ரெங்கத்திலே

அயல்நாடு சென்று வந்தவர்கள், பெண்கள் தம்மை மதிக்க வேண்டுமென்பதற்காகப் பல பொய்க் கதைகளை புனைந்து கூறுவார்கள். இரங்கூனுக்குப் போய் திரும்பி வந்தவன் சொல்லுவதையும் அதனை நம்பாமல் கதை கேட்ட பெண்கள் கூறுவதையும் கேளுங்கள்.
(ரங்கூன் சென்று வந்தவன்)
அரிசி அரைக்கால் ரூவா
அரிக்கஞ்சட்டி முக்கால் ரூவா
சோத்துப்பானெ ரெண்டு ரூவா
சொகுசான ரங்கத்திலே
(கேட்பவர் கூறுவது)
ஓடையில் கல்லெறக்கி
ஒன்பது நாள் பாலங்கட்டி
பாலத்து மேலிருந்து
பாடிவாரார் நம்ம சாமி
காத்தோரம் சேக்குகளாம்
கைநிறைஞ்ச வாச்சுகளாம்
மணி பார்த்து வாருமையா
மகுட துரைராச சிங்கம்
சேகரித்தவர்: S.S. போத்தையா
இடம்: விளாத்திக்குளம், நெல்லை மாவட்டம்.
------------