மாயூரம்

bookmark

பாடல் 788
தனதன தத்தத் தனந்த தானன 
தனதன தத்தத் தனந்த தானன 
தனதன தத்தத் தனந்த தானன ...... தனதான 


அமுதினை மெத்தச் சொரிந்து மாவின 
தினியப ழத்தைப் பிழிந்து பானற 
வதனொடு தித்தித் தகண்ட ளாவிய ...... விதழாராய் 

அழகிய பொற்றட்டி னொண்டு வேடையின் 
வருபசி யர்க்குற் றவன்பி னாலுண 
வருள்பவ ரொத்துத் தளர்ந்த காமுகர் ...... மயல்தீரக் 

குமுதம் விளர்க்கத் தடங்கு லாவிய 
நிலவெழு முத்தைப் புனைந்த பாரிய 
குலவிய சித்ரப் ப்ரசண்ட பூரண ...... தனபாரக் 

குவடிள கக்கட் டியுந்தி மேல்விழு 
மவர்மய லிற்புக் கழிந்த பாவியை 
குரைகழல் பற்றிப் புகழ்ந்து வாழ்வுற ...... அருள்வாயே 

வமிசமி குத்துப் ப்ரபஞ்சம் யாவையு 
மறுகிட வுக்ரக் கொடும்பை யானபுன் 
மதிகொ டழித்திட் டிடும்பை ராவணன் ...... மதியாமே 

மறுவறு கற்பிற் சிறந்த சீதையை 
விதனம் விளைக்கக் குரங்கி னாலவன் 
வமிச மறுத்திட் டிலங்கு மாயவன் ...... மருகோனே 

எமதும லத்தைக் களைந்து பாடென 
அருள அதற்குப் புகழ்ந்து பாடிய 
இயல்கவி மெச்சிட் டுயர்ந்த பேறருள் ...... முருகோனே 

எழில்வளை மிக்கத் தவழ்ந்து லாவிய 
பொனிநதி தெற்கிற் றிகழ்ந்து மேவிய 
இணையிலி ரத்னச் சிகண்டி யூருறை ...... பெருமாளே.