மூத்தவள் வயிற்றெரிச்சல்

bookmark

மூத்தவள் வாழ்ந்திருக்கும்போது அவள் கணவன் இளைய தாரத்தை மணந்தான். பல நாட்களுக்குப்பின் மூத்த மனைவியைச் சந்திக்கிறான். அவர்களிடையே நடக்கும் உரையாடல் வருமாறு:

கணவன்: 
செம்புச் சிலை எழுதி
செவத்தப் புள்ள பேரெழுதி 
வம்புக்கு தாலி கட்டி
வாழுறது எந்த விதம்?

மனைவி: 
மாமன் மகளிணுல்ல
மறிச்சு வச்சுத் தாலிக் கட்டி 
மந்தை யோரம் வீட்டைக் கட்டி 
மாடடையப் போட்டாரில்ல

கணவன்: 
கல்லு அடுப்புக் கூட்டி
செடிய மறவு வச்சு 
பொங்கலிட்டுப் பார்த்தாலும் 
பொருந்தலையே உன்னழகு

மனைவி: 
கூடுணமே ரெண்டு பேரும்
குமர கோயில் அன்னம் போல 
இன்னிப் பிரிந்தாயனா 
இறப்பதும் நிச்சயம் தான் 
என்னைய விட்டுட்டு நீ 
இளையதாரம் கட்டினியே 
போற வழியிலியே-உன்ன 
பூ நாகம் தீண்டிராதோ?

சேகரித்தவர்: S.M. கார்க்கி 
இடம்: சிவகிரி, நெல்லை மாவட்டம்
--------------