மழையே வா

ஊசி போல் மின்னல் மின்ன,
ஊரிக் கிணறு தண்ணிவர,
பாசி போல மின்னல் மின்ன,
பாங்கிணறு தண்ணிவர,
சட்டியிலே மாகரைத்து
சந்தை யெல்லாம் கோலமிட்டு,
கோலம் அழிய வில்லை;
கொள்ளை மழை பெய்ய வில்லை;
கிண்ணியிலே மாகரைத்து
கங்கை யெல்லாம் கோலமிட்டு,
கோலம் அழியவில்லை;
கொள்ளை மழை பெய்ய வில்லை;
மேழி பிடிக்கும் தம்பி
முகம் சோர்ந்து போகு தம்மா!
கலப்பை பிடிக்கும் தம்பி
கை சோர்ந்து நிக்கு தம்மா
உதவியவர்: ம. கிருஷ்ணன்
சேகரித்தவர். கு.சின்னப்ப பாரதி
இடம்: முத்துகாபட்டி, நாமக்கல் வட்டம், சேலம் மாவட்டம்.
--------------