வாடும் மல்லிகைப் பூ !

bookmark

அவள் கணவனைப் பறிகொடுத்து வாடுகிறாள். அவள் வளர்த்த மல்லிகையும், செண்டு மல்லியும் அவள் துயரம் கண்டு வாடுகின்றன.

மானம் கடன் வாங்கி
மல்லிகை நாத்து விட்டேன்
மரமேறிப் பாருங்களேன்
மங்கை புலம்புவதை
மல்லிகைப்பூ வாடுவதை
சேரக் கடன் வாங்கி
செண்டுமல்லி நாத்து விட்டேன்
செவரேறிப் பாருங்களே
சீதை புலம் புவதை
செண்டு மல்லி வாடுவதை

வட்டார வழக்கு : மானம்-பெரும் பணம் ; சேர-மிகுதியாக ; செவர்-சுவர் (பேச்சு).
உதவியவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: அரூர், தருமபுரி.
------------