வீரவாகு தன்னை அறிவித்தல்

bookmark

அது கேட்ட வீரவாகு, "அசுரனே, இந்திரன் துயரத்தை நீக்கி, பிரமன் முதலிய வானவர் சிறுமையைப் போக்கி, தேவரைச் சிறையினின்றும் விடுவித்து, அவர்க்குப் பண்டைச் சிறப்பை யெல்லாம் அளிக்குமாறு ஆதி முதல்வனாகிய ஐயன் திருச்செந்தூரில் எழுந்தருளி யுள்ளார். அந்த ஆண்டவனுக்கு அடிமை செய்பவன் நான். தாரகன் என்னும் பெயர் கொண்ட நின் தம்பியையும், கிரவுஞ்சம் என்னும், பெரிய மலையையும் நொடிப்பொழுதிலே கொன்றொழித்த கொற்ற வேல் தாங்கிய குமரவேள், உன்னிடம் பெருங்கருணை கொண்டு என்னைத் துரதனுப்பினார்.

வீரவாகு தூதுரைத்தல் 
"வானவர்க்குத் தந்தை முறையில் உள்ளவர், காசிப முனிவர். அவர் மைந்தனாகிய நீ வானவரைச் சிறை செய்தல் முறையோ? நீ வேத நூல் முறையினின்றும் தவறினாய்! அற்பப் பொருள்களில் ஆசை வைத்தாய்! நீதி முறையில் உலகத்தைக் காப்பதன்றோ அரசற்குரிய நெறி? அளவிறந்த காலம் நீ அருந்தவம் முயன்றாய்? வேள்வித் தீயில் மூழ்கிய உனக்கு எம்பெருமான் அளித்த அழியாத ஆயுளையும், செல்வத்தையும் வீணாகத் தவறான நெறியிலே சென்று கெடுத்துக் கொள்ளுதல் தகுமோ? அளவிறந்த செல்வத்துடன் நீயும் நின் சுற்றத்தாரும் வாழவேண்டுமானால் வானவரைச் சிறையினின்றும் விட்டுவிடு அற நெறியிலே அரசு புரிந்திடு! அவ்வாறு செய்யா தொழிந்தால் குமரவேள் இங்கு எழுந்தருளி உன்னையும் உன்னைச் சார்ந்தோரையும் கொன்றழித்தல் திண்ணம்” என்று உறுதியாகக் கூறினார், முருகதூதர்.

சூரன் வீரம் பேசி மறுத்தல் 
இவ் வாசகத்தைக் கேட்ட போது சூரன் மனத்தில் முன்னிலும் அதிகமாகக் கோபம் மூண்டெழுந்தது,தீப்பொறி பறக்கும் கண்ணும், புகை வீசும் மூச்சும் உடையவனாய், கையொடு கையறைந்து, கடுமையாகப் பேசுவானாயினான். "அண்டங்கள் ஆயிரத்தெட்டும் வென்று இணையற்ற தனியரசு புரிந்திடும் எனக்குப் பல் முளையாத பாலனா - மழலை மொழி பேசும் குழவியா - புத்தி சொல்லத் தலைப்பட்டான். அசுரர் குலத்தை வானவர் வருத்தினர்; அவர்களை வறியவராக்கினர். ஆதலால், நான் தேவரது செல்வத்தை ஒழித்தேன். அவரைக் குற்றேவல் கொண்டேன்; அவர்தம் பழக்கவழக்கங்களைக் கெடுத்தேன்; சிறைக் கோட்டத்தில் அவரை அடைத்தேன்! எம் குலமுறைப்படி இவற்றையெல்லாம் செய்தேன். தப்பித் தலைமறைந்து திரியும் இந்திரன் முதலி யோரையும் பற்றிக் கொணர்ந்து இங்கே சிறைவைக்கக் கருதியுள் ளேன். அப்படியிருக்க, என் கையில் அகப்பட்ட வானவரை விடுவேனோ? விடவே மாட்டேன்! ஒப்பற்ற வீர சூரன் என்னும் பெயருடையோன் நான் அழியாத வச்சிரதேகமும்,மற்றைய வரங்களும் முன்னமே எனக்கு முருகன் தந்தையார் முறையாக அளித்துள்ளார். அவற்றை யாவரே மாற்ற வல்லார்? போர் புரிந்து என்னை யாவரே வெல்ல வல்லார்? பலபல சொல்வானேன்; நான் வானவரை விடமாட்டேன்; நீ பேதையாதலால் அறியாப் பிள்ளையின் சொல்லைக் கேட்டு இங்குத் தூதனாக வந்தர்ய்! உனக்கு உயிர்ப்பிச்சை தந்தேன்; பிழைத்துப்போ” என்றான், சூரன். 

வீரவாகு மீண்டும் கட்டுரை கூறுதல் 
அவன் சொல்லிய மொழிகளைக் கேட்ட போது முருக தூதனது உள்ளத்தில் சீற்றம் முறுகி எழுந்தது; மெய்ம்மயிர் சிலிர்த்தது; சிரிப்புப் பிறந்தது; கண் சிவந்தது; அந்நிலையில் பேசலுற்றார். "நெடுமாலும்,நான்முகனும் கட்டுரை நெடுங்காலம் தேடியும் காண ஒண்ணாத இறைவனது கூறுதல் நெற்றிக் கண்களில் பரஞ்சுடர் உருவாய், கருணை நிறைந்த எம்பெருமான் தோன்றினார். முன்னவர்க்கும் முதல்வருக்கும் முற்பட்ட ஆதி முதல்வராய், தன்னேரில்லாத் தலைவராய், ஈசன் என்னும் இணையற்ற பெயருடையவராய், மன்னுயிர்க்கு உயிராய், அருவமாய் உருவமாய், யாவர்க்கும் அம்மையப்பராய் அமர்ந்த பரம்பொருளே அறுமுகப் பெருமான் எங்கும் நிறைந்து அருள் செய்யும் எம்பெருமானுக்கு எங்கும் திருமுகங்கள்; எங்கும் திருவிழிகள்; எங்கும் திருச்செவிகள்: எங்கும் திருக்கரங்கள்; எங்கும் வீரக்கழல் அணிந்த திருவடிகள் எங்கும் அவர் திருவுருவமே அளவிறந்த அருங்குணம் உடைய எம் ஆதிமுதல்வன் வானவர் வருந்திக் கிடக்கும் வன்சிறையை அழிக்கவும், பிரமதேவன் முதலியோர் படும் துயரத்தை ஒழிக்கவும், அசுரக் களையை வேரறுத்து அறப்பயிரைக் காக்கவும் இங்கே எழுந்தருளியுள்ளார். இத்தகைய ஐயனை நீ இழிந்த சொற்களால் இகழ்ந்தாய். நொடிப் பொழுதில் உன் தீய நாக்கை அறுத்திருப்பேன்; உன்னுயிரையும் பறித்திருப்பேன்; ஆண்டவன் என்னை அதற்காக அனுப்பவில்லையாதலால் உன்னை உயிரோடு விடுகின்றேன். வேற்படைக்கு இரையாக இருப்பவனே! இன்னும் ஒரு பகல் வாழ்ந்திரு. மீண்டும் ஒருமுறை உனக்கு உறுதி கூறுகின்றேன். நீயும் நின் சுற்றமும் அழியாமல் வாழ வேண்டுமானால் வானவரைச் சிறையினின்றும் விட்டுவிடு; மாறுபட்ட மனப் பான்மையை ஒழித்து முருகவேள் திருவடியே சரணம் என்றும் கருதி இரு” என்று கட்டுரை கூறினார்.

சூரன் தூதரைச் சிறையிடப் பணித்தல் 
இவ்வாறு குன்றம் எறிந்த குமரவேளின் பெருமையை வீரவாகு எடுத்துரைத்தபோது, சிறுதொழில் புரியும் அசுரன் சீற்றமுற்றான்; பெருமூச்செறிந்து பேசத் தலைப்படடான். மழலைமொழி பேசும் அச்சிறுவன் யாவர்க்கும் முதல்வனாயினும் ஆகுக. அண்டங்கள் தோறும் சென்று அமர் புரிந்து வெற்றி பெற்ற யான் அஞ்சுவது யாதொன்றும் இல்லை" என்று கூறி, அருகே நின்ற அசுரர்களுள் ஆயிரம் வீரரை நோக்கி, "தூதுவனாக வந்த இவனைக் கொல்லுதல் பழியாகும்; விரைவில் இவனைப் பிடித்துச் சிறையில் இடுக”எனப் பணித்தான்.

பிடிக்க வந்தவரைத் தூதன் மடித்தல் 
உடனே வல்லவர் ஆயிரவர் வீரவாகுவை வளைத்தனர். அந் நிலையில் அவர் ஆசனத்தை விட்டு எழுந்தார்; அசுர்ர் தலைகளின் சிகையை ஒரு கரத்தாற் பிடித்துத் தரையில் அடித்தார்; நொடிப் பொழுதில் அவர் உயிரைக் குடித்தார். பின்பு சூரனை நோக்கி, "என் ஆண்டவனது நெடுவேலால் நீ மாண்டு ஒழிவாய்! அதுவரையும் ஐம்புலன்களாலும் அனுபவிக்கத்தக்க இன்பங்களை யெல்லாம் ஆரத் துய்த்துக் கொண்டு இரு. நான் போய் வருகின்றேன்” என்று புறப்பட்டார்; சிங்கம் போன்ற வீரன் இவ்வாறு சொல்லிச் சென்றபோது, அவர் தங்கியிருந்த அரியாசனமும், மேலே எழுந்து வானத்திற்சென்று மாயைபோல் மறைந்தது. சூரன் விடுத்த ஆயிரம் அசுரர்களையும் அடர்த்து அவைக்களத்தை விட்டு அகன்றார், வீரவாகு. நெருப்பை உமிழ்கின்ற கண்களால் அதைக் கண்டான், சூரன். அருகே நின்ற நூறு முகம் படைத்த சதமுகன் என்னும் அசுரனை நோக்கிப் பேசலுற்றான். "தூதுவனாய் வந்த இவன் நமது அணுக்கப் படையை அடித்துச் சென்றான்; செய்யத் தகாத காரியத்தைச் செய்தானாயினும் இவன் இங்கு வந்த தூதன்; ஆதலால், கொடும்போர் புரிந்து இவனைக் கொல்லுதல் பழியாகும். இவன் வீரத்தைய்டக்கி விரைவிற் பிடித்துக் கொண்டு வருக” என்றான். அப்பணி தலைமேற்கொண்ட சதமுகன் நூறாயிரம் வீரரோடும். எண்ணிறந்த படைக்கலங்களோடும் வேகமாகப் புறப்பட்டு முருகதுதனை யடைந்து வீரமொழி பேசினான்; நெருங்கிச் சென்று பற்றினான். பிடித்த அசுரனை ஒரு தோளால் இடித்துத் தள்ளினார், வீரவாகு, மண்ணில் விழுந்தவன் உன்னி எழுந்தான். மீண்டும் முருகதுதர் அவனைக் காலால் உதைத்தார், இடியோசை கேட்ட நாகம்போல் துடித்து விழுந்த அசுரன் வாய் வழியே குருதி பொங்க மிதித்தார்; நூறு தலைகளையும் நொடிப் பொழுதில் துவைத்து அவன் உயிரை முடித்தார். பின்னர், அளவிறந்த சீற்றம் கொண்டு, ஆறுமுகப் பெருமான் கருணையாற் சொல்லி யனுப்பிய கட்டுரையை மதியாது இகழ்ந்த சூரனது அத்தாணி மண்டபத்தை நொறுக்கிப் பின்பு இந் நகரத்தையும் எரிப்பேன்" என்றெண்ணினார்; வேற்படை தாங்கிய குமரேசனது திருவடியை நினைத் தார்; அப் பெருமான் அருளால் உலகளந்த திருமால்போல் நெடிய தோர் உருவம் கொண்டு நின்றார்.

சூரனது அத்தாணி மண்டபத்தை அழித்தல் 
எம்பெருமான் தூதுவராகிய வீரவாகுவின் பெருந் திருவடி வினை நோக்கிக் கலக்க முற்ற அசுரர் அனைவரும் கடுகி ஓடினார். அழிவற்ற மதில்களையுடைய அரண்மனையினுள்ளே காத்து நின்றார். ஐம்பது வெள்ளம் அசுரர்கள்; இருள்போன்ற மேனியர்; கனல் சொரியும் கண்ணினர்; அன்னார் முருக துதரொடு போர் புரியப் புகைந்தெழுந்தனர். அவர்களோடு போர் புரிய முற்பட்ட முருகதூதர் பெருத்தார்; சிறுத்தார்; பல வடிவம் தரித்தார்; ஒவ்வொருவரையும் தொடர்ந்து நடந்தார்; காற்றுப்போல் சுழன்றார்; வளைந்தார்; எழுந்தார், ஐம்பது வெள்ளத்தையும் கலக்கி அழித்தார் பின்னர், ஐந்நூறு யோசனை அகலமும், ஆயிரம் யோசனை உயரமும் உள்ளதாய், பொன்னொளி வீசும் மேரு மலைபோல் பன்னெடும் சிகரங்களை-யுடையதாய் நின்ற வேரம் ஒன்று அங்கு விளங்கக் கண்டார். அரண்மனையின் எதிரே அழகிய பொன்னொளி வீசி நின்ற அவ் வேரத்தைப் பறித்து ஒரு கரத்தில் எடுத்தார்; அறம் திறம்பிய அசுர மன்னன் வீற்றிருந்த அத்தாணி மண்டபத்தின்மீது அதனை வீசி எறிந்தார். அம் மண்டபம் இடிந்து விழுந்தது; அங்கெழுந்த தூசி விண்ணும் மண்ணும் பரந்தது; எட்டுத் திக்கிலும் செறிந்தது; அசுரக் கூட்டம் உடைந்து கலைந்தது; இவற்றைக் கண்ணுற்றான், அறிவிழந்த சூரன்.

தூதுவனைப் பிடித்துவரப் பணித்தல் 
ஆயிரம் பெயருடைய இறைவனுக்கு நிகரான ஆற்றல் தூதுவனைப் படைத்த முருக தூதனைக் கண்டு ஊழித் தீப்போல் உள்ளம் கொதித்தான், சூரன். பலபல தோள்களும் முகமும் படைத்த ஆயிரம் அசுரரை நோக்கி இடி போல் வெடுவெடென முழங்கினான். "தூதனைக் கொல்லுதல் கொற்றமன்று. அவனை எதிர்த்துப் போர் புரிந்தேனும் பற்றுக. தப்பிப் போகாமல் இங்குக் கொண்டுவந்திடுக. அவன் மேனியை வடுப்படுத்தி வானவரோடு வன்சிறையில் வைப்பேன்" என்றான். அலைகடலில் எழுந்த ஆலகாலம் போன்ற மேனியும் ஊழித் தீயின் கொழுந்து போன்ற சிகையும் உடைய அசுரர்கள் பெரிய வீரவாகுவின்மீது அம்பு தொடுத்தார்கள்; கூரிய வேல்களை விடுத்தார்கள்; இரும்புத் தடிகளை எறிந்தார்கள்; நச்சுப் படைகளை வீசினார்கள்; சூலப் படையையும் வச்சிரப் படையையும் நேமி படையையும் விட்டார்கள். இவ் வண்ணம் கடும்போர் திகழும்பொழுது இணையற்ற முருக தூதர் சிறிது நேரத்தில், ஆயிரம் தோளுடைய வீரர் (சகத்திர வகுகள்) அனைவரையும் ஒரு மராமரத்தால் சிதைத்து நொறுக்கித் தனியராய் அமர்க்கணத்தில் நின்றார். அதையறிந்த சூரன், "சரி, சரி, உமையவள் பெற்ற பாலன் விடுத்த தூதன் ஒருவன், எம் முன் வந்து ஏளனம் செய்தான்; புறத்தே போந்து போரில் எதிர்த்தவரையெல்லாம் அழித்தான்; இன்னும் போகாமல் நிற்கிறான்; நமது வீரம் அழகுதான்” என்று நகைத்தான். மூன்றுலகும் புகழ் பெற்ற சூரன் சீற்றத்தைக் கண்டு தரியாத வச்சிரவாகு என்னும் மைந்தன் கிளர்ந்து எழுந்தான்; பத்துத் தலையும் வச்சிரமேனியும் வாய்ந்த அம்மைந்தன் மன்னன் அடிபணிந்து, "ஐயனே! அற்பத் தூதுவன் பொருட்டு இப்படி வருந்தலாமோ? நொடிப்பொழுதில் நான் சென்று அன்னான் வலிமையை அழித்து அவனைப் பிடித்து வந்து உம் முன்னே விடுவேன்” என்றான். அப்போது சூரன் மைந்தனை நோக்கி மகிழ்ந்தான், "அப்படியே செய்க” எனப் பணித்தான். மாலையணிந்த வச்சிரவாகு தன் சேனையோடு போர்க்களம் புகுந்தான்; அவனைப் பார்த்தபோது முருக தூதர், இவன் இந்திர ஞாலத் தேருடைய சூரன் அல்லன், அவன் மைந்தருள் ஒருவன்போலும். இவனைச் சேனையோடு சிதைத்து அழித்து, அந்திமாலை வந்தெய்து முன்னமே, எம்பெருமான் திருவடியை வணங்கச் செல்வேன்" என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார். அவ் வேளையில் வச்சிரவாகுவின் உடன்வந்த பெருங்குல மைந்தரும், பரந்த நாற்படையும் முருக தூதனை வளைந்து படைக்கலம் தொடுத்துப் போர் விளைத்தார்கள், வல்லவனாகிய வச்சிரவாகு தன் வில்லை வளைத்து, நானொலி எழுப்பி, ஆயிரம் அம்புகளைப் பூட்டி முருக தூதன்மேல் விடுத்தான். அவன் எடுத்த வில்லைப் பிடித்து முரித்தார், வீரவாகு. அது கண்ட சூரன் மைந்தன், வாளெடுத்துப் போர் செய்யத் தொடங்கினான். அப்போது வீரவாகுவும் தமது வாளெடுத்து எதிரே சென்றார். அவர் வீசிய வாள் அசுரனது பத்துத் தலையையும் அறுத்துத் தள்ளிற்று. அந் நிலையில் அவன் இறந்து பட்டான். பின்பு போர் செய்ய வருவார் எவருமிலர். பகலவன் மேற்றிசையில் மூழ்கினான். அந்தி மாலையும் வந்து சேர்ந்தது. மகேந்திர நகரை விட்டு நீங்கினார் முருக தூதர்; ஆகாய வழியே விரைந்து எழுந்து, முருகன் கருணையைப் போற்றி வடதிசையிலுள்ள இலங்கையின் அருகே வந்தடைந்தார்.

இலங்கையில் யாளிமுகனை வதைத்தல் 
அவள் வருவதைக் கண்டான், யாளிமுகன். அவன் வாட்பேர் வீரன் முன்னே முருக தூதர் கையால் இறந்த அதிவீரனைப் பெற்ற தந்தை அவன் வீரவாகுவை நோக்கிக் கொதிப்புற்றான். "இவன் முன்னொரு முறை என் காவலில் அமைந்த இந் நகரத்தைக் கடந்தான். என் மகனுயிரைக் கவர்ந்தான்; மகேந்திரம் சென்று மீண்டு வருகின்றான். இக் கள்வனைக் கொன்று ஒழிப்பேன்" என்றான். இவ்வாறு உள்ளத்திலே கறுவிக் கொண்டு யாளிமுகன் முருகதூதரின் அருகே சென்றான்; தன் ஆயிரம் கைகளாலும் அவரை அறைந்தான். அடித்த கைகளை அவர் ஒரு கையாற் பிடித்தனர்; அவற்றை வாளால் அறுத்தெறிந்தார். அப்போது அசுரன் பெருங்கூச்சல் இட்டான். வீரவாகுவைப் பிடிப்பதற்குத் தன் துதிக்கைகளை யெல்லாம் விரைவாக நீட்டினான். அவன் பெற்ற ஆயிரத் தலைகளும் அற்று வீழுமாறு முருகதூதர் தம் ஒப்பற்ற வாளை வீசினார்; உயிரைப் போக்கினார்.

முருகப் பெருமானிடம் போந்து நிகழ்ந்தது உரைத்தல் 
பெருஞ் செல்வத்தையுடைய இலங்கையை விட்டு நீங்கி, கருங்கடல் கடந்து, கந்தமாதன மலையைச் சேர்ந்த திருச்செந்தூரை வந்து அடைந்தார், வீரவாகு அன்பினால் என்பும் மனமும் உருக, கண்களில் திகழ்த்தது ஆனந்த வெள்ளம் பெருக, மெய்தானரும்பி விதிர்விதிர்க்க, முருக வள்ளலின் சேவடியை வணங்கி, "ஐயனே! தேவரீர் பணித்தருளிய மொழியைச் சூரன் முன்னே சென்று சொன்னேன். வானவரைச் சிறையினின்று விடுவித்தல் முறை என்று அவன் கருதினானில்லை; வானவர் குலத்தை விடமாட்டேன் என வெகுண்டு கூறினான். அடியேன் அவ்விடம் விட்டு நீங்கி இங்கு விரைந்து வந்தடைந்தேன். இதுவே நடந்த செயல்” என்றார். அப்போது எங்கும் நிறைந்து, எல்லாம் அறியும் தன்மை வாய்ந்த முருகன், "அன்பனே! நீ செய்ததொன்றும் சொல்லவில்லையே! அதைச் சொல்” என்று பணித்தருளினார். "எம்பெருமானே! சூரன் நகரத்திற்குத் தூது செல்லும் போதும், திரும்பி வரும் போதும் என்னைத் தடுத்தோரை யெல்லாம் உமது திருவடித் திறத்தால் முடித்துவிட்டேன். நடந்தது. இதுவே" என்று கூறினார், வீரவாகு. "சாதலே அவன் விதி. ஆதலால், "தேவரைச் சிறைவிடேன், என்றான், சூரன். அவன் செருக்கையழிக்க நாளையே செல்வோம்” என்று அறுமுகப் பெருமான் கூறக் கேட்ட பொழுது அங்கிருந்தோர் எல்லாம் நம் துயர் ஒழிந்தது என்று மகிழ்வுற்றார்.

புதுக்கி அமைத்த நகரில் சூரன் அமர்தல் 
முருக தூதனால் அழிந்த நகரத்தைச் செப்பனிடும் பொருட்டுச் சூரன் சேவகர்கள் மற்றோர் அண்டத்தில் இருந்த பிரமதேவனைக் கொணர்ந்து மன்னன் முன்னே நிறுத்தினார்கள். சூரன் அவனைப் பார்த்து, "சீர் அழிந்த இத் திருநகரை முன்போல ஆக்கித் தரல் வேண்டும்” எனப் பணித்தான். பொன்மதிலும், மாட வீதிகளும், கூட கோபுரங்களும், வேரமும், பூஞ்சோலைகளும், மண்டபங்களும், தடாகங்களும்,வானளாவிய மேடைகளும், மன்றங்களும், பிறவும் முன்னிருந்த வண்ணமே படைத்தான் பிரமன், புதிதாக அமைந்த நகரத்தையும் மாளிகையையும் நோக்கினான் சூரன். படைத்தவன் கைவண்ணம் கண்டு மகிழ்ந்து பாராட்டினான்; முன் போலவே அசுரர் போற்ற அரியாசனத்தில் அமர்ந்தான். முந்நீர்க் கடல் கடந்து செந்திற் பதியிற் பாசறை கொண்ட கந்தன் படைத்திறமும் பிரவும் உணர்ந்து வந்த ஒற்றர்கள் அந்த வேளையில் அவன் முன்னே போந்து வினாங்கி, "அரசே! தாரக வீரனைக் கொன்று, மாய கிரியாகிய கிரவுஞ்ச மலையை வேற்படையால் இரு கூறாகப் பிளந்து ஒழித்து, கடற்கரையில் உள்ள செந்தியம்பதியில் முருகன் வந்துள்ளான். இஃது உண்மை. வேலேந்திய அப் பாலன் பொங்கி யெழுகின்ற பூதகணங்களோடும், வெம்படை தாங்கிய வீரர் களோடும் கடல் கடந்து இங்கு வந்து போர் புரியக் கருதியுள்ளான். இதில் ஐயம் கொள்ள வேண்டா. ஆவன அறிந்து செய்க" என்று கூறினார். அம் மொழி கேட்ட மன்னன், ஒப்பற்ற தம்பியாகிய சிங்கமுகனையும், அறிவறிந்த அமைச்சரையும்,பானுகோபன் முதலிய மைந்தரையும், உற்ற துணையாய சுற்றத்தாரையும், சேனைப் பெருத்தலைவரையும், ஒரு கணப் பொழுதில் வரவழைத்தான்.

சூரன் சபையில் வீரப் பேச்சு 
அவர்கள் வந்து மன்னன் அடிபணிந்தனர்; சூரன் உள்ளத்தில் நெருப்புப் போன்ற சீற்றம் நிறைந்து எழுந்தது; பெருமூச்செறிந்து பேசுவானோயினான்; "இத்திரு நகர் அழிந்தது; அளவிறந்த சேனை இறந்தது; எங்கும் எலும்பு குவிந்தது; மாநிலம் கிழிந்தது; குருதியாறு பெருகிற்று; என் ஆணை ஒழிந்தது; சீமையும் சிதைந்தது. தூதனாக வத்த ஒருவனைப் பிடித்துச் சிறையில் அடைத்து வைத்தேன் அல்லேன்; முடித்தேன் அல்லேன்; வடுப்படுத்தினேன் அல்லேன், எல்லையற்ற வசைக்கு ஆளாயினேன். மேலும், நீலகண்டன் தந்த பாலகன் கடல் கடந்து இங்கு வந்து நம்மோடு போர் நிகழ்த்தக் கருதினானாம். அதனை இவ் வொற்றர் வாயிலாக அறிந்தேன். ஆதலால், நாம் செய்யத் தக்கதென்ன என்று உங்களைக் கேட்கின்றேன். உரைப்பீராக” என்று மன்னன் கூறினான்.

அது கேட்டு அமைச்சருள் ஒருவனான மேதியன், அரசனை வணங்கி, "ஐயனே! மாயம் புரிய வல்ல மலையையும், திருமாலை வென்ற உம், வீரத்தம்பியையும் நொடிப் பொழுதில் அழித்த வீரனைப் பாலன் என்று பேசுதல் அறிவாகுமோ? ஒப்பற்ற தம்பியும் மலையும் அழிந்தபோதே, சிவகுமாரன்மீது செல்லாதிருந்தீர்! சேனையையேனும் அனுப்பி அவனை வெல்லாதிருந்தீர்! இத் துணைக் காலமும் வீணாகக் கழித்தீர் கழிந்ததைக் குறித்துக் கவலையுறுதலாற் பயன் இல்லை. இன்றே அசுரப் படையோடு முருகனை வளைத்துப் போர் செய்ய விரைந்து எழுக, நேற்றுப் போல் இன்றும் காலம் தாழ்க்கலாகாது” என்று மேதியன் சொல்லி முடித்தான்.

மந்திரிகள் பேசுதல் 
அது கேட்ட துர்க்குணன் என்னும் அமைச்சன் "நன்று நன்று" என்று கைகளை உதறிக் கிறி முறுவல் செய்து, "அரசே! நீ தவஞ் செய்து எல்லையற்ற ஆயுளும், இலங்கும் ஆழியும், மாசற்ற செல்வமும் மனத் திட்டமும், வீரமும் வேறுள்ள திறமையும் பெற்றாய் இவையெல்லாம் பாலனோடு போர் செய்யத்தானே?நின் பெரும்புடைத் தலைவரைப் போர் செய்ய விடு. அவர் சிறிது நேரத்தில் பகைவனையும் பூத கணங்களையும் வென்று வருவர். இதுவே உபாயம்” என்றான்.

"போதும் போதும் என்று அவனைக் கையால் அமர்த்தித் தருமகோபன் என்னும் அமைச்சன் எழுந்தான். "ஐயனே! நகத்தால் கிள்ளி எறியத்தக்க தொன்றை வாளால் வெட்டுவாருண்டோ? சின்னஞ்சிறிய பகைவரை நோக்கிப் பென்னம் பெரிய வில்லெடுத்து நீயே செல்வாயோ? பலவாறாகச் சொல்வதிற் பயன் என்ன? ஒப்பற்ற அசுர வீரர்களுள் ஒருவனை வேற்புடையுடைய மாற்றான்மீது அனுப்புவாயாயின் அவனே விரைவில் வென்று ஒருவான். அவ்வாறே செய்க" என்றான்.

அவன் முடித்தவுடன் கல்லை யொத்த தோள்களையுடைய காலசித்தன் எழுந்தான்; சிரித்த முகத்தினனாய், "அண்ணலே! அசுரர் திறங்கண்டு அமரர் ஒடுங்கினர்; அரக்கர் அஞ்சினர்; எண்திசை பாலரும் ஏவல் புரிகின்றார்; இன்று அசுரரைவிடப் பூதர் வலியவராம்! என்ன இது! கலி காலத்தின் கோலமா? ஐயனே! என்னைப் போகவிடு; கந்தனையும் அவனுடன் வந்த வீரரையுல் கால பாசத்தாற் கட்டி இங்குக் கொண்டு வருவேன்" என்று கூறினான்.

அந் நிலையில் சுருக்கென்று சண்டன் எழுந்து, "அரசே! என்னை அனுப்பினால் மும்மூர்த்திகள் தடுத்தாலும் முனைந்து தாக்கி முருகனையும், அவன் படையையும் வென்று வருவேன்" என்றான்.

பானுகோபன் பேசுதல் 
இந்த விதமாக மற்றைய அமைச்சரும், தந்திரத் தலைவரும், தானைத்தலைவரும் பேசக் கண்ட பானுகோபன், எழுத்து, "என் ஐயனே! முனிவரும் மயங்குமாறு மாயை செய்த மலையையும், தாரக வீரனையும் முருகன் கொன்றபோது என்னை அனுப்பினாயல்லை; இன்று இதைக் குறித்து வினவுவது என்னோ? ஆயிரத்தெட்டு அண்டங்களுக்கும் அரசனாயுள்ள நீ, சிவன் பெற்ற சிறுவன்மீது சீறி பெழுதல் சரியன்று; என்னை அனுப்பி வெற்றி பெற்று வாழ்க" என்துரைத்தான்.

மற்றைய மைந்தர் பேசுதல் 
அப்போது இரணியன் என்னும் மைந்தன் தளராத வலிமையுடைய சூரனை நோக்கி, "இன்று இரவே என்னை அனுப்புக; நான் சென்று பெரும்போர் புரிந்து பகைவரைக் கொன்று வானவரையெல்லாம் ஒறுத்து வருகின்றேன்” என்றான்.

அவனுக்குப் பின் அவன் தம்பியாகிய அங்கிமுகன் எழுந்து, "வெம்போர் புரிந்த என் தம்பியை வாளால் முடித்த தூதனையும், மற்றைய பகைவரையும் கொன்றாலன்றி இம் மாநகர்க்கு நான் வருவதில்லை” என்று வஞ்சினம் கூறினான்.

சிங்கமுகன் பேசுதல் 
அங்கிமுகன் இவ்வாறு சொல்ல, அவனை விலக்கி , ஆயிரந்தலை பெற்ற சிங்கமுகன், மன்னர் மன்னனாகிய சூரனை நோக்கி, "அரசே! இதுகாறும் பேசிய மந்திரத் தலைவரும், படைத்தலைவரும்,மைந்தரும் அவரவரிடம் "அமைந்த வீரம் பேசினரேயன்றி, பெருமை சான்ற உனக்கு ஏற்ற அறிவுரை கூறினாரல்லர். நான் கூறுகின்றேன், கேள்: வானவரைக் கடலிற்சென்று மீன் பிடித்துவரக் கட்டளை யிட்டாய்! அது நன்றாகுமா? இத்தகைய செய்கையைத் தம்முயிரில் ஆசையற்றவர் செய்வரேயன்றி மற்றையோர் செய்வரோ? வானுலக மன்னனாய இந்திரனை வருந்த வைத்தாய்! அவன் அரசுரிமையைப் பறித்தாய்; அவன் இருந்த நகரின் செல்வமெல்லாம் கவர்ந்தாய் வானவரைச் சிறையில் வைத்தாய், அந் நாளிற் சிறை புகுந்த வானவரை இந் நாளளவும் விட்டாயில்லை; இரக்கம் துறந்தாய்! அதனாலன்றோ அறுமுகன் உன்னுடன் போர் செய்து வந்தான்? ஈசனார் நமக்குத் தந்த வரத்தின் தன்மையை எண்ணிப்பார். "எத் திறத்தவரும் உம்மை வெல்லமாட்டார். நமது சத்தி யொன்றே வென்றிடும் என்றார், ஈசன், அவ் வரத்தின் திறத்தினாலன்றோ தாரகன் உயிரை முருகன் விடுத்த வடிவேல் கவர்ந்தது? எம் ஐயனே தேவரைச் சிறையி னின்றும் விடுவாயாயின் முருகவேள் இங்குப் போர் செய்யக் கருதார்; நாம் செய்த குற்றமும் மனத்திற் கொள்ளார்; நாளையே கயிலை மலைக்குக் கடிது செல்வார்” என்று பேசினான்.

சூரன் சிங்கமுகன் பேச்சை மறுத்தல் 
மற்றையோர் பேசியதற்கு மாறாகச் சிங்கமுகன் சொல்லிய மொழிகளைக் கேட்ட போது சூரன் கையொடு கையறைந்தான்; பற்களால் இதழைக் கடித்தான்; மேனி வெதும்பினான்; முடித்தலை அசைத்தான். "எல்லையற்ற காலமாக யான் வானவரைச் சிறை செய்யக் கண்டும், திருமால் பிரமன் முதலியோர் எனக்கு அஞ்சியே செயலற்றிருந்தனர். அன்னவர் நிற்க ஒரு பாலனா அழிவற்ற என்னுயிரைக் கவர வல்லவன்? விண்ணில் உள்ள கதிரவனை ஒரு கனியென்று கண்ணிலாதவன் காட்ட அதைக் கையிலாதவன் போய்ப் பிடிக்கும் தன்மை போன்றது, கருத்திலாச் சிறுவ்ன் ஒருவன் என்னை வெல்வான் எனச் சொல்வது” என்றான்.

மீண்டும் சிங்கமுகன் தன் கருத்துரைத்தல் 
இவ்வாறாகச் சூரன் சொல்லிய மொழிகளைக் கேட்ட சிங்கமுகன் மீண்டும், "ஐயனே! இன்னும் ஒன்றுரைப்பேன்; கோபம் கொள்ளாமல் கேட்க வேண்டும். யாவர்க்கும் முன்னவனாகிய இறைவனுடைய கருத்துரைத்தல நெற்றிக் கண்களில் எழுந்த ஆறு சுடர்களே செந்நிறத் திருமேனியும், ஆறு முகங்களும், பன்னிரு தோள்களும் கொண்டு வந்துள்ளன. ஞானவடிவான நாயகன் தன்மையை நானும் நீயும் சொல்லுதல் எளிதோ? மோன நிலை நீங்க முனிவரும் அதனைத் தெளிந்தாரிலர், தம் பெருந் தலைமை அவரே இன்னும் முற்றும் கண்டரிலர். அரசே அழிய வரம் பெற்றிருப்பதாகக் கூறினாய். அதற்கு அறிந்தோர் சொல்லும் பொருளை அறிவிக்கின்றேன், கேள். மூவகைப்பட்ட உலகங்களில் வாழும் உயிர்களைப் போல் சில நாள்களில் இறந்திடாமல் பல நாள் இருந்திடும் பான்மையே அவ்வரத்தின் பயனானும். அழியாச் செல்வத்தோடு நீயும் நின் சுற்றமும் கேடின்றி வாழ் வேண்டி இவற்றைச் சொன்னேன். ஆதலால், வானவரைச் சிறையினின்து விட்டுவிடு” என்றான், அறிவாளருள் சிறந்த அரிமுகன்.

சூரன் ஏளனம் பேசுதல் 
இங்ஙனம் தம்பி பேசிய வாசகத்தைக் கேட்டான சூரன்; மணி முடி அசைத்தான்; செவியிலே கனலைச் செருகினாற் போல் எரிவுற்றான். சிங்கமுகனை நோக்கி "நீ புகழ்ந்து பேசிய பாலன் காற்றிலே பறந்தவன்; நெருப்பிலே காய்ந்தவன்; கங்கை ஆற்றிலே மிதந்தவன்; சரவணப் பொய்கையிலே கிடந்தவன்; பல மாதரிடம் பாலுண்டு விளை பாடியவன். நேற்றுப் பிறந்த அப் பாலனையா பரம்பொருள் ஒன்றாய்? இனிச் செல்வது என்ன? என்னுடனே ஒரு தாய் வயிற்றில் பிறந்தாய், உடன் உண்டு வளர்ந்தாய்! நம் குலப்பகைவரை ஒறுக்கக் கருதாது அவர் வசப்பட்டாய். நீ இருக்க எனக்கு வேறொரு பகைவனும் வேண்டுமோ? நீ வீரம் இழந்தாய்; மானம் துறந்தாய், சிறப்புடைய அசுரரது மேன்மையை அழிக்கப் பிறந்தாய், இப் பிறப்பில் எப் பயனும் பெற்றாயில்லை; இருந்தவருள்ளே நீ இறந்தவன் ஆனாய்! நானே பூதரையும் தலைவரையும் பாலனையும் பிற பகைவரையும் வென்று வருகின்றேன். நீ வருந்தாமல் உன் ஊர் போய்ச் சேர்க” என்றான், சூரன்.

அது கேட்ட சிங்கமுகன், "ஆகும் விதியிருந்தால் எல்லாம் ஆகும்; போகும் விதியிருந்தால் எல்லாம் போகும், ஈசன், ஒருவனாலன்றி வானவராலும் ஊழ்வினையை ஒழிக்க முடியுமோ? முருக வள்ளலின் வேலால் மன்னர் மன்னன் இறந்துபடுவான். அதைக் கண்டு பின்னும் உயிர் தாங்கியிருத்தல் பிழையாகும், தமையனுக்கு முன் இறத்தலே தக்கது" என்று எண்ணினான்; சூரனடிகளில் விழுந்து வணங்கினான் : "அரசே! சீற்றம் தீர்க! சிறியேன் செய்த பிழையைப் பொறுத்தல் வேண்டும். பகைவர்மீது போர் செய்ய, இதோ போகின்றேன். விடை தருக" என்று வேண்டினான். 

அப்போது சூரன் அகமகிழ்ந்தான்; தம்பியை வருக என்று அழைத்து மார்போடு அணைத்தான்; "இன்று ஊருக்குச் சென்று அங்குள்ள படைகளையெல்லாம் திரட்டி ஆயத்தமாய் இரு! கந்தன் இங்கே வந்தால் உன்னை அழைப்பேன், அப்போது வருக ! " என்று விடைகொடுத்தனுப்பினான். பின்பு, அங்கிருந்த : தலைவரையும் மைந்தரையும் பிறரையும் அனுப்பிவிட்டு மகேந்திர மாநகர மாளிகையில் இருந்தன், சூரன்.