வலிவலம்

bookmark

பாடல் 838
தனத்த தானன தனதன தனதன 
தனத்த தானன தனதன தனதன 
தனத்த தானன தனதன தனதன ...... தனதான 


தொடுத்த நாள்முதல் மருவிய இளைஞனும் 
இருக்க வேறொரு பெயர்தம திடமது 
துவட்சி யேபெறி லவருடன் மருவிடு ...... பொதுமாதர் 

துவக்கி லேயடி படநறு மலரயன் 
வதித்த தோதக வினையுறு தகவது 
துறக்க நீறிட அரகர வேனவுள ...... மமையாதே 

அடுத்த பேர்மனை துணைவியர் தமர்பொருள் 
பெருத்த வாழ்விது சதமென மகிழ்வுறு 
மசட்ட னாதுலன் அவமது தவிரநி ...... னடியாரோ 

டமர்த்தி மாமலர் கொடுவழி படஎனை 
யிருத்தி யேபர கதிபெற மயில்மிசை 
யரத்த மாமணி யணிகழ லிணைதொழ ...... அருள்தாராய் 

எடுத்த வேல்பிழை புகலரி தெனஎதிர் 
விடுத்து ராவணன் மணிமுடி துணிபட 
எதிர்த்து மோர்கணை விடல்தெரி கரதலன் ...... மருகோனே 

எருக்கு மாலிகை குவளையி னறுமலர் 
கடுக்கை மாலிகை பகிரதி சிறுபிறை 
யெலுப்பு மாலிகை புனைசடி லவனருள் ...... புதல்வோனே 

வடுத்த மாவென நிலைபெறு நிருதனை 
அடக்க ஏழ்கட லெழுவரை துகளெழ 
வடித்த வேல்விடு கரதல ம்ருகமத ...... புயவேளே 

வனத்தில் வாழ்குற மகள்முலை முழுகிய 
கடப்ப மாலிகை யணிபுய அமரர்கள் 
மதித்த சேவக வலிவல நகருறை ...... பெருமாளே.