பொதுப்பாடல்கள் - 3

பாடல் 1056
தனன தனன தாத்தன, தனன தனன தாத்தன
தனன தனன தாத்தன ...... தனதான
மகளு மனைவி தாய்க்குல மணையு மனைவர் வாக்கினில்
மறுகி புறமு மார்த்திட ...... வுடலூடே
மருவு முயிரை நோக்கமு மெரியை யுமிழ ஆர்ப்பவ
ருடனு மியமன் மாட்டிட ...... அணுகாமுன்
உகமு முடிவு மாச்செலு முதய மதியி னோட்டமு
முளது மிலது மாச்சென ...... வுறைவோரும்
உருகு முரிமை காட்டிய முருக னெனவு நாக்கொடு
உனது கழல்கள் போற்றிட ...... அருள்தாராய்
புகல வரிய போர்ச்சிலை விரக விசைய னாற்புக
ழுடைய திருத ராட்டிர ...... புதல்வோர்தம்
புரவி கரிகள் தேர்ப்படை மடிய அரசை மாய்த்துயர்
புவியின் விதன மாற்றினர் ...... மருகோனே
மிகவு மலையு மாக்கடல் முழுது மடிய வேற்றுரு
வெனவு மருவி வேற்கொடு ...... பொருசூரன்
விரைசெய் நெடிய தோட்கன அடலுமுருவ வேற்படை
விசைய முறவும் வீக்கிய ...... பெருமாளே.
பாடல் 1057
தனன தாத்தன தனன தாத்தன
தனன தாத்தன ...... தந்ததான
குடரு நீர்க்கொழு மலமு மீத்தொரு
குறைவி லாப்பல ...... என்பினாலுங்
கொடிய நோய்க்கிட மெனவு நாட்டிய
குடிலி லேற்றுயி ...... ரென்றுகூறும்
வடிவி லாப்புல மதனை நாட்டிடு
மறலி யாட்பொர ...... வந்திடாமுன்
மதியு மூத்துன தடிக ளேத்திட
மறுவிலாப் பொருள் ...... தந்திடாதோ
கடிய காட்டக முறையும் வேட்டுவர்
கருதொ ணாக்கணி ...... வெங்கையாகிக்
கழைசெய் தோட்குற மயிலை வேட்டுயர்
களவி னாற்புணர் ...... கந்தவேளே
முடுகி மேற்பொரு மசுர ரார்ப்பெழ
முடிய வேற்கொடு ...... வென்றவீரா
முடிய லாத்திரு வடிவை நோக்கிய
முதிய மூர்த்திகள் ...... தம்பிரானே.
பாடல் 1058
ராகம் – ஹம்ஸத்வனி, தாளம் - மிஸ்ரசாபு (3 1/2)
தகிடதகதிமி-3 1/2
தனன தாத்தன தனன தாத்தன
தனன தாத்தன ...... தந்ததான
பொதுவ தாய்த்தனி முதல தாய்ப்பகல்
இரவு போய்ப்புகல் ...... கின்றவேதப்
பொருள தாய்ப்பொருள் முடிவ தாய்ப்பெரு
வெளிய தாய்ப்புதை ...... வின்றியீறில்
கதிய தாய்க்கரு தரிய தாய்ப்பரு
கமுத மாய்ப்புல ...... னைந்துமாயக்
கரண மாய்த்தெனை மரண மாற்றிய
கருணை வார்த்தையி ...... ருந்தவாறென்
உததி கூப்பிட நிருத ரார்ப்பெழ
உலகு போற்றிட ...... வெங்கலாப
ஒருப ராக்ரம துரக மோட்டிய
வுரவ கோக்கிரி...... நண்பவானோர்
முதல்வ பார்ப்பதி புதல்வ கார்த்திகை
முலைகள் தேக்கிட ...... வுண்டவாழ்வே
முளரிபாற்கடல் சயில மேற்பயில்
முதிய மூர்த்திகள் ...... தம்பிரானே.
பாடல் 1059
ராகம் – பாகேஸ்ரீ, தாளம் - மிஸ்ரஅட (18) (/7/7 00)
தகிடதகதிமி-3 1/2, தகிடதகதிமி-3 1/2
(முதல் லகு)
தனன தாத்தன தனன தாத்தன
தானா தானா தானா தானா ...... தனதான
கவடு கோத்தெழு முவரிமாத்திறல்
காய்வேல் பாடே னாடேன் வீடா ...... னதுகூட
கருணை கூர்ப்பன கழல்க ளார்ப்பன
கால்மேல் வீழேன் வீழ்வார் கால்மீ ...... தினும்வீழேன்
தவிடி னார்ப்பத மெனினு மேற்பவர்
தாழா தீயேன் வாழா தேசா ...... வதுசாலத்
தரமு மோக்ஷமு மினியெ னாக்கைச
தாவா மாறே நீதா னாதா ...... புரிவாயே
சுவடு பார்த்தட வருக ராத்தலை
தூளா மாறே தானா நாரா ...... யணனேநற்
றுணைவ பாற்கடல் வனிதை சேர்ப்பது
ழாய்மார் பாகோ பாலா காவா ...... யெனவேகைக்
குவடு கூப்பிட வுவண மேற்கன
கேர்டு தாவா னேபோ தாள்வான் ...... மருகோனே
குலிச பார்த்திப னுலகு காத்தருள்
கோவே தேவே வேளே வானோர் ...... பெருமாளே.
பாடல் 1060
ராகம் – ஸஹானா, தாளம் - மிஸ்ரஅட (18) (17 17 00)
(முதல் லகு)
தகிடதகதிமி-3 1/2, தகிடதகதிமி-3 1/2
தனன தாத்தன தனன தாத்தன
தானா தானா தானா தானா ...... தனதான
பருதி யாய்ப்பனி மதிய மாய்ப்படர்
பாராய் வானாய் நீர்தீ காலா ...... யுடுசாலம்
பலவு மாய்ப்பல கிழமை யாய்ப் பதி
னாலா றேழா மேனா ளாயே ...... ழுலகாகிச்
சுருதி யாய்ச்சுரு திகளின் மேற்சுட
ராய்வே தாவாய் மாலாய் மேலே ...... சிவமான
தொலைவி லாப்பொரு ளிருள்பு காக்கழல்
சூடா நாடா ஈடே றாதே ...... சுழல்வேனோ
திருத ராட்டிர னுதவு நூற்றுவர்
சேணா டாள்வா னாளோர் மூவா ...... றினில்வீழத்
திலக பார்த்தனு முலகு காத்தருள்
சீரா மாறே த்ருர் கோமான் ...... மருகோனே
குருதி வேற்கர நிருத ராஷத
கோபா நீபா குதா ளாமா ...... மயில்வீரா
குலிச பார்த்திப னுலகு காத்தருள்
கோவே தேவே வேளே வானோர் ...... பெருமாளே.
பாடல் 1061
தனன தாத்தன தனன தாத்தன
தானா தானா தானா தானா ...... தனதான
முதலி யாக்கையு மிளமை நீத்தற
மூவா தாரா காவா தாரா ...... எனஞாலம்
முறையி டாப்படு பறைக ளார்த்தெழ
மூடா வீடு டேகேள் கோகோ ...... எனநோவ
மதலை கூப்பிட மனைவி கூப்பிட
மாதா மோதா வீழா வாழ்வே ...... யெனமாய
மறலி யூர்ப்புகு மரண யாத்திரை
வாரா வானாள் போநாம் நீமீ ...... ளெனவேணும்
புதல றாப்புன எயினர் கூக்குரல்
போகா நாடார் பாரா வாரா ...... ரசுரோடப்
பொருது தாக்கிய வயப ராக்ரம
பூபா லாநீ பாபா லாதா ...... தையுமோதுங்
குதலை வாய்க்குரு பரச டாக்ஷர
கோடா ரூபா ரூபா பாரீ...... சதவேள்விக்
குலிச பார்த்திப னுலகு காத்தருள்
கோவே தேவே வேளே வானோர் ...... பெருமாளே.
பாடல் 1062
தனன தாத்தன தனன தாத்தன
தானா தானா தானா தானா ...... தனதான
வருக வீட்டெனும் விரகர் நேத்திரம்
வாளோ வேலோ சேலோ மானோ ...... எனுமாதர்
மனது போற்கரு கினகு வாற்குழல்
வானோ கானோ மாயா மாயோன் ...... வடிவேயோ
பருகு பாற்கடல் முருகு தேக்கிய
பாலோ தேனோ பாகோ வானோ ...... ரமுதேயோ
பவள வாய்ப்பனி மொழியெ னாக்கவி
பாடா நாயே னீடே றாதே ...... யொழிவேனோ
அருகு பார்ப்பதி யுருகி நோக்கவொ
ரால்கீழ் வாழ்வார் வாழ்வே கோகோ ...... வெனஏகி
அவுணர் கூப்பிட வுததி தீப்பட
ஆகா சூரா போகா தேமீ ...... ளெனவோடிக்
குருகு பேர்க்கிரியுருவ வோச்சிய
கூர்வே லாலே யோர்வா ளாலே ...... அமராடிக்
குலிச பார்த்திப னுலகு காத்தருள்
கோவே தேவே வேளே வானோர் ...... பெருமாளே.
பாடல் 1063
தனன தாத்தன தனன தாத்தன
தானா தானா தானா தானா ...... தனதான
மறலி போற்சில நயன வேற்கொடு
மாயா தோயா வேயார் தோளார் ...... மறையோதும்
வகையு மார்க்கமு மறமு மாய்த்திட
வாறா ராயா தேபோ மாறா ...... திடதீர
விறலு மேற்பொலி அறிவு மாக்கமும்
வேறாய் நீரே றாதோர் மேடாய் ...... வினையூடே
விழுவி னாற்களை யெழும தாற்பெரு
வீரா பாராய் வீணே மேவா ...... தெனையாளாய்
மறலி சாய்த்தவ ரிறைப ராக்ரம
மால்கா ணாதே மாதோ டேவாழ் ...... பவர்சேயே
மறுவி லாத்திரு வடிக ணாட்டொறும்
வாயார் நாவால் மாறா தேயோ ...... தினர்வாழ்வே
குறவர் காற்புன அரிவை தோட்கன
கோடார் மார்பா கூர்வே லாலே ...... அசுரேசர்
குலைய மாக்கட லதனி லோட்டிய
கோவே தேவே வேளே வானோர் ...... பெருமாளே.
பாடல் 1064
தனன தனன தனன தனன
தனன தனன ...... தனதான
குருதி யொழுகி யழுகு மவல
குடிலை யினிது ...... புகலாலே
குலவு மினிய கலவி மகளிர்
கொடிய கடிய ...... விழியாலே
கருது மெனது விரக முழுது
கலக மறலி ...... அழியாமுன்
கனக மயிலி னழகு பொழிய
கருணை மருவி ...... வரவேணும்
பரிதி சுழல மருவு கிரியை
பகிர எறிசெய் ...... பணிவேலா
பணில வுததி யதனி லசுரர்
பதியை முடுக ...... வரும்வீரா
இரதி பதியை யெரிசெய் தருளு
மிறைவர் குமர ...... முருகோனே
இலகு கமல முகமு மழகு
மெழுத வரிய ...... பெருமாளே.
பாடல் 1065
தனன தனன தனன தனன
தனன தனன ...... தனதான
துயர மறுநின் வறுமை தொலையு
மொழியு மமிர்த ...... சுரபானம்
சுரபி குளிகை யெளிது பெறுக
துவளு மெமது ...... பசிதீரத்
தயிரு மமுது மமையு மிடுக
சவடி கடக ...... நெளிகாறை
தருக தகடொ டுருக எனுமி
விரகு தவிர்வ ...... தொருநாளே
உயரு நிகரில் சிகரிமிடறு
முடலு மவுணர் ...... நெடுமார்பும்
உருவ மகர முகர திமிர
வுததி யுதர ...... மதுபீற
அயரு மமரர் சரண நிகள
முறிய எறியு ...... மயில்வீரா
அறிவு முரமு மறமு நிறமு
மழகு முடைய ...... பெருமாளே.
பாடல் 1066
தனன தனன தனன தனன
தனன தனன ...... தனதான
பணிகள் பணமு மணிகொள் துகில்கள்
பழைய அடிமை ...... யொடுமாதும்
பகரிலொருவர் வருக அரிய
பயண மதனி ...... லுயிர்போகக்
குணமு மனமு முடைய கிளைஞர்
குறுகி விறகி ...... லுடல்போடாக்
கொடுமை யிடுமு னடிமை யடிகள்
குளிர மொழிவ ...... தருள்வாயே
இணையி லருணை பழநி கிழவ
இளைய இறைவ ...... முருகோனே
எயினர் வயினின் முயலு மயிலை
யிருகை தொழுது ...... புணர்மார்பா
அணியொ டமரர் பணிய அசுரர்
அடைய மடிய ...... விடும்வேலா
அறிவு முரமு மறமு நிறமு
மழகு முடைய ...... பெருமாளே.
பாடல் 1067
தந்த தனன தந்த தனன
தந்த தனன ...... தனதான
மைந்த ரினிய தந்தை மனைவி
மண்டி யலறி ...... மதிமாய
வஞ்ச விழிகள் விஞ்சு மறலி
வன்கை யதனி ...... லுறுபாசந்
தந்து வளைய புந்தி யறிவு
தங்கை குலைய ...... உயிர்போமுன்
தம்ப முனது செம்பொ னடிகள்
தந்து கருணை ...... புரிவாயே
மந்தி குதிகொ ளந்தண் வரையில்
மங்கை மருவு ...... மணவாளா
மண்டு மசுரர் தண்ட முடைய
அண்டர் பரவ ...... மலைவோனே
இந்து நுதலு மந்த முகமு
மென்று மினிய ...... மடவார்தம்
இன்பம் விளைய அன்பி னணையு
மென்று மிளைய ...... பெருமாளே.
பாடல் 1068
ராகம் – மணிரங்கு, தாளம் - ஆதி
தனனா தனத்த தனனா தனத்த
தனனா தனத்த ...... தனதான
ஒழுகூ னிரத்த மொடுதோ லுடுத்தி
உயர்கால் கரத்தி ...... னுருவாகி
ஒருதாய் வயிற்றி னிடையே யுதித்து
உழல்மாய மிக்கு ...... வருகாயம்
பழசா யிரைப்பொ டிளையா விருத்த
பரிதாப முற்று ...... மடியாமுன்
பரிவா லுளத்தில் முருகா எனச்சொல்
பகர்வாழ் வெனக்கு ...... மருள்வாயே
எழுவா னகத்தி லிருநாலு திக்கில்
இமையோர் தமக்கு ...... மரசாகி
எதிரேறு மத்த மதவார ணத்தில்
இனிதேறு கொற்ற ...... முடன்வாழுஞ்
செழுமா மணிப்பொ னகர்பாழ் படுத்து
செழுதீ விளைத்து ...... மதிள்கோலித்
திடமோ டரக்கர் கொடுபோ யடைத்த
சிறைமீள விட்ட ...... பெருமாளே.
பாடல் 1069
தனனா தனத்த தனனா தனத்த
தனனா தனத்த ...... தனதான
கருவாய் வயிற்றி லுருவா யுதித்து
முருகாய் மனக்க ...... வலையோஆட
கலைநூல் பிதற்றி நடுவே கறுத்த
தலைபோய் வெளுத்து ...... மரியாதே
இருபோது மற்றை யொருபோது மிட்ட
கனல்மூழ்கி மிக்க ...... புனல்மூழ்கி
இறவாத சுத்த மறையோர் துதிக்கு
மியல்போத கத்தை ...... மொழிவாயே
அருமாத பத்தஅமரா பதிக்கு
வழிமூடி விட்ட ...... தனைமீள
அயிரா வதத்து விழியா யிரத்த
னுடனே பிடித்து ...... முடியாதே
திருவான கற்ப தருநா டழித்து
விபுதேசர் சுற்ற ...... மவைகோலித்
திடமோ டரக்கர் கொடுபோ யடைத்த
சிறைமீள விட்ட ...... பெருமாளே.
பாடல் 1070
தனத்த தந்தனம் தனத்த தந்தனம்
தனத்த தந்தனம் ...... தனதான
புரக்க வந்தநங் குறக்க ரும்பைமென்
புனத்தி லன்றுசென் ...... றுறவாடிப்
புடைத்த லங்க்ருதம் படைத்தெ ழுந்ததிண்
புதுக்கு ரும்பைமென் ...... புயமீதே
செருக்க நெஞ்சகங் களிக்க அன்புடன்
திளைக்கு நின்திறம் ...... புகலாதிந்
த்ரியக்க டஞ்சுமந் தலக்கண் மண்டிடுந்
தியக்க மென்றொழிந் ...... திடுவேனோ
குரக்கி னங்கொணர்ந் தரக்கர் தண்டமுங்
குவட்டி லங்கையுந் ...... துகளாகக்
கொதித்த கொண்டலுந் த்ரியக்ஷ ருங்கடங்
கொதித்து மண்டுவெம் ...... பகையோடத்
துரக்கும் விம்பகிம் புரிப்ர சண்டசிந்
துரத்த னும்பிறந் ...... திறவாத
சுகத்தி லன்பருஞ் செகத்ர யங்களுந்
துதிக்கு மும்பர்தம் ...... பெருமாளே.
பாடல் 1071
தனத்த தந்தனம் தனத்த தந்தனம்
தனத்த தந்தனம் ...... தனதான
பெருக்க நெஞ்சுவந் துருக்கு மன்பிலன்
ப்ரபுத்த னங்கள்பண் ...... பெணுநாணும்
பிழைக்க வொன்றிலன் சிலைக்கை மிண்டர்குன்
றமைத்த பெண்தனந் ...... தனையாரத்
திருக்கை கொண்டணைந் திடச்செல் கின்றநின்
திறத்தை யன்புடன் ...... தெளியாதே
சினத்தில் மண்டிமிண் டுரைக்கும் வம்பனென்
திருக்கு மென்றொழிந் ...... திடுவேனோ
தருக்கி யன்றுசென் றருட்க ணொன்றரன்
தரித்த குன்றநின் ...... றடியோடுந்
தடக்கை கொண்டுவந் தெடுத்த வன்சிரந்
தறித்த கண்டனெண் ...... டிசையோருஞ்
சுருக்க மின்றிநின் றருக்க னிந்திரன்
துணைச்செய் கின்றநின் ...... பதமேவும்
சுகத்தி லன்பருஞ் செகத்ர யங்களுந்
துதிக்கு மும்பர்தம் ...... பெருமாளே.
பாடல் 1072
ராகம் – வஸந்தா, தாளம் - சதுஸ்ர அட (12)
தனந்த தானந் தந்தன தனதன ...... தனதான
இருந்த வீடுங் கொஞ்சிய சிறுவரு ...... முறுகேளும்
இசைந்த வூரும் பெண்டிரு மிளமையும் ...... வளமேவும்
விரிந்த நாடுங் குன்றமு நிலையென ...... மகிழாதே
விளங்கு தீபங் கொண்டுனை வழிபட ...... அருள்வாயே
குருந்தி லேருங் கொண்டலின் வடிவினன் ...... மருகோனே
குரங்கு லாவுங் குன்றுறை குறமகள் ...... மணவாளா
திருந்த வேதந் தண்டமிழ் தெரிதரு ...... புலவோனெ
சிவந்த காலுந் தண்டையு மழகிய ...... பெருமாளே.
பாடல் 1073
தனந்த தானந் தந்தன தனதன ...... தனதான
கலந்த மாதுங் கண்களி யுறவரு ...... புதல்வோருங்
கலங்கி டாரென் றின்பமு றுலகிடை ...... கலிமேவி
உலந்த காயங் கொண்டுள முறுதுய ...... ருடன்மேவா
உகந்த பாதந் தந்துனை யுரைசெய ...... அருள்வாயே
மலர்ந்த பூவின் மங்கையை மருவரி...... மருகோனே
மறஞ்செய் வார்தம் வஞ்சியை மருவிய ...... மணவாளா
சிலம்பி னோடுங் கிண்கிணி திசைதொறும் ...... ஒலிவீசச்
சிவந்த காலுந் தண்டையு மழகிய ...... பெருமாளே.
பாடல் 1074
தனந்த தானந் தனதன தானன ...... தனதான
இசைந்த ஏறுங் கரியுரிபோர்வையும் ...... எழில்நீறும்
இலங்கு நூலும் புலியத ளாடையு ...... மழுமானும்
அசைந்த தோடுஞ் சிரமணி மாலையு ...... முடிமீதே
அணிந்த ஈசன் பரிவுடன் மேவிய ...... குருநாதா
உசந்த சூரன் கிளையுடன் வேரற ...... முனிவோனே
உகந்த பாசங் கயிறொடு தூதுவர் ...... நலியாதே
அசந்த போதென் துயர்கெட மாமயில் ...... வரவேணும்
அமைந்த வேலும் புயமிசை மேவிய ...... பெருமாளே.
பாடல் 1075
ராகம் – தர்பாரிகானடா, தாளம் - மிஸ்ரசாபு (3 1/2)
தகதிமி-2, தகிட-1 1/2
தனதன தனன தனதன தனன
தனதன தனன ...... தனதான
திரிபுர மதனை யொருநொடி யதனி
லெரிசெய்த ருளிய ...... சிவன்வாழ்வே
சினமுடை யசுரர் மனமது வெருவ
மயிலது முடுகி ...... விடுவோனே
பருவரை யதனை யுருவிட எறியு
மறுமுக முடைய ...... வடிவேலா
பசலையொ டணையு மிளமுலை மகளை
மதன்விடு பகழி ...... தொடலாமோ
கரிதிரு முகமு மிடமுடை வயிறு
முடையவர் பிறகு ...... வருவொனே
கனதன முடைய குறவர்த மகளை
கருணையொ டணையு ...... மணிமார்பா
அரவணை துயிலு மரிதிரு மருக
அவனியு முழுது ...... முடையோனே
அடியவர் வினையு மமரர்கள் துயரு
மறஅரு ளுதவு ...... பெருமாளே.
பாடல் 1076
தனதன தனன தனதன தனன
தனதன தனன ...... தனதான
புழுககில் களப மொளிவிடு தரள
மணிபல செறிய ...... வடமேருப்
பொருமிரு கலச முலையினை யரிவை
புனையிடு பொதுவின் ...... மடமாதர்
அழகிய குவளை விழியினு மமுத
மொழியினு மவச ...... வநுராக
அமளியின் மிசையி லவர்வச முருகி
அழியுநி னடிமை ...... தனையாள்வாய்
குழலிசை யதுகொ டறவெருள் சுரபி
குறுநிரை தருளி ...... யலைமோதுங்
குரைசெறி யுததி வரைதனில் விறுசு
குமுகுமு குமென ...... வுலகோடு
முழுமதி சுழல வரைநெறு நெறென
முடுகிய முகிலின் ...... மருகோனே
மொகுமொகு மொகென ஞிமிறிசை பரவு
முளரியின் முதல்வர் ...... பெருமாளே.
பாடல் 1077
தனதன தனன தனதன தனன
தனதன தனன ...... தந்ததான
முழுமதி யனைய முகமிரு குழையில்
முனிவழி முனைகள் ...... கொண்முவா
முதலறி வதனை வளைபவர் கலவி
முழுகிய வினையை ...... மொண்டுநாயேன்
வழிவழி யடிமை யெனுமறி வகல
மனமுறு துயர்கள் ...... வெந்துவாட
மதிதரு மதிக கதிபெறு மடிகள்
மகிழ்வொடு புகழு ...... மன்புதாராய்
எழுதிட அரிய எழில்மற மகளின்
இருதன கிரிகள் ...... தங்குமார்பா
எதிர்பொரு மசுரர் பொடிபட முடுகி
இமையவர் சிறையை ...... யன்றுமீள்வாய்
அழகிய குமர எழுதல மகிழ
அறுவர்கள் முலையை ...... யுண்டவாழ்வே
அமருல கிறைவ உமைதரு புதல்வ
அரியர பிரமர் ...... தம்பிரானே.
பாடல் 1078
தனதன தனதன தத்தத் தத்தத்
தாந்தாந் ...... தனதான
கொடியன பிணிகொடு விக்கிக் கக்கிக்
கூன்போந் ...... தசடாகுங்
குடிலுற வருமொரு மிக்கச் சித்ரக்
கோண்பூண் ...... டமையாதே
பொடிவன பரசம யத்துத் தப்பிப்
போந்தேன் ...... தலைமேலே
பொருளது பெறஅடி நட்புச் சற்றுப்
பூண்டாண் ...... டருள்வாயே
துடிபட அலகைகள் கைக்கொட் டிட்டுச்
சூழ்ந்தாங் ...... குடனாடத்
தொகுதொகு திகுதிகு தொக்குத் திக்குத்
தோந்தாந் ...... தரிதாளம்
படிதரு பதிவ்ரதை யொத்தச் சுத்தப்
பாழ்ங்கான் ...... தனிலாடும்
பழயவர் குமரகு றத்தத் தைக்குப்
பாங்காம் ...... பெருமாளே.
பாடல் 1079
தனதன தனதன தத்தத் தத்தத்
தாந்தாந் ...... தனதான
சுடரொளி கதிரவ னுற்றுப் பற்றிச்
சூழ்ந்தோங் ...... கிடுபாரிற்
றுயரிரு வினைபல சுற்றப் பட்டுச்
சோர்ந்தோய்ந் ...... திடநாறுங்
கடுகென எடுமெனு டற்பற் றற்றுக்
கான்போந் ...... துறவோருங்
கனலிடை விதியிடு தத்துக் கத்தைக்
காய்ந்தாண் ...... டருளாயோ
தடமுடை வயிரவர் தற்கித் தொக்கத்
தாந்தோய்ந் ...... திருபாலும்
தமருக வொலிசவு தத்திற் றத்தத்
தாழ்ந்தூர்ந் ...... திடநாகம்
படிநெடி யவர்கர மொத்தக் கெத்துப்
பாய்ந்தாய்ந் ...... துயர்கானம்
பயில்பவர் புதல்வகு றத்தத் தைக்குப்
பாங்காம் ...... பெருமாளே.
பாடல் 1080
தனதன தத்த தந்த தனதன தத்த தந்த
தனதன தத்த தந்த ...... தனதான
குடமென வொத்த கொங்கை குயில்மொழி யொத்த இன்சொல்
குறமகள் வைத்த நண்பை ...... நினைவோனே
வடவரை யுற்று றைந்த மகதெவர் பெற்ற கந்த
மதசல முற்ற தந்தி ...... யிளையோனே
இடமுடன் வைத்த சிந்தை யினைவற முத்தி தந்து
இசையறி வித்து வந்து ...... எனையாள்வாய்
தடவரை வெற்பி னின்று சரவண முற்றெ ழுந்து
சமர்கள வெற்றி கொண்ட ...... பெருமாளே.
பாடல் 1081
தனதன தத்த தந்த தனதன தத்த தந்த
தனதன தத்த தந்த ...... தனதான
மடவிய ரெச்சி லுண்டு கையில்முத லைக்க ளைந்து
மறுமைத னிற்சு ழன்று ...... வடிவான
சடமிக வற்றி நொந்து கலவிசெ யத்து ணிந்து
தளர்வுறு தற்கு முந்தி ...... யெனையாள்வாய்
படவர விற்சி றந்த இடமிதெ னத்து யின்ற
பசுமுகி லுக்கு கந்த ...... மருகோனே
குடமுனி கற்க வன்று தமிழ்செவி யிற்ப கர்ந்த
குமரகு றத்தி நம்பு ...... பெருமாளே.
பாடல் 1082
தனதன தானத் தனதன தானத்
தனதன தானத் ...... தனதான
கருமய லேறிப் பெருகிய காமக்
கடலினில் மூழ்கித் ...... துயராலே
கயல்விழி யாரைப் பொருளென நாடிக்
கழியும நாளிற் ...... கடைநாளே
எருமையி லேறித் தருமனும் வாவுற்
றிறுகிய பாசக் ...... கயிறாலே
எனைவளை யாமற் றுணைநினை வேனுக்
கியலிசை பாடத் ...... தரவேணும்
திருமயில் சேர்பொற் புயனென வாழத்
தெரியல னோடப் ...... பொரும்வீரா
செகதல மீதிற் பகர்தமிழ் பாடற்
செழுமறை சேர்பொற் ...... புயநாதா
பொருமயி லேறிக் கிரிபொடி யாகப்
புவியது சூழத் ...... திரிவோனே
புனமக ளாரைக் கனதன மார்பிற்
புணரும்வி நோதப் ...... பெருமாளே.
பாடல் 1083
தனதன தானத் தனதன தானத்
தனதன தானத் ...... தனதான
குடலிடை தீதுற் றிடையிடை பீறிக்
குலவிய தோலத் ...... தியினூடே
குருதியி லேசுக் கிலமது கூடிக்
குவலயம் வானப் ...... பொருகாலாய்
உடலெழு மாயப் பிறவியி லாவித்
துறுபிணி நோயுற் ...... றுழலாதே
உரையடி யேனுக் கொளிமிகு நீபத்
துனதிரு தாளைத் ...... தரவேணும்
கடலிடை சூரப் படைபொடி யாகக்
கருதல ரோடப் ...... பொரும்வேலா
கதிர்விடு வேலைக் கதிரினில் மேவிக்
கலைபல தேர்முத் ...... தமிழ்நாடா
சடையினர் நாடப் படர்மலை யோடித்
தனிவிளை யாடித் ...... திரிவோனே
தனமட மானைப் பரிவுட னாரத்
தழும்வி நோதப் ...... பெருமாளே.
பாடல் 1084
தனதனா தத்த தனதனா தத்த
தனதனா தத்த ...... தனதான
கருதியே மெத்த விடமெலாம் வைத்த
கலகவா ளொத்த ...... விழிமானார்
கடினபோ கத்த புளகவா ருற்ற
களபமார் செப்பு ...... முலைமீதே
உருகியான் மெத்த அவசமே வுற்ற
வுரைகளே செப்பி ...... யழியாதுன்
உபயபா தத்தி னருளையே செப்பு
முதயஞா னத்தை ...... அருள்வாயே
பருவரா லுற்று மடுவின்மீ துற்ற
பகடுவாய் விட்ட ...... மொழியாலே
பரிவினோ டுற்ற திகிரியே விட்ட
பழயமா யற்கு ...... மருகோனே
முருகுலா வுற்ற குழலிவே டிச்சி
முலையின்மே வுற்ற ...... க்ருபைவேளே
முருகனே பத்த ரருகனே வெற்பு
முரியவேல் தொட்ட ...... பெருமாளே.
பாடல் 1085
தனதனா தத்த தனதனா தத்த
தனதனா தத்த ...... தனதான
கொலையிலே மெத்த விரகிலே கற்ற
குவளையேர் மைக்கண் ...... விழிமானார்
குழையிலே யெய்த்த நடையிலே நெய்த்த
குழலிலே பற்கள் ...... தனிலேமா
முலையிலே யற்ப இடையிலே பத்ம
முகநிலா வட்ட ...... மதின்மீதே
முதுகிலே பொட்டு நுதலிலே தத்தை
மொழியிலே சித்தம் ...... விடலாமோ
கலையனே உக்ர முருகனே துட்டர்
கலகனே மெத்த ...... இளையோனே
கனகனே பித்தர் புதல்வனே மெச்சு
கடவுளே பச்சை ...... மயிலோனே
உலகனே முத்தி முதல்வனே சித்தி
உடையனே விஷ்ணு ...... மருகோனே
ஒருவனே செச்சை மருவுநேர் சித்ர
வுருவனே மிக்க ...... பெருமாளே.
பாடல் 1086
தனதனனந் தான தனதனனந் தான
தனதனனந் தான ...... தனதான
அகிலநறுஞ் சேறு ம்ருகமதமுந் தோயு
மசலமிரண் டாலு ...... மிடைபோமென்
றடியில்விழுந் தாடு பரிபுரசெஞ் சீர
தபயமிடுங் கீத ...... மமையாதே
நகமிசைசென் றாடி வனசரர்சந் தான
நவையறநின் றேனல் ...... விளைவாள்தன்
லளிதவிர்சிங் கார தனமுறுசிந் தூர
நமசரணென் றோத ...... அருள்வாயே
பகலிரவுண் டான இருவரும்வண் டாடு
பரிமளபங் கேரு ...... கனுமாலும்
படிகநெடும் பா கடதடகெம் பீர
பணைமுகசெம் பால ...... மணிமாலை
முகபடசிந் தூர கரியில்வருந் தேவு
முடியஅரன் தேவி ...... யுடனாட
முழுதுலகுந் தாவி எழுகடல்மண் டூழி
முடிவினுமஞ் சாத ...... பெருமாளே.
பாடல் 1087
தனதனனந் தானம் தனதனனந் தானம்
தனதனனந் தானம் ...... தனதான
கலகமதன் காதுங் கனமலரம் பாலுங்
களிமதுவண் டூதும் ...... பயிலாலும்
கடலலையங் காலுங் கனஇரையொன் றாலும்
கலைமதியங் காயும் ...... வெயிலாலும்
இலகியசங் காளும் இனியவளன் பீனும்
எனதருமின் தானின் ...... றிளையாதே
இருள்கெடமுன் தானின் றினமணிசெந் தார்தங்
கிருதனமுந் தோள்கொண் ...... டணைவாயே
உலகைவளைந் தோடுந் கதிரவன்விண் பால்நின்
றுனதபயங் காவென் ...... றுனைநாட
உரவியவெஞ் சூரன் சிரமுடன்வன் தோளும்
உருவியுடன் போதும் ...... ஒளிவேலா
அலகையுடன் பூதம் பலகவிதம் பாடும்
அடைவுடனின் றாடும் ...... பெரியோர்முன்
அறமுமறந் தோயும் அறிவுநிரம் போதென்
றழகுடனன் றோதும் ...... பெருமாளே.