மழையே வா

bookmark

ஊசி போல் மின்னல் மின்ன,
ஊரிக் கிணறு தண்ணிவர,
பாசி போல மின்னல் மின்ன, 
பாங்கிணறு தண்ணிவர, 
சட்டியிலே மாகரைத்து 
சந்தை யெல்லாம் கோலமிட்டு, 
கோலம் அழிய வில்லை; 
கொள்ளை மழை பெய்ய வில்லை; 
கிண்ணியிலே மாகரைத்து 
கங்கை யெல்லாம் கோலமிட்டு, 
கோலம் அழியவில்லை; 
கொள்ளை மழை பெய்ய வில்லை; 
மேழி பிடிக்கும் தம்பி 
முகம் சோர்ந்து போகு தம்மா! 
கலப்பை பிடிக்கும் தம்பி 
கை சோர்ந்து நிக்கு தம்மா

உதவியவர்: ம. கிருஷ்ணன் 
சேகரித்தவர். கு.சின்னப்ப பாரதி 
இடம்: முத்துகாபட்டி, நாமக்கல் வட்டம், சேலம் மாவட்டம்.
--------------