யாழ்ப்பாணாயன்பட்டினம்

bookmark

பாடல் 759
தாத்தா தானம் தத்தன தனதன 
தாத்தா தானம் தத்தன தனதன 
தாத்தா தானம் தத்தன தனதன ...... தனதான 


பூத்தார் சூடுங் கொத்தலர் குழலியர் 
பார்த்தால் வேலுங் கட்கமு மதன்விடு 
போர்க்கார் நீடுங் கட்சர மொடுநமன் ...... விடுதூதும் 

போற்றாய் நாளுங் கைப்பொரு ளுடையவர் 
மேற்றா ளார்தம் பற்றிடு ப்ரமையது 
பூட்டா மாயங் கற்றமை விழியின ...... ரமுதூறல் 

வாய்த்தார் பேதஞ் செப்புபொய் விரகியர் 
நூற்றேய் நூலின் சிற்றிடை யிடர்பட 
வாட்டாய் வீசுங் கர்ப்புர ம்ருகமத ...... மகிலாரம் 

மாப்பூ ணாரங் கச்சணி முலையினர் 
வேட்பூ ணாகங் கெட்டெனை யுனதுமெய் 
வாக்கால் ஞானம் பெற்றினி வழிபட ...... அருளாயோ 

ஆத்தாள் மால்தங் கைச்சிக னிகையுமை 
கூத்தா டாநந் தச்சிவை திரிபுரை 
யாட்பேய் பூதஞ் சுற்றிய பயிரவி ...... புவநேசை 

ஆக்கா யாவும் பற்றியெ திரிபுற 
நோக்கா ஏதுஞ் செற்றவள் திருவிளை 
யாட்டா லீசன் பக்கம் துறைபவள் ...... பெறுசேயே 

ஏத்தா நாளுந் தர்ப்பண செபமொடு 
நீத்தார் ஞானம் பற்றிய குருபர 
யாப்பா ராயுஞ் சொற்றமி ழருள்தரு ...... முருகோனே 

ஏற்போர் தாம்வந் திச்சையின் மகிழ்வொடு 
வாய்ப்பாய் வீசும் பொற்ப்ரபை நெடுமதிள் 
யாழ்ப்பா ணாயன் பட்டின மருவிய ...... பெருமாளே.