பொதுப்பாடல்கள் - 8

bookmark

பாடல் 1216

தானதன தானத்த தானதன தானத்த 
தானதன தானத்த ...... தனதான 

ஆலுமயில் போலுற்ற தோகையர்க ளெமெத்த 
ஆரவட மேலிட்ட ...... முலைமீதே 
ஆனதுகி லேயிட்டு வீதிதனி லேநிற்க 
ஆமவரை யேசற்று ...... முரையாதே 
வேலுமழ கார்கொற்ற நீலமயில் மேலுற்று 
வீறுமுன தார்பத்ம ...... முகமாறு 
மேவியிரு பாகத்தும் வாழுமனை மார்தக்க 
மேதகவு நானித்த ...... முரையேனோ 
நாலுமுக வேதற்கு மாலிலையில் மாலுக்கு 
நாடவரியார்பெற்ற ...... வொருபாலா 
நாணமுடை யாள்வெற்றி வேடர்குல மீதொக்க 
நாடுகுயில் பார்மிக்க ...... எழில்மாது 
வேலைவிழி வேடச்சி யார்கணவ னேமத்த 
வேழமுக வோனுக்கு ...... மிளையோனே 
வீரமுட னேயுற்ற சூரனணி மார்பத்து 
வேலைமிக வேவிட்ட ...... பெருமாளே. 

பாடல் 1217

தனனத்தன தனனத்தன தனனத்தன ...... தனதான 

இடையித்தனை யுளதத்தைய ரிதழ்துய்த்தவ ...... ரநுபோகம் 
இளகிக்கரை புரளப்புள கிதகற்புர ...... தனபாரம் 
உடன்மற்கடை படுதுற்குண மறநிற்குண ...... வுணர்வாலே 
ஒருநிஷ்கள வடிவிற்புக வொருசற்றருள் ...... புரிவாயே 
திடமற்றொளிர் நளினப்ரம சிறைபுக்கன ...... னெனவேகுந் 
தெதிபட்சண க்ருதபட்சண செகபட்சண ...... னெனவோதும் 
விடபட்சணர் திருமைத்துனன் வெருவச்சுரர் ...... பகைமேல்வேல் 
விடுவிக்ரம கிரியெட்டையும் விழவெட்டிய ...... பெருமாளே. 

பாடல் 1218

தனதன தான தானன, தனதன தான தானன 
தனதன தான தானன ...... தனதான 

இருகுழை மீது தாவடி யிடுவன வோதி நீழலி 
னிடமது லாவி மீள்வன ...... நுதல்தாவி 
இழிவன காம வேதமு மொழிவன தாரை வேலென 
எறிவன காள கூடமு ...... மமுதாகக் 
கருகிய நீல லோசன அபிநய மாத ரார்தரு 
கலவியில் மூழ்கி வாடிய ...... தமியேனுங் 
கதிபெற ஈட றாதன பதிபசு பாச மானவை 
கசடற வேறு வேறுசெய் ...... தருள்வாயே 
ஒருபது பார மோலியு மிருபது வாகு மேருவு 
முததியில் வீழ வானர ...... முடனேசென் 
றொருகணை யேவு ராகவன் மருகவி பூதி பூஷணர் 
உணருப தேச தேசிக ...... வரையேனற் 
பரவிய கான வேடுவர் தருமபி ராம நாயகி 
பரிபுர பாத சேகர ...... சுரராஜன் 
பதிகுடி யேற வேல்தொடு முருகம யூர வாகன 
பரவச ஞான யோகிகள் ...... பெருமாளே. 

பாடல் 1219

ராகம் – ஸிந்துபைரவி, தாளம் - அங்கதாளம் (5) 
தக-1, தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1 

தனனா தனத்ததன தனனா தனத்ததன 
தனனா தனத்ததன ...... தனதான 

இருநோய்ம லத்தைசிவ வொளியால்மி ரட்டியெனை 
யினிதாவ ழைத்தெனது ...... முடிமேலே 
இணைதாள ளித்துனது மயில்மேலி ருத்தியொளி 
ரியல்வேல ளித்துமகி ...... ழிருவோரும் 
ஒருவாகெ னக்கயிலை யிறையோன ளித்தருளு 
மொளிர்வேத கற்பகந ...... லிளையோனே 
ஒளிர்மாம றைத்தொகுதி சுரர்பார்து தித்தருள 
உபதேசி கப்பதமு ...... மருள்வாயே 
கருநோய றுத்தெனது மிடிதூள்ப டுத்திவிடு 
கரிமாமு கக்கடவு ...... ளடியார்கள் 
கருதாவ கைக்குவர மருள்ஞான தொப்பைமகிழ் 
கருணாக டப்பமல ...... ரணிவோனே 
திருமால ளித்தருளு மொருஞான பத்தினியை 
திகழ்மார்பு றத்தழுவு ...... மயில்வேலா 
சிலைதூளே ழுப்பிகவ டவுணோரை வெட்டிசுரர் 
சிறைமீள விட்டபுகழ் ...... பெருமாளே. 

பாடல் 1220

ராகம் – பூபாளம், தாளம் - அங்கதாளம் (5) 
தக-1, தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1 

தனதனன தந்தனம் தனதனன தந்தனம் 
தனதனன தந்தனம் ...... தந்ததான 

இனமறைவி தங்கள்கொஞ் சியசிறுச தங்கைகிண் 
கிணியிலகு தண்டையம் ...... புண்டாணகம் 
எனதுமன பங்கயங் குவளைகுர வம்புனைந் 
திரவுபகல் சந்ததஞ் ...... சிந்தியாதோ 
உனதருளை யன்றியிங் கொருதுணையு மின்றிநின் 
றுளையுமொரு வஞ்சகன் ...... பஞ்சபூத 
உடலதுசு மந்தலைந் துலகுதொறும் வந்துவந் 
துழலுமது துன்புகண் ...... டன்புறாதோ 
கனநிவத தந்தசங் க்ரமகவள துங்கவெங் 
கடவிகட குஞ்சரந் ...... தங்கும்யானை 
கடகசயி லம்பெறும் படியவுணர் துஞ்சமுன் 
கனககிரிசம்பெழுந் ...... தம்புராசி 
அனலெழமு னிந்தசங் க்ரமமதலை கந்தனென் 
றரனுமுமை யும்புகழ்ந் ...... தன்புகூர 
அகிலபுவ னங்களுஞ் சுரரொடுதி ரண்டுநின் 
றரிபிரமர் கும்பிடுந் ...... தம்பிரானே. 

பாடல் 1221

ராகம் – சங்கராபரணம், தாளம் - ஆதி 

தானா தனந்த தானா தனந்த 
தானா தனந்த ...... தனதான 

ஊனே றெலும்பு சீசீ மலங்க 
ளோடே நரம்பு ...... கசுமாலம் 
ஊழ்நோ யடைந்து மாசான மண்டு 
மூனோ டுழன்ற ...... கடைநாயேன் 
நானா ரொடுங்க நானார் வணங்க 
நானார் மகிழ்ந்து ...... உனையோத 
நானா ரிரங்க நானா ருணங்க 
நானார் நடந்து ...... விழநானார் 
தானே புணர்ந்து தானே யறிந்து 
தானே மகிழ்ந்து ...... அளுறித் 
தாய்போல் பரிந்த தேனோ டுகந்து 
தானே தழைந்து ...... சிவமாகித் 
தானே வளர்ந்து தானே யிருந்த 
தார்வேணி யெந்தை ...... யருள்பாலா 
சாலோக தொண்டர் சாமீப தொண்டர் 
சர்ருப தொண்டர் ...... பெருமாளே. 

பாடல் 1222

ராகம் – ஹம்ஸாநந்தி, தாளம் - அங்கதாளம் (18 1/2) 
தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2 
தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2 
தகிட-1 1/2, தகதிமி-2 

தனதனன தனதனன தனதனன தனதனன 
தத்தத்த தத்தான ...... தந்ததான 

எதிரொருவ ரிலையுலகி லெனஅலகு சிலுகுவிரு 
திட்டுக்ரியைக்கேயெ ...... ழுந்துபாரின் 
இடையுழல்வ சுழலுவன சமயவித சகலகலை 
யெட்டெட்டு மெட்டாத ...... மந்த்ரவாளால் 
விதிவழியி னுயிர்கவர வருகொடிய யமபடரை 
வெட்டித் துணித்தாண்மை ...... கொண்டுநீபம் 
விளவினிள இலைதளவு குவளைகமழ் பவளநிற 
வெட்சித் திருத்தாள்வ ...... ணங்குவேனோ 
திதிபுல்வ ரொடுபொருது குருதிநதி முழுகியொளிர் 
செக்கச் செவத்தேறு ...... செங்கைவேலா 
சிகரகிரிதகரவிடு முருவமர கதகலப 
சித்ரக் ககத்தேறு ...... மெம்பிரானே 
முதியபதி னொருவிடையர் முடுகுவன பரிககன 
முட்டச் செலுத்தாறி ...... ரண்டுதேரர் 
மொழியுமிரு அசுவினிக ளிருசதுவி தவசுவெனு 
முப்பத்து முத்தேவர் ...... தம்பிரானே. 

பாடல் 1223

தனந்தனந் தத்தத் தனந்தனந் தத்தத் 
தனந்தனந் தத்தத் ...... தனதானம் 

எழுந்திடுங் கப்புச் செழுங்குரும் பைக்கொத் 
திரண்டுகண் பட்டிட் ...... டிளையோர்நெஞ் 
சிசைந்திசைந் தெட்டிக் கசிந்தசைந் திட்டிட் 
டிணங்குபொன் செப்புத் ...... தனமாதர் 
அழுங்கலங் கத்துக் குழைந்துமன் பற்றுற் 
றணைந்துபின் பற்றற் ...... றகல்மாயத் 
தழுங்குநெஞ் சுற்றுப் புழுங்குபுண் பட்டிட் 
டலைந்தலைந் தெய்த்திட் ...... டுழல்வேனோ 
பழம்பெருந் தித்திப் புறுங்கரும் பப்பத் 
துடன்பெருங் கைக்குட் ...... படவாரிப் 
பரந்தெழுந் தொப்பைக் கருந்திமுன் பத்தர்க் 
கிதஞ்செய்தொன் றத்திக் ...... கிளையோனே 
தழைந்தெழுந் தொத்துத் தடங்கைகொண் டப்பிச் 
சலம்பிளந் தெற்றிப் ...... பொருசூரத் 
தடம்பெருங் கொக்கைத் தொடர்ந்திடம் புக்குத் 
தடிந்திடுஞ் சொக்கப் ...... பெருமாளே. 

பாடல் 1224

ராகம் - காவடிச் சிந்து, தாளம் - மிஸ்ரசாபு (3 1/2) 
தகிட-1 1/2, தகதிமி-2 

தாத்த தானன தாத்த தானன 
தாத்த தானன ...... தந்ததான 

ஏட்டி லேவரை பாட்டி லேசில 
நீட்டி லேயினி ...... தென்றுதேடி 
ஈட்டு மாபொருள் பாத்து ணாதிக 
லேற்ற மானகு ...... லங்கள்பேசிக் 
காட்டி லேயியல் நாட்டி லேபயில் 
வீட்டி லேஉல ...... கங்களேசக் 
காக்கை நாய்நரிபேய்க்கு ழாமுண 
யாக்கை மாய்வதொ ...... ழிந்திடாதோ 
கோட்டு மாயிர நாட்ட னாடுறை 
கோட்டு வாலிப ...... மங்கைகோவே 
கோத்த வேலையி லார்த்த சூர்பொரு 
வேற்சி காவள ...... கொங்கில்வேளே 
பூட்டு வார்சிலை கோட்டு வேடுவர் 
பூட்கை சேர்குற ...... மங்கைபாகா 
பூத்த மாமலர் சாத்தி யேகழல் 
போற்று தேவர்கள் ...... தம்பிரானே. 

பாடல் 1225

தத்தத் தாத்த தத்தத் தாத்த 
தத்தத் தாத்த ...... தனதான 

கச்சுப் பூட்டு கைச்சக் கோட்ட 
கத்திற் கோட்டு ...... கிரியாலங் 
கக்கித் தேக்கு செக்கர்ப் போர்க்க 
யற்கட் கூற்றில் ...... மயலாகி 
அச்சக் கூச்ச மற்றுக் கேட்ட 
வர்க்குத் தூர்த்த ...... னெனநாளும் 
அத்தப் பேற்றி லிச்சிப் பார்க்க 
றப்பித் தாய்த்தி ...... ரியலாமோ 
பச்சைக் கூத்தர் மெச்சிச் சேத்த 
பத்மக் கூட்டி ...... லுறைவோரி
பத்திற் சேர்ப்பல் சக்கிற் கூட்டர் 
பத்தக் கூட்ட ...... ரியல்வானம் 
மெச்சிப் போற்ற வெற்புத் தோற்று 
வெட்கத் கோத்த ...... கடல்மீதே 
மெத்தக் காய்த்த கொக்குக் கோட்டை 
வெட்டிச் சாய்த்த ...... பெருமாளே. 

பாடல் 1226

தனதனந் தனதனன தனதனந் தனதனன 
தனதனந் தனதனன ...... தனதான 

கடலினும் பெரியவிழி மலையினும் பெரியமுலை 
கவரினுந் துவரதர ...... மிருதோள்பைங் 
கழையினுங் குழையுமென மொழிபழங் கிளவிபல 
களவுகொண் டொருவர்மிசை ...... கவிபாடி 
அடலசஞ் சலனதுல னநுபமன் குணதரன்மெய் 
அருள்பரங் குரனபய ...... னெனஆசித் 
தலமரும் பிறவியினி யலமலம் பிறவியற 
அருணபங் கயசரண ...... மருள்வாயே 
வடநெடுங் குலரசத கிரியினின் றிருகலுழி 
மகிதலம் புகவழியு ...... மதுபோல 
மதசலஞ் சலசலென முதுசலஞ் சலதிநதி 
வழிவிடும் படிபெருகு ...... முதுபாகை 
உடையசங் க்ரமகவள தவளசிந் துரதிலக 
னுலகுமிந் திரனுநிலை ...... பெறவேல்கொண் 
டுததிவெந் தபயமிட மலையொடுங் கொலையவுண 
ருடனுடன் றமர்பொருத ...... பெருமாளே. 

பாடல் 1227

தத்தத் தனத்ததன தத்தத் தனத்ததன 
தத்தத் தனத்த ...... தனதான 

கட்டக் கணப்பறைகள் கொட்டக் குலத்திளைஞர் 
கட்டிப் புறத்தி ...... லணைமீதே 
கச்சுக் கிழித்ததுணி சுற்றிக் கிடத்தியெரி
கத்திக் கொளுத்தி ...... யனைவோரும் 
சுட்டுக் குளித்துமனை புக்கிட் டிருப்பரிது 
சுத்தப் பொயொப்ப ...... துயிர்வாழ்வு 
துக்கப் பிறப்பகல மிக்கச் சிவத்ததொரு 
சொர்க்கப் பதத்தை ...... யருள்வாயே 
எட்டுக் குலச்சயில முட்டத் தொளைத்தமரர் 
எய்ப்புத் தணித்த ...... கதிர்வேலா 
எத்திக் குறத்தியிரு முத்தத் தனக்கிரியை 
யெற்பொற் புயத்தி ...... லணைவோனே 
வட்டக் கடப்பமலர் மட்டுற்ற செச்சைமலர் 
வைத்துப் பணைத்த ...... மணிமார்பா 
வட்டத் திரைக்கடலில் மட்டித் தெதிர்த்தவரை 
வெட்டித் துணித்த ...... பெருமாளே. 

பாடல் 1228

தந்த தானன தந்த தானன 
தந்த தானன ...... தனதான 

கண்டு போல்மொழி வண்டு சேர்குழல் 
கண்கள் சேல்மதி ...... முகம்வேய்தோள் 
கண்டு பாவனை கொண்டு தோள்களி 
லொண்டு காதலி ...... லிருகோடு 
மண்டி மார்பினில் விண்ட தாமென 
வந்த கூர்முலை ...... மடவார்தம் 
வஞ்ச மாலதில் நெஞ்சு போய்மடி 
கின்ற மாயம ...... தொழியாதோ 
கொண்ட லார்குழல் கெண்டை போல்விழி 
கொண்டு கோகில ...... மொழிகூறுங் 
கொங்கை யாள்குற மங்கை வாழ்தரு 
குன்றில் மால்கொடு ...... செலும்வேலா 
வெண்டி மாமன மண்டு சூர்கடல் 
வெம்ப மேதினி ...... தனில்மீளா 
வென்று யாயையு மன்றி வேளையும் 
வென்று மேவிய ...... பெருமாளே. 

பாடல் 1229

தத்தன தத்தன தத்தன தத்தன 
தத்தன தத்தன ...... தனதான 

கப்பரை கைக்கொள வைப்பவர் மைப்பயில் 
கட்பயி லிட்டிள ...... வளவோரைக் 
கைக்குள்வ சப்பட பற்கறை யிட்டுமு 
கத்தைமி னுக்கிவ ...... ருமுபாயப் 
பப்பர மட்டைகள் பொட்டிடு நெற்றியர் 
பற்றென வுற்றவொர் ...... தமியேனைப் 
பத்மப தத்தினில் வைத்தருள் துய்த்திரை 
பட்டதெ னக்கினி ...... யமையாதோ 
குப்பர வப்படு பட்சமி குத்துள 
முத்தரை யர்க்கொரு ...... மகவாகிக் 
குத்திர மற்றுரை பற்றுணர் வற்றவொர் 
குற்றம றுத்திடு ...... முதல்வோனே 
விப்ரமு னிக்குழை பெற்றகொ டிச்சிவி 
சித்ரத னக்கிரி...... மிசைதோயும் 
விக்ரம மற்புய வெற்பினை யிட்டெழு 
வெற்பைநெ ருக்கிய ...... பெருமாளே. 

பாடல் 1230

தனதாத்த தய்ய தனதாத்த தய்ய 
தனதாத்த தய்ய ...... தனதான 

கலைகோட்டு வல்லி விலைகாட்டு வில்ல 
ரிவைமார்க்கு மெய்யி ...... லவநூலின் 
கலைகாட்டு பொய்ய மலைமாக்கள் சொல்ல 
கடுகாட்டி வெய்ய ...... அதிபாரக் 
கொலைகோட்டு கள்ளி டறிவோர்க்கு முள்ள 
முகையாக்கை நையு ...... முயிர்வாழக் 
கொடிகோட்டு மல்லி குரவார்க்கொள் தொல்லை 
மறைவாழ்த்து செய்ய ...... கழல்தாராய் 
சிலைகோட்டு மள்ளர் தினைகாத்த கிள்ளை 
முலைவேட்ட பிள்ளை ...... முருகோனே 
திணிகோட்டு வெள்ளி பவனாட்டி லுள்ள 
சிறைமீட்ட தில்ல ...... மயில்வீரா 
அலைகோட்டு வெள்ள மலைமாக்கள் விள்ள 
மலைவீழ்த்த வல்ல ...... அயில்மோகா 
அடிபோற்றி யல்லி முடிசூட்ட வல்ல 
அடியார்க்கு நல்ல ...... பெருமாளே. 

பாடல் 1231

தனன தந்த தத்தான தனன தந்த தத்தான 
தனன தந்த தத்தான ...... தனதான 

களவு கொண்டு கைக்காசி னளவ றிந்து கர்ப்பூர 
களப துங்க வித்தார ...... முலைமீதே 
கலவி யின்பம் விற்பார்க ளவய வங்க ளைப்பாடு 
கவிதெ ரிந்து கற்பார்கள் ...... சிலர்தாமே 
உளநெ கிழ்ந்த சத்தான வுரைம றந்து சத்தான 
உனையு ணர்ந்து கத்தூரி...... மணநாறும் 
உபய பங்க யத்தாளி லபய மென்று னைப்பாடி 
யுருகி நெஞ்சு சற்றோதி ...... லிழிவாமோ 
அளவில் வன்க விச்சேனை பரவ வந்த சுக்ரீவ
அரசு டன்க டற்றூளி...... யெழவேபோய் 
அடலி லங்கை சுட்டாடி நிசிச ரன்த சக்ரீவ
மறவொ ரம்பு தொட்டார்த ...... மருகோனே 
வளரு மந்த ரச்சோலை மிசைசெ றிந்த முற்பாலை 
வனசர் கொம்பி னைத்தேடி ...... யொருவேட 
வடிவு கொண்டு பித்தாகி யுருகி வெந்த றக்கானில் 
மறவர் குன்றி னிற்போன ...... பெருமாளே. 

பாடல் 1232

தய்யனா தத்ததன தய்யனா தத்ததன 
தய்யனா தத்ததன ...... தனதான 

கள்ளமீ னச்சுறவு கொள்ளுமீ னற்பெரிய 
கல்விவீ றக்கரிய ...... மனமாகுங் 
கல்விடா துற்றதிசை சொல்விசா ரத்திசைய 
மெய்கள்தோ ணிப்பிறவி ...... யலைவேலை 
மெள்ள ஏறிக்குரவு வெள்ளிலார் வெட்சிதண 
முல்லைவே ருற்பலமு ...... ளரிநீபம் 
வில்லநீள் பொற்கனக வல்லிமே லிட்டுனது 
சொல்லையோ திப்பணிவ ...... தொருநாளே 
துள்ளுமா னித்தமுனி புள்ளிமான் வெற்புதவு 
வள்ளிமா னுக்குமயல் ...... மொழிவோனே 
தொல்வியா ளத்துவளர் செல்வர்யா கத்தரையன் 
எல்லைகா ணற்கரியர் ...... குருநாதா 
தெள்ளுநா தச்சுருதி வள்ளல்மோ லிப்புடைகொள் 
செல்வனே முத்தமிணர் ...... பெருவாழ்வே 
தெய்வயா னைக்கிளைய வெள்ளையா னைத்தலைவ 
தெய்வயா னைக்கினிய ...... பெருமாளே. 

பாடல் 1233

தன்னன தனதன தன்னன தனதன 
தன்னன தனதன ...... தனதான 

கன்னியர் கடுவிட மன்னிய கயலன 
கண்ணிலு மிருகன ...... தனமீதுங் 
கன்மைகள் மருவிய மன்மத னுருவிலி 
மென்மைகொ ளுருவிலு ...... மயலாகி 
இன்னல்செய் குடிலுட னின்னமு முலகினி 
லிந்நிலை பெறவிங ...... னுதியாதே 
யெண்ணுமு னடியவர் நண்ணிய பதமிசை 
யென்னையும் வழிபட ...... விடவேணும் 
பொன்னவ மணிபயில் மன்னவ புனமற 
மின்முலை தழுவிய ...... புயவீரா 
புண்ணிய முளபல விண்ணவர் தொழுமுதல் 
எண்மலை யொடுபொரு ...... கதிர்வேலா 
தன்னிறை சடையிறை யென்முனி பரவரு 
இன்னிசை யுறுதமிழ் ...... தெரிவோனே 
தண்ணளி தருமொரு பன்னிரு விழிபயில் 
சண்முக மழகிய ...... பெருமாளே. 

பாடல் 1234

தந்ததன தத்த தத்த தந்ததன தத்த தத்த 
தந்ததன தத்த தத்த ...... தனதான 

கிஞ்சுகமெ னச்சி வத்த தொண்டையள்மி கக்க றுத்த 
கெண்டையள்பு னக்கொ டிச்சி ...... யதிபாரக் 
கிம்புரிம ருப்பை யொத்த குங்குமமு லைக்கு றத்தி 
கிங்கரனெ னப்ப டைத்த ...... பெயர்பேசா 
நெஞ்சுருகி நெக்கு நெக்கு நின்றுதொழு நிர்க்கு ணத்தர் 
நிந்தனையில் பத்தர் வெட்சி ...... மலர்தூவும் 
நின்பதயு கப்ர சித்தி யென்பனவ குத்து ரைக்க 
நின்பணித மிழ்த்ர யத்தை ...... யருள்வாயே 
கஞ்சன்வர விட்ட துட்ட குஞ்சரம ருப்பொ சித்த 
கங்கனும தித்தி கைக்க ...... மதம்வீசுங் 
கந்தெறிக ளிற்று ரித்து வென்றுதிரு நட்ட மிட்ட 
கம்பனும திக்க வுக்ர ...... வடிவேல்கொண் 
டஞ்சியஜ கத்ர யத்தை யஞ்சலென விக்ர மித்து 
அன்பர்புக ழப்பொ ருப்பொ ...... டமராடி 
அன்றவுண ரைக்க ளத்தில் வென்றுததி யைக்க லக்கி 
அண்டர்சிறை வெட்டி விட்ட ...... பெருமாளே. 

பாடல் 1235

தனதனன தாத்தன தனதனன தாத்தன 
தனதனன தாத்தன ...... தனதான 

குடிமைமனை யாட்டியும் அடிமையொடு கூட்டமும் 
குலமுமிறு மாப்புமி ...... குதியான 
கொடியபெரு வாழ்க்கையி லினியபொரு ளீட்டியெ 
குருடுபடு மோட்டென ...... வுடல்வீழில் 
அடைவுடைவி டாச்சிறு பழையதுணி போர்த்தியெ 
அரிடசுடு காட்டிடை ...... யிடுகாயம் 
அழியுமள வாட்டிலுன் அமலமலர் மாப்பத 
அருணசர ணாஸ்பதம் ...... அருள்வாயே 
அடியினொடு மாத்தரு மொளமொளமொ ளாச்சென 
அலறிவிழ வேர்க்குல ...... மொடுசாய 
அவுணர்படை தோற்பெழ அருவரைக ளார்ப்பெழ 
அயிலலகு சேப்பெழ ...... மறைநாலும் 
உடையமுனி யாட்பட முடுகவுணர் கீழ்ப்பட 
உயரமரர் மேற்பட ...... வடியாத 
உததிகம ராப்பிள முதுகுலிச பார்த்திபன் 
உலகுகுடி யேற்றிய ...... பெருமாளே. 

பாடல் 1236

தனன தந்த தத்த தனன தந்த தத்த 
தனன தந்த தத்த ...... தனதான 

குறைவ தின்றி மிக்க சலமெ லும்பு துற்ற 
குடிலி லொன்றி நிற்கு ...... முயிர்மாயம் 
குலைகு லைந்து தெர்ப்பை யிடைநி னைந்து நிற்ப 
கொடிய கொண்ட லொத்த ...... வுருவாகி 
மறலி வந்து துட்ட வினைகள் கொண்ட லைத்து 
மரண மென்ற துக்க ...... மணுகாமுன் 
மனமி டைஞ்ச லற்று னடிநி னைந்து நிற்க 
மயிலில் வந்து முத்தி ...... தரவேணும் 
அறுக மிந்து மத்த மலையெ றிந்த அப்பு 
மளிசி றந்த புட்ப ...... மதுசூடி 
அருந டஞ்செ யப்ப ரருளி ரங்கு கைக்கு 
அரிய இன்சொல் செப்பு ...... முருகோனே 
சிறுகு லந்த னக்கு ளறிவு வந்து தித்த 
சிறுமி தன்த னத்தை ...... யணைமார்பா 
திசைமு கன்தி கைக்க அசுர ரன்ற டைத்த 
சிறைதி றந்து விட்ட ...... பெருமாளே. 

பாடல் 1237

தான தனன தத்த தான தனன தத்த 
தான தனன தத்த ...... தனதான 

கோக னகமு கிழ்த்த போக புளகி தத்த 
கோடு தலைகு லைத்த ...... முலையாலே 
கூட வரவ ழைக்கு மாடு குழைய டர்த்த 
நீடி யகுவ ளைக்கண் ...... மடமானார் 
ஆக முறவ ணைத்து காசை யபக ரித்து 
மீள விதழ்க டிப்ப ...... தறியாதே 
ஆசை யதுகொ ளுத்து மால மதுகு டித்த 
சேலில் பரித விப்ப ...... தினியேனோ 
மாக நதிம திப்ர தாப மவுலி யர்க்கு 
சாவி யதுவோ ரர்த்த ...... மொழிவோனே 
வாகு வலைய சித்ர ஆறி ருபுய வெற்பில் 
வாழ்வு பெருகு றத்தி ...... மணவாளா 
வேக வுரக ரத்ந நாக சயன சக்ர 
மேவி மரக தத்தின் ...... மருகோனே 
வீசு திரைய லைத்த வேலை சுவற வெற்றி 
வேலை யுருவ விட்ட ...... பெருமாளே. 

பாடல் 1238

ராகம் - அமிர்த வர்ஷணி, தாளம் - ஆதி 

தந்தந் தனந்த தந்தந் தனந்த 
தந்தந் தனந்த ...... தனதான 

சந்தம் புனைந்து சந்தஞ் சிறந்த 
தண்கொங் கைவஞ்சி ...... மனையாளுந் 
தஞ்சம் பயின்று கொஞ்சுஞ் சதங்கை 
தங்கும் பதங்க ...... ளிளைஞோரும் 
எந்தன் தனங்க ளென்றென்று நெஞ்சி 
லென்றும் புகழ்ந்து ...... மிகவாழும் 
இன்பங் களைந்து துன்பங்கள் மங்க 
இன்றுன் பதங்கள் ...... தரவேணும் 
கொந்தின் கடம்பு செந்தண் புயங்கள் 
கொண்டங் குறிஞ்சி ...... யுறைவோனே 
கொங்கின் புனஞ்செய் மின்கண்ட கந்த 
குன்றம் பிளந்த ...... கதிர்வேலா 
ஐந்திந் த்ரியங்கள் வென்றொன்று மன்பர் 
அங்கம் பொருந்து ...... மழகோனே 
அண்டந் தலங்க ளெங்குங் கலங்க 
அன்றஞ் சலென்ற ...... பெருமாளே. 

பாடல் 1239

ராகம் – குந்தலவராளி, தாளம் - அங்கதாளம் (5 1/2) 
தகதிமிதகதிமி-4, தகிட-1 1/2 

தனதன தனத்த தத்த தனதன தனத்த தத்த 
தனதன தனத்த தத்த ...... தனதான 

சலமல மசுத்த மிக்க தசைகுரு தியத்தி மொய்த்த 
தடியுடல் தனக்கு ளுற்று ...... மிகுமாயம் 
சகலமு மியற்றி மத்த மிகுமிரு தடக்கை யத்தி 
தனிலுரு மிகுத்து மக்க ...... ளொடுதாரம் 
கலனணி துகிற்கள் கற்பி னொடுகுல மனைத்து முற்றி 
கருவழி யவத்தி லுற்று ...... மகிழ்வாகிக் 
கலைபல பிடித்து நித்த மலைபடு மநர்த்த முற்ற 
கடுவினை தனக்குள் நிற்ப ...... தொழியாதோ 
மலைமக ளிடத்து வைத்து மதிபுனல் சடைக்குள் வைத்து 
மழுவனல் கரத்துள் வைத்து ...... மருவார்கள் 
மடிவுற நினைத்து வெற்பை வரிசிலை யிடக்கை வைத்து 
மறைதொழ நகைத்த அத்தர் ...... பெருவாழ்வே 
பலதிசை நடுக்க முற்று நிலைகெட அடற்கை யுற்ற 
படையது பொருப்பில் விட்ட ...... முருகோனே 
பழுதறு தவத்தி லுற்று வழிமொழி யுரைத்த பத்தர் 
பலருய அருட்கண் வைத்த ...... பெருமாளே. 

பாடல் 1240

ராகம் – வாசஸ்பதி, தாளம் - ஸங்கீர்ணசாபு (4 1/2) 
தகதிமி-2, தகிட-1 1/2, தக-1 

தாந்தன தானதன தாந்தன தானதன 
தாந்தன தானதன ...... தனதான 

சாங்கரி பாடியிட வோங்கிய ஞானசுக 
தாண்டவ மாடியவர் ...... வடிவான 
சாந்தம தீதமுணர் கூந்தம சாதியவர் 
தாங்களு ஞானமுற ...... வடியேனுந் 
தூங்கிய பார்வையொடு தாங்கிய வாயுவொடு 
தோன்றிய சோதியொடு ...... சிவயோகந் 
தூண்டிய சீவனோடு வேண்டிய காலமொடு 
சோம்பினில் வாழும்வகை ...... அருளாதோ 
வாங்குகை யானையென வீன்குலை வாழைவளர் 
வான்பொழில் சூழும்வய ...... லயலேறி 
மாங்கனி தேனொழுக வேங்கையில் மேலரிகள் 
மாந்திய வாரணிய ...... மலைமீதிற் 
பூங்கொடி போலுமிடை யேங்கிட வாரமணி 
பூண்பன பாரியன ...... தனபாரப் 
பூங்குற மாதினுட வாடியிருள் 
பூம்பொழில் மேவிவளர் ...... பெருமாளே. 

பாடல் 1241

ராகம் – கல்யாணி, தாளம் - கண்டசாபு (2 1/2) 

தனதான தந்ததன தனதான தந்ததன 
தனதான தந்ததன ...... தனதான 

சிவஞான புண்டரிக மலர்மாது டன்கலவி 
சிவபோக மன்பருக ...... அறியாமற் 
செகமீது ழன்றுமல வடிவாயி ருந்துபொது 
திகழ்மாதர் பின்செருமி ...... யழிவேனோ 
தவமாத வங்கள்பயில் அடியார்க ணங்களொடு 
தயவாய்ம கிழ்ந்துதினம் ...... விளையாடத் 
தமியேன்ம லங்களிரு வினைநோயி டிந்தலற 
ததிநாளும் வந்ததென்முன் ...... வரவேணும் 
உவகாரியன்பர்பணி கலியாணி யெந்தையிட 
முறைநாய கங்கவுரி...... சிவகாமி 
ஒளிரானை யின்கரமில் மகிழ்மாது ளங்கனியை 
யொருநாள்ப கிர்ந்தவுமை ...... யருள்பாலா 
அவமேபி றந்தஎனை யிறவாம லன்பர்புகு 
மமுதால யம்பதவி ...... யருள்வோனே 
அழகாந கம்பொலியு மயிலாகு றிஞ்சிமகிழ் 
அயிலாபு கழ்ந்தவர்கள் ...... பெருமாளே. 

பாடல் 1242

தானத்த தான தந்த தானத்த தான தந்த 
தானத்த தான தந்த ...... தனதான 

சீறிட்டு லாவு கண்கள் மாதர்க்கு நாள்ம ருண்டு 
சேவித்து மாசை கொண்டு ...... முழல்வேனைச் 
சீரிட்ட மாக நின்ற காசைக்கொ டாத பின்பு 
சீரற்று வாழு மின்பம் ...... நலியாதே 
ஆறெட்டு மாய்வி ரிந்து மாறெட்டு மாகி நின்று 
மாருக்கு மேவி ளம்ப ...... அறியாதே 
ஆகத்து ளேம கிழ்ந்த ஜோதிப்ர காச இன்பம் 
ஆவிக்கு ளேது லங்கி ...... அருளாதோ 
மாறிட்டு வான டுங்க மேலிட்டு மேல கண்டம் 
வாய்விட்டு மாதி ரங்கள் ...... பிளவாக 
வாள்தொட்டு நேர்ந டந்த சூர்வஜ்ர மார்பு நெஞ்சும் 
வான்முட்ட வீறு செம்பொன் ...... வரையோடு 
கூறிட்ட வேல பங்க வீரர்க்கு வீர கந்த 
கோதற்ற வேடர் தங்கள் ...... புனம்வாழுங் 
கோலப்பெண் வாகு கண்டு மாலுற்று வேளை கொண்டு 
கூடிக்கு லாவு மண்டர் ...... பெருமாளே. 

பாடல் 1243

ராகம் – வாசஸ்பதி, தாளம் - கண்டசாபு (2 1/2) 
தகிட-1 1/2, தக-1 

தானதன தானதன தானதன தானதன 
தானதன தானதன ...... தனதான 

சூதினுண வாசைதனி லேசுழலு மீனதென 
தூசுவழ கானவடி ...... வதனாலே 
சூதமுட னேருமென மாதர்நசை தேடுபொரு 
ளாசைதமி லேசுழல ...... வருகாலன் 
ஆதிவிதி யோடுபிற ழாதவகை தேடியென 
தாவிதனை யேகுருகி ...... வருபோது 
ஆதிமுரு காதிமுரு காதிமுரு காஎனவு 
மாதிமுரு காநினைவு ...... தருவாயே 
ஓதமுகி லாடுகிரியேறுபட வாழசுரர் 
ஓலமிட வேயயில்கொ ...... டமராடீ 
ஓநமசி வாயகுரு பாதமதி லேபணியும் 
யோகமயி லாஅமலை ...... மகிழ்பாலா 
நாதரகு ராமஅரிமாயன்மரு காபுவன 
நாடுமடி யார்கள்மன ...... துறைவோனே 
ஞானசுர வானைகண வாமுருக னேயமரர் 
நாடுபெற வாழவருள் ...... பெருமாளே. 

பாடல் 1244

தனந்தான தானான தனந்தான தானான 
தனந்தான தானான ...... தனதான 

செழுந்தாது பார்மாது மரும்பாதி ரூபோடு 
சிறந்தியாதி லூமாசை ...... யொழியாத 
திறம்பூத வேதாள னரும்பாவ மேகோடி 
செயுங்காய நோயாள ...... னரகேழில் 
விழுந்தாழ வேமூழ்க இடுங்காலன் மேயாவி 
விடுங்கால மேநாயென் ...... வினைபாவம் 
விரைந்தேக வேவாசி துரந்தோடி யேஞான 
விளம்போசை யேபேசி ...... வரவேணும் 
அழுங்கோடி தேவார்க ளமர்ந்தார வானீடி 
அழன்றேகி மாசீத ...... நெடுவேலை 
அதிர்ந்தோட வேகாலன் விழுந்தோட வேகூர 
அலங்கார வேலேவு ...... முருகோனே 
கொழுங்கானி லேமாதர் செழுஞ்சேலை யேகோடு 
குருந்தேறு மால்மாயன் ...... மருகோனே 
குறம்பாடு வார்சேரிபுகுந்தாசை மாதோடு 
குணங்கூடி யேவாழு ...... பெருமாளே. 

பாடல் 1245

ராகம் - சுத்த சாவேரி, தாளம் - ஆதி 

தத்த தனதனன தத்த தனதனன 
தத்த தனதனன ...... தனதான 

தத்த னமுமடிமை சுற்ற மொடுபுதல்வர் 
தக்க மனையினமு ...... மனைவாழ்வுந் 
தப்பு நிலைமையணு கைக்கு வரவிரகு 
தைக்கு மயல்நினைவு ...... குறுகாமுன் 
பத்தி யுடனுருகி நித்த முனதடிகள் 
பற்று மருள்நினைவு ...... தருவாயே 
பத்து முடியுருளு வித்த பகழியினர் 
பச்சை நிறமுகிலின் ...... மருகோனே 
அத்தி முகவனழ குற்ற பெழைவயிற 
னப்ப மவரைபொரி...... அவல்தேனும் 
அப்பி யமுதுசெயு மொய்ப்ப னுதவஅட 
விக்குள் மறமகளை ...... யணைவோனே 
முத்தி தருமுதல்வர் முக்க ணிறைவரொடு 
முற்று மறைமொழியை ...... மொழிவோனே 
முட்ட வசுரர்கிளை கெட்டு முறியமுதல் 
வெட்டி யமர்பொருத ...... பெருமாளே. 

பாடல் 1246

ராகம் – பிலஹரி, தாளம் - அங்கதாளம் (5) 
(எடுப்பு - 1/2 அக்ஷரம் தள்ளி) 
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தக-1 

தனதனன தானனம் தனதனன தானனம் 
தனதனன தானனம் ...... தனதான 

தலைவலய போகமுஞ் சலனமிகு மோகமுந் 
தவறுதரு காமமுங் ...... கனல்போலுந் 
தணிவரிய கோபமுந் துணிவரிய லோபமுஞ் 
சமயவெகு ரூபமும் ...... பிறிதேதும் 
அலமலமெ னாஎழுந் தவர்களநு பூதிகொண் 
டறியுமொரு காரணந் ...... தனைநாடா 
ததிமதபு ராணமுஞ் சுருதிகளு மாகிநின் 
றபரிமித மாய்விளம் ...... புவதோதான் 
கலகஇரு பாணமுந் திலகவொரு சாபமுங் 
களபமொழி யாதகொங் ...... கையுமாகிக் 
கவருமவ தாரமுங் கொடியபரிதாபமுங் 
கருதியிது வேளையென் ...... றுகிராத 
குலதிலக மானுடன் கலவிபுரிவாய்பொருங் 
குலிசகர வாசவன் ...... திருநாடு 
குடிபுகநி சாசரன் பொடிபடம கீதரன் 
குலையநெடு வேல்விடும் ...... பெருமாளே. 

பாடல் 1247

ராகம் – ஆபோகி, தாளம் - சதுஸ்ர த்ருவம் (14) 
(எடுப்பு - /4/4 0/4) 

தனதன தனதன தனதன தனதன தனதன ...... தனதான 

தவநெறி தவறிய குருடுகள் தலைபறி கதறிய ...... பரபாதத் 
தருமிகள் கருமிகள் வெகுவித சமயிக ளவரொடு ...... சருவாநின் 
றவனிவ னுவனுட னவளிவ ளுவளது இதுவுது ...... வெனுமாறற் 
றருவுரு வொழிதரு வுருவுடை யதுபதி தமியனு ...... முணர்வேனோ 
குவலய முழுவதும் மதிர்பட வடகுவ டிடிபட ...... வுரகேசன் 
கொடுமுடி பலநெரிதரநெடு முதுகுரை கடல்புனல் ...... வறிதாகத் 
துவல்கொடு முறையிடு சுரர்பதி துயரது கெடநிசி ...... சரர்சேனை 
துகளெழ நடநவில் மரகத துரகதம் வரவல ...... பெருமாளே.