விநாயகர் வழிபாட்டில் சொல்ல வேண்டிய துதி

சங்கடஹர சதுர்த்தியான அன்று கீழே கொடுக்கப்பட்டுள்ள விநாயகருக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை சொல்லி வழிபாடு செய்வது நல்ல பலனைத்தரும்.
திருவாக்குஞ் செய்கருமங் கைகூட்டுஞ் செஞ்சொற்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்
ஆதலால் வானோரு மானை முகத்தோனைக்
காதலாற் கூப்புவர்தங் கை.
ஒற்றை யணிமருப்பும் ஓரிரண்டு கைத்தலமும்
வெற்றி புனைந்த விழிமூன்றும் - பெற்றதொரு
தண்டைக்கால் வாரணத்தைத் தன்மனத்தில் எப்பொமுதும்
கொண்டக்கால் வாராது கூற்று.