாமெய்ப் ...... புலவோனே 
அடியவர்கள் நேசத் ...... துறைவேலா 
அறுமுகவி நோதப் ...... பெருமாளே. 

பாடல் 1286

தானான தானதனத் ...... தனதான 

கோடான மேருமலைத் ...... தனமானார் 
கோமாள மாவலைக் ...... குழலாதே 
நாடோறு மேன்மைபடைத் ...... திடவேதான் 
நாயேனை யாளநினைத் ...... திடொணாதோ 
ஈடேற ஞானமுரைத் ...... தருள்வோனே 
ஈராறு தோள்கள்படைத் ...... திடுவோனே 
மாடேறு மீசர்தமக் ...... கினியோனே 
மாதானை யாறுமுகப் ...... பெருமாளே. 

பாடல் 1287

ராகம் – சாரங்கா, தாளம் - அங்கதாளம் (8 1/2) 
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமிதக-3 

தனன தத்தன தாத்தன ...... தனதான 

சமய பத்தி வ்ருதாத்தனை ...... நினையாதே 
சரண பத்ம சிவார்ச்சனை ...... தனைநாடி 
அமைய சற்குரு சாத்திர ...... மொழிநூலால் 
அருளெ னக்கினி மேற்றுனை ...... தருவாயே 
உமைமுலைத்தரு பாற்கொடு ...... அருள்கூறி 
உரிய மெய்த்தவ மாக்கிந ...... லுபதேசத் 
தமிழ்த னைக்கரை காட்டிய ...... திறலோனே 
சமண ரைக்கழு வேற்றிய ...... பெருமாளே. 

பாடல் 1288

தனதன தாத்தனத் ...... தனதான 

சருவிய சாத்திரத் ...... திரளான 
சடுதிக ழாஸ்பதத் ...... தமையாத 
அருமறை யாற்பெறற் ...... கரிதாய 
அனிதய வார்த்தையைப் ...... பெறுவேனோ 
நிருதரை மூக்கறுத் ...... தெழுபார 
நெடுதிரை யார்ப்பெழப் ...... பொருதோனே 
பொருளடி யாற்பெறக் ...... கவிபாடும் 
புலவரு சாத்துணைப் ...... பெருமாளே. 

பாடல் 1289

தனத்தத் தானன ...... தனதான 

சினத்துச் சீறிய ...... வழிகாணச் 
சிரித்துப் பேசியு ...... மயல்பூண 
கனத்துப் போர்செயு ...... முலைதோணக் 
கலைக்குட் பாதியு ...... மறைவாக 
மனத்துக் காறுதல் ...... வருமாறு 
மலைப்பப் பேணியு ...... மிகவாய 
தனத்தைச் சூறைகொள் ...... மடவார்தம் 
சதிக்குப் போம்வழி ...... தவிர்வேனோ 
தெனத்தத் தாதென ...... எனவேபண் 
திருத்தத் தோடளி ...... யிசைபாடும் 
புனத்துக் காவல்கொள் ...... குறமாதின் 
புணர்ச்சிக் கேயொரு ...... வழிதேடி 
இனத்துக் காவல ...... ரறியாமல் 
இணக்கித் தோகையை ...... மகிழ்வோயென் 
றெனக்குத் தாளிணை ...... யருள்வாய்சூர் 
இறக்கப் போர்செய்த ...... பெருமாளே. 

பாடல் 1290

தானத் தானன ...... தந்ததான 

தீதுற் றேயெழு ...... திங்களாலே 
தீயைத் தூவிய ...... தென்றலாலே 
போதுற் றாடும ...... நங்கனாலே 
போதப் பேதைந ...... லங்கலாமோ 
வேதத் தோனைமு ...... னிந்தகோவே 
வேடப் பாவைவி ...... ரும்புமார்பா 
ஓதச் சூதமெ ...... றிந்தவேலா 
ஊமைத் தேவர்கள் ...... தம்பிரானே. 

பாடல் 1291

ராகம் – ஹம்ஸாநந்தி, தாளம் - அங்கதாளம் (7 1/2) 
தகிட-1 1/2, தக-1, தகதிமி-2, தகதிமிதக-3 

தய்யதன தானத் ...... தனதான 

துள்ளுமத வேள்கைக் ...... கணையாலே 
தொல்லைநெடு நீலக் ...... கடலாலே 
மெள்ளவரு சோலைக் ...... குயிலாலே 
மெய்யுருகு மானைத் ...... தழுவாயே 
தெள்ளுதமிழ் பாடத் ...... தெளிவோனே 
செய்யகும ரேசத் ...... திறலோனே 
வள்ளல்தொழு ஞானக் ...... கழலோனே 
வள்ளிமண வாளப் ...... பெருமாளே. 

பாடல் 1292

தானதனத் ...... தனதான 

தேனியல்சொற் ...... கணிமாதர் 
சேவைதனைக் ...... கருதாதே 
யானெனதற் ...... றிடுபோதம் 
யானறிதற் ...... கருள்வாயே 
வானவருக் ...... கரசான 
வாசவனுக் ...... கினியோனே 
ஆனைமுகற் ...... கிளையோனே 
ஆறுமுகப் ...... பெருமாளே. 

பாடல் 1293

தானதன தானனத் ...... தனதான 

நாரியர்க ளாசையைக் ...... கருதாதே 
நானுனிரு பாதபத் ...... மமுநாட 
ஆரமுத மானசர்க் ...... கரைதேனே 
ஆனஅநு பூதியைத் ...... தருவாயே 
காரணம தானவுத் ...... தமசீலா 
கானகுற மாதினைப் ...... புணர்வோனே 
சூரர்கிளை தூளெழப் ...... பொரும்வேலா 
தோகைமயில் வாகனப் ...... பெருமாளே. 

பாடல் 1294

ராகம் – கமாஸ், தாளம் - அங்கதாளம் (6 1/2) 
தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமிதக-3 

தான தனத்த ...... தனதான 

நாளு மிகுத்த ...... கசிவாகி 
ஞான நிருத்த ...... மதைநாடும் 
ஏழை தனக்கு ...... மநுபூதி 
ராசி தழைக்க ...... அருள்வாயே 
பூளை யெருக்கு ...... மதிநாக 
பூண ரளித்த ...... சிறியோனே 
வேளை தனக்கு ...... சிதமாக 
வேழ மழைத்த ...... பெருமாளே. 

பாடல் 1295

ராகம் – கந்தலவராளி, தாளம் - அங்கதாளம் (8 1/2) 
தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1, தகிட-1 1/2, தகதிமிதக-3 

தத்தனத் தனனதத்த ...... தனதான 

நித்தமுற் றுனைநினைத்து ...... மிகநாடி 
நிட்டைபெற் றியல்கருத்தர் ...... துணையாக 
நத்தியு தமதவத்தி ...... னெறியாலே 
லக்யலக் கணநிருத்த ...... மருள்வாயே 
வெற்றிவிக் ரமவரக்கர் ...... கிளைமாள 
விட்டநத் துகரனுக்கு ...... மருகோனே 
குற்றமற் றவருளத்தி ...... லுறைவோனே 
குக்குடக் கொடிதரித்த ...... பெருமாளே. 

பாடல் 1296

ராகம் - சாரங்கா / குறிஞ்சி , தாளம் - அங்கதாளம் (8)
லகு - தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2, தக-1, திமிதக-2 

தானந்த தானத்தம் ...... தனதான 

நீலங்கொள் மேகத்தின் ...... மயில்மீதே 
நீவந்த வாழ்வைக்கண் ...... டதனாலே 
மால்கொண்ட பேதைக்குன் ...... மணநாறும் 
மார்தங்கு தாரைத்தந் ...... தருள்வாயே 
வேல்கொண்டு வேலைப்பண் ...... டெறிவோனே 
வீரங்கொள் சூரர்க்குங் ...... குலகாலா 
நாலந்த வேதத்தின் ...... பொருளோனே 
நானென்று மார்தட்டும் ...... பெருமாளே. 

பாடல் 1297

ராகம் – கானடா, தாளம் - சதுஸ்ர ஜம்பை (7) 

தத்தத் தனான ...... தனதான 

பட்டு படாத ...... மதனாலும் 
பக்கத்து மாதர் ...... வசையாலும் 
சுட்டுச் சுடாத ...... நிலவாலும் 
துக்கத்தி லாழ்வ ...... தியல்போதான் 
தட்டுப் படாத ...... திறல்வீரா 
தர்க்கித்த சூரர் ...... குலகாலா 
மட்டுப் படாத ...... மயிலோனே 
மற்றொப்பி லாத ...... பெருமாளே. 

பாடல் 1298

ராகம் – ராமப்பரியா, தாளம் - திஸ்ர ஏகம் (3) 

தனனத் தத்தன ...... தனதான 

பரவைக் கெத்தனை ...... விசைதூது 
பகரற் குற்றவ ...... ரெனமாணுன் 
மரபுக் குச்சித ...... ப்ரபுவாக 
வரமெத் தத்தர ...... வருவாயே 
கரடக் கற்பக ...... னிளையோனே 
கலைவிற் கட்குற ...... மகள்கேள்வா 
அரனுக் குற்றது ...... புகல்வோனே 
அயனைக் குட்டிய ...... பெருமாளே. 

பாடல் 1299

ராகம் – கல்யாணி, தாளம் - அங்கதாளம் (8) கண்டஜம்பை
தகிட-1 1/2, தக-1, தகிட-1 1/2, தக-1, தகதிமிதக-3 

தனதனன தாத்தனத் ...... தனதான 

பிறவியலை யாற்றினிற் ...... புகுதாதே 
பிரகிருதி மார்க்கமுற் ...... றலையாதே 
உறுதிகுரு வாக்கியப் ...... பொருளாலே 
உனதுபத காட்சியைத் ...... தருவாயே 
அறுசமய சாத்திரப் ...... பொருளோனே 
அறிவுளறி வார்க்குணக் ...... கடலோனே 
குறுமுனிவ னேத்துமுத் ...... தமிழோனே 
குமரகுரு கார்த்திகைப் ...... பெருமாளே. 

பாடல் 1300

ராகம் – ஆபோகி, தாளம் - அங்கதாளம் (9) 
தகிடதக-2 1/2, தகதமி-2, தகிட-1 1/2, தகதிமிதக-3 

தத்தனத் தாத்தத் தாத்த ...... தனதான 

புத்தகத் தேட்டிற் றீட்டி ...... முடியாது 
பொற்புறக் கூட்டிக் காட்டி ...... யருள்ஞான 
வித்தகப் பேற்றைத் தேற்றி ...... யருளாலே 
மெத்தெனக் கூட்டிக் காக்க ...... நினைவாயே 
தத்தைபுக் கோட்டிக் காட்டி ...... லுறைவாளைச் 
சற்கரித் தேத்திக் கீர்த்தி ...... பெறுவோனே 
கைத்தலத் தீக்குப் பார்த்து ...... நுழையாத 
கற்பகத் தோப்புக் காத்த ...... பெருமாளே. 

பாடல் 1301

தன்ன தனந்தன ...... தனதான 

பொன்னை விரும்பிய ......பொதுமாதர் 
புன்மை விரும்பியெ ...... தடுமாறும் 
என்னை விரும்பிநி ...... யொருகால்நின் 
எண்ணி விரும்பவு ...... மருள்வாயே 
மின்னை விரும்பிய ...... சடையாளர் 
மெய்யின் விரும்பிய ...... குருநாதா 
அன்னை விரும்பிய ...... குறமானை 
அண்மி விரும்பிய ...... பெருமாளே. 

பாடல் 1302

ராகம் – ராமப்ரியா, தாளம் - திஸ்ர ஏகம் (3) 

தனனத்த தத்த ...... தனதான 

மனைமக்கள் சுற்ற ...... மெனுமாயா 
வலையைக்க டக்க ...... அறியாதே 
வினையிற்செ ருக்கி ...... யடிநாயேன் 
விழலுக்கி றைத்து ...... விடலாமோ 
சுனையைக்க லக்கி ...... விளையாடு 
சொருபக்கு றத்தி ...... மணவாளா 
தினநற்ச ரித்ர ...... முளதேவர் 
சிறைவெட்டிவிட்ட ...... பெருமாளே. 

பாடல் 1303

ராகம் – குறிஞ்சி, தாளம் - அங்கதாளம் (8 1/2) 
தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகதிமி-2 

தானனா தானன ...... தந்ததான 

வாரிமீ தேயெழு ...... திங்களாலே 
மாரவே ளேவிய ...... அம்பினாலே 
பாரெலா மேசிய ...... பண்பினாலே 
பாவியே னாவிம ...... யங்கலாமோ 
சூரனீள் மார்புதொ ...... ளைந்தவேலா 
சோதியே தோகைய ...... மர்ந்தகோவே 
மூரிமால் யானைம ...... ணந்தமார்பா 
மூவர்தே வாதிகள் ...... தம்பிரானே. 

பாடல் 1304

ராகம் - பூர்வி கல்யாணி, தாளம் - சதுஸ்ர ரூபகம் - 2 களை (12) 

தானத் தத்தத் தத்தன தத்தத் ...... தனதான 

வானப் புக்குப் பற்றும ருத்துக் ...... கனல்மேவு 
மாயத் தெற்றிப் பொய்க்குடி லொக்கப் ...... பிறவாதே 
ஞானச் சித்திச் சித்திர நித்தத் ...... தமிழாலுன் 
நாமத் தைக்கற் றுப்புகழ் கைக்குப் ...... புரிவாயே 
கானக் கொச்சைச் சொற்குற விக்குக் ...... கடவோனே 
காதிக் கொற்றப் பொற்குல வெற்பைப் ...... பொரும்வேலா 
தேனைத் தத்தச் சுற்றிய செச்சைத் ...... தொடையோனே 
தேவச் சொர்க்கச் சக்கிர வர்த்திப் ...... பெருமாளே. 

பாடல் 1305

தனதன தனதன தனன தனதன
தனதன தனதன தனன தனதன
தந்தத் தனந்ததன தந்தத் தனந்ததன
தனதன தனதன தனன தனதன

தனதன தனதன தனன தனதன
தந்தத் தனந்ததன தந்தத் தனந்ததன ...... தனதான

குருபர சரவண பவசண் முககுக 
ஒருபர வயமியல் எயினர் மகள்சுக 
மண்டத் தனங்கள்புணர் சண்டத் திரண்டபுஜ 
உழுவைகள் கரடிகள் கிடிகள் பகடுகள் 
இளைகளை நெறுநெறு நெறென உலவுவி 
லங்கற்குறிஞ்சியுறைதொங்கற்கடம்ப ...... அருள் தருவாயே 

... அடிபடு முரசு தவில்பட 
கந்தக்கை துந்துமித டந்தப்பு டன் சலிகை 
... கரடிகை யறைபறை திமிலை …… அபிநவ 
சங்கொற்றை கொம்புகுழல் வங்கக் கருங்கடல் கொள் 
பிரளய மிதுவென அதிர உலகர்கள் 
அரகர சிவசிவ அபய மபயமெ 
னுஞ்சத்த மெங்குமெழ வெஞ்சத்தி கொண்டுபடை ...... புகவானோர் 

... வனச மலர்நிகர், செம்பொற் சதங்கையடி யன்பர்க்கு வந்துதவு ...... பெருமாளே.