வடுகூர்

பாடல் 740
ராகம் - ரேவதி
தாளம் - ஆதி
தனதன தனனா தனதன தனனா
தனதன தனனா ...... தனதான
அரியய னறியா தவரெரி புர்மு
ணதுபுக நகையே ...... வியநாதர்
அவிர்சடை மிசையோர் வனிதையர் பதிசீ
றழலையு மழுநேர் ...... பிடிநாதர்
வரைமக ளொருகூ றுடையவர் மதனா
கமும்விழ விழியே ...... வியநாதர்
மனமகிழ் குமரா எனவுன திருதாள்
மலரடி தொழுமா ...... றருள்வாயே
அருவரை யிருகூ றிடவொரு மயில்மேல்
அவனியை வலமாய் ...... வருவோனே
அமரர்க ளிகல்நீ டசுரர்கள் சிரமேல்
அயில்தனை விசையாய் ...... விடுவோனே
வரிசையொ டொருமா தினைதரு வனமே
மருவியொர் குறமா ...... தணைவேடா
மலைகளில் மகிழ்வாய் மருவிநல் வடுகூர்
வருதவ முநிவோர் ...... பெருமாளே.