போதனையில் பெரிது

ஜென் துறவி ஒருவர் தனது சீடனை நோக்கி, தனது போதனைகளிலேயே சிறந்த போதனை புத்தர் என்பது உன் சொந்த மனம் என்பது தான் என்றார். இந்த போதனையால் வெகுவாகக் கவரப்பட்ட சீடன் இதையே தியானம் செய்ய எண்ணி, அவரிடம் அனுமதி பெற்று காட்டிற்குச் சென்றான். இருபது ஆண்டுகள் இதையே தியானம் செய்தான். ஒரு நாள் அந்தக் காட்டின் வழியே ஒரு துறவி செல்வதைக் கண்டு அவருடன் பேசினான். அவரும் தனது ஜென் துறவிடம் தான் போதனை பெற்றவர் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்த அவன், தயவு செய்து எனக்கு நமது ஜென் துறவியின் மிகப் பெரிய போதனை எது என்று சொல்லுங்கள் என்று கேட்டான். அந்தத் துறவியின் கண்கள் மின்னின. ஆஹா! மாஸ்டர் தனது அருமையான சிறந்த போதனையை எனக்குத் தந்துள்ளார். புத்தர் என்பது உன் சொந்த மனம் இல்லை என்பது தான் அது என்றார் அவர்.