யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதே

ஒரு முறை ஜென் துறவி ஒருவர், தன் சீடர்களிடம் பேசிக் கொண்டிருக்கும்பொழுது அவரது சீடர்கள் துறவியிடம் கதை கூறுமாறு கேட்டனர்.
துறவியும் சீடர்களுக்குக் கதை சொல்ல ஆரம்பித்தார். ஒரு நாள் ஒரு வியாபாரி ஒருவன் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது அந்த வியாபாரிக்கு எதிரிலே வந்தவன், அவனை நிறுத்தி, என்னை ஞாபகம் உள்ளதா? என்று கேட்டான்.
பின் உங்களுக்கு என்னை நினைவு இருக்கிறதோ இல்லையோ, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் இந்த நகரத்திற்கு வந்த போது, நான் என்னிடம் பணம் இல்லை என்று உங்களிடம் பணம் கேட்டேன்.
அதற்கு நீங்களும் என்னிடம் கொஞ்சம் பணத்தைக் கொடுத்து, ஒருவர் வெற்றிப் பாதையில் செல்ல இது உதவட்டும் என்றுக் கூறி கொடுத்து உதவி செய்தீர்கள் என்று அந்த வியாபாரியிடம் கூறினான்.
அந்த வியாபாரி சிறிது நேரம் யோசித்து விட்டு, ஆம், நினைவுக்கு வந்துவிட்டது என்று சொல்லிவிட்டு வேறு என்ன சொல்லுங்கள் என்று ஆவலுடன் கேட்டான்.
அதற்கு அவன் அப்போது எப்படி எனக்கு பணம் கொடுத்து உதவி புரிந்தீர்களோ, அதேப் போல் இப்போதும் ஒரு சந்தர்ப்பம் கொடுக்க முடியுமா? என்று கேட்டான்.
அந்த வியாபாரி இப்படி கேட்டதும் வியந்து போனான் என்று சொல்லிக் கதையை முடித்தார் துறவி.
பின் தன் சீடர்களிடம், ஒருவர் தமக்கு ஒரு முறை எதிர்பாராமல் உதவி செய்தால், உதவி செய்த அவர்களிடம் மீண்டும் மீண்டும் அதேப்போல் உதவி வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது கூடாது என்றும், மேலும் நமக்கு எந்த நேரத்தில் எது கிடைக்க வேண்டுமோ, நமக்கு கிடைக்க வேண்டும் என்று இருந்தால் அந்த நேரத்தில், நிச்சயம் அது நமக்கு கிடைக்கும் என்று சொன்னார்.