பொதுப்பாடல்கள் - 5

bookmark

பாடல் 1120

தத்தா தத்தா தத்தா தத்தா 
தத்தா தத்தத் ...... தனதான 

பத்தே ழெட்டீ ரெட்டேழ் ரட்டால் 
வைத்தே பத்திப் ...... படவேயும் 
பைப்பீ றற்கூ ரைப்பா சத்தா 
சற்கா ரத்துக் ...... கிரைதேடி 
எத்தே சத்தோ டித்தே சத்தோ 
டொத்தேய் சப்தத் ...... திலுமோடி 
எய்த்தே நத்தா பற்றா மற்றா 
திற்றே முக்கக் ...... கடவேனோ 
சத்தே முற்றா யத்தா னைச்சூர் 
கற்சா டிக்கற் ...... பணிதேசா 
சட்சோ திப்பூ திப்பா லத்தா 
அக்கோ டற்செச் ...... சையமார்பா 
முத்தா பத்தா ரெட்டா வைப்பா 
வித்தா முத்தர்க் ...... கிறையோனே 
முத்தா முத்தீ யத்தா சுத்தா 
முத்தா முத்திப் ...... பெருமாளே. 

பாடல் 1121

தத்தா தத்தா தத்தா தத்தா 
தத்தா தத்தத் ...... தனதான 

பொற்கோ வைக்கே பற்கோ வைக்கே 
பொய்ப்போ கத்தைப் ...... பகர்வார்தம் 
பொய்க்கே மெய்க்கே பித்தா கிப்போ 
கித்தே கைக்குப் ...... பொருள்தேடித் 
தெற்கோ டிக்கா சிக்கோ டிக்கீழ் 
திக்கோ டிப்பச் ...... சிமமான 
திக்கோ டிப்பா ணிக்கோ டித்தீ 
வுக்கோ டிக்கெட் ...... டிடலாமோ 
தற்கோ லிப்பா விப்பார் நற்சீ 
ரைச்சா ரத்தற் ...... பரமானாய் 
தப்பா முப்பா லைத்தே டித்தே 
சத்தோர் நிற்கத் ...... தகையோடே 
முற்கா னப்பே தைக்கா கப்போய் 
முற்பால் வெற்பிற் ...... கணியானாய் 
முத்தா முத்தீ யத்தா சுத்தா 
முத்தா முத்திப் ...... பெருமாளே. 

பாடல் 1122

தத்தா தத்தா தத்தா தத்தா 
தத்தா தத்தத் ...... தனதான 

பொற்பூ வைச்சீ ரைப்போ லப்போ 
தப்பே சிப்பொற் ...... கனிவாயின் 
பொய்க்கா மத்தே மெய்க்கா மப்பூ 
ணைப்பூண் வெற்பிற் ...... றுகில்சாயக் 
கற்பா லெக்கா வுட்கோ லிக்கா 
சுக்கே கைக்குத் ...... திடுமாதர் 
கட்கே பட்டே நெட்டா சைப்பா 
டுற்றே கட்டப் ...... படுவேனோ 
சொற்கோ லத்தே நற்கா லைச்சே 
விப்பார் சித்தத் ...... துறைவோனே 
தொக்கே கொக்கா கிச்சூ ழச்சூர் 
விக்கா முக்கத் ...... தொடும்வேலா 
முற்கா லத்தே வெற்பேய் வுற்றார் 
முத்தாள் முத்தச் ...... சிறியோனே 
முத்தா முத்தீ யத்தா சுத்தா 
முத்தா முத்திப் ...... பெருமாளே. 

பாடல் 1123

தத்தா தத்தா தத்தா தத்தா 
தத்தா தத்தத் ...... தனதான 

மெய்க்கூ ணைத்தே டிப்பூ மிக்கே 
வித்தா ரத்திற் ...... பலகாலும் 
வேட்கா மற்சே ரிச்சோ ரர்க்கே 
வித்தா சைச்சொற் ...... களையோதிக் 
கைக்கா ணிக்கோ ணற்போ தத்தா 
ரைப்போ லக்கற் ...... பழியாதுன் 
கற்பூ டுற்றே நற்றா ளைப்பா 
டற்கே நற்சொற் ...... றருவாயே 
பொய்க்கோ ணத்தாழ் மெய்க்கோ ணிப்போய் 
முற்பால் வெற்பிற் ...... புனமானைப் 
பொற்றோ ளிற்சேர் கைக்கா கப்பா 
தத்தாள் பற்றிப் ...... புகல்வோனே 
முக்கோ ணத்தா னத்தா ளைப்பால் 
வைத்தார் முத்தச் ...... சிறியோனே 
முத்தா முத்தீ யத்தா சுத்தா 
முத்தா முத்திப் ...... பெருமாளே. 

பாடல் 1124

ராகம் – கரஹரப்ரியா, தாளம் - சதுஸ்ர த்ருவம் - கண்டநடை (35) 
(எடுப்பு - /4/4/4 0) 
நடை - தகதகிட 

தனதனன தனதனன தந்தந்த தத்ததன 
தனதனன தனதனன தந்தந்த தத்ததன 
தனதனன தனதனன தந்தந்த தத்ததன ...... தத்ததன தான 

அகரமுத லெனவுரைசெய் ஐம்பந்தொ ரக்ஷரமும் 
அகிலகலை களும்வெகுவி தங்கொண்ட தத்துவமும் 
அபரிமித சுருதியும டங்குந்த னிப்பொருளை எப்பொருளு ...... மாய 
அறிவையறி பவரறியும் இன்பந்த னைத்துரிய 
முடிவைஅடி நடுமுடிவில் துங்கந்த னைச்சிறிய 
அணுவையணு வினின்மலமு நெஞ்சுங்கு ணத்ரயமு மற்றதொரு ...... காலம் 
நிகழும்வடி வினைமுடிவி லொன்றென்றி ருப்பதனை 
நிறைவுகுறை வொழிவறநி றைந்தெங்கு நிற்பதனை 
நிகர்பகர அரியதைவி சும்பின்பு ரத்ரயமெ ரித்தபெரு ...... மானும் 
நிருபகுரு பரகுமர என்றென்று பத்திகொடு 
பரவஅரு ளியமவுன மந்த்ரந்த னைப்பழைய 
நினதுவழி யடிமையும்வி ளங்கும்ப டிக்கினிது ணர்த்தியருள் ...... வாயே 
தகுதகுகு தகுதகுகு தந்தந்த குத்தகுகு 
டிகுடிகுகு டிகுடிகுகு டிண்டிண்டி குக்குடிகு 
தகுதகெண கெணசெகுத தந்தந்த ரித்தகுத தத்ததகு ...... தீதோ 
தனதனன தனதனன தந்தந்த னத்ததன 
டுடுடுடுடு டுடுடுடுடு டுண்டுண்டு டுட்டுடுடு 
தரரரர ரிரிரிரிரியென்றென்றி டக்கையுமு டுக்கையுமி ...... யாவும் 
மொகுமொகென அதிரமுதி ரண்டம்பி ளக்கநிமிர் 
அலகைகர ணமிடவுல கெங்கும்ப்ர மிக்கநட 
முடுகுபயி ரவர்பவுரிகொண்டின்பு றப்படுக ளத்திலொரு ...... கோடி 
முதுகழுகு கொடிகருட னங்கம்பொ ரக்குருதி 
நதிபெருக வெகுமுகக வந்தங்கள் நிர்த்தமிட 
முரசதிர நிசிசரரை வென்றிந்தி ரற்கரச ளித்த ...... பெருமாளே. 

பாடல் 1125

தனன தந்தன தனனா தனதன 
தந்தன தனனா தனதன 
தனன தந்தன தனனா தனதன ...... தனதான 

அரிய வஞ்சக ரறவே கொடியவர் 
அவலர் வன்கண ரினியா ரவகுணர் 
அசட ரன்பில ரவமே திரிபவர் ...... அதிமோக 
அலையில் மண்டிய வழியே யொழுகியர் 
வினைநி ரம்பிடு பவமே செறிபவர் 
அருள்து றந்தவ ரிடம்வாழ் சவலைகள் ...... நரகேற 
உரிய சஞ்சல மதியா னதுபெறு 
மனஇ டும்பர்க ளிடமே தெனஅவர் 
உபய அங்கமு நிலையா கிடவொரு ...... கவியாலே 
உலக முண்டவர் மதனா ரிமையவர் 
தருவெ னும்படி மொழியா வவர்தர 
உளது கொண்டுயி ரவமே விடுவது ...... தவிராதோ 
கரிய கொந்தள மலையா ளிருதன 
அமுது ணுங்குரு பரனே திரைபடு 
கடல டும்படி கணையே வியஅரி...... மருகோனே 
கருணை கொண்டொரு குறமா மகளிடை 
கலவி தங்கிய குமரா மயில்மிசை 
கடுகி யெண்டிசை நொடியே வலம்வரு ...... மிளையோனே 
திரிபு ரங்கனல் நகையா லெரிசெய்து 
பொதுந டம்புரியரனா ரிடமுறை 
சிவைச வுந்தரியுமையா ளருளிய ...... புதல்வோனே 
சிகர வெண்கரிஅயிரா வதமிசை 
வருபு ரந்தர னமரா பதியவர் 
சிறைவி டும்படி வடிவேல் விடவல ...... பெருமாளே. 

பாடல் 1126

ராகம் – திலங், தாளம் - அங்கதாளம் (7 1/2) 
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமி-2 

தானான தான தான தானன 
தானான தான தான தானன 
தானான தான தான தானன ...... தந்ததான 

ஆராத காத லாகி மாதர்த 
மாபாத சூட மீதி லேவிழி 
யாலோல னாய்வி கார மாகியி ...... லஞ்சியாலே 
ஆசாப சாசு மூடி மேலிட 
ஆசார வீன னாகி யேமிக 
ஆபாச னாகி யோடி நாளும ...... ழிந்திடாதே 
ஈராறு தோளு மாறு மாமுக 
மோடாரு நீப வாச மாலையு 
மேறான தோகை நீல வாசியு ...... மன்பினாலே 
ஏனோரு மோது மாறு தீதற 
நானாசு பாடி யாடி நாடொறு 
மீடேறு மாறு ஞான போதக ...... மன்புறாதோ 
வாராகி நீள்க பாலி மாலினி 
மாமாயி யாயி தேவி யாமளை 
வாசாம கோச ராப ராபரை ...... யிங்குளாயி 
வாதாடி மோடி காடு காளுமை 
மாஞால லீலி யால போசனி 
மாகாளி சூலி வாலை யோகினி ...... யம்பவானி 
சூராரி மாபு ராரிகோமளை 
தூளாய பூதி பூசு நாரணி 
சோணாச லாதி லோக நாயகி ...... தந்தவாழ்வே 
தோளாலும் வாளி னாலு மாறிடு 
தோலாத வான நாடு சூறைகொள் 
சூராரியேவி சாக னேசுரர் ...... தம்பிரானே. 

பாடல் 1127

ராகம் – கீரவாணி, தாளம் - திஸ்ர த்ருபுடை (7) 

தானாதன தானந் தனத்த தானாதன தானந் தனத்த 
தானாதன தானந் தனத்த ...... தனதான 

ஆராதன ராடம் பரத்து மாறாதுச வாலம் பனத்து 
மாவாகன மாமந் திரத்து ...... மடலாலும் 
ஆறார்தெச மாமண் டபத்தும் வேதாகம மோதுந் தலத்து 
மாமாறெரிதாமிந் தனத்து ...... மருளாதே 
நீராளக நீர்மஞ் சனத்த நீடாரக வேதண்ட மத்த 
நீநானற வேறின்றி நிற்க ...... நியமாக 
நீவாவென நீயிங் கழைத்து பாராவர வாநந்த சித்தி 
நேரேபர மாநந்த முத்தி ...... தரவேணும் 
வீராகர சாமுண்டி சக்ர பாராகண பூதங் களிக்க 
வேதாளச மூகம் பிழைக்க ...... அமராடி 
வேதாமுறை யோவென் றரற்ற ஆகாசக பாலம் பிளக்க 
வேர்மாமர மூலந் தறித்து ...... வடவாலும் 
வாராகர மேழுங் குடித்து மாசூரொடு போரம் பறுத்து 
வாணாசன மேலுந் துணித்த ...... கதிர்வேலா 
வானாடர சாளும் படிக்கு வாவாவென வாவென் றழைத்து 
வானோர்பரிதாபந் தவிர்த்த ...... பெருமாளே. 

பாடல் 1128

தானா தத்தன தத்தன தானா தத்தன தத்தன 
தானா தத்தன தத்தன ...... தனதான 

ஆலா லத்தைய ழுத்திய வேல்போல் நற்குழை யைப்பொரு 
தாகா ரைத்தொடர் கைக்கெணும் ...... விழியாலே 
ஆளா மற்றவர் சுற்றிட மீளா மற்றலை யிட்டறி 
வார்போ கச்செயல் விச்சைகள் ...... விலைகூறிக் 
கோலா லக்கண மிட்டுவ ராதார் நெக்குரு கப்பொருள் 
கூறா கப்பெறில் நிற்கவு ...... மிலதானார் 
கூடா நட்புமு ரைத்திடு கேடா விட்டகல் மட்டைகள் 
கோமா ளத்துய ருட்பய ...... முறலாமோ 
பாலா மக்கட லிற்றுயில் மாலோ ரெட்டுத லைக்கிரி
பால்பார் வைக்கள விட்டுமை ...... யுறுபோதிற் 
பார்மே லிக்கனு டற்பொறி யாய்வீ ழச்சுடும் வித்தகர் 
பாலா பத்தரிடத்தியல் ...... பயில்வோனே 
மேலா யத்தொடு திக்கடை மேவார் வெற்பொட ரக்கரை 
வேர்மா ளப்பொரு திட்டொளி ...... விடும்வேலா 
மேனா டர்ச்சிறை விட்டருள் மீளா விக்கிர மத்தொடு 
வேதா வைச்சிறை யிட்டருள் ...... பெருமாளே. 

பாடல் 1129

ராகம் – சுருட்டி, தாளம் - அங்கதாளம் (9) 
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமி-2 

தானான தான தத்த தத்த தத்தன 
தானான தான தத்த தத்த தத்தன 
தானான தான தத்த தத்த தத்தன ...... தனதான 

ஆனாத ஞான புத்தி யைக்கொ டுத்ததும் 
ஆராயு நூல்க ளிற்க ருத்த ளித்ததும் 
ஆதேச வாழ்வி னிற்ப்ர மித்தி ளைத்துயி ...... ரழியாதே 
ஆசாப யோதி யைக்க டக்க விட்டதும் 
வாசாம கோச ரத்தி ருத்து வித்ததும் 
ஆபாத னேன்மி கப்ர சித்தி பெற்றினி ...... துலகேழும் 
யானாக நாம அற்பு தத்தி ருப்புகழ் 
தேனூற வோதி யெத்தி சைப்பு றத்தினும் 
ஏடேவு ராஜ தத்தி னைப்ப ணித்ததும் ...... இடராழி 
ஏறாத மாம லத்ர யக்கு ணத்ரய 
நானாவி கார புற்பு தப்பி றப்பற 
ஏதேம மாயெ னக்க நுக்ர கித்ததும் ...... மறவேனே 
மாநாக நாண்வ லுப்பு றத்து வக்கியொர் 
மாமேரு பூத ரத்த னுப்பி டித்தொரு 
மாலாய வாளி யைத்தொ டுத்த ரக்கரி...... லொ முவர் 
மாளாது பாத கப்பு ரத்ர யத்தவர் 
தூளாக வேமு தற்சி ரித்த வித்தகர் 
வாழ்வேவ லாரிபெற்றெ டுத்த கற்பக ...... வனமேவும் 
தேநாய காஎ னத்து தித்த வுத்தம 
வானாடர் வாழ விக்ர மத்தி ருக்கழல் 
சேராத சூர னைத்து ணித்த டக்கிய ...... வரைமோதிச் 
சேறாய சோரிபுக்க ளக்கர் திட்டெழ 
மாறாநி சாச ரக்கு லத்தை யிப்படி 
சீராவி னால றுத்த றுத்தொ துக்கிய ...... பெருமாளே. 

பாடல் 1130

தனதனனந் தாத்த தான தத்த 
தனதனனந் தாத்த தான தத்த 
தனதனனந் தாத்த தான தத்த ...... தனதான 

இடமருவுஞ் சீற்ற வேலெ டுத்து 
விடமுழுதுந் தேக்கி யேநி றைத்து 
இருகுழையுந் தாக்கி மீள்க யற்கண் ...... வலையாலே 
இனிமையுடன் பார்த்து ளேய ழைத்து 
முகபடமுஞ் சேர்த்து வார ழுத்தும் 
இருவரையுங் காட்டி மாலெ ழுப்பி ...... விலைபேசி 
மடலவிழும் பூக்க ளால்நி றைத்த 
சுருளளகந் தூற்றி யேமு டித்து 
மறுகிடைநின் றார்க்க வேந கைத்து ...... நிலையாக 
வருபொருள்கண் டேற்க வேப றிக்கும் 
அரிவையர்தம் பேச்சி லேமு ழுக்க 
மனமுருகுந் தூர்த்த னாயி ளைத்து ...... விடலாமோ 
படிமுழுதுங் கூர்த்த மாகு லத்தி 
முதுமறையின் பேச்சி நூலி டைச்சி 
பகிர்மதியம் பூத்த தாழ்ச டைச்சி ...... யிருநாழி 
படிகொடறங் காத்த மாப ரைச்சி 
மணிவயிரங் கோத்த தோள்வ ளைச்சி 
பலதிசையும் போய்க்கு லாவி ருப்பி ...... நெடுநீலி 
அடுபுலியின் தோற்ப டாமு டைச்சி 
சமரமுகங் காட்டு மால்வி டைச்சி 
அகிலமுமுண் டார்க்கு நேரி ளைச்சி ...... பெருவாழ்வே 
அரியயனின் றேத்த வேமி குத்த 
விபுதர்குலம் பேர்க்க வாளெ டுத்த 
அசுரர்குலம் பாழ்க்க வேலெ டுத்த ...... பெருமாளே. 

பாடல் 1131

தனதத்தத் தனதத்தத் தனதத்தத் தனதத்தத் 
தனதத்தத் தனதத்தத் ...... தனதான 

இடர்மொய்த்துத் தொடரிற்பொய்க் குடிலக்கிக் கிடையிட்டிட் 
டினிமைச்சுற் றமுமற்றைப் ...... புதல்வோரும் 
இனமொப்பித் திசையச்சொற் பலகத்திட் டிழியப்பிற் 
கிடையத்துக் கமும்விட்டிட் ...... டவரேக 
விடமெத்தச் சொரிசெக்கட் சமன்வெட்டத் தனமுற்றிட் 
டுயிர்வித்துத் தனையெற்றிக் ...... கொடுபோமுன் 
வினைபற்றற் றறநித்தப் புதுமைச்சொற் கொடுவெட்சிப் 
புயவெற்றிப் புகழ்செப்பப் ...... பெறுவேனோ 
அடர்செக்கர்ச் சடையிற்பொற் பிறையப்புப் புனையப்பர்க் 
கறிவொக்கப் பொருள்கற்பித் ...... திடுவோனே 
அலகைக்குட் பசிதித்தப் பலகைக்கொத் ததுபட்டிட் 
டலறக்குத் துறமுட்டிப் ...... பொரும்வேலா 
கடலுக்குட் படுசர்ப்பத் தினில்மெச்சத் துயில்பச்சைக் 
கிரிகைக்குட் டிகிரிக்கொற் ...... றவன்மாயன் 
கமலத்திற் பயில்நெட்டைக் குயவற்கெட் டிசையர்க்குக் 
கடவுட்சக் கிரவர்த்திப் ...... பெருமாளே. 

பாடல் 1132

தனதனன தான தத்த தந்த 
தனதனன தான தத்த தந்த 
தனதனன தான தத்த தந்த ...... தனதான 

இரவினிடை வேள்தொ டுத்து டன்று 
முறுகுமலர் வாளி யைப்பி ணங்கி 
யிருகுழையு மோதி யப்ப டங்கு ...... கடலோடே 
எதிர்பொருது மானி னைத்து ரந்து 
சலதிகிழி வேல்த னைப்பொ ருந்தி 
யினியமுத ஆல முற்ற கண்கள் ...... வலையாலே 
முரணிளைஞ ராவி யைத்தொ டர்ந்து 
விசிறிவளை மாத ரைக்க லந்து 
மொழியதர கோவை யிக்க ருந்தி ...... யமுதாகு 
முகிழ்முகுளி தார வெற்ப ணைந்து 
சுழிமிதுன வாவி யிற்பு குந்து 
முழுகியழி யாம னற்ப தங்கள் ...... தரவேணும் 
திரையுலகு சாக ரத்தி லங்கை 
நகரிலுறை ராவ ணற்கி யைந்த 
தெசமுடியு மீரு பத்தொ ழுங்கு ...... திணிதோளுஞ் 
சிதையவொரு வாளி யைத்து ரந்த 
அரிமருக தீத றக்க டந்து 
தெளிமருவு கார ணத்த மர்ந்த ...... முருகோனே 
அரணமதிள் சூழ்பு ரத்தி ருந்து 
கருதுமொரு மூவ ருக்கி ரங்கி 
யருளுமொரு நாய கற்ப ணிந்த ...... குருநாதா 
அகல்முடிவை யாதி யைத்தெ ளிந்து 
இரவுபகலாக நெக்க விழ்ந்த 
அடியவர்கள் பாட லுக்கி சைந்த ...... பெருமாளே. 

பாடல் 1133

ராகம் - தர்பரிகானடா, தாளம் - அங்கதாளம் (7 1/2) 
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2 

தனன தந்தன தானா தானா 
தனன தந்தன தானா தானா 
தனன தந்தன தானா தானா ...... தனதான 

இரவொ டும்பக லேமா றாதே 
அநுதி னந்துய ரோயா தேயே 
யெரியு முந்தியி னாலே மாலே ...... பெரிதாகி 
இரைகொ ளும்படி யூடே பாடே 
மிகுதி கொண்டொழி யாதே வாதே 
யிடைக ளின்சில நாளே போயே ...... வயதாகி 
நரைக ளும்பெரிதாயே போயே 
கிழவ னென்றொரு பேரே சார்வே 
நடைக ளும்பல தாறே மாறே ...... விழலாகி 
நயன முந்தெரியாதே போனால் 
விடிவ தென்றடி யேனே தானே 
நடன் குஞ்சித வீடே கூடா ...... தழிவேனோ 
திருந லம்புரிதாளீ தூளீ 
மகர குண்டலி மாரீசூரி
திரிபு ரந்தழ லேவீ சார்வீ ...... யபிராமி 
சிவனி டந்தரிநீலீ சூலீ 
கவுரிபஞ்சவி யாயீ மாயீ 
சிவைபெ ணம்பிகை வாலா சீலா ...... அருள்பாலா 
அரவ கிங்கிணி வீரா தீரா 
கிரிபு ரந்தொளிர் நாதா பாதா 
அழகி ளங்குற மானார் தேனார் ...... மணவாளா 
அரிய ரன்பிர மாவோ டேமூ
வகைய ரிந்திர கோமா னீள்வா 
னமரர் கந்தரு வானோ ரேனோர் ...... பெருமாளே. 

பாடல் 1134

தனதன தானான தானன 
தனதன தானான தானன 
தனதன தானான தானன ...... தனதான 

இருகுழை மீதோடி மீளவும் 
கயல்களு மாலால காலமும் 
ரதிபதி கோலாடு பூசலு ...... மெனவேநின் 
றிலகிய கூர்வேல் விலோசன 
ம்ருகமத பாடிர பூஷித 
இளமுலை மாமாத ரார்வச ...... முருகாதே 
முருகவிழ் கூதாள மாலிகை 
தழுவிய சீர்பாத தூளியின் 
முழுகிவி டாய்போ மனோலயம் ...... வரவோது 
முழுமதி மாயாவி காரமு 
மொழிவது வாசாம கோசர 
முகுளித ஞானோப தேசமு ...... மருள்வேணும் 
அருமறை நூலோதும் வேதியன் 
இரணிய ரூபாந மோவென 
அரிகரி நாராய ணாவென ...... ஒருபாலன் 
அவனெவ னாதார மேதென 
இதனுள னோவோது நீயென 
அகிலமும் வாழ்வான நாயக ...... னெனவேகி 
ஒருகணை தூணோடு மோதிட 
விசைகொடு தோள்போறு வாளரி
யுகிர்கொடு வாரா நிசாசர ...... னுடல்பீறும் 
உலகொரு தாளான மாமனும் 
உமையொரு கூறான தாதையும் 
உரைதரு தேவாசு ராதிபர் ...... பெருமாளே. 

பாடல் 1135

தனதன தனதன தத்தத் தானன 
தனதன தனதன தத்தத் தானன 
தனதன தனதன தத்தத் தானன ...... தனதான 

இருமுலை மலையென ஒப்பிட் டேயவர் 
இருவிழி யதனில் கப்பட் டேமன 
மிசைபட வசனமு ரைத்திட் டேபல ...... மினிதொடே 
இடையது துவளகு லுக்கிக் காலணி 
பரிபுர வொலிகள் தொனிக்கப் பூதர 
இளமுலை குழைய அணைத்துக் கேயுர ...... மணியோடே 
மதகத பவள மழுத்திப் பூஷண 
மணிபல சிதறி நெறித்துத் தானுக 
மருமலர் புனுகு தரித்துப் பூவணை ...... மதராஜன் 
மருவிய கலவி தனக்கொப் பாமென 
மகிழ்வொடு ரசிது மிகுத்துக் கோதையை 
மருவியு முருகி களைத்துப் பூமியி ...... லுழல்வேனோ 
திரிபுர மெரிய நகைத்துக் காலனை 
யுதைபட மதனை யழித்துச் சாகர 
திரைவரு கடுவை மிடற்றிற் றானணி ...... சிவனார்தந் 
திருவருள் முருக பெருத்துப் பாரினில் 
சியொதனன் மடிய மிகுத்துப் பாரத 
செயமுறு மரிதன் மனத்துக் காகிய ...... மருகோனே 
நரிகழு வதுகள் களிக்கச் சோரிகள் 
ரணகள முழுதுமி குத்துக் கூளிகள் 
நடமிட அசுரர் குலத்துக் காலனை ...... நிகராகி 
நனிகடல் கதற பொருப்புத் தூளெழ 
நணுகிய இமையவ ருக்குச் சீருற 
நணுகலர் மடியதொ லைத்துப் பேர்பேறு ...... பெருமாளே. 

பாடல் 1136

தனதன தானா தானா தனதன தானா தானா 
தனதன தானா தானா ...... தனதான 

இலகிய வேலோ சேலோ ஒளிவிடு வாளோ போதோ 
எமன்விடு தூதோ மானோ ...... விடமீதோ 
னவிழி கூறா வாரா அரிவையர் தேர்ளு டாடா 
இறுதியில் வேறாய் மாறா ...... நினைவாலே 
பலபல கோளாய் மாலா யுழலும தானால் வீணே 
படிறுசொ லாகா லோகா ...... யதனாகிப் 
பரிவுட னாடாய் வீடா யடிமையு மீடே றாதே 
பணிதியில் மூழ்கா மாயா ...... விடுவேனோ 
அலைகடல் கோகோ கோகோ எனவுரை கூறா வோடா 
அவுணரை வாடா போடா ...... எனலாகி 
அழகிய வேலால் வாளால் நிலவிய சீரா வாலே 
யவருடல் வாணா ளீரா ...... எதிராகி 
மலைமிகு தோளா போதா அழகிய வாலா பாலா 
மகபதி வாழ்வே சேயே ...... மயில்வீரா 
மறைதொழு கோவே தேவே நறை செறி பூவே நீரே 
வளவிய வேளே மேலோர் ...... பெருமாளே. 

பாடல் 1137

தனதன தனதத்த தனனா தனனா 
தனதன தனதத்த தனனா தனனா 
தனதன தனதத்த தனனா தனனா ...... தனதான 

உமையெனு மயில்பெற்ற மயில்வா கனனே 
வனிதைய ரறுவர்க்கு மொருபா லகனே 
உளமுரு கியபத்த ருறவே மறவே ...... னெனவோதி 
உருகுத லொருசற்று மறியேன் வறியேன் 
இருவினை யிடையிட்ட கொடியே னடியேன் 
உணர்விலி பெறமுத்தி தருவாய் துகிர்வாய் ...... மடமாதர் 
அமையென வளர்சித்ர இருதோள் தழுவா 
அமுதென மதுரித்த கனிவா யணுகா 
அமளியி லணைவுற்ற அநுரா கமகோ ...... தத஧முழ்கி 
அநவர தமுமுற்ற மணிமா முலைதோய் 
கலவியி னலமற்ப சுகமா கினுமா 
அநுபவ மிதுசற்றும் விடவோ இயலா ...... தியலாதே 
தமனிய குலசக்ர கிரியோ கடலோ 
விடமென முடிவைத்த முதுபே ரிருளோ 
தனுவென முனையிட்ட கொநல்மு விலைவேல் ...... கொடுபார்வை 
தழலெழ வருமுக்ர எமபா தகனோ 
யுகஇறு தியில்மிக்க வடவா னலமோ 
தனியிவ னெனமிக்க பிசிதா சனபூ ...... பதியாகி 
இமையவ ரனைவர்க்கும் அறையோ அறையோ 
அரியயன் முழுதுக்கும் அறையோ அறையோ 
எழுபுவி யுலகுக்கும் அறையோ அறையோ ...... பொரவாரும் 
எனவரு மொருதுட்டன் முறையோ முறையோ 
வடகுல கிரியெட்டும் அபிதா அபிதா 
எனவொரு அயில்தொட்ட அரசே யிமையோர் ...... பெருமாளே. 

பாடல் 1138

தனத்த தத்தன தனதன தந்தத் 
தனத்த தத்தன தனதன தந்தத் 
தனத்த தத்தன தனதன தந்தத் ...... தனதான 

உரைத்த பற்றுட னடிகள்ப ணிந்திட் 
டிருத்தி மெத்தென இளநகை யுஞ்சற் 
றுமிழ்த்த டைக்கல மெனஎதிர் கும்பிட் ...... டணைமேல்வீழ்ந் 
துடுத்த பொற்றுகி லகலல்கு லுந்தொட் 
டெடுத்த ணைத்திதழ் பெருகமு தந்துய்த் 
துனக்கெ னக்கென வுருகிமு யங்கிட் ...... டுளும்வேறாய் 
அருக்கி யத்தனை யெனுமவ சம்பட் 
டறுத்தொ துக்கிய நகநுதி யுந்தைத் 
தறப்பி தற்றிட அமளிக லங்கித் ...... தடுமாறி 
அளைத்து ழைத்திரு விழிகள்சி வந்திட் 
டயர்த்தி தத்தொடு மொழிபவ ருந்திக் 
கடுத்த கப்படு கலவியில் நொந்தெய்த் ...... திடலாமோ 
தரைக்க டற்புகு நிருதர்த யங்கச் 
சளப்ப டத்தட முடிகள்பி டுங்தித் 
தகர்த்தொ லித்தெழு மலையொடு துண்டப் ...... பிறைசூடி 
தனுக்கி ரித்திரிதரஎதி ருங்கொக் 
கினைப்ப தைத்துட லலறிட வஞ்சத் 
தருக்க டக்கிய சமர்பொரு துங்கத் ...... தனிவேலா 
பருப்ப தப்ரிய குறுமுனி வந்தித் 
திருக்கு முத்தம நிருதர்க லங்கப் 
படைப்பெ லத்தொடு பழயக்ர வுஞ்சக் ...... கிரிசாடிப் 
படர்ப்ப றைக்குரு குடலுதி ரங்குக் 
குடக்கொ டிக்கிடு குமரகொ டுங்கற் 
பதத்தி றுத்துகு பசியசி கண்டிப் ...... பெருமாளே. 

பாடல் 1139

ராகம் – ஆந்தோளிகா, தாளம் - திஸ்ர த்ருபுடை (7) 

தனதத்தன தானன தந்தன 
தனதத்தன தானன தந்தன 
தனதத்தன தானன தந்தன ...... தனதான 

உலகத்தினில் மாதரு மைந்தரும் 
உறுசுற்றமும் வாழ்வொடு றுங்கிளை 
உயர்துக்கமு மோடுற வென்றுற ...... வருகாலன் 
உதிரத்துட னேசல மென்பொடு 
உறுதிப்பட வேவள ருங்குடில் 
உதிரக்கனல் மீதுற என்றனை ...... யொழியாமுன் 
கலகக்கலை நூல்பல கொண்டெதிர் 
கதறிப்பத றாவுரை வென்றுயர் 
கயவர்க்குள னாய்வினை நெஞ்சொடு ...... களிகூருங் 
கவலைப்புல மோடுற என்துயர் 
கழிவித்துன தாளினை யன்பொடு 
கருதித்தொழும் வாழ்வது தந்திட ...... நினைவாயே 
இலகப்பதி னாலுல கங்களும் 
இருளைக்கடி வானெழு மம்புலி 
யெழில்மிக்கிட வேணியில் வந்துற ...... எருதேறி 
இருகைத்தல மான்மழு வும்புனை 
யிறையப்பதி யாகிய இன்சொலன் 
இசையப்பரிவோடினி தன்றரு ...... ளிளையோனே 
மலைபட்டிரு கூறெழ வன்கடல் 
நிலைகெட்டபி தாவென அஞ்சகர் 
வலியற்றசு ரேசரு மங்கிட ...... வடிவேலால் 
மலைவித்தக வானவ ரிந்திரர் 
மலர்கைக்கொடு மாதவ ருந்தொழ 
வடிவுற்றொரு தோகையில் வந்தருள் ...... பெருமாளே. 

பாடல் 1140

ராகம் – வலஜி, தாளம் - சதுஸ்ர த்ருவம் - கண்டநடை (35) 
(எடுப்பு - /4/4/4 0) 
நடை - தகதகிட 

தனதனன தனதனன தானான தானதன 
தனதனன தனதனன தானான தானதன 
தனதனன தனதனன தானான தானதன ...... தந்ததான 

உறவின்முறை கதறியழ ஊராரு மாசையற 
பறைதிமிலை முழவினிசை யாகாச மீதுமுற 
உலகிலுள பலரரிசி வாய்மீதி லேசொரியு ...... மந்தநாளில் 
உனதுமுக கருணைமல ரோராறு மாறிருகை 
திரள்புயமு மெழில்பணிகொள் வார்காது நீள்விழியும் 
உபயபத மிசைகுலவு சீரேறு நூபுரமும் ...... அந்தமார்பும் 
மறையறைய அமரர்தரு பூமாரியேசொரிய 
மதுவொழுகு தரவில்மணி மீதேமு நூலொளிர 
மயிலின்மிசை யழகுபொலி யாளாய்மு னாரடியர் ...... வந்துகூட 
மறலிபடை யமபுரமு மீதோட வேபொருது 
விருதுபல முறைமுறையி லேயூதி வாதுசெய்து 
மதலையொரு குதலையடி நாயேனை யாளஇஙன் ...... வந்திடாயோ 
பிறையெயிறு முரணசுரர் பேராது பாரில்விழ 
அதிரஎழு புவியுலக மீரேழு மோலமிட 
பிடிகளிறி னடல்நிரைகள் பாழாக வேதிசையில் ...... நின்றநாகம் 
பிரியநெடு மலையிடிய மாவாரிதூளியெழ 
பெரியதொரு வயிறுடைய மாகாளி கூளியொடு 
பிணநிணமு முணவுசெய்து பேயோடு மாடல்செய ...... வென்றதீரா 
குறமறவர் கொடியடிகள் கூசாது போய்வருட 
கரடிபுலி திரிகடிய வாரான கானில்மிகு 
குளிர்கணியி னிளமரம தேயாகி நீடியுயர் ...... குன்றுலாவி 
கொடியதொரு முயலகனின் மீதாடு வாருடைய 
வொருபுறம துறவளரு மாதாபெ றாவருள்செய் 
குமரகுரு பரஅமரர் வானாடர் பேணஅருள் ...... தம்பிரானே. 

பாடல் 1141

தனன தந்தன தானா தானன 
தனன தந்தன தானா தானன 
தனன தந்தன தானா தானன ...... தனதான 

உறவு சிங்கிகள் காமா காரிகள் 
முறைம சங்கிக ளாசா வேசிகள் 
உதடு கன்றிகள் நாணா வீணிகள் ...... நகரேகை 
உடைய கொங்கையின் மீதே தூசிகள் 
பிணமே னும்படி பேய்நீ ராகிய 
உணவை யுண்டுடை சோர்கோ மாளிகள் ...... கடல்ஞாலத் 
தறவு நெஞ்சுபொ லாமா பாவிகள் 
வறுமை தந்திடு பாழ்மூ தேவிகள் 
அணிநெ ருங்கிக ளாசா பாஷண ...... மடமாதர் 
அழகு யர்ந்தபொய் மாயா ரூபிகள் 
கலவி யின்பமெ னாவே சோருதல் 
அலம லந்தடு மாறா தோர்கதி ...... யருள்வாயே 
பறவை யென்கிற கூடார் மூவரண் 
முறையி டுந்தமர் வானோர் தேரரி
பகழி குன்றவி லாலே நீறெழ ...... வொ முவர் 
பதநி னைந்துவி டாதே தாள் பெற 
அருள்பு ரிந்தபி ரானார் மாபதி 
பரவு கந்தசு வாமீ கானக ...... மதின்மேவுங் 
குறவர் தங்கள்பி ரானே மாமரம் 
நெறுநெ றென்றடி வேரோ டேநிலை 
குலைய வென்றிகொள் வேலே யேவிய ...... புயவீரா 
குயில்க ளன்றில்கள் கூகூ கூவென 
மலர்கள் பொங்கிய தேன்வீழ் காமிசை 
குறவர் சுந்தரியோடே கூடிய ...... பெருமாளே. 

பாடல் 1142

தானான தானன தனத்த தத்தன 
தானான தானன தனத்த தத்தன 
தானான தானன தனத்த தத்தன ...... தந்ததான 

ஊனோடு வாதுயிர் தரித்து மட்டற 
வூசாடு பாழ்குடி லெடுத்த திற்படி 
ஓயாத மாமய லுழற்றி னிற்படு ...... வம்பனேனை 
ஊதாரியாய்விடு சமத்தில் நிற்பது 
மாராத காதலை மனத்தில் வைப்பது 
மூரோடு போயெதிர் பிணக்கி னிற்பது ...... முந்திடாதே 
தேனூறு வாய்மொழி பரத்தை யர்க்கொரு 
நாய்போல வேயவர் வசத்தில் நிற்பது 
சீர்கேட தாய்விடு சிறுப்பி ளைத்தன ...... மென்றுநீபச் 
சீதாள மாமலர் தொடுத்த பத்தர்கள் 
சீராடி நாண்மல ரெனப்ரியப்படு 
சீர்பாத போதக மநுக்ர கிப்பது ...... மெந்தநாளோ 
மானாக பாயலில் படுக்கை யிட்டவர் 
மாமேரு வாரியில் திரித்து விட்டவர் 
மாடோ டு போய்வரு மிடைக்குலத்தவ ...... ரன்றுவாவி 
வாய்நாக மோலிட பிடித்த சக்கிர 
வாளேவி யேகர வினைத்த றித்தவர் 
மாமாய னாயுல களித்த வித்தகர் ...... தங்கைவாழ்வே 
கானாரு மாமலை தினைப்பு னத்தினில் 
கால்மேல்வி ழாவொரு குறச்சி றுக்கியை 
காணாது போயியல் புணர்ச்சி யிட்டருள் ...... கந்தவேளே 
காரேழு மாமலை யிடித்து ருக்கெட 
காராழி யேழவை கலக்கி விட்டுயர் 
காவான நாடர்கள் பகைச்ச வட்டிய ...... தம்பிரானே. 

பாடல் 1143

ராகம் – த்விஜாவந்தி,  தாளம் - ஆதி - 2 களை 

தத்தன தனதன தானா தனதன 
தத்தன தனதன தானா தனதன 
தத்தன தனதன தானா தனதன ...... தனதான 

எட்டுட னொருதொளை வாயா யதுபசு 
மட்கல மிருவினை தோயா மிகுபிணி 
யிட்டிடை செயவொரு போதா கிலுமுயிர் ...... நிலையாக 
எப்படி யுயர்கதி நாமே றுவதென 
எட்பகி ரினுமிது வோரார் தமதம 
திச்சையி னிடருறு பேரா சைகொள்கட ...... லதிலேவீழ் 
முட்டர்க ணெறியினில் வீழா தடலொடு 
முப்பதி னறுபதின் மேலா மறுவரு 
முற்றுத லறிவரு ஞானோ தயவொளி ...... வெளியாக 
முக்குண மதுகெட நானா வெனவரு 
முத்திரை யழிதர ஆரா வமுதன 
முத்தமிழ் தெரிகனி வாயா லருளுவ ...... தொருநாளே 
திட்டென எதிர்வரு மாகா ளியினொடு 
திக்கிட தரிகிட தீதோ மெனவொரு 
சித்திர வெகுவித வாதா டியபத ...... மலராளன் 
செப்புக வெனமுன மோதா துணர்வது 
சிற்சுக பரவெளி யீதே யெனஅவர் 
தெக்ஷண செவிதனி லேபோ தனையருள் ...... குருநாதா 
மட்டற அமர்பொரு சூரா திபனுடல் 
பொட்டெழ முடுகிவை வேலா லெறிதரு 
மற்புய மரகத மாதோ கையில்நட ...... மிடுவோனே 
வச்சிர கரதல வானோ ரதிபதி 
பொற்புறு கரிபரிதேரோ டழகுற 
வைத்திடு மருமக னேவா ழமரர்கள் ...... பெருமாளே. 

பாடல் 1144

தத்த தனதனன தான தானதன 
தத்த தனதனன தான தானதன 
தத்த தனதனன தான தானதன ...... தனதான 

எத்தி யிருகுழையை மோதி மீனமதின் 
முட்டி யிடறியம தூதர் போல முகி 
லெட்டி வயவர்கர வாளை வேல்முனையை ...... யெதிர்சீறி 
எத்தி சையினுமொரு காம ராஜன்மிக 
வெற்றி யரசுதனை யாள வீசியட 
லெற்றி யிளைஞருயிர் கோலு நீலவிழி ...... மடமாதர் 
வித்தை தனிலுருகி யாசை யாகியவர் 
கைக்குள் மருவுபொரு ளான ஆகும்வரை 
மெத்தை தனிலுருகி மோக மாகிவிட ...... அதன்மேலே 
வெட்க மிலைநடவு மேகு மேகுமினி 
மற்ற வரையழையு மாத ரேயெனமுன் 
விட்ட படிறிகள்தம் நேச ஆசைகெட ...... அருள்வாயே 
ஒத்த வரிகமுகு வாளை தாவுபுனல் 
அத்தி நகரமர சான வாள்நிருபன் 
ஒக்கு நினைவுமுனி லாமல் வாகுபெல ...... நிலைகூற 
உற்ற தருமனடல் வீமன் வேல்விசையன் 
வெற்றி நகுலசக தேவர் தேர்தனிலும் 
ஒத்து முடுகிவிடு பாகன் வாளமரி...... லசுரேசன் 
பத்து முடிகள்துக ளாக வாகுஇரு 
பத்து மொருகணையில் வீழ நேரவுணர் 
பட்டு மடியஅமர் மோது காளமுகில் ...... மருகோனே 
பச்சை மயிலில்வரு வீர வேல்முருக 
துட்ட நிருதர்குல கால வானவர்கள் 
பத்தி யுடனடியில் வீழ வாழ்வுதவு ...... பெருமாளே. 

பாடல் 1145

தத்த தந்தன தந்தன தந்தன 
தத்த தந்தன தந்தன தந்தன 
தத்த தந்தன தந்தன தந்தன ...... தந்ததான 

ஒக்க வண்டெழு கொண்டைகு லைந்திட 
வெற்பெ னுங்கன கொங்கைகு ழைந்திட 
உற்ப லங்கள்சி வந்துக விந்திட ....... இந்த்ரகோபம்
ஒத்த தொண்டைது வண்டமு தந்தர 
மெச்சு தும்பிக ருங்குயில் மென்புற 
வொக்க மென்தொனி வந்துபி றந்திட ...... அன்புகூர 
மிக்க சந்திர னொன்றுநி லங்களில் 
விக்ர மஞ்செய்தி லங்குந கம்பட 
மெத்த மென்பொரு ளன்பள வுந்துவ ...... ளின்பமாதர் 
வித்த கந்தரு விந்துத புங்குழி 
பட்ட ழிந்துந லங்குகு ரம்பையை 
விட்ட கன்றுநி னம்புய மென்பத ...... மென்றுசேர்வேன் 
மைக்க ருங்கட லன்றெரிமண்டிட 
மெய்க்ர வுஞ்சசி லம்புடல் வெம்பிட 
மற்று நன்பதி குன்றிய ழிந்திட ...... வும்பர்நாடன் 
வச்சி ரங்கைய ணிந்துப தம்பெற 
மெச்சு குஞ்சரிகொங்கைபு யம்பெற 
மத்த வெஞ்சின வஞ்சகர் தங்களை ...... நுங்கும்வேலா 
குக்கு டங்கொடி கொண்டப ரம்பர 
சக்ர மண்டல மெண்டிசை யம்புகழ் 
கொட்க கொன்றைய ணிந்தசி ரஞ்சர ...... ணங்கிகாரா 
கொத்த விழ்ந்தக டம்பலர் தங்கிய 
மிக்க வங்கண கங்கண திண்புய 
கொற்ற வங்குற மங்கைவி ரும்பிய ...... தம்பிரானே. 

பாடல் 1146

தான தத்தன தானன தானன 
தான தத்தன தானன தானன 
தான தத்தன தானன தானன ...... தனதான 

ஓது வித்தவர் கூலிகொ டாதவர் 
மாத வர்க்கதி பாதக மானவர் 
ஊச லிற்கன லாயெரிகாளையர் ...... மறையோர்கள் 
ஊர்த னக்கிட ரேசெயு மேழைகள் 
ஆர்த னக்குமு தாசின தாரிகள் 
ஓடி யுத்தம ரூதிய நாடின ...... ரிரவோருக் 
கேது மித்தனை தானமி டாதவர் 
பூத லத்தினி லோரம தானவர் 
ஈசர் விஷ்ணுவை சேவைசெய் வோர்தமை ...... யிகழ்வோர்கள் 
ஏக சித்ததி யானமி லாதவர் 
மோக முற்றிடு போகித மூறினர் 
ஈன ரித்தனை பேர்களு மேழ்நர ...... குழல்வாரே 
தாத தத்தத தாதத தாதத 
தூது துத்துது தூதுது தூதுது 
சாச சச்சச சாசச சாசச ...... சசசாச 
தாட டட்டட டாடட டாடட 
டூடு டுட்டுடு டூடுடு டூடுடு 
தாடி டிட்டிடி டீடிடி டீடிடி ...... டிடிடீடீ 
தீதி தித்திதி தீதிதி தீதிதி 
தோதி குத்திகு தோதிகு தோதிகு 
சேகு செக்குகு சேகுகு சேகுகு ...... செகுசேகு 
சேயெ னப்பல ராடிட மாகலை 
ஆயு முத்தமர் கூறிடும் வாசக 
சேகு சித்திர மாக நிணாடிய ...... பெருமாளே. 

பாடல் 1147

தானன தத்தன தத்த தத்தன 
தானன தத்தன தத்த தத்தன 
தானன தத்தன தத்த தத்தன ...... தந்ததான 

ஓலைத ரித்தகு ழைக்கு மப்புற 
மோடிநி றத்தும தர்த்து நெய்த்தற 
லோதிநி ழற்குள ளிக்கு லத்துட ...... னொன்றிஞானம் 
ஓதிமி குத்தத வத்த வர்க்கிட 
ரோகைசெ லுத்திவ டுப்ப டுத்தகி 
யூடுவி டத்தையி ருத்தி வைத்தக ...... ணம்பினாலே 
மாலைம யக்கைவி ளைத்து நற்பொருள் 
வாசமு லைக்குள கப்ப டுத்தியில் 
வாவென முற்றிந டத்தி யுட்புகு ...... மந்தமாதர் 
மாயம யக்கையொ ழித்து மெத்தென 
வானவ ருக்கரு ளுற்ற அக்ஷர 
வாய்மையெ னக்குமி னித்த ளித்தருள் ...... தந்திடாதோ 
வேலைய டைக்க அரிக்கு லத்தொடு 
வேணுமெ னச்சொலு மக்க ணத்தினில் 
வேகமொ டப்பும லைக்கு லத்தைந ...... ளன்கைமேலே 
வீசஅ வற்றினை யொப்ப மிட்டணை 
மேவிய ரக்கர்ப திக்குள் முற்பட 
வீடண னுக்கருள் வைத்த வற்றமை ...... யன்கள்மாளக் 
காலயி லக்கணை தொட்ட ருட்கன 
மாலமை திக்கரை யிற்ற ரித்துல 
காளஅ ளித்தப்ர புத்வ ருட்கடல் ...... தந்தகாமன் 
காயமொ ழித்தவர் பெற்ற கொற்றவ 
நானில வித்ததி னைப்பு னத்தொரு 
காதல்மி குத்துமி கப்ர மித்தருள் ...... தம்பிரானே. 

பாடல் 1148

தனன தந்தனந் தனன தந்தன 
தனன தந்தனந் தனன தந்தன 
தனன தந்தனந் தனன தந்தன ...... தனதான 
கடைசி வந்தகன் றுரைபு கன்றிரு 
குழையை யுந்துரந் தரிப ரந்தொளிர் 
கரிய கண்துறந் தவர்நி றந்தொளை ...... படவோடக் 
கலைநெ கிழ்ந்திருங் குழல்ச ரிந்திட 
முலைசு மந்தசைந் திடையொ சிந்துயிர் 
கவர இங்கிதங் கெறுவி தம்பெற ...... விளையாடும் 
படைம தன்பெருங் கிளைதி ருந்திய 
அதர கிஞ்சுகந் தனையு ணர்ந்தணி 
பணிநி தம்பஇன் பசுக முந்தர ...... முதிர்காம 
பரவ சந்தணிந் துனையு ணர்ந்தொரு 
மவுன பஞ்சரம் பயில்த ருஞ்சுக 
பதம டைந்திருந் தருள்பொ ருந்தும ...... தொருநாளே 
வடநெ டுஞ்சிலம் புகள்பு லம்பிட 
மகித லம்ப்ரியங் கொடும கிழ்ந்திட 
வருபு ரந்தரன் தனபு ரம்பெற ...... முதுகோப 
மகர வெங்கருங் கடலொ டுங்கிட 
நிசிச ரன்பெருங் குலமொ ருங்கிற 
வனச னின்றழும் படிநெ ருங்கிய ...... வொருசூதம் 
அடியொ டும்பிடுங் கியத டங்கர 
வடிவ அஞ்சுரும் புறவி ரும்பிய 
அடவி யுந்தொழும் பொடுதொ ழும்படி ...... யநுராக 
அவச மும்புனைந் தறமு னைந்தெழு 
பருவ தஞ்சிறந் தகன தந்தியின் 
அமுத மென்குயங் களின்மு யங்கிய ...... பெருமாளே. 

பாடல் 1149

தனதன தனதன தத்தாத் தானன 
தனதன தனதன தத்தாத் தானன 
தனதன தனதன தத்தாத் தானன ...... தந்ததான 

கதறிய கலைகொடு சுட்டாத் தீர்பொருள் 
பதறிய சமயிக ளெட்டாப் பேரொளி 
கருவற இருவினை கெட்டாற் காண்வரு ...... மென்றஏகங் 
கருகிய வினைமன துட்டாக் காதது 
சுருதிக ளுருகியொர் வட்டாய்த் தோய்வது 
கசடற முழுதையும் விட்டாற் சேர்வது ...... ணர்ந்திடாதே 
விதமது கரமுரல் மொட்டாற் சாடிய 
ரதிபதி யெனவரு துட்டாத் மாவுடன் 
வினைபுரிபவரிடு முற்றாச் சாலிரு ...... புண்டாணக 
ம்ருகமத முகுளித மொட்டாற் கார்முக 
நுதலெழு தியசிறு பொட்டாற் சாயக 
விரகுடை விழிவலை பட்டாற் றாதுந ...... லங்கலாமோ 
பதமலர் மிசைகழல் கட்டாப் பாலக 
சுருதிக ளடிதொழ எட்டாத் தேசிக 
பருகென வனமுலை கிட்டாத் தாரகை ...... தந்துநாளும் 
பரிவுற வெகுமுக நெட்டாற் றூடொரு
படுகையி னிடைபுழு வெட்டாப் பாசடை 
படர்வன பரிமள முட்டாட் டாமரை ...... தங்கிவாழுஞ் 
சததள அமளியை விட்டாற் றேறிய 
சலநிதி குறுகிட வொட்டாச் சூரொடு 
தமனிய குலகிரிபொட்டாய்த் தூளெழ ...... வென்றகோவே 
தழைதரு குழைதரு பட்டாட் சாலவு 
மழகிய கலவிதெ விட்டாக் காதலி 
தலைமக நிலமடி தட்டாத் தேவர்கள் ...... தம்பிரானே. 

பாடல் 1150

தனதன தனதன தானன தானந் 
தனத் தனந்தன தனன தான தனதன 
தானான தான தனனந் தானந் 
தனன தாத்தன தானத் தானத் தானத் ...... தாத்தன தனதான 

கலவியி னலமுரை யாமட வார்சந் 
தனத் தனங்களில் வசம தாகி யவரவர் 
பாதாதி கேச மளவும் பாடுங் 
கவிஞ னாய்த்திரிவேனைக் காமக் ரோதத் ...... தூர்த்தனை யபராதக் 
கபடனை வெகுபரி தாபனை நாளும் 
ப்ரமிக்கு நெஞ்சனை உருவ மாறி முறை முறை 
ஆசார வீன சமயந் தோறுங் 
களவு சாத்திர மோதிச் சாதித் தேனைச் ...... சாத்திர நெறிபோயைம் 
புலன்வழி யொழுகிய மோகனை மூகந் 
தனிற் பிறந் தொரு நொடியின் மீள அழிதரு 
மாதேச வாழ்வை நிலையென் றேயம் 
புவியின் மேற்பசு பாசத் தேபட் டேனைப் ...... பூக்கழ லிணைசேரப் 
பொறியிலி தனையதி பாவியை நீடுங் 
குணத் ரயங்களும் வரும நேக வினைகளு 
மாயா விகார முழுதுஞ் சாடும் 
பொருளின் மேற்சிறி தாசைப் பாடற் றேனைக் ...... காப்பது மொருநாளே 
குலகிரிதருமபி ராம மயூரம் 
ப்ரியப் படும்படி குவளை வாச மலர்கொடு 
வாரா வுலாவி யுணரும் யோகங் 
குலைய வீக்கிய வேளைக் கோபித் தேறப் ...... பார்த்தரு ளியபார்வைக் 
குரிசிலு மொருசுரர் பூசுர னோமென் 
றதற் கநந்தர மிரணி யாய நமவென 
நாராய ணாய நமவென் றோதுங் 
குதலை வாய்ச்சிறி யோனுக் காகத் தூணிற் ...... றோற்றிய வசபாணிப் 
பலநக நுதியி னிசாசர னாகங் 
கிழித் தளைந்தணி துளசி யோடு சிறுகுடல் 
தோண்மாலை யாக அணியுங் கோவும் 
பரவி வாழ்த்திட வேகற்றாரச் சோதிப் ...... பாற்பணி யிறைவாகைப் 
படமுக வடலயி ராபத மேறும் 
ப்ரபுப் பயங்கெட வடப ராரை வரைகெட 
வேலேவி வாவி மகரஞ் சீறும் 
பரவை கூப்பிட மோதிச் சூர்கெட் டோ டத் ...... தாக்கிய பெருமாளே. 

பாடல் 1151

தனத்த தானன தானான தந்தன 
தனத்த தானன தானான தந்தன 
தனத்த தானன தானான தந்தன ...... தந்ததான 

கறுத்து நீவிடு கூர்வேலி னுங்கடை 
சிவத்து நீடிய வாய்மீன வொண்குழை 
கடக்க வோடிய ஆலால நஞ்சன ...... வஞ்சநீடு 
கயற்க ணார்கனி வாயூற லுண்டணி 
கழுத்து மாகமு மேகீப வங்கொடு 
கலக்க மார்பக பாடீர குங்கும ...... கொங்கைமீதே 
உறுத்து மாரமு மோகாவ டங்களு 
மருத்து நேரிய கூர்வாள்ந கம்பட 
உடுத்த ஆடையும் வேறாயு ழன்றுக ...... ழன்றுவீழ 
உருக்கு நாபியின் மூழ்காம ருங்கிடை 
செருக்கு மோகன வாராத ரங்களை 
யொழிக்க வோர்வகை காணேனு றுந்துணை ...... யொன்றுகாணேன் 
நிறத்த நூபுர பாதார விந்தமு 
முடுத்த பீலியும் வாரார்த னங்களும் 
நிறத்தி லேபடு வேலான கண்களும் ...... வண்டுபாட 
நெறித்த வோதியு மாயான்ம னம்பர 
தவிக்க மால்தர லாமோ கலந்திட 
நினைக்க லாமென வேல்வேடர் கொம்புட ...... னண்புகூர்வாய் 
மறித்த வாரிதி கோகோவெ னும்படி 
வெறுத்த ராவணன் வாணாளை யம்பினில் 
வதைத்த மாமனு மேவார்பு ரங்கனல் ...... மண்டமேரு 
வளைத்த தாதையு மாறான குன்றமு 
மனைத்து லோகமும் வேதாக மங்களும் 
மதித்த சேவக வானாளு மும்பர்கள் ...... தம்பிரானே.