பொதுப்பாடல்கள் - 9

பாடல் 1248
தனதன தாத்தனத் தனதன தாத்தனத்
தனதன தாத்தனத் ...... தனதான
திதலையு லாத்துபொற் களபம்வி டாப்புதுத்
த்ரிவிதக டாக்களிற் ...... றுரகோடு
சிகரம காப்ரபைக் குவடென வாய்த்துநற்
சுரர்குடி யேற்றிவிட் ...... டிளநீரை
மதனவி டாய்த்தனத் திளைஞரை வாட்செப்
பிணமுலை மாத்தவக் ...... கொடிபோல்வார்
வலையிலி ராப்பகற் பொழுதுகள் போக்குமற்
றெனையுனை வாழ்த்தவைத் ...... தருள்வாயே
சததள பார்த்திபற் கரிபுரு ஷோத்தமற்
கெரிகன லேற்றவற் ...... குணராதோர்
சகலச மார்த்தசத் தியவன சூக்ஷமுக்
கியபர மார்த்தமுற் ...... புகல்வோனே
கதிர்மணி நீர்க்கடற் சுழிபுகு ராக்ஷதக்
கலகப ராக்ரமக் ...... கதிர்வேலா
கருதிய பாட்டினிற் றலைதெரிமாக்ஷணக்
கவிஞரு சாத்துணைப் ...... பெருமாளே.
பாடல் 1249
ராகம் – நாட்டக்குறிஞ்சி, தாளம் - கண்டசாபு (2 1/2)
தனதந்த தனதனன தனதந்த தனதனன
தனதந்த தனதனன ...... தனதான
திரைவஞ்ச இருவினைகள் நரையங் கமலமழிய
சிவகங்கை தனில்முழுகி ...... விளையாடிச்
சிவம்வந்து குதிகொளக வடிவுன்றன் வடிவமென
திகழண்டர் முநிவர்கண ...... மயன்மாலும்
அரன்மைந்த னெனகளிறு முகனெம்பி யெனமகிழ
அடியென்க ணளிபரவ ...... மயிலேறி
அயில்கொண்டு திருநடன மெனதந்தை யுடன்மருவி
அருமந்த பொருளையினி ...... யருள்வாயே
பரியென்ப நரிகள்தமை நடனங்கொ டொருவழுதி
பரிதுஞ்ச வருமதுரை ...... நடராஜன்
பழியஞ்சி யெனதருகி லுறைபுண்ட ரிகவடிவ
பவளஞ்சொ லுமைகொழுந ...... னருள்பாலா
இருள்வஞ்ச கிரியவுண ருடனெங்க ளிருவினையு
மெரியுண்டு பொடியஅயில் ...... விடுவோனே
எனதன்பி லுறைசயில மகிழ்வஞ்சி குறமகளொ
டெணுபஞ்ச ணையின்மருவு ...... பெருமாளே.
பாடல் 1250
தானான தாத்த தானான தாத்த
தானான தாத்த ...... தனதான
தீயுதை தாத்ரிபானீய மேற்ற
வானீதி யாற்றி ...... கழுமாசைச்
சேறூறு தோற்பை யானாக நோக்கு
மாமாயை தீர்க்க ...... அறியாதே
பேய்பூத மூத்த பாறோரிகாக்கை
பீறாஇ ழாத்தி ...... னுடல்பேணிப்
பேயோன டாத்து கோமாளி வாழ்க்கை
போமாறு பேர்த்து ...... னடிதாராய்
வேயூறு சீர்க்கை வேல்வேடர் காட்டி
லேய்வாளை வேட்க ...... வுருமாறி
மீளாது வேட்கை மீதூர வாய்த்த
வேலோடு வேய்த்த ....... இளையோனே
மாயூர வேற்றின் மீதே புகாப்பொன்
மாமேரு வேர்ப்ப ...... றியமோதி
மாறான மாக்கள் நீறாக வோட்டி
வானாடு காத்த ...... பெருமாளே.
பாடல் 1251
தனத்தன தனத்தன தனத்தன தனத்தன
தனத்தன தனத்தன ...... தனதான
துடித்தெதிர் வடித்தெழு குதர்க்கச மயத்தவர்
சுழற்கொரு கொடிக்கொடி ...... யெதிர்கூறித்
துகைப்பன கிதத்தலை யறுப்பன யில்விட்டுடல்
துணிப்பன கணித்தலை ...... மிசைபார
முடித்தலை விழுப்பன முழுக்கஅ டிமைப்பட
முறைப்படு மறைத்திர ...... ளறியாத
முதற்பொருள் புலப்பட வுணர்த்துவ னெனக்கொரு
மொழிப்பொருள் பழிப்பற ...... அருள்வாயே
குடிப்பன முகப்பன நெடிப்பன நடிப்பன
கொழுத்தகு ருதிக்கட ...... லிடையூடே
குதிப்பன மதிப்பன குளிப்பன களிப்பன
குவட்டினை யிடிப்பன ...... சிலபாடல்
படிப்பன திருப்புக ழெடுப்பன முடிப்பன
பயிற்றிய லகைக்குலம் ...... விளையாடப்
பகைத்தெழு மரக்கரை யிமைப்பொழு தினிற்பொடி
படப்பொரு துழக்கிய ...... பெருமாளே.
பாடல் 1252
தத்த தத்த தானனம் தத்த தத்த தானனம்
தத்த தத்த தானனத் ...... தனதான
துத்தி நச்ச ராவிளம் பிச்சி நொச்சி கூவிளஞ்
சுக்கி லக்க லாமிர்தப் ...... பிறைசூதம்
சுத்த ரத்த பாடலம் பொற்க டுக்கை யேடலஞ்
சுத்த சொற்ப கீரதித் ...... திரைநீலம்
புத்தெ ருக்கு பாழிகங் கொத்தெ டுத்த தாளிதண்
பொற்பு மத்து வேணியர்க் ...... கருள்கூரும்
புத்தி சித்தி வாய்கனஞ் சுத்த சத்ய வாசகம்
புற்பு தப்பி ராணனுக் ...... கருள்வாயே
பத்தி யுற்ற தோகையம் பச்சை வெற்றி வாகனம்
பக்க மிட்டு லாவியச் ...... சுரர்மாளப்
பக்க விட்டு வாய்நிணங் கக்க வெட்டி வாய்தரும்
பத்ம சிட்ட னோடமுத் ...... தெறிமீனக்
கைத்த லைப்ர வாகையுந் தத்த ளிக்க மாமுறிந்
துட்க முத்து வாரணச் ...... சதகோடி
கைக்க ளிற்று வாரணம் புக்கொ ளிக்க வாரணங்
கைப்பி டித்த சேவகப் ...... பெருமாளே.
பாடல் 1253
தனன தத்த தய்ய தனன தத்த தய்ய
தனன தத்த தய்ய ...... தனதான
தெரிவை மக்கள் செல்வ முரிமை மிக்க வுண்மை
தெரிவ தற்கு உள்ள ...... முணராமுன்
சினமி குத்த திண்ணர் தனிவ ளைத்து வெய்ய
சிலுகு தைத்து வன்மை ...... சிதையாமுன்
பரவை புக்கு தொய்யு மரவ ணைக்குள் வைகு
பரம னுக்கு நல்ல ...... மருகோனே
பழுதில் நிற்சொல் சொல்லி யெழுதி நித்த முண்மை
பகர்வ தற்கு நன்மை ...... தருவாயே
இருகி ரிக்க ளுள்ள வரைத டிக்கு மின்னு
மிடியு மொய்த்த தென்ன ...... எழுசூரை
எழுக டற்கு ளுள்ளு முழுகு வித்து விண்ணு
ளிமைய வர்க்கு வன்மை ...... தருவோனே
அரிவை பக்க முய்ய வுருகி வைக்கு மைய
ரறிய மிக்க வுண்மை ...... யருள்வோனே
அறிவி னுக்கு ளென்னை நெறியில் வைக்க வல்ல
அடிய வர்க்கு நல்ல ...... பெருமாளே.
பாடல் 1254
தந்தன தந்த தந்தன தந்த
தந்தன தந்த ...... தனதான
தென்றலு மன்றி யின்றலை பொங்கு
திண்கட லொன்று ...... மிகமோதச்
செந்தழ லென்று வெந்தழல் சிந்து
திங்களும் வந்து ...... துணையேய
அன்றிலு மன்றி துன்றுச ரங்க
ளைந்துமெ னெஞ்ச ...... மழியாதே
அந்தியி லென்றன் வெந்துய ரஞ்ச
அன்பொட லங்கல் ...... தரவேணும்
வென்றிவி ளங்கு குன்றவர் வஞ்சி
விஞ்சிய கொங்கை ...... புணர்மார்பா
வெண்டர ளங்கள் தண்டைச தங்கை
மின்கொடி லங்கு ...... கழலோனே
கொன்றைய ணிந்த சங்கர ரன்று
கும்பிட வந்த ...... குமரேசா
குன்றிட அண்ட ரன்றுய வென்று
குன்றமெ றிந்த ...... பெருமாளே.
பாடல் 1255
ராகம் – மோஹனம், தாளம் - மிஸ்ரசாபு (3 1/2)
தகதிமி-2, தகிட-1 1/2
தானன தனன தானன தனன
தானன தனன ...... தனதான
தோரண கனக வாசலில் முழவு
தோல்முர சதிர ...... முதிராத
தோகையர் கவரிவீசவ யிரியர்
தோள்வலி புகழ ...... மதகோப
வாரண ரதப தாகினி துரக
மாதிர நிறைய ...... அரசாகி
வாழினும் வறுமை கூரினு நினது
வார்கழ லொழிய ...... மொழியேனே
பூரண புவன காரண சவரி
பூதர புளக ...... தனபார
பூஷண நிருதர் தூஷண விபுதர்
பூபதி நகரி...... குடியேற
ஆரண வனச ஈரிரு குடுமி
ஆரியன் வெருவ ...... மயிலேறு
மாரிய பரம ஞானமு மழகு
மாண்மையு முடைய ...... பெருமாளே.
பாடல் 1256
தத்தனா தனத்த தத்தனா தனத்த
தத்தனா தனத்த ...... தனதான
நச்சுவாள் விழிக்கொ டெற்றியே தனத்தை
நத்துவார் சுகத்தில் ...... நலமாக
நட்டமா மனத்தை யிட்டமே கொடுத்து
நத்துவாழ் கடற்கு ...... ளணைபோலே
கச்சமே செலுத்தி யச்சமே படுத்து
கட்டஏழ் பிறப்பு ...... விடவேதான்
கற்றநூ லுகக்க வெட்கமே செறித்த
கட்டனே னினைப்ப ...... தொருநாளே
இச்சையே செலுத்தி யுச்சிதாள் பலிக்கு
மிட்டமா லவற்கு ...... மருகோனே
எற்றுவா ரிதிக்குள் முற்றிநீள் பொருப்பை
யெக்கிநேர் மடித்த ....... இளையோனே
மெச்சவே புடைத்த முத்தமார் தனத்தி
மிக்கவாள் படைத்த ...... விழியாலே
வெட்டுமா மறத்தி யொக்கவே யிருக்க
வெற்றிவே லெடுத்த ...... பெருமாளே.
பாடல் 1257
தத்ததன தான தத்த, தத்ததன தான தத்த
தத்ததன தான தத்த ...... தனதான
நற்குணமு ளார்த மைப்பொல் மைக்குழலி லேசி றக்க
நற்பரிம ளாதி துற்ற ...... மலர்சூடி
நச்சுவிழி யால்ம யக்கி யிச்சைபல பேசி யுற்று
நற்பொருள வாம னத்தர் ...... வசமாகி
வெற்பனைய மாத னத்தை பொற்புறவு றாவ ணைத்து
மெத்தமய லாகி நித்த ...... மெலியாதே
வெட்சிகமழ் நீப புஷ்ப வெற்றிசிறு பாத பத்ம
மெய்க்கிருபை நீய ளிப்ப ...... தொருநாளே
ரத்தினப ணாதி ருத்தன் மெய்ச்சுதனு நாடு மிக்க
லக்ஷணகு மார சுப்ர ...... மணியோனே
நற்றிசையு மேறி யிட்ட பொய்ச்சமணை வேர றுத்து
நற்றிருநி றேப தப்பி ...... விளையாடும்
சற்சனகு மார வ்ருத்தி அற்புதசி வாய னுக்கொர்
சற்குருவி நோத சித்ர ...... மயில்வீரா
சக்ரதரன் மார்ப கத்தி லுக்ரமுட னேத ரித்த
சத்தியடை யாள மிட்ட ...... பெருமாளே.
பாடல் 1258
தானாந்த தானந் தாத்த தானாந்த தானந் தாத்த
தானாந்த தானந் தாத்த ...... தனதான
நாகாங்க ரோமங் காட்டி வாரேந்து நாகங் காட்டி
நாமேந்து பாலங் காட்டி ...... யபிராம
நானாங்க ராகங் காட்டி நாகேந்த்ர நீலங் காட்டி
நாயேன்ப்ர காசங் காட்டி ...... மடலூர
மேகாங்க கேசங் காட்டி வாயாம்பல் வாசங் காட்டி
மீதூர்ந்த போகங் காட்டி ...... யுயிரீர்வார்
மேல்வீழ்ந்து தோயுந் தூர்த்தன் மோகாந்த காரந் தீர்க்க
வேதாந்த தீபங் காட்டி ...... யருள்வாயே
ஏகாந்த வீரம் போற்றி நீலாங்க யானம் போற்றி
யேடார்ந்த நீபம் போற்றி ...... முகில்தாவி
ஏறோங்க லேழுஞ் சாய்த்த நான்மூன்று தோளும் போற்றி
யார்வேண்டி னாலுங் கேட்ட ...... பொருளீயும்
த்யாகாங்க சீலம் போற்றி வாயோந்தி டாதன் றார்த்து
தேசாங்க சூரன் தோற்க ...... மயிலேறிச்
சேவேந்தி தேசம் பார்க்க வேலேந்தி மீனம் பூத்த
தேவேந்த்ர லோகங் காத்த ...... பெருமாளே.
பாடல் 1259
தனதன தனதனத் தனதன தனதனத்
தனதன தனதனத் ...... தனதான
பரிமள மலரடுத் தகில்மண முழுகிமைப்
பரவிய ம்ருகமதக் ...... குழல்மானார்
பருமணி வயிரமுத் திலகிய குழையினிற்
படைபொரு வனவிழிக் ...... கயலாலே
எரியுறு மெழுகெனத் தனிமன மடையநெக்
கினமையோ டுருகவிட் ...... டவமேயான்
இருவினை நலியமெய்த் திறலுட னறிவுகெட்
டிடர்படு வதுகெடுத் ...... தருள்வாயே
சொரிமத அருவிவிட் டொழுகிய புகர்முகத்
தொளைபடு கரமலைக் ...... கிளையோனே
துடியிடை யொருகுறக் குலமயில் புளகிதத்
துணைமுலை தழுவுபொற் ...... புயவீரா
அரியன பலவிதத் தொடுதிமி லையுமுடுக்
கையுமொகு மொகுவெனச் ...... சதகோடி
அலகையு முடனடித் திடவடி யயிலெடுத்
தமர்செயு மறுமுகப் ...... பெருமாளே.
பாடல் 1260
தத்தனத் தத்தனத் தத்தனத் தத்தனத்
தத்தனத் ...... தனதான
பற்றநெட் டைப்படைத் துட்டிருட் டைத்தயிர்ப்
பத்தைமுட் டிப்படுத் ...... தயில்மாதர்
பக்கமிட் டுப்பொருட் கொட்குமிட் டப்பரப்
பற்றுகெட் டுப்பயிர்க் ...... களைபோலுங்
கற்றகட் டுக்கவிக் கொட்டமொட் டிக்கனைத்
திட்டுகத் தத்தினுற் ...... றகமாயுங்
கட்டமற் றுக்கழற் பற்றிமுத் திக்கருத்
தொக்கநொக் குக்கணித் ...... தருள்வாயே
வற்றவட் டக்கடற் கிட்டிவட் டித்துரத்
திட்டுமட் டுப்படப் ...... பொருமாயன்
மற்றுமொப் புத்தரித்தெட்டஎட் டப்புறத்
துற்றஅத் தர்க்கருட் ...... பெருவாழ்வே
செற்றமுற் றச்சினத் திட்டுநெட் டைப்பொருப்
பெட்டைமுட் டிச்செருச் ...... செயும்வேலா
சித்தர்சித் தத்துறப் பற்றிமெத் தப்புகழ்ச்
செப்புமுத் தித்தமிழ்ப் ...... பெருமாளே.
பாடல் 1261
தானன தான தாத்த தானன தான தாத்த
தானன தான தாத்த ...... தனதான
பாதக மான யாக்கை வாதுசெய் பாவி கோத்த
பாணமும் வாளு மேற்ற ....... இருபார்வை
பாரப டிர மாப்ப யோதர மாதர் வாய்த்த
பாயலின் மீத ணாப்பி ...... யிதமாடுந்
தோதக மாய வார்த்தை போதக மாக நோக்கு
தூய்மையில் நாயி னேற்கும் ...... வினைதீரச்
சூழும னாதி நீத்த யானொடு தானி லாச்சு
கோதய ஞான வார்த்தை ...... யருள்வாயே
சாதன வேத நூற்பு ராதன பூண நூற்ப்ர
ஜாபதி யாண்மை தோற்க ...... வரைசாடிச்
சாகர சூர வேட்டை யாடிய வீர வேற்ப்ர
தாபம கீப போற்றி ...... யெனநேமி
மாதவன் மாது பூத்த பாகர னேக நாட்ட
வாசவ னோதி மீட்க ...... மறைநீப
மாமலர் தூவி வாழ்த்த யானையை மாலை சூட்டி
வானவர் சேனை காத்த ...... பெருமாளே.
பாடல் 1262
தான தனந்தன தான தனந்தன
தான தனந்தன ...... தனதான
பார நறுங்குழல் சோர நெகிழ்ந்துப
டீர தனம்புள ...... கிதமாகப்
பாவைய ருந்தியல் மூழ்கி நெடும்பரி
தாப முடன்பரி...... மளவாயின்
ஆரமு துண்டணை மீதி லிருந்தநு
ராகம் விளைந்திட ...... விளையாடி
ஆக நகம்பட ஆர முயங்கிய
ஆசை மறந்துனை ...... யுணர்வேனோ
நாரத னன்றுச காய மொழிந்திட
நாயகி பைம்புன ...... மதுதேடி
நாண மழிந்துரு மாறிய வஞ்சக
நாடியெ பங்கய ...... பதநோவ
மார சரம்பட மோக முடன்குற
வாணர் குறிஞ்சியின் ...... மிசையேபோய்
மாமுநி வன்புணர் மானுத வுந்தனி
மானை மணஞ்செய்த ...... பெருமாளே.
பாடல் 1263
தனதன தனதன தனதன தனதன
தானத் தனந்தம் ...... தனதான
பிரமனும் விரகொடு பிணிவினை யிடர்கொடு
பேணிக் கரங்கொண் ...... டிருகாலும்
பெறநிமிர் குடிலென வுறவுயிர் புகமதி
பேதித் தளந்தம் ...... புவியூடே
வரவிட வருமுட லெரியிடை புகுதரு
வாதைத் தரங்கம் ...... பிறவாமுன்
மரகத மயில்மிசை வருமுரு கனுமென
வாழ்க்கைக் கொரன்புந் ...... தருவாயே
அருவரை தொளைபட அலைகடல் சுவறிட
ஆலிப் புடன்சென் ...... றசுரேசர்
அனைவரு மடிவுற அமர்பொரு தழகுட
னாண்மைத் தனங்கொண் ...... டெழும்வேலா
இருவினை யகலிட எழிலுமை யிடமுடை
யீசர்க் கிடுஞ்செந் ...... தமிழ்வாயா
இயல்பல கலைகொடு இசைமொழி பவரினும்
ஏழைக் கிரங்கும் ...... பெருமாளே.
பாடல் 1264
தானன தானன தந்த தானன தானன தந்த
தானன தானன தந்த ...... தனதான
பூதக லாதிகள் கொண்டு யோகமு மாகம கிழ்ந்து
பூசைகள் யாதுநி கழ்ந்து ...... பிழைகோடி
போம்வழி யேதுதெ ரிந்து ஆதிய நாதியி ரண்டு
பூரணி காரணி விந்து ...... வெளியான
நாதப ராபர மென்ற யோகியு லாசம றிந்து
ஞானசு வாச முணர்ந்து ...... வொளிகாண
நாடியொ ராயிரம் வந்த தாமரை மீதில மர்ந்த
நாயகர் பாதமி ரண்டு ...... மடைவேனோ
மாதுசர் வேஸ்வரிவஞ்சி காளிபி டாரிவி பஞ்சி
வாணிவ ராகிம டந்தை ...... யபிராமி
வாழ்சிவ காம சவுந்த்ரியாலமெ லாமுக பஞ்ச
வாலைபு ராரியி டந்த ...... குமையாயி
வேதபு ராணம்வி ளம்பி நீலமு ராரியர் தங்கை
மேலொடு கீழுல கங்கள் ...... தருபேதை
வேடமெ லாமுக சங்க பாடலொ டாடல்ப யின்ற
வேணியர் நாயகி தந்த ...... பெருமாளே.
பாடல் 1265
ராகம் – கரஹரப்ரியா, தாளம் - ஆதி - கண்டநடை (20)
(எடுப்பு - அதீதம்)
தனந்தா தனந்தா தனந்தா தனந்தா
தனந்தா தனந்த ...... தனதான
பெருங்கா ரியம்போல் வருங்கே டுடம்பால்
ப்ரியங்கூர வந்து ...... கருவூறிப்
பிறந்தார் கிடந்தா ரிருந்தார் தவழ்ந்தார்
நடந்தார் தளர்ந்து ...... பிணமானார்
அருங்கான் மருங்கே யெடுங்கோள் சுடுங்கோள்
அலங்கார நன்றி ...... தேன்முழ்கி
அகன்றா சையும்போய் விழும்பா ழுடம்பால்
அலந்தேனை யஞ்ச ...... லெனவேணும்
இருங்கா னகம்போ யிளங்கா ளைபின்போ
கவெங்கே மடந்தை ...... யெனவேகி
எழுந்தே குரங்கா லிலங்கா புரந்தீ
யிடுங்கா வலன்றன் ...... மருகோனே
பொருங்கார் முகம்பா ணிகொண்டே யிறைஞ்சார்
புறஞ்சாய அம்பு ...... தொடும்வேடர்
புனங்கா வலங்கோ தைபங்கா வபங்கா
புகழ்ந்தோது மண்டர் ...... பெருமாளே.
பாடல் 1266
தத்தத் தனத்தத்த தத்தத் தனத்தத்த
தத்தத் தனத்தத்த ...... தனதான
மக்கட் பிறப்புக்கு ளொக்கப் பிறப்புற்ற
மட்டுற்ற சுற்றத்தர் ...... மனையாளும்
மத்யத் தலத்துற்று நித்தப் பிணக்கிட்டு
வைத்துப் பொருட்பற்று ...... மிகநாட
நிக்ரித் திடுத்துட்டன் மட்டித் துயிர்பற்ற
நெட்டைக் கயிற்றிட்டு ...... வளையாமுன்
நெக்குக் குருப்பத்தி மிக்குக் கழற்செப்ப
நிற்றத் துவச்சொற்க ...... ளருள்வாயே
திக்கப் புறத்துக்குள் நிற்கப் புகழ்ப்பித்த
சித்ரத் தமிழ்க்கொற்ற ...... முடையோனே
சிப்பக் குடிற்கட்டு மற்பக் குறத்திச்சொல்
தித்திப்பை யிச்சிக்கு ...... மணவாளா
முக்கட் சடைச்சித்த ருட்புக் கிருக்கைக்கு
முத்தித் துவக்குற்று ...... மொழிவோனே
முட்டச் சினத்திட்டு முற்பட் டிணர்க்கொக்கை
முட்டித் தொளைத்திட்ட ...... பெருமாளே.
பாடல் 1267
தத்தனா தத்ததன தத்தனா தத்ததன
தத்தனா தத்ததன ...... தனதான
மக்கள்தா யர்க்குமரு கர்க்குமா மர்க்குமனை
விக்கும்வாழ் நர்க்குமிக ...... மனதூடே
மைத்தவே லைக்குநெடி துற்றமா யத்துயரம்
வைத்துவா டச்சமனு ...... முறமேவித்
திக்குநா டிக்கரிய மெய்க்கடா விற்றிருகி
திக்கஆ விக்களவு ...... தெரியாமுன்
சித்தமோ வித்துயிலு மற்றுவா ழச்சிறிது
சித்ரபா தக்கமல ...... மருள்வாயே
இக்குவே ளைக்கருக முக்கணா டிக்கனலை
யிட்டுயோ கத்தமரு ...... மிறையோர்முன்
எச்சரா திக்குமுற நிற்குமா யற்குமுத
லெட்டொணா வித்தைதனை ...... யினிதீவாய்
பக்கஆர் வத்துடனுள் நெக்குநா டிப்பரவு
பத்தர்பா டற்குருகு ...... முருகோனே
பக்கம் யானைத்திருவொ டொக்கவா ழக்குறவர்
பச்சைமா னுக்கினிய ...... பெருமாளே.
பாடல் 1268
தனனத் தனதன தனனத் தனதன
தனனத் தனதன ...... தனதான
மதனிக் கதுகொடு பதுமப் புதுமலர்
மலையப் படவிடு ...... வலியாலே
வனமுற் றினவளை யினநித் திலமலை
வலையத் துகள்வளை ...... கடலாலே
விதனப் படுமதி வதனக் கொடியற
வெருவிப் பரிமள ...... அணைமீதே
மெலியக் கலைதலை குலையத் தகுமினி
விரையக் குரவலர் ...... தரவேணும்
புதனைச் சதுமுக விதியச் சுதனெதிர்
புனைவித் தவர்தொழு ...... கழல்வீரா
பொருகைச் சரிவரிபெருகச் செறிவுறு
புனமெய்க் குறமகள் ...... மணவாளா
முதுநற் சரவண மதனிற் சததள
முளரிப் பதிதனி ...... லுறைவோனே
முதுமைக் கடலட ரசுரப் படைகெட
முடுகிப் பொரவல ...... பெருமாளே.
பாடல் 1269
ராகம் – தன்யாஸி, தாளம் - அங்கதாளம் (5 1/2)
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தனதன தனான தான தனதன தனான தான
தனதன தனான தான ...... தனதான
மதிதனை யிலாத பாவி குருநெற யிலாத கோபி
மனநிலை நிலாத பேயன் ...... அவமாயை
வகையது விடாத பேடி தவநினை விலாத மோடி
வரும்வகை யிதேது காய ...... மெனநாடும்
விதியிலி பொலாத லோபி சபைதனில் வராத கோழை
வினையிகல் விடாத கூள ...... னெனைநீயும்
மிகுபர மதான ஞான நெறிதனை விசார மாக
மிகுமுன துரூப தான ...... மருள்வாயே
எதிர்வரு முதார சூர னிருபிள வதாக வேலை
யியலொடு கடாவு தீர ...... குமரேசா
இனியசொல் மறாத சீலர் கருவழி வராமல் நாளும்
இளமையது தானு மாக ...... நினைவோனே
நதியுட னராவு பூணு பரமர்குரு நாத னான
நடைபெறு க்டுர மான ...... மயில்வீரா
நகைமுக விநோத ஞான குறமினுட னேகு லாவு
நவமணி யுலாவு மார்ப ...... பெருமாளே.
பாடல் 1270
தனந்தாத் தனந்தாத் தனந்தாத் தனந்தாத்
தனந்தாத் தனத்தம் ...... தனதான
மலந்தோற் சலந்தேற் றெலும்பாற் கலந்தீட்
டிடுங்கூட் டினிற்றங் ...... கிடுமாய
மயங்காத் தியங்காப் பயங்கோட் டிடுங்காற்
றுடன்போக் குறத்தந் ...... தையுமாதும்
குலந்தாய்க் குடம்பாற் பிறந்தேற் றிடுங்கோத்
தடங்கூப் பிடத்தம் ...... புவியாவும்
குலைந்தார்ப் பெழுங்காட் டிலந்தாட் களன்பாற்
குணங்காத் துனைக்கும் ...... பிடஆளாய்
தலந்தாட் டொடண்டாத் தளைந்தார்க் கிளங்காத்
தடந்தாட் புடைத்தன் ...... பினர்வாழத்
தருங்கூத் தரும்பார்த் துகந்தேத் திடஞ்சாத்
திரஞ்சாற் றிநிற்கும் ...... பெருவாழ்வே
அலைந்தாற் றெழுங்கோச் சலந்தீக் கலந்தாட்
டரம்போச் செனக்கன் ...... றிடும்வேலா
அறங்காத் துறங்காத் திறம்பார்த் திருந்தோர்க்
கயர்ந்தோர்க் களிக்கும் ...... பெருமாளே.