பொதுப்பாடல்கள் - 7

பாடல் 1184
தந்தானந் தாத்தந் தனதன
தந்தானந் தாத்தந் தனதன
தந்தானந் தாத்தந் தனதன ...... தனதான
மங்காதிங் காக்குஞ் சிறுவரு
முண்டேயிங் காற்றுந் துணைவியும்
வம்பாருந் தேக்குண் டிடவறி ...... தெணும்வாதை
வந்தேபொன் தேட்டங் கொடுமன
நொந்தேயிங் காட்டம் பெரிதெழ
வண்போதன் தீட்டுந் தொடரது ...... படியேமன்
சங்காரம் போர்ச்சங் கையிலுடல்
வெங்கானம் போய்த்தங் குயிர்கொள
சந்தேகந் தீர்க்குந் தனுவுட ...... னணுகாமுன்
சந்தாரஞ் சாத்தும் புயவியல்
கந்தாஎன் றேத்தும் படியென
சந்தாபந் தீர்த்தென் றடியிணை ...... தருவாயே
கங்காளன் பார்த்தன் கையிலடி
யுண்டேதிண் டாட்டங் கொளுநெடு
கன்சாபஞ் சார்த்துங் கரதல ...... னெருதேறி
கந்தாவஞ் சேர்த்தண் புதுமல
ரம்பான்வெந் தார்ப்பொன் றிடவிழி
கண்டான்வெங் காட்டங் கனலுற ...... நடமாடி
அங்காலங் கோத்தெண் டிசைபுவி
மங்காதுண் டாற்கொன் றதிபதி
அந்தாபந் தீர்த்தம் பொருளினை ...... யருள்வோனே
அன்பாலந் தாட்கும் பிடுமவர்
தம்பாவந் தீர்த்தம் புவியிடை
அஞ்சாநெஞ் சாக்கந் தரவல ...... பெருமாளே.
பாடல் 1185
தனன தனதன தனத்தா தன
தனன தனதன தனத்தா தன
தனன தனதன தனத்தா தன ...... தனதான
மதன தனுநிக ரிடைக்கே மன
முருக வருபிடி நடைக்கே யிரு
வனச பரிபுர மலர்க்கே மது ...... கரம்வாழும்
வகுள ம்ருகமத மழைக்கே மணி
மகர மணிவன குழைக்கே மட
மகளிர் முகுளித முலைக்கே கட ...... லமுதூறும்
அதர மதுரித மொழிக்கே குழை
யளவு மளவிய விழிக்கே தள
வனைய தொருசிறு நகைக்கே பனி ...... மதிபோலும்
அழகு திகழ்தரு நுதற்கே யந
வரத மவயவ மனைத்தூ டினு
மவச முறுமயல் தவிர்த்தாள் வது ...... மொருநாளே
உததி புதைபட அடைத்தா தவன்
நிகரி லிரதமும் விடுக்கா நகர்
ஒருநொ டியில்வெயி லெழச்சா நகி ...... துயர்தீர
உபய வொருபது வரைத்தோள் களு
நிசிச ரர்கள்பதி தசக்ரீ வமு
முருள ஒருகணை தெரித்தா னும ...... வுனஞான
திதமி லவுணர்த மிருப்பா கிய
புரமு மெரியெழ முதற்பூ தர
திலத குலகிரிவளைத்தா னும ...... கிழவானோர்
திருவ நகர்குடி புகச்சீ கர
மகர சலமுறை யிடச்சூ ரொடு
சிகர கிரிபொடி படச்சா டிய ...... பெருமாளே.
பாடல் 1186
ராகம் – தோடி, தாளம் - திஸ்ர ஏகம் (3)
தனதானன தனதானன தனதானன தனதானன
தனதானன தனதானன ...... தனதான
மதனேவிய கணையாலிரு வினையால்புவி கடல்சாரமும்
வடிவாயுடல் நடமாடுக ...... முடியாதேன்
மனமாயையொ டிருகாழ்வினை யற்முதுடை மலம்வேரற
மகிழ்ஞானக அநுபூதியி ...... னருள்மேவிப்
பதமேவுமு னடியாருடன் விளையாடுக அடியேன்முனெ
பரிபூரண கிருபாகர ...... முடன்ஞான
பரிமேலழ குடனேறிவி ணவர்பூமழை யடிமேல்விட
பலகோடிவெண் மதிபோலவெ ...... வருவாயே
சதகோடிவெண் மடவார்கட லெனசாமரை யசையாமுழு
சசிசூரியர் சுடராமென ...... வொருகோடிச்
சடைமாமுடி முநிவோர்சர ணெனவேதியர் மறையோதுக
சதிநாடக மருள்வேணிய ...... னருள்பாலா
விதியானவ னிளையாளென துளமேவிய வளிநாயகி
வெகுமாலுற தனமேலணை ...... முருகோனே
வெளியாசையொ டடைபூவணர் மருகாமணி முதிராடக
வெயில்வீசிய அழகாதமிழ் ...... பெருமாளே.
பாடல் 1187
தானதனத் தத்த தத்த தத்தன
தானதனத் தத்த தத்த தத்தன
தானதனத் தத்த தத்த தத்தன ...... தனதான
மாடமதிட் சுற்று மொக்க வைத்திட
வீடுகனக் கத்த னத்தி லச்சுறு
மாலிபமொத் துப்ர புத்த னத்தினி ...... லடைவாக
மாதர்பெருக் கத்த ருக்க மற்றவர்
சூழவிருக் கத்த ரிக்க இப்படி
வாழ்க்கையில்மத் தப்ர மத்த சித்திகொள் ...... கடைநாளிற்
பாடையினிற் கட்டி விட்டு நட்டவர்
கூடஅரற் றிப்பு டைத்து றுப்புள
பாவையெடுத் துத்த ழற்கி ரைப்பட ...... விடலாய
பாடுதொலைத் துக்க ழிக்க அக்ருபை
தேடுமெனைத் தற்பு ரக்க வுற்றிரு
பாதுகையைப் பற்றி நிற்க வைத்தெனை ...... யருளாதோ
ஆடகவெற் பைப்பெ ருத்த மத்தென
நாகவடத் தைப்பி ணித்து ரத்தம
ரார்கள்பிடித் துத்தி ரித்தி டப்புகை ...... யனலாக
ஆழிகொதித் துக்க தற்றி விட்டிமை
யோர்களொளிக் கக்க ளித்த உக்கிர
ஆலவிடத் தைத்த ரித்த அற்புதர் ...... குமரேசா
வேடர்சிறுக் கிக்கி லச்சை யற்றெழு
பாரும்வெறுத் துச்சி ரிப்ப நட்பொடு
வேளையெனப் புக்கு நிற்கும் வித்தக ....... இளையோனே
வேகமிகுத் துக்க திக்கும் விக்ரம
சூரர்சிரத் தைத்து ணித்த டக்குதல்
வீரமெனத் தத்து வத்து மெச்சிய ...... பெருமாளே.
பாடல் 1188
ராகம் – சங்கராபரணம், தாளம் - அங்கதாளம் (6 1/2)
தகதகிட-2 1/2, தகதிமி-2, தகதிமி-2
தாந்தான தந்தன தந்தன
தாந்தான தந்தன தந்தன
தாந்தான தந்தன தந்தன ...... தனதான
மாண்டாரெ லும்பணி யுஞ்சடை
யாண்டாரிறைஞ்ச மொழிந்ததை
வான்பூத லம்பவ னங்கனல் ...... புனலான
வான்பூத முங்கர ணங்களு
நான்போயொ டுங்கஅ டங்கலு
மாய்ந்தால்வி ளங்கும தொன்றினை ...... யருளாயேல்
வேண்டாமை யொன்றைய டைந்துள
மீண்டாறி நின்சர ணங்களில்
வீழந்தாவல் கொண்டுரு கன்பினை ...... யுடையேனாய்
வேந்தாக டம்புபு னைந்தருள்
சேந்தாச ரண்சர ணென்பது
வீண்போம தொன்றல என்பதை ...... யுணராதோ
ஆண்டார்த லங்கள ளந்திட
நீண்டார்மு குந்தர்த டந்தனில்
ஆண்டாவி துஞ்சிய தென்றுமு ...... தலைவாயுற்
றாங்கோர்சி லம்புபு லம்பிட
ஞான்றூது துங்கச லஞ்சலம்
ஆம்பூமு ழங்கிய டங்கும ...... ளவில்நேசம்
பூண்டாழி கொண்டுவ னங்களி
லேய்ந்தாள வென்றுவெ றுந்தனி
போந்தோல மென்றுத வும்புயல் ...... மருகோனே
பூம்பாளை யெங்கும ணங்கமழ்
தேங்காவில் நின்றதொர் குன்றவர்
பூந்தோகை கொங்கைவி ரும்பிய ...... பெருமாளே.
பாடல் 1189
தானதன தான தத்த தானதன தான தத்த
தானதன தான தத்த ...... தனதான
மாறுபொரு கால னொக்கும் வானிலெழு மாம திக்கும்
வாரிதுயி லாவ தற்கும் ...... வசையேசொல்
மாயமட வார்த மக்கும் ஆயர்குழ லூதி சைக்கும்
வாயுமிள வாடை யிற்கு ...... மதனாலே
வேறுபடு பாய லுக்கு மேயெனது பேதை யெய்த்து
வேறுபடு மேனி சற்று ...... மழியாதே
வேடர்குல மாதி னுக்கு வேடைகெட வேந டித்து
மேவுமிரு பாத முற்று ...... வரவேணும்
ஆறுமிடை வாள ரக்கர் நீறுபட வேலெ டுத்த
ஆறுமுக னேகு றத்தி ...... மணவாளா
ஆழியுல கேழ டக்கி வாசுகியை வாய டக்கி
ஆலுமயி லேறி நிற்கு ...... மிளையோனே
சீறுபட மேரு வெற்பை நீறுபட வேசி னத்த
சேவலவ நீப மொய்த்த ...... திரள்தோளா
சேருமட லால்மி குத்த சூரர்அகாடு போய டைத்த
தேவர்சிறை மீள விட்ட ...... பெருமாளே.
பாடல் 1190
தன்னதன தத்த தத்த தன்னதன தத்த தத்த
தன்னதன தத்த தத்த ...... தனதான
மின்னினில்ந டுக்க முற்ற நுண்ணியநு சுப்பில் முத்த
வெண்ணகையில் வட்ட மொத்து ...... அழகார
விம்மியிள கிக்க தித்த கொம்மைமுலை யிற்கு னித்த
வின்னுதலி லிட்ட பொட்டில் ...... விலைமாதர்
கன்னல்மொழி யிற்சி றக்கு மன்னநடை யிற்க றுத்த
கண்ணினிணை யிற்சி வத்த ...... கனிவாயிற்
கண்ணழிவு வைத்த புத்தி ஷண்முகநி னைக்க வைத்த
கன்மவச மெப்ப டிக்கு ...... மறவேனே
அன்னநடை யைப்ப ழித்த மஞ்ஞைமலை யிற்கு றத்தி
யம்மையட விப்பு னத்தில் ...... விளையாடும்
அன்னையிறு கப்பி ணித்த பன்னிருதி ருப்பு யத்தில்
அன்னியஅ ரக்க ரத்த ...... னையுமாளப்
பொன்னுலகி னைப்பு ரக்கு மன்னநல்வ்ர தத்தை விட்ட
புன்மையர்பு ரத்ர யத்தர் ...... பொடியாகப்
பொன்மலைவ ளைத்தெ ரித்த கண்ணுதலி டத்தி லுற்ற
புண்ணியவொ ருத்தி பெற்ற ...... பெருமாளே.
பாடல் 1191
தத்தன தான தனத்தன தத்தன தான தனத்தன
தத்தன தான தனத்தன ...... தனதான
முத்தமு லாவு தனத்தியர் சித்தச னாணை செலுத்திகள்
முத்தமி டாம னுருக்கிக ...... ளிளைஞோர்பால்
முட்டவி லாவி மருட்டிகள் நெட்டிலை வேலின் விழிச்சியர்
முப்பது கோடி மனத்திய ...... ரநுராகத்
தத்தைக ளாசை விதத்தியர் கற்புர தோளின் மினுக்கிகள்
தப்புறு மாறக மெத்திக ...... ளளவேநான்
தட்டழி யாது திருப்புகழ் கற்கவு மோதவு முத்தமிழ்
தத்துவ ஞான மெனக்கருள் ...... புரிவாயே
மத்தக யானை யுரித்தவர் பெற்றகு மார இலட்சுமி
மைத்துன னாகிய விக்ரமன் ...... மருகோனே
வற்றிட வாரிதி முற்றிய வெற்றிகொள் சூரர் பதைப்புற
வற்புறு வேலைவி டுத்தரு ...... ளிளையோனே
சித்திர மான குறத்தியை யுற்றொரு போது புனத்திடை
சிக்கென வேதழு விப்புணர் ...... மணவாளா
செச்சையு லாவு பதத்தின மெய்த்தவர் வாழ்வு பெறத்தரு
சித்தவி சாக வியற்சுரர் ...... பெருமாளே.
பாடல் 1192
தனன தானன தத்தான தானன
தனன தானன தத்தான தானன
தனன தானன தத்தான தானன ...... தனதான
முருகு லாவிய மைப்பாவு வார்குழல்
முளரிவாய்நெகிழ் வித்தார வேல்விழி
முடுகு வோர்குலை வித்தான கோடேனு ...... முலையாலே
முறைமை சேர்கெட மைத்தார்வு வார்கடல்
முடுகு வோரென எய்த்தோடி யாகமு
மொழியும் வேறிடு பித்தேறி னாரெனு ...... முயல்வேகொண்
டுருகு வார்சிக சிற்றாம னோலய
முயிரு மாகமு மொத்தாசை யோடுள
முருகி தீமெழு கிட்டான தோவென ...... வுரையாநண்
புலக வாவொழி வித்தார் மனோலய
முணர்வு நீடிய பொற்பாத சேவடி
யுலவு நீயெனை வைத்தாள வேயருள் ...... தருவாயே
குருகு லாவிய நற்றாழி சூழ்நகர்
குமர னேமுனை வெற்பார் பராபரை
குழக பூசுரர் மெய்க்காணும் வீரர்தம் ...... வடிவேலா
குறவர் சீர்மக ளைத்தேடி வாடிய
குழையு நீள்கர வைத்தோடி யேயவர்
குடியி லேமயி லைக்கொடு சோதிய ...... வுரவோனே
மருகு மாமது ரைக்கூடல் மால்வரை
வளைவு ளாகிய நக்கீர ரோதிய
வளகை சேர்தமி ழுக்காக நீடிய ...... கரவோனே
மதிய மேவிய சுற்றாத வேணியர்
மகிழ நீநொடி யற்றான போதினில்
மயிலை நீடுல கைச்சூழ வேவிய ...... பெருமாளே.
பாடல் 1193
தனனானத் தனந்த தந்தன
தனனானத் தனந்த தந்தன
தனனானத் தனந்த தந்தன ...... தனதான
முலைமேலிற் கலிங்க மொன்றிட
முதல்வானிற் பிறந்த மின்பிறை
நுதல்மேல்முத் தரும்ப புந்தியி ...... லிதமார
முகநேசித் திலங்க வும்பல
விநன்முசிப் புரண்ட வண்கடல்
முரணோசைக் கமைந்த வன்சர ...... மென்முவா
மலர்போலச் சிவந்த செங்கணில்
மருள்கூர்கைக் கிருண்ட அஞ்சனம்
வழுவாமற் புனைந்து திண்கய ...... மெனநாடி
வருமாதர்க் கிரங்கி நெஞ்சமு
மயலாகிப் பரந்து நின்செயல்
மருவாமற் கலங்கும் வஞ்சக ...... மொழியாதோ
தொலையாநற் றவங்க ணின்றுனை
நிலையாகப் புகழ்ந்து கொண்டுள
அடியாருட் டுலங்கி நின்றருள் ...... துணைவேளே
துடிநேரொத் திலங்கு மென்கொடி
யிடைதோகைக் கிசைந்த வொண்டொடி
சுரர்வாழப் பிறந்த சுந்தரி...... மணவாளா
மலைமாளப் பிளந்த செங்கையில்
வடிவேலைக் கொடந்த வஞ்சக
வடிவாகக் கரந்து வந்தமர் ...... பொருசூரன்
வலிமாளத் துரந்த வன்திறல்
முருகாமற் பொருந்து திண்புய
வடிவாமற் றநந்த மிந்திரர் ...... பெருமாளே.
பாடல் 1194
ராகம் – சங்கரானந்தப்ரியா, தாளம் - அங்கதாளம் (7 1/2)
(எடுப்பு - 1/2 அக்ஷரம் தள்ளி)
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தனன தந்தன தாத்தன தந்தன
தனன தந்தன தாத்தன தந்தன
தனன தந்தன தாத்தன தந்தன ...... தனதான
முனைய ழிந்தது மேட்டிகு லைந்தது
வயது சென்றது வாய்ப்ப லுதிர்ந்தது
முதுகு வெஞ்சிலை காட்டிவ ளைந்தது ...... ப்ரபையான
முகமி ழிந்தது நோக்குமி ருண்டது
இருமல் வந்தது தூக்கமொ ழிந்தது
மொழித ளர்ந்தது நாக்குவி ழுந்தது ...... அறிவேபோய்
நினைவ யர்ந்தது நீட்டல் முடங்கலு
மவச மும்பல ஏக்கமு முந்தின
நெறிம றந்தது மூப்பு முதிர்ந்தது ...... பலநோயும்
நிலுவை கொண்டது பாய்க்கிடை கண்டது
சலம லங்களி னாற்றமெ ழுந்தது
நிமிஷ மிங்கினி யாச்சுதென் முன்பினி ...... தருள்வாயே
இனைய இந்திர னேற்றமு மண்டர்கள்
தலமு மங்கிட வோட்டியி ருஞ்சிறை
யிடுமி டும்புள ராக்கதர் தங்களில் ...... வெகுகோடி
எதிர்பொ ரும்படி போர்க்குளெ திர்ந்தவர்
தசைசி ரங்களு நாற்றிசை சிந்திட
இடிமு ழங்கிய வேற்படை யொன்றனை ...... யெறிவோனே
தினைவ னங்கிளி காத்தச வுந்தரி
அருகு சென்றடி போற்றிம ணஞ்செய்து
செகம றிந்திட வாழ்க்கைபு ரிந்திடு ...... மிளையோனே
திரிபு ரம்பொடி யாக்கிய சங்கரர்
குமர கந்தப ராக்ரம செந்தமிழ்
தெளிவு கொண்டடி யார்க்குவி ளம்பிய ...... பெருமாளே.
பாடல் 1195
தத்தத்தத் தத்தத் தனதன
தத்தத்தத் தத்தத் தனதன
தத்தத்தத் தத்தத் தனதன ...... தனதான
மைக்குக்கைப் புக்கக் கயல்விழி
யெற்றிக்கொட் டிட்டுச் சிலைமதன்
வர்க்கத்தைக் கற்பித் திடுதிற ...... மொழியாலே
மட்டிட்டுத் துட்டக் கெருவித
மிட்டிட்டுச் சுற்றிப் பரிமள
மச்சப்பொற் கட்டிற் செறிமல ...... ரணைமீதே
புக்குக்கைக் கொக்கப் புகுமொரு
அற்பச்சிற் றிற்பத் தெரிவையர்
பொய்க்குற்றுச் சுற்றித் திரிகிற ...... புலையேனைப்
பொற்பித்துக் கற்பித் துனதடி
அர்ச்சிக்கச் சற்றுக் க்ருபைசெய
புத்திக்குச் சித்தித் தருளுவ ...... தொருநாளே
திக்குக்குத் திக்குத் திகுதிகு
டுட்டுட்டுட் டுட்டுட் டுடுடுடு
தித்தித்தித் தித்தித் திதியென ...... நடமாடுஞ்
சித்தர்க்குச் சுத்தப் பரமநல்
முத்தர்க்குச் சித்தக் க்ருபையுள
சித்தர்க்குப் பத்தர்க் கருளிய ...... குருநாதா
ஒக்கத்தக் கிட்டுத் திரியசுர்
முட்டக்கொட் டற்றுத் திரிபுர
மொக்கக்கெட் டிட்டுத் திகுதிகு ...... வெனவேக
உற்பித்துக் கற்பித் தமரரை
முற்பட்டக் கட்டச் சிறைவிடு
மொட்குக்டக் கொற்றக் கொடியுள ...... பெருமாளே.
பாடல் 1196
ராகம் – ஹம்ஸத்வனி, தாளம் - அங்கதாளம் (7 1/2)
தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1, தகிட-1 1/2, தகதிமி-2
தான தனதனன தான தாத்தன
தான தனதனன தான தாத்தன
தான தனதனன தான தாத்தன ...... தனதான
மோது மறலியொரு கோடி வேற்படை
கூடி முடுகியெம தாவி பாழ்த்திட
மோக முடையவெகு மாதர் கூட்டமு ...... மயலாரும்
மூளு மளவில்விசை மேல்வி ழாப்பரி
தாப முடனும்விழி நீர்கொ ளாக்கொடு
மோக வினையில்நெடு நாளின் மூத்தவ ...... ரிளையோர்கள்
ஏது கருமமிவர் சாவெ னாச்சிலர்
கூடி நடவுமிடு காடெ னாக்கடி
தேழு நரகினிடை வீழ்மெ னாப்பொறி ...... யறுபாவி
ஏழு புவனமிகு வான நாட்டவர்
சூழ முநிவர்கிளை தாமு மேத்திட
ஈச னருள்குமர வேத மார்த்தெழ ...... வருவாயே
சூது பொருதரும னாடு தோற்றிரு
வாறு வருஷம்வன வாச மேற்றியல்
தோகை யுடனுமெவி ராட ராச்சிய ...... முறைநாளிற்
சூறை நிரைகொடவ ரேக மீட்டெதி
ராளு முரிமைதரு மாறு கேட்டொரு
தூது செலஅடுவ லாண்மை தாக்குவ ...... னெனமீள
வாது சமர்திருத ரான ராட்டிர
ராஜ குமரர்துரி யோத னாற்பிறர்
மாள நிருபரொடு சேனை தூட்பட ...... வரிசாப
வாகை விஜயனடல் வாசி பூட்டிய
தேரை முடுகுநெடு மால்ப ராக்ரம
மாயன் மருகஅமர் நாடர் பார்த்திப ...... பெருமாளே.
பாடல் 1197
தனனத்தன தானன தானன
தனனத்தன தானன தானன
தனனத்தன தானன தானன ...... தனதான
வடிகட்டிய தேனென வாயினி
லுறுதுப்பன வூறலை யார்தர
வரைவிற்றிக ழூடலி லேதரு ...... மடவார்பால்
அடிபட்டலை பாவநிர் மூடனை
முகடித்தொழி லாமுன நீயுன
தடிமைத்தொழி லாகாஎ நாளினி ...... லருள்வாயோ
பொடிபட்டிட ராவணன் மாமுடி
சிதறச்சிலை வாளிக ளேகொடு
பொருகைக்கள மேவிய மாயவன் ...... மருகோனே
கொடுமைத்தொழி லாகிய கானவர்
மகிமைக்கொள வேயவர் வாழ்சிறு
குடிலிற்குற மானொடு மேவிய ...... பெருமாளே.
பாடல் 1198
தத்த தனத்தத் தனத்த தத்தன
தத்த தனத்தத் தனத்த தத்தன
தத்த தனத்தத் தனத்த தத்தன ...... தனதான
வட்ட முலைக்கச் சவிழ்த்து வைத்துள
முத்து வடத்தைக் கழுத்தி லிட்டிரு
மைக்கு வளைக்கட் குறிப்ப ழுத்திய ...... பொதுமாதர்
மட்டம ளிக்குட் டிருத்தி முத்தணி
மெத்தை தனக்குட் செருக்கி வெற்றிலை
வைத்த பழுப்பச் சிலைச்சு ருட்கடி ...... யிதழ்கோதிக்
கட்டி யணைத்திட் டெடுத்து டுத்திடு
பட்டை யவிழ்த்துக் கருத்தி தத்தொடு
கற்ற கலைச்சொற் களிற்ப யிற்றுள ...... முயல்போதுங்
கைக்கு ளிசைத்துப் பிடித்த கட்கமும்
வெட்சி மலர்ப்பொற் பதத்தி ரட்சணை
கட்டு மணிச்சித் திரத்தி றத்தையு ...... மறவேனே
கொட்ட மிகுத்திட் டரக்கர் பட்டணம்
இட்டு நெருப்புக் கொளுத்தி யத்தலை
கொட்டை பரப்பச் செருக்க ளத்திடை ...... யசுரோரைக்
குத்தி முறித்துக் குடிப்ப ரத்தமும்
வெட்டு யழித்துக் கனக்க ளிப்பொடு
கொக்கரியிட்டுத் தெரித்த டுப்பன ...... வொருகோடிப்
பட்ட பிணத்தைப் பிடித்தி ழுப்பன
சச்சரிகொட்டிட் டடுக்கெ டுப்பன
பற்கள் விரித்துச் சிரித்தி ருப்பன ...... வெகுபூதம்
பட்சி பறக்கத் திசைக்குள் மத்தளம்
வெற்றி முழக்கிக் கொடிப்பி டித்தயில்
பட்டற விட்டுத் துரத்தி வெட்டிய ...... பெருமாளே.
பாடல் 1199
தனதன தாத்த தாத்த தனதன தாத்த தாத்த
தனதன தாத்த தாத்த ...... தனதான
வளைகர மாட்டி வேட்டி னிடைதுயில் வாட்டி யீட்டி
வரிவிழி தீட்டி யேட்டின் ...... மணம்வீசும்
மழைகுழல் காட்டி வேட்கை வளர்முலை காட்டி நோக்கின்
மயில்நடை காட்டி மூட்டி ...... மயலாகப்
புளகித வார்த்தை யேற்றி வரிகலை வாழ்த்தி யீழ்த்து
புணர்முலை சேர்த்து வீக்கி ...... விளையாடும்
பொதுமட வார்க்கு ஏற்ற வழியுறு வாழ்க்கை வேட்கை
புலைகுண மோட்டி மாற்றி ...... யருள்வாயே
தொளையொழு கேற்ற நோக்கி பலவகை வாச்சி தூர்த்து
சுடரடி நீத்த லேத்து ...... மடியார்கள்
துணைவன்மை நோக்கி னிடைமுறை யாய்ச்சி மார்ச் சொல்
சொலியமு தூட்டி யாட்டு ...... முருகோனே
இளநகை யோட்டி மூட்டர் குலம்விழ வாட்டி யேட்டை
யிமையவர் பாட்டை மீட்ட ...... குருநாதா
இயல்புவி வாழ்த்தி யேத்த எனதிடர் நோக்கி நோக்க
மிருவினை காட்டி மீட்ட ...... பெருமாளே.
பாடல் 1200
தானன தனன தனத்தத்த
தானன தனன தனத்தத்த
தானன தனன தனத்தத்த ...... தனதான
வாடையில் மதனை யழைத்துற்று
வாள்வளை கலக லெனக்கற்றை
வார்குழல் சரிய முடித்திட்டு ...... துகிலாரும்
மால்கொள நெகிழ வுடுத்திட்டு
நூபுர மிணையடி யைப்பற்றி
வாய்விட நுதல்மிசை பொட்டிட்டு ...... வருமாய
நாடக மகளிர் நடிப்புற்ற
தோதக வலையில கப்பட்டு
ஞாலமு முழுது மிகப்பித்த ...... னெனுமாறு
நாணமு மரபு மொழுக்கற்று
நீதியு மறிவும றக்கெட்டு
நாயடி மையுமடி மைப்பட்டு ...... விடலாமோ
ஆடிய மயிலினை யொப்புற்று
பீலியு மிலையு முடுத்திட்டு
ஆரினு மழகு மிகப்பெற்று ...... யவனாளும்
ஆகிய விதண்மிசை யுற்றிட்டு
மானின மருள விழித்திட்டு
ஆயுத கவணொரு கைச்சுற்றி ...... விளையாடும்
வேடுவர் சிறுமி யொருத்திக்கு
யான்வழி யடிமை யெனச்செப்பி
வீறுள அடியிணை யைப்பற்றி ...... பலகாலும்
வேதமு மமரரு மெய்ச்சக்ர
வாளமு மறிய விலைப்பட்டு
மேருவில் மிகவு மெழுத்திட்ட ...... பெருமாளே.
பாடல் 1201
தனதனன தனதனன தனன தாத்ததன
தனதனன தனதனன தனன தாத்ததன
தனதனன தனதனன தனன தாத்ததன ...... தனதான
விரைசொரியு ம்ருகமதமு மலரும் வாய்த்திலகு
விரிகுழலு மவிழநறு மெழுகு கோட்டுமுலை
மிசையில்வரு பகலொளியை வெருவ வோட்டுமணி ...... வகையாரம்
விடுதொடைகள் நகநுதியி லறவும் வாய்த்தொளிர
விழிசெருக மொழிபதற அமுது தேக்கியகை
விதறிவளை கலகலென அழகு மேற்பொழிய ...... அலர்மேவும்
இருசரண பரிபுரசு ருதிக ளார்க்கவச
மிலகுகடல் கரைபுரள இனிமை கூட்டியுள
மிதம்விளைய இருவரெனு மளவு காட்டரிய ...... அநுராகத்
திடைமுழுகி யெனதுமன தழியு நாட்களினு
மிருசரண இயலும்வினை யெறியும் வேற்கரமு
மெழுதரிய திருமுகமு மருளு மேத்தும்வகை ...... தரவேணும்
அரிபிரம ரடிவருட வுததி கோத்தலற
அடல்வடவை யனலுமிழ அலகை கூட்டமிட
அணிநிணமு மலைபெருக அறையும் வாச்சியமு ...... மகலாது
அடல்கழுகு கொடிகெருட னிடைவி டாக்கணமு
மறுகுறளு மெறிகுருதி நதியின் மேற்பரவ
அருணரண முகவயிர வர்களு மார்ப்பரவ ...... மிடநாளும்
பரவுநிசி சரர்முடிகள் படியின் மேற்குவிய
பவுரிகொடு திரியவரை பலவும் வேர்ப்பறிய
பகர்வரிய ககனமுக டிடிய வேட்டைவரு ...... மயில்வீரா
படருநெறி சடையுடைய இறைவர் கேட்குரிய
பழயமறை தருமவுன வழியை யார்க்குமொரு
பரமகுரு பரனெனவு மறிவு காட்டவல ...... பெருமாளே.
பாடல் 1202
தானத்த தந்த தந்த தானத்த தந்த தந்த
தானத்த தந்த தந்த ...... தனதான
வேலொத்து வென்றி யங்கை வேளுக்கு வெஞ்ச ரங்க
ளாமிக்க கண்க ளென்று ...... மிருதோளை
வேயொக்குமென்று கொங்கை மேல்வெற்ப தென்றுகொண்டை
மேகத்தை வென்ற தென்று ...... மெழில்மாதர்
கோலத்தை விஞ்ச வெஞ்சொல் கோடித்து வஞ்ச நெஞ்சர்
கூடத்தில் நின்று நின்று ...... குறியாதே
கோதற்ற நின்ப தங்கள் நேர்பற்றி யின்ப மன்பு
கூர்கைக்கு வந்து சிந்தை ...... குறுகாதோ
ஞாலத்தை யன்ற ளந்து வேலைக்கு ளுந்து யின்று
நாடத்தி முன்பு வந்த ...... திருமாலும்
நாடத்த டஞ்சி லம்பை மாவைப்பி ளந்த டர்ந்து
நாகத்த லங்கு லுங்க ...... விடும்வேலா
ஆலித்தெ ழுந்த டர்ந்த ஆலத்தை யுண்ட கண்ட
ராகத்தில் மங்கை பங்கர் ...... நடமாடும்
ஆதிக்கு மைந்த னென்று நீதிக்குள் நின்ற அன்பர்
ஆபத்தி லஞ்ச லென்ற ...... பெருமாளே.
பாடல் 1203
ராகம் – ஸாமா, தாளம் - அங்கதாளம் (5 1/2)
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தனதான தந்த தந்த தனதான தந்த தந்த
தனதான தந்த தந்த ...... தனதான
அடியார்ம னஞ்சலிக்க எவராகி லும்ப ழிக்க
அபராதம் வந்து கெட்ட ...... பிணிமூடி
அனைவோரும் வந்து சிச்சி யெனநால்வ ருஞ்சி ரிக்க
அனலோட ழன்று செத்து ...... விடுமாபோற்
கடையேன்ம லங்கள் முற்று மிருநோயு டன்பி டித்த
கலியோடி றந்து சுத்த ...... வெளியாகிக்
களிகூர என்ற னுக்கு மயிலேறி வந்து முத்தி
கதியேற அன்பு வைத்து ...... னருள்தாராய்
சடைமீது கங்கை வைத்து விடையேறு மெந்தை சுத்த
தழல்மேனி யன்சி ரித்தொர் ...... புர்முணும்
தவிடாக வந்தெ திர்த்த மதனாக முஞ்சி தைத்த
தழல்பார்வை யன்ற ளித்த ...... குருநாதா
மிடிதீர அண்ட ருக்கு மயிலேறி வஞ்சர் கொட்டம்
வெளியாக வந்து நிர்த்த ...... மருள்வோனே
மினநூல்ம ருங்குல் பொற்பு முலைமாதி ளங்கு றத்தி
மிகுமாலொ டன்பு வைத்த ...... பெருமாளே.
பாடல் 1204
தனதன தாத்தன தனதன தாத்தன
தனதன தாத்தன ...... தனதான
அடியில்வி டாப்பிண மடையவி டாச்சிறி
தழியுமுன் வீட்டுமு ...... னுயர்பாடை
அழகொடு கூட்டூமி னழையுமின் வார்ப்பறை
யழுகையை மாற்றுமி ...... னொதியாமுன்
எடுமினி யாக்கையை யெனஇடு காட்டெரி
யிடைகொடு போய்த்தமர் ...... சுடுநாளில்
எயினர்கு லோத்தமை யுடன்மயில் மேற்கடி
தெனதுயிர் காத்திட ...... வரவேணும்
மடுவிடை போய்ப்பரு முதலையின் வாய்ப்படு
மதகரிகூப்பிட ...... வளையூதி
மழைமுகில் போற்கக பதிமிசை தோற்றிய
மகிபதி போற்றிடு ...... மருகோனே
படர்சடை யாத்திகர் பரிவுற ராட்சதர்
பரவையி லார்ப்பெழ ...... விடும்வேலாற்
படமுனி யாப்பணி தமனிய நாட்டவர்
பதிகுடி யேற்றிய ...... பெருமாளே.
பாடல் 1205
தத்தன தான தானன தத்தன தான தானன
தத்தன தான தானன ...... தனதான
அப்படி யேழு மேழும்வ குத்துவ ழாது போதினி
னக்ரம்வி யோம கோளகை ...... மிசைவாழும்
அக்ஷர தேவி கோவின்வி திப்படி மாறி மாறிய
னைத்துரு வாய காயம ...... தடைவேகொண்
டிப்படி யோனி வாய்தொறு முற்பவி யாவி ழாவுல
கிற்றடு மாறி யேதிரி...... தருகாலம்
எத்தனை யூழி காலமெ னத்தெரியாது வாழியி
னிப்பிற வாது நீயருள் ...... புரிவாயே
கற்பக வேழ மேய்வன பச்சிள ஏனல் மீதுறை
கற்புடை மாது தோய்தரு ...... மபிராம
கற்புர தூளி லேபன மற்புய பாக சாதன
கற்பக லோக தாரண ...... கிரிசால
விப்ரச மூக வேதன பச்சிம பூமி காவல
வெட்சியு நீப மாலையு ...... மணிவோனே
மெத்திய ஆழி சேறெழ வெற்பொடு சூர னீறெழ
விக்ரம வேலை யேவிய ...... பெருமாளே.
பாடல் 1206
தனன தானனம் தனன தானனம்
தனன தானனம் ...... தனதான
அயில்வி லோசனங் குவிய வாசகம்
பதற ஆனனங் ...... குறுவெர்வுற்
றளக பாரமுங் குலைய மேல்விழுந்
ததர பானமுண் ...... டியல்மாதர்
சயில பாரகுங் குமப யோதரந்
தழுவு மாதரந் ...... தமியேனால்
தவிரொ ணாதுநின் கருணை கூர்தருந்
தருண பாதமுந் ...... தரவேணும்
கயிலை யாளியுங் குலிச பாணியுங்
கமல யோனியும் ...... புயகேசன்
கணப ணாமுகங் கிழிய மோதுவெங்
கருட வாகனந் ...... தனிலேறும்
புயலி லேகரும் பரவ வானிலும்
புணரிமீதுனுங் ...... கிரிமீதும்
பொருநி சாசரன் தனது மார்பினும்
புதைய வேல்விடும் ...... பெருமாளே.
பாடல் 1207
தனத்த தத்தனா தனத்த தத்தனா
தனத்த தத்தனா ...... தனதான
அருக்கி மெத்ததோள் திருத்தி யுற்றுமார்
பசைத்து வக்குமா ...... லிளைஞோரை
அழைத்து மிக்ககா சிழைத்து மெத்தைமீ
தணைத்து மெத்தமா ...... லதுகூர
உருக்கி யுட்கொள்மா தருக்கு ளெய்த்துநா
வுலற்றி யுட்குநா ...... ணுடன்மேவி
உழைக்கு மத்தைநீ யொழித்து முத்திபா
லுறக்கு ணத்ததா ...... ளருள்வாயே
சுருக்க முற்றமால் தனக்கு மெட்டிடா
தொருத்தர் மிக்கமா ...... நடமாடுஞ்
சுகத்தி லத்தர்தா மிகுத்த பத்திகூர்
சுரக்க வித்தைதா ...... னருள்வோனே
பெருக்க வெற்றிகூர் திருக்கை கொற்றவேல்
பிடித்து குற்றமா ...... ரொருசூரன்
பெலத்தை முட்டிமார் தொளைத்து நட்டுளோர்
பிழைக்க விட்டவோர் ...... பெருமாளே.
பாடல் 1208
தனந்த தாத்தனத் தனந்த தாத்தனத்
தனந்த தாத்தனத் ...... தனதான
அரும்பி னாற்றனிக் கரும்பி னாற்றொடுத்
தடர்ந்து மேற்றெறித் ...... தமராடும்
அநங்க னார்க்கிளைத் தயர்ந்த ணாப்பியெத்
தரம்பை மார்க்கடைக் ...... கலமாகிக்
குரும்பை போற்பணைத் தரும்பு றாக்கொதித்
தெழுந்து கூற்றெனக் ...... கொலைசூழுங்
குயங்கள் வேட்டறத் தியங்கு தூர்த்தனைக்
குணங்க ளாக்கிநற் ...... கழல்சேராய்
பொருந்தி டார்ப்பரத் திலங்கை தீப்படக்
குரங்கி னாற்படைத் ...... தொருதேரிற்
புகுந்து நூற்றுவர்க் கொழிந்து பார்த்தனுக்
கிரங்கி யாற்புறத் ...... தலைமேவிப்
பெருங்கு றோட்டைவிட் டுறங்கு காற்றெனப்
பிறங்க வேத்தியக் ...... குறுமாசூர்
பிறங்க லார்ப்பெழச் சலங்கள் கூப்பிடப்
பிளந்த வேற்கரப் ...... பெருமாளே.
பாடல் 1209
தனதன தத்தனாத் தனதன தத்தனாத்
தனதன தத்தனாத் ...... தனதான
அலமல மிப்புலாற் புலையுடல் கட்டனேற்
கறுமுக நித்தர்போற் ...... றியநாதா
அறிவிலி யிட்டுணாப் பொறியிலி சித்தமாய்த்
தணிதரு முத்திவீட் ...... டணுகாதே
பலபல புத்தியாய்க் கலவியி லெய்த்திடாப்
பரிவொ தத்தைமார்க் ...... கிதமாடும்
பகடிது டுக்கன்வாய்க் கறையனெ னத்தராப்
படியில்ம னித்தர்தூற் ...... றிடலாமோ
குலகிரி பொற்றலாய்க் குரைகடல் வற்றலாய்க்
கொடியஅ ரக்கரார்ப் ...... பெழவேதக்
குயவனை நெற்றியேற் றவனெதிர் குட்டினாற்
குடுமியை நெட்டைபோக் ...... கியவீரா
கலைதலை கெட்டபாய்ச் சமணரை நட்டகூர்க்
கழுநிரை முட்டஏற் ...... றியதாளக்
கவிதையும் வெற்றிவேற் கரமுடன் வற்றிடாக்
கருணையு மொப்பிலாப் ...... பெருமாளே.
பாடல் 1210
தனன தான தந்த தந்த தனன தான தந்த தந்த
தனன தான தந்த தந்த ...... தனதான
அளக பார முங்கு லைந்து அரிய பார்வை யுஞ்சி வந்து
அணுகி யாக மும்மு யங்கி ...... யமுதூறல்
அதர பான மும்நு கர்ந்து அறிவு சோர வும்மொ ழிந்து
அவச மாக வும்பு ணர்ந்து ...... மடவாரைப்
பளக னாவி யுந்த ளர்ந்து பதறு மாக மும்ப யந்து
பகலி ராவை யும்ம றந்து ...... திரியாமற்
பரம ஞான முந்தெ ளிந்து பரிவு நேச முங்கி ளர்ந்து
பகரு மாறு செம்ப தங்கள் ...... தரவேணும்
துளப மாய னுஞ்சி றந்த கமல வேத னும்பு கழ்ந்து
தொழுது தேட ரும்ப்ர சண்ட ...... னருள்பாலா
சுரர்கள் நாய கன்ப யந்த திருவை மாம ணம்பு ணர்ந்து
சுடரு மோக னம்மி குந்த ...... மயில்பாகா
களப மார்பு டன்த யங்கு குறவர் மாது டன்செ றிந்து
கலவி நாட கம்பொ ருந்தி ...... மகிழ்வோனே
கடிய பாத கந்த விர்ந்து கழலை நாடொ றுங்கி ளர்ந்து
கருது வார்ம னம்பு குந்த ...... பெருமாளே.
பாடல் 1211
ராகம் – ஹம்ஸவிநோதினி, தாளம் - அங்தாளம் (6)
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகதிமி-2
தானான தான தனதன தானான தான தனதன
தானான தான தனதன ...... தனதான
ஆசார வீன னறிவிலி கோபாப ராதி யவகுண
னாகாத நீச னநுசிதன் ...... விபாணதன்
ஆசாவி சார வெகுவித மோகாச ரீத பரவச
னாகாச நீர்ம ணனல்வளி ...... யுருமாறி
மாசான நாலெண் வகைதனை நீநானெ னாத அறிவுளம்
வாயாத பாவி யிவனென ...... நினையாமல்
மாதாபி தாவி னருணல மாறாம காரிலெனையினி
மாஞான போத மருள்செய ...... நினைவாயே
வீசால வேலை சுவறிட மாசூரர் மார்பு தொளைபட
வேதாள ராசி பசிகெட ...... அறைகூறி
மேகார வார மெனஅதிர் போர்யாது தான ரெமபுர
மீதேற வேல்கொ டமர்செயு ...... மிளையோனே
கூசாது வேட னுமிழ்தரு நீராடி யூனு ணெனுமுரை
கூறாம னீய அவனுகர் ...... தருசேடங்
கோதாமெ னாம லமுதுசெய் வேதாக மாதி முதல்தரு
கோலோக நாத குறமகள் ...... பெருமாளே.
பாடல் 1212
ராகம் - யமுனா கல்யாணி, தாளம் - ஆதி
தானனா தத்த தானனா தத்த
தானனா தத்த ...... தனதான
ஆசைகூர் பத்த னேன்மனோ பத்ம
மானபூ வைத்து ...... நடுவேயன்
பானநூ லிட்டு நாவிலே சித்ர
மாகவே கட்டி ...... யொருஞான
வாசம்வீ சிப்ர காசியா நிற்ப
மாசிலோர் புத்தி ...... யளிபாட
மாத்ருகா புஷ்ப மாலைகோ லப்ர
வாளபா தத்தி ...... லணிவேனோ
மூசுகா னத்து மீதுவாழ் முத்த
மூரல்வே டிச்சி ...... தனபார
மூழ்குநீ பப்ர தாபமார் பத்த
மூரிவே ழத்தன் ...... மயில்வாழ்வே
வீசுமீ னப்ப யோதிவாய் விட்டு
வேகவே தித்து ...... வருமாசூர்
வீழமோ திப்ப ராரைநா கத்து
வீரவேல் தொட்ட ...... பெருமாளே.
பாடல் 1213
தானத் தனத்ததன தானத் தனத்ததன
தானத் தனத்ததன ...... தனதான
ஆசைக் கொளுத்திவெகு வாகப் பசப்பிவரு
மாடைப் பணத்தையெடெ ...... னுறவாடி
ஆரக் கழுத்துமுலை மார்பைக் குலுக்கிவிழி
யாடக் குலத்துமயில் ...... கிளிபோலப்
பேசித் சிரித்துமயிர் கோதிக் குலைத்துமுடி
பேதைப் படுத்திமய ...... லிடுமாதர்
பீறற் சலத்துவழி நாறப் படுத்தியெனை
பீடைப் படுத்துமய ...... லொழியாதோ
தேசத் தடைத்துபிர காசித் தொலித்துவரி
சேடற் பிடுத்துதறு ...... மயில்வீரா
தேடித் துதித்தஅடி யார்சித்த முற்றருளு
சீர்பொற் பதத்தஅரி...... மருகோனே
நேசப் படுத்தியிமை யோரைக் கெடுத்தமுழு
நீசற் கனத்தமுற ...... விடும்வேலா
நேசக் குறத்திமய லோடுற் பவித்தபொனி
நீர்பொற் புவிக்குள்மகிழ் ...... பெருமாளே.
பாடல் 1214
தான தான தனத்தன தான தான தனத்தன
தான தான தனத்தன ...... தனதான
ஆசை நேச மயக்கிகள் காசு தேடு மனத்திகள்
ஆவி சோர வுருக்கிகள் ...... தெருமீதே
யாவ ரோடு நகைப்பவர் வேறு கூறு விளைப்பவர்
ஆல கால விழிச்சிகள் ...... மலைபோலு
மாசி லாத தனத்தியர் ஆடை சோர நடப்பவர்
வாரி யோதி முடிப்பவர் ...... ஒழியாமல்
வாயி லூற லளிப்பவர் நாளு நாளு மினுக்கிகள்
வாசல் தேடி நடப்பது ...... தவிர்வேனோ
ஓசை யான திரைக்கடல் ஏழு ஞால முமுற்றருள்
ஈச ரோடுற வுற்றவள் ...... உமையாயி
யோகி ஞானி பரப்ரமி நீலி நாரணி யுத்தமி
ஓல மான மறைச்சிசொல் ...... அபிராமி
ஏசி லாத மலைக்கொடி தாய்ம னோமணி சற்குணி
ஈறி லாதம லைக்கொடி ...... அருள்பாலா
ஏறு மேனி யொருத்தனும் வேத னான சமர்த்தனும்
ஈச னோடு ப்ரியப்படு ...... பெருமாளே.
பாடல் 1215
தான தாத்த தனதன தான தாத்த தனதன
தான தாத்த தனதன ...... தனதான
ஆல மேற்ற விழியினர் சால நீட்டி யழுதழு
தாக மாய்க்க முறைமுறை ...... பறைமோதி
ஆடல் பார்க்க நிலையெழு பாடை கூட்டி விரையம
யான மேற்றி யுறவின ...... ரயலாகக்
கால மாச்சு வருகென ஓலை காட்டி யமபடர்
காவ லாக்கி யுயிரது ...... கொடுபோமுன்
காம வாழ்க்கை பொடிபட ஞானம் வாய்த்த கழலிணை
காத லாற்க ருதுமுணர் ...... தருவாயே
வேல கீர்த்தி விதரண சீலர் வாழ்த்து சரவண
வியாழ கோத்ர மருவிய ...... முருகோனே
வேடர் நாட்டில் விளைபுன ஏனல் காத்த சிறுமியை
வேட மாற்றி வழிபடு ...... மிளையோனே
ஞால மேத்தி வழிபடு மாறு பேர்க்கு மகவென
நாணல் பூத்த படுகையில் ...... வருவோனே
நாத போற்றி யெனமுது தாதை கேட்க அநுபவ
ஞான வார்த்தை யருளிய ...... பெருமாளே.