வாலிகொண்டபுரம்

bookmark

பாடல் 898
ராகம் - மத்யமாவதி 
தாளம் - சதுஸ்ரத்ருபுடை - 4 களை (32) 
தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1 

தான தந்ததன தான தந்ததன 
தான தந்ததன தான தந்ததன 
தான தந்ததன தான தந்ததன ...... தந்ததான 


ஈயெ றும்புநரி நாய்க ணங்கழுகு 
காக முண்பவுட லேசு மந்துஇது 
ஏல்வ தென்றுமத மேமொ ழிந்துமத ...... வும்பல்போலே 

ஏது மென்றனிட கோலெ னும்பரிவு
மேவி நம்பியிது போது மென்கசில 
ரேய்த னங்கள்தனி வாகு சிந்தைவச ...... னங்கள்பேசிச் 

சீத தொங்கலழ காவ ணிந்துமணம் 
வீச மங்கையர்க ளாட வெண்கவரி 
சீற கொம்புகுழ லூத தண்டிகையி ...... லந்தமாகச் 

சேர்க னம்பெரிய வாழ்வு கொண்டுழலு 
மாசை வெந்திடவு னாசை மிஞ்சிசிவ 
சேவை கண்டுனது பாத தொண்டனென ...... அன்புதாராய் 

சூதி ருந்தவிடர் மேயி ருண்டகிரி 
சூரர் வெந்துபொடி யாகி மங்கிவிழ 
சூரி யன்புரவி தேர்ந டந்துநடு ...... பங்கினோடச் 

சோதி யந்தபிர மாபு ரந்தரனு 
மாதி யந்தமுதல் தேவ ருந்தொழுது 
சூழ மன்றில்நட மாடு மெந்தைமுத ...... லன்புகூர 

வாது கொண்டவுணர் மாள செங்கையயி 
லேவி யண்டர்குடி யேற விஞ்சையர்கள் 
மாதர் சிந்தைகளி கூர நின்றுநட ...... னங்கொள்வோனே 

வாச கும்பதன மானை வந்துதினை 
காவல் கொண்டமுரு காஎ ணும்பெரிய 
வாலி கொண்டபுர மர்ந்துவளர் ...... தம்பிரானே.